புதன், 27 செப்டம்பர், 2017

அப்பா.... அனாவசியம் அல்ல... அத்தியாவசியம்

ஒரு மனநல மருத்துவரின் பேட்டியை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தது.... நியாயமாக நாம் அதுமாதிரி பேட்டிகளில் எல்லாம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும்... அந்த மருத்துவரின் அழகு என்னை சேனல் மாற்ற விடாமல் நிறுத்தியது... என்பதுதான் உண்மை...

ஆனால்.... அந்த பேட்டியின் ஊடாக அவர் சொன்ன ஒரு விஷயம் நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.... தன்னுடைய தந்தையின் செல்போனில் எட்டுவயது குழந்தை ஒன்று ப்ளூ வேல் கேம் டவுன்லோட் செய்து வைத்திருப்பதை பார்த்த அவரது தாயார்.. கவுன்சலிங் கொடுக்க சொல்லி இந்த மருத்துவரிடம் கூட்டி வந்திருக்கிறார்...

முதலில்.... அந்த குழந்தை விபரம் (விபரீதம்)புரியாமல் செய்திருக்கும் என்று நினைத்த மருத்துவர் மெதுவாக பேச்சுக்கொடுக்க... கிடைத்த விஷயம் அப்படி ஒரு அதிர்ச்சி தர கூடியது...
Image may contain: 1 person, closeup

குழந்தையின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ள... தாய் மீது கூடுதல் ஒட்டுதலுடன் இருக்கும் அந்த குழந்தை தந்தையை பழிவாங்க ப்ளூ வேல் கேமை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறது.... என்ன முடிவு என்பது தெரிந்தே....

இத்தனைக்கும் அந்த குழந்தையை அவர் திட்டியதோ- அடித்ததோ இல்லையாம்.... குழந்தைக்கு அவர் எப்போதுமே நல்ல தந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.... ஆனாலும்... அந்த குழந்தையின் சிந்தனை தாய்க்கு ஆதரவாக.... தந்தைக்கு தற்கொலைக்கு வழிகாட்டும் காரியத்தை செய்ய தூண்டி இருக்கிறது...

பெரும்பாலான அறிஞர்களும், ஆலோசகர்களும் சொல்லும் விஷயம்.... குழந்தைகளுக்கு முன்பாக சண்டை போடாதீர்கள்.... இது நல்ல விஷயம்தான் என்றாலும்... இதனை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல் நிறைய....

குழந்தைகள் தாயுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் என்பதால்.. இயல்பில் தந்தையை விட தாயின் மீதே கூடுதல் ஈர்ப்புடன் இருக்கும்... நிறைய குழந்தைகள் தந்தை வாங்கி வரும் சாக்லேட்-சிப்ஸ் போன்றவற்றிற்காக மட்டுமே தந்தையை தேடும் நிலையும் உள்ளது... (இதில் தந்தைக்கும் பங்குண்டு... அதை சாவகாசமாக வேறொரு கட்டுரையில் கூடுதல் விரிவாக பார்க்கலாம் )

இப்படியான நிலையில் குழந்தைகள் தந்தையை விட்டு நிரந்தரமாக விலகாமல் இருக்கவும், ஒட்டுதல் ஏற்படுத்தவும் தாய்மார்கள் முனைய வேண்டும்.... குடும்பத்திற்கென தந்தை செய்யும் தியாகங்கள்.. அனுபவிக்கும் கஷ்டங்கள்... வருமானம் ஈட்ட படும் துயரங்கள்.. ஆகியவற்றை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்...

என்ன பிரச்சினை இருந்தாலும் கூடுமானவரை குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனிடம் குறுக்கு விசாரணை செய்வதையோ- உறவுகளை பற்றி விமர்சிப்பதையோ... குறை கூறுவதையோ தவிர்க்க வேண்டும்... இதை பின்பற்றினாலே தொண்ணூறு சதவிகிதம்கு ழந்தைகளுக்கு முன்னான சண்டைகளை தவிர்த்து விடலாம்...

இதை கடைபிடித்தாலே நீங்கள் ஓரளவு நல்ல வளர்ப்பை கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்...

ஆனால்.. இவைகளை நீங்கள் கடை பிடிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்கள் கணவனை புரிந்துகொள்ள வேண்டும்...

இல்லை என்றால்.... உங்கள் குழந்தைகளே உங்களை விதவை ஆக்கும் விபரீதம் நிகழலாம்...

( நான் சம்பாதிக்கிறேன்.... விதவை வேஷம் எல்லாம் எனக்கெதற்கு என்பவர்கள் இதை படித்ததையே மறந்து விடலாம்... இது உங்களுக்கான கட்டுரை அல்ல )

பாதுகாப்புக்காக ஒரு உறவு



எம் தமிழ் சமூக பெண்களிடையே வட இந்திய பண்டிகையான "ரக்ஷா பந்தன் " என்பது பற்றி பொதுவாகவே ஒரு தவறான புரிதல் நிலவுகிறது...
Image may contain: one or more people and jewelry
ரக்ஷா பந்தன் என்பது ஒரு ஹிந்தி வார்த்தை.... ரக்ஷா என்றால் பாதுகாப்பு (Defence) என்றும்... பந்தன் என்றால்... பிணைப்பு ... அதாவது சொந்தம் என்றும் அர்த்தம் வரக்கூடிய சொல்...

அதாவது, பெண்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக இருக்கும் சொந்தங்களுக்கு நன்றி சொல்வதாகவோ - அல்லது பாதுகாப்புக்கென புதிய பிணைப்புகளை (சொந்தங்களை) உருவாக்கிக்கொள்ளவோ உருவாக்கப்பட்ட, கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகை....

அந்நாளில் அலங்கரிக்கப்பட்ட ஒரு கையிற்றை ஒரு ஆணின் கையில் கட்டுவார்கள்... பெண்ணுடன் பிறந்த ஆண் மகனோ... அந்த பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணோ தான் அவ்வாறான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது ஒரு பொதுவான கருத்தென்றாலும்.... அந்த சகோதரன் மட்டும் தான் அப்படியான பாதுகாப்பை கொடுக்க முடியும் என்பது உண்மை அல்ல...

ஒரு பெண்ணுக்கு கணவனிடம் பாதுகாப்பு இல்லையா என்ன??

இவன் தன்னை பாதுகாப்பான் என்ற நம்பிக்கையை எந்த ஆண் மீது ஒரு பெண் வைக்கிறாளோ..... எந்த ஆணுடன் இருந்தால் பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கிறோம்.. என்று ஒரு பெண் உணர்கிறாளோ.... அந்த ஆணுக்கெல்லாம் "ராக்கி " கட்டலாம்....

அது கணவனாக இருந்தாலும் சரி... காதலனாக இருந்தாலும் சரி...

# வாங்க செல்லங்களா.... நீங்க எத வேணா கட்டுங்க.... நாங்க அப்படித்தான்....

ஸ்ட்ரெயிட்டா சி எம் தானா ?



உங்க உழைப்பு... நீங்க சம்பாதிக்கிறீங்க..... அத நீங்க எவனுக்கும் கொடுக்கணும்னு அவசியமே இல்ல..... நீங்க ஏன் அந்த விஷயத்துல உதவல.... இந்த விஷயத்துல உதவல.... மக்களுக்கு என்ன செஞ்சீங்க.... உங்களுக்கு சேவை மனப்பான்மை இல்ல.... இப்படி எல்லாம் யாரும் யாரையும் கேக்க முடியாது.... ஏன்னா ... நம்ம சம்பாதிச்ச காச எடுத்துக்கொண்டு போய் எவனுக்கும் உதவித்தான் ஆகணும்னு கட்டாயம் இல்ல.... அது உங்க உரிமை.. உங்க விருப்பம்.... செஞ்சாலும் செய்யலாம்.... செய்யாட்டியும் இருக்கலாம்... எவனும் சம்பாதிச்சு கொண்டுவந்து நம்மகிட்ட கொடுக்கல.... அப்புறம் எப்படி "நீ அத செஞ்சியா... இத செஞ்சியா"ன்னு கேள்வி கேக்க முடியும்??

சரிதானே ரஜினி/கமல்.... நான் சொல்றது....??
Image may contain: 2 people, people smiling, beard
கண்டிப்பா இத நீங்க மறுக்கவே மாட்டீங்க.... ஆனா... ஆனா...

அப்படி நீங்க சம்பாதிச்சதோட மூடிகிட்டு உங்க வேலைய பார்த்துகிட்டு, உங்க குடும்பத்த பார்த்துகிட்டு இருந்திருந்தா மட்டும் தான் மேல உள்ளது பொருந்தும்.... எப்போ நீங்க முதலமைச்சர் நாற்காலிய குறிவச்சு, இப்போ எவனும் இல்ல.... நம்மோட பாப்புலாரிட்டிய யூஸ் பண்ணி நாமளும் தான் கொஞ்ச நாள் அதிகாரம் பண்ணி பார்ப்போமேன்னு அரசியல் பக்கம் வர துடிக்கிறீங்களோ அப்போவே முதல் பாரால சொல்லி இருக்கிற விஷயத்துல இருந்து நீங்க அவுட் ஆயிட்டீங்க....

ஓட்டுரிமை இருக்கிற/இல்லாத ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் உங்கள கேள்வி கேப்பான்... நீங்க சம்பாதிச்சதுல இருந்து பங்கு கொடுக்கலன்னு பிச்சக்காரத்தனமா எல்லாம் கேக்கல..... எங்க பிரச்சினைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?? எங்களோட எத்தனை அன்றாட/ வாழ்வாதார பிரச்சினைகள்ள எங்க கூட நின்னிருக்கீங்க??? இதுவரை எங்களுக்காக என்ன கிழிச்சீங்க... இப்போ எங்களை ஆள துடிக்கிறீங்க ??

மொதல்ல இறங்கி வெளில வாங்க.... ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க.... மக்களோட பிரச்சினைகள் என்னன்னு தெரிஞ்சுக்குங்க.... மக்களோட மக்களா கொஞ்ச நாள் நின்னு பாருங்க..... கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் பிரச்சினைகள்... காவிரி, முல்லை-பேரியாறு , கிருஷ்ணா போன்ற விவசாய - குடிநீர் ஆதார பிரச்சினைகள் என்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க... மீனவர்கள் பிரச்சினை என்ன்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க.... சென்னை மக்களோட குடிநீர் பிரச்சினைகள்... சாலைப்பிரச்சினைகள்ள அவங்க கூட நின்னுங்க....

அதுக்கான தீர்வுகள் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.... அத செயல்படுத்த நீங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க... நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி வச்சிருகீங்கன்னு சொல்லுங்க....

இதெல்லாம் செஞ்சப்புறம் நாங்க முடிவு பண்றோம்..... நீங்க அந்த நாற்காலிக்கு தகுதியானவரா... இல்லையான்னு...

அத விட்டுட்டு....தமிழ்நாடு என்னமோ உங்க பாட்ட- முப்பாட்டன் சொத்து மாதிரி நாலு விசிலடிச்சான் குஞ்சுங்க உங்க போஸ்டர்க்கு பாலூத்தின உடனே முதலமைச்சர் கனவு காண்ட்றீங்க......

எங்களை எல்லாம் பார்த்தா சொம்பு மாதிரி தெரியுதா என்ன ???

வரலாற்றை திரிக்காதீர்கள்

ஒரு விறகு வெட்டி ஆற்றங்கரையில் விறகு வெட்டும் பொழுது அவனது கோடரி தண்ணீரில் வழுந்துவிட்டதாகவும்... உடனே ஒரு தேவதை வந்து தங்க, வெள்ளி, இரும்பு கோடரிகளை கொடுக்க... தங்க-வெள்ளிக்கு ஆசைபடாத விறகு வெட்டிக்கு மூன்று கோடரிகளையும் அந்த தேவதை கொடுத்துச்சென்றதாகவும் நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது ஒரு கதை இருந்தது...

பின்னாளில் அது நவீன வளர்ச்சி பெற்று வேறுமாதிரியாய் சொல்லப்பட்டது.... அதே விறகுவெட்டி மற்றுமொருநாள் அதே ஆற்றங்கரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க.... அதே தேவதை வந்து "ஏன் அழுகிறாய்" என கேட்டதாம்.... உடனே விறகு வெட்டி... என்னுடைய மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.. என்றானாம்...

நீரில் மூழ்கிய தேவதை கையில் அனுஷ்காவை தூக்கிக்கொண்டு வந்ததாம்..... இவளா உன் மனைவி என தேவதை கேட்க.... விறகுவெட்டி , சற்றும் யோசிக்காமல் ஆமாம் ஆமாம்... என்றானாம்....



எல்லாமறிந்த தேவதைக்கு இவன் பொய் சொல்வதும் தெரிந்துவிட்டது.... அடே பாவி... தங்க, வெள்ளிக்கு கூட ஆசைப்படாத நீ.... ஒரு அழகான பெண்ணுக்கு ஆசைப்பட்டு இவள்தான் என் மனைவி என்று பொய் சொல்கிறாயே.... என கேட்டதாம்....
Image may contain: 1 person, smiling, closeup
உடனே விறகுவெட்டி.... அப்படி எல்லாம் இல்லை.... நீ முதலில் இவளை காட்டுவாய்... பிறகு நயன்தாராவை காட்டுவாய்... மூன்றாவதாக என் மனைவியை கொண்டுவருவாய்..... நான் இவள்தான் என் மனைவி என்ற உடன்... இந்தா.... மூன்றையுமே வைத்துக்கொள்... என கொடுத்துவிட்டு சென்று விடுவாய்.... ஒருத்தியிடம் சிக்கி சீரழிந்தே சமாளிக்க முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்.... இதில் இன்னும் இரண்டு பெண்களை என்ன செய்ய... அதனால்தான் நான் முதலில் நீ ஒரு பெண்ணை காட்டியதும் இவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டேன்... என்றானாம்....


நகைச்சுவைக்காக ஒரு பழைய கதை புதிதாக எடிட் செய்யப்பட்டது... நாமும் ரசித்தோம்.... அது வெறும் கதை..... ஆனால்... சமகால இணைய எழுத்தாளர்கள் தங்கள் ஜாதியில் பிறந்த தலைவர்களை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு ( கவனிக்கவும்... ஜாதித்தலைவர்கள் இல்லை... ஜாதியில் பிறந்த தலைவர்கள் ) வரலாற்று தகவல்களை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்....

இன்று காலை அப்படி ஒரு தகவலை காண நேர்ந்தது.... நேதாஜி ஹிட்லரை காண ஜெர்மன் சென்றிருந்தபொழுது அங்கு வந்து நேதாஜியின் தோளில் கை வைத்ததை உணர்ந்த நேதாஜி... திரும்பி பார்க்காமல்... "ஹவ் ஆர் யு ஹிட்லர்" என்று கேட்டதாகவும்... ஒரிஜினல் ஹிட்லர் வரும் முன்பே ஹிட்லரின் தோற்றத்தில் வேறு சிலர் இருந்தாலும் கூட ஒரிஜினல் ஹிட்லரை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு நேதாஜி "என் தோளில் கை வைத்து பேசக்கூடிய தைரியம் ஹிட்லர் ஒருவருக்கு மட்டுமே உண்டு... ஹிட்லர் தோற்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் என்னுடன் கை குலுக்கினார்கள்... உண்மையான ஹிட்லர் மட்டுமே என் தோளில் கை வைத்து பேசினார்..." என்றாராம்...

Image may contain: 1 person
இப்படி ஒரு தகவலை சில காலத்திற்கு முன்பே சில இடங்களில் நான் படித்திருக்கிறேன்.... இன்று காலையில் படித்த தகவலில் இந்த தகவல் மேலும் எடிட் செய்யப்பட்திருந்தது... கூடவே நேதாஜி... ஒரிஜினல் ஹிட்லரை தவிர என் தோளில் யார் கைவைத்திருந்தாலும் என் பாதுகாவலன் முத்துராமலிங்க தேவர் அவனை சும்மா விட்டிருக்க மாட்டார்... என்று நேதாஜி சொன்னதாகவும்... ஹிட்லர் உடனே முத்துராமலிங்க தேவரை பற்றி நீண்ட நேரம் விசாரித்துவிட்டு... இதுபோல ஒரு பாதுகாவலன் எனக்கில்லையே... என வருந்தியதாகவும் நீண்டிருந்தது... அந்த செய்தி...

தங்கள் ஜாதியை சேர்ந்த தலைவரை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்து குப்பற தள்ளி இருந்தார் அந்த அன்பர்...

உங்களின் கற்பனை திறனை நான் மெச்சுகிறேன்... அதை கதை எழுதுவதில் காட்டுங்கள்..... உண்மைச்சம்பவங்களை திருத்திகாட்ட நினைக்காதீர்கள்.... நீங்கள் தூக்கி பிடித்துதான் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் உயர வேண்டும் என்ற அவசியமே இல்லை.....இப்படி திருத்தப்பட்ட செய்திகளின் மூலம் நிஜமான ஒரு தலைவனை பற்றிய மற்றனைத்த நிஜத்தகவல்களும் கூட சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டு, நகைச்சுவை ஆகி விடும்...

அன்புட்டுதேன்...