ஞாயிறு, 21 அக்டோபர், 2018

"கழுவி ஊற்றுதல்"

இந்த பதிவை உங்களால் படிக்காமல் கடக்க முடியாது.... ஆனால்.. படித்தவர்கள் எல்லோருமே விருப்பக்குறி விடுவார்களா என்றால்.... நிச்சயமாய் சொல்ல முடியும்.... அதற்கு வாய்ப்பே இல்லை...

ஆம்..... அவர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள்.... இப்படி எல்லாம் பேசமாட்டோம்... இந்த செந்தில் கே நடேசனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை... பொது இடத்தில் எப்படி எழுவதென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத இறுமாப்பு மிக்க முட்டாள்...." என்ற போலி முகமூடி அணிந்து, நல்லது சொல்பவனை குற்றம் சொல்லிக்கொண்டே எல்லாவிதமான ஒழுக்க கேடுகளையும் ரகசியமாய் செய்பவர்கள்....

இந்த பதிவிற்கு ஒரே ஒரு விருப்பக்குறி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..... ஏனென்றால்... 10-15 விருப்பக்குறி கூட இல்லாவிட்டால் நம் பிரபலத்தன்மை மீது சந்தேகம் வந்துவிடுமோ.. என்ற எந்த விதமான இமேஜ் ஃபிரேமிற்குள்ளும் என்னை நான் அடைத்துக்கொண்டதே இல்லை...

நான் சில ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன்.... இந்த சொல்லாடலின் ஆரிஜின் தெரியாமல்.. அதன் முழு உள்ளர்த்தமும் தெரியாமல் பல அப்பாவிகள் இந்த வார்த்தைகளை மிகவும் சாதாரணமாய் உச்சரிக்கிறார்கள்..... என்று...

"கழுவி ஊத்துறது....." என்பதுதான் அது.... இதன் ஆரிஜின் சென்னை பகுதியை சுற்றி உள்ள நாலாந்தர குப்பங்கள்.... மனிதநாகரீகமோ, கல்வி அறிவோ , இங்கிதமோ தெரியாத பெண் தன்மை (குணங்கள்) கொஞ்சம் கூட இல்லாத பெண்கள் தான் இந்த வார்த்தையின் உற்பத்தியாளர்கள்..... யாருடனாவது சண்டை போடும்பொழுது "கூதி கழுவி அவன் மூஞ்சில ஊத்துடி...." " ங்கோத்தா.... கூதி கழுவி மூஞ்சில ஊத்திடுவேன்..." போன்ற வார்த்தைகளால் எதிராளியை அவமானப்படுத்துவார்கள்...




ஆனால்... இந்த "கழுவி ஊற்றுதல்" என்பது மிக சர்வசாதாரண புழக்கத்திற்கு வந்துவிட்ட நல்ல வார்த்தையாகி விட்டிருக்கிறது....

பெற்றோர்கள், அக்கம்பக்கத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை கொண்டே ஒரு குழந்தை பேசக்கற்றுக்கொள்கிறது.... அந்த வார்த்தைகளையே அந்த குழந்தைகளும் பேச ஆரம்பிக்கிறது... ஆகவே குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போட கூடாது..... அநாகரீக வார்த்தைகளை உச்சரிக்க கூடாது.. என்றெல்லாம் உளவியல் நிபுணர்களும், குழைந்தைகள் நல ஆலோசகர்களும் கழுதையாய் காத்துக்கொண்டிருக்கிறார்... ஆனால்.. சமூக நகர்வுகளில் அதற்கான வாய்ப்பு மங்கிக்கொண்டே வருகிறது..... நம் குழந்தைகள் முன்பாக நாம் பேசாமல் தவிர்க்கலாம்.. ஆனால்... சமூகத்தின் பல வெளிச்ச விஷயங்கள் இம்மாதிரிதான் சத்தமாக உச்ச்சரித்துக்கொண்டிருக்கிறது..... இந்த வார்த்தைகளை கேட்க விடாமல் நம்மால் குழந்தைகளின் காதுகளை பொத்தி விட முடியாது...

சமீபத்தில் வெளியான "வடசென்னை" என்றொரு திரைப்படத்தில் இம்மாதிரியான வார்த்தைகள் மிக சாதாரணமாய் புழங்ககப்படுகிறது.... கதாநாயகனை பார்த்து "மொக்க கூதி" என்கிறார் கதாநாயகி... "ங்கொம்மால" என்று அடிக்கடி கூவுகிறார்கள் பல கதாபாத்திரங்கள்....

இந்த படங்களை தியேட்டர்களிலோ, டவுன்லோடு செய்தோ பார்த்தே ஆகவேண்டும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம் நாம்.... அப்படியே இதை தியேட்டரிலோ, இணையத்திலோ பார்க்காமல் தவிர்த்தாலும்... "உலகத்தொலைக்காட்ச்சிகளில் முதல் முறையாக.." என்று ராகமாய் கூவி அதை திரையிட்டு காட்டக்கூடிய தொல்லைக்காட்சி சேனல்களை நாம் நம் படுக்கை அறை வரை கொண்டு வந்துவிட்டோம்... இனிமேல் தடுக்கவே முடியாது...

எதார்த்தம், சுதந்திரம், இயல்பு, புரட்சி என்று பல சொல்லாடல்களும், வெளிச்சங்களும் சமூக சீரழிவுகளை முன்னெடுத்து அழிவை நோக்கி நம்மை நகர்த்துவதற்கு நாமும் ஆதரவளித்து கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்...

என்ன செய்ய.... என்ன செய்ய.. என்ன செய்ய... கேள்விகள் மட்டுமே நம் போன்ற சாமானியர்களை குடைந்துகொண்டே இருக்கிறது....

சரணம் அய்யப்பா....

எங்கள் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மேரிமாதா ஆலயம், நாகூர் தர்கா போன்ற கிறிஸ்தவ , இஸ்லாமிய ஆலயங்களுக்கு நிறையபேர் செல்வார்கள்... நானும் கூட சென்றிருக்கிறேன்.... அவர்கள் பிறப்பால் இந்துக்களாக இருந்தாலும், மாரியம்மன், காளியம்மன், முருகன், வீரனார், அய்யனார் என்று இந்துமதத்தின் பல்வேறு கடவுள்களை பக்தியோடு வணங்கினாலும் இந்த வேளாங்கண்ணி மாதாவையும், நாகூர் ஆண்டவரையும் கடவுள்களாக மட்டுமே பார்த்து பழகியவர்கள்.... கடவுள் என்ற பக்தி மட்டுமே நோக்கமாக இருக்கும்பொழுது அங்கே இந்துவோ, இஸ்லாமியமோ, கிறிஸ்தவமோ குறுக்கிடுவதில்லை.... அவர்களை அங்கெல்லாம் யாரும் தடுத்ததும் இல்லை... கேட்டதும் இல்லை....

தற்போது எல்லாவயதிற்குட்பட்ட பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ரெஹானா, ஃபாத்திமா, எபி , கவிதா கோஷி போன்ற சில பெண்கள் சபரிமலைக்கு கிளம்பி விட்டார்கள்...




இந்த பெயர்களை பார்த்த உடனேயே நமக்கு தெரிந்திருக்கும்.. இவர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்கள் இல்லை... அப்படியானால் இவ்வளவு காலமும் ஐயப்பன் மேல் மிகவும் பக்தியாக இருந்து, தாம் வேறு மதத்தை சேர்ந்தவர்.. நம் அய்யப்பன் பக்தியை வெளியில் காட்டிக்கொண்டால் யாராவது தவறாக நினைப்பார்கள் என்று ரகசியமாய் வைத்திருந்து , ஐயகோ... நான் 30-40 வயதுகளில் இருக்கும் ஒரே காரணத்தால் நம்மால் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் போய் விட்டதே..... அய்யப்பனை தரிசிக்க இன்னும் 10-20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. என்று ஏங்கி கிடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை சொன்னதும்..... "அடடா... என் கடவுளை தரிசிக்க..... நான் யாரை பார்க்க முடியுமா என்று ஏங்கிக்கிடந்தேனோ.... அந்த அய்யப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது..... இனிமேல் மதங்களோ, சட்டங்களோ என்னை தடுக்க முடியாது..... என் தெய்வத்தை தரிசித்தே தீருவேன்.. என்று பக்தி சிரத்தையுடன் வைராக்கியமாக கிளம்பியவர்களா..... என்று யோசித்தால்.... அதற்கான பதில்...... "இல்லை... இல்லவே இல்லை..." என்று மிக சத்தமாய் கேட்கிறது....

அப்படி என்றால்..... இந்த தீர்ப்பு இவர்களை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல எந்த விதத்தில் தூண்டியது.. என்ற அடுத்த கேள்வி வரும்போதுதான்... நம் உளவியல் அறிவு கண் விழித்து, சோம்பல் முறைத்தபடி பதில் சொல்கிறது....

இந்த பெண்கள் ஓரளவு விஷய ஞானம் உள்ளவர்கள்.... பழைய செய்திகளை, நிறைய புரட்சியாளர்களின் வரலாறுகளை படித்து அறிந்தவர்கள்... சமூக நகர்வுகளை மிகத்தெளிவாய் உற்று நோக்குபவர்கள்.. அதன் தாக்கங்களை துல்லியமாய் கணிக்கத்தெரிந்தவர்கள்.... இத்தனை திறமை இருந்தும் என்ன பயன்.... இவர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் யாருக்கும் தெரியவில்லை... ஆகவே அதற்கான வாய்ப்புக்காய் காத்திருந்தவர்கள்...

விபச்சாரிகளை கூப்பிட்டு விருது கொடுத்து பாராட்டும் சமூகத்திடமிருந்து...... குடும்ப உறவுகளை உதறித்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக வாழும் பெண்களை மேடையேற்றி சால்வை போர்த்தி கவுரவிக்கும் சமூகத்திடமிருந்து...... இயற்கைக்கு முரணாய், கலாச்சாரத்திற்கு முரணாய்.... பாரம்பரியத்தை சீரழிப்பதாய் செய்யப்படும் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்திடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயம் இதுதான்....

"இங்கே என்ன செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. ஏதாவது ஒரு பழைய விஷயத்தை முரனாக்கி.. அதை மீறினால் நமக்கு சட்ட, தார்மீக பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.... நம் மீது ஊடக வெளிச்சம் பாயும்.. நாமும் பலர் அறிந்த பிரபலமாவோம்... நாம் எங்கு சென்றாலும் நம்மை தெரிந்தவர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள்... வரலாறு நம் பெயரையும் தாங்கி நிற்கும்...."

இந்த அப்ஷர்வேஷனின் வெளிப்பாடே அந்த பெண்களை அய்யப்பன் கோயிலை நோக்கி தள்ளி விட்டிருக்கிறது.... நிச்சயமாய் அய்யப்பன் கோயில் வரலாற்றை எதிர்காலத்தில் எழுதும்பொழுது இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துவிட்டு எழுதி விட முடியாது.... ஒருவேளை இதற்கு பிறகு எல்லா வயது பெண்களும் சுமூகமாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டால்..... "முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற "மாதவிடாய் கால வயதுள்ள பெண்கள்" என்று இவர்கள் பெயர்கள் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
ஒருவேளை தடுக்கப்பட்டால்.... நிச்சயம் இம்மாதிரி செயல்களின் மீது உடனடியாய் பாயும் ஊடக வெளிச்சம் நம் மீதும் பாய்ந்து நாம் இந்திய அளவில் - உலக அளவில் பிரபலமாக, அறியப்பட்டவராக ஆகலாம்....

ஆகவே தான் அவர்கள் இப்படி வம்படியாய் அய்யப்பனை தரிசிக்க கிளம்பி விட்டார்கள்...

இதற்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதால் நாம் தப்பித்தது விட முடியாது.. ஏனென்றால்... இந்த பெண்களை குற்றவாளி என்று ஒருவிரலால் நாம் சுட்டிக்காட்டும் பொழுது.... "இம்மாதிரி செயல்களை ஆதரித்த, அப்படி செய்பவர்களை கூட்டம் கூடி வேடிக்கை பார்த்த, அவர்களை மேடையேற்றிய, அவர்களுக்கு விருதுகள் கொடுத்த நம்மை நோக்கி மற்ற மூன்று விரல்களும் நீண்டிருப்பதை நாம் உணர வேண்டும்..

அனுபவங்களே நம் அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கிறது...

சரணம் அய்யப்பா....

ஆயிர பூஜ


இந்த வார்த்தையின் அர்த்தம் ஆயிரம் முறை பூஜை என்றோ ... ஆயிரம் கோயில்களில் பூஜை என்பதோ அல்ல.... ஆயுத பூஜைதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் "ஆயிர பூஜ" அறிமுகமாயிருந்தது...

பூஜை கொண்டாடப்படும் நாளிலோ, அதற்கு ஒருநாள் முன்னதாகவோ வீடுகளில் இருக்கும் அம்மாவோ, அம்மாச்சியோ, ஆயாவோ... குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.... "ஏள்ள (ஏ புள்ள)... இந்த சாமான எல்லாம் வெளில அள்ளிப்போட்டு கழுவு...."




வீட்டில் இருக்கும் படி-மரக்கால் முதல், மாட்டுக்கு கட்டும் சலங்கை, அறுவடை காலத்தில் பயன்படுத்தப்படும் கொக்காலி (வைக்கோல், கடலை கொடி, உளுந்து கொடி போன்றவற்றை கொத்தாக பற்றி அள்ள பயன்படுவது) , உழவாரம் (சமதரையில் படர்ந்திருக்கும் புற்களை செதுக்கி எடுக்க பயன்படுவது) , கருக்கருவாள் (கதிர் அறுக்க பயன்படுவது ) கோடாரி, பாரை, மண்வெட்டி , களவறி (களை எடுக்கவும், பயிர்களின் ஊடே நிலத்தை கீறிவிடவும் பயன்படுவது ) என எல்லா பொருட்களும் குடத்தடிக்கு வரும்... தேங்காய் நாறில் சாம்பல் ஒற்றி எடுத்தது துலக்கி கழுவி காயவைக்கப்பட்டு நடுவீட்டில் சுவரோரமாய் குடியேறும்...

வண்டி, கலப்பை, நுகத்தடி எல்லாம் கழுவி காயவைக்கப்பட்டு பத்தாயத்தில் (நெல் சேகரிப்பு கலன்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்... சில வருடங்கள் மழை தாமதத்தாலோ, ஆற்றுநீர் தாமதத்தாலோ ஆயுத பூஜை நாட்களில் நடவிற்கான உழவு வேலை நடக்கும்.. அந்நேரம் கலப்பை நுகத்தடி மட்டும் பூஜையில் கலந்துகொள்ளாமல் வயலில் தங்கிப்போகும்...

காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலையை அவித்து தாளித்து ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... பச்சை அரிசியில் வெல்லம் , நிலக்கடலை பருப்பு கலந்து கிண்டி ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... (சில வீடுகளில் வெல்லப்பாகு செய்து, இந்த பச்சரிசியை திருவையிலிட்டு குருணையாய் உடைத்து , நிலக்கடலை பருப்பை வறுத்து போட்டு பச்சரிசி கிண்டுவார்கள்....)
அவல், அரிசி பொறி, சர்க்கரை, பொட்டுக்கடலை கலந்து ஒரு பாத்திரத்திலிருக்கும்.... எல்லா வருடமும் ஆயுதபூஜைக்கு இந்த மூன்று பதார்த்தங்களும் மாண்டடரி ....

அப்பா எங்கிருந்தோ கொண்டுவந்த நாவல் கொழுந்து, இண்டங்கொழுந்து, அரளிக்கொழுந்து, ஆவாரம் கொழுந்து எல்லாம் பூஜை இடத்தினருகில் வைக்கப்பட்டிருக்கும்.... மாலை சூரியன் மறைந்து இருள் கவியத்தொடங்கும் நேரம் பூஜை தொடங்கும்..... ஒரு கிண்ணத்தில் சந்தனம் கரைக்கப்பட்டிருக்கும்... ஒரு கிண்ணத்தில் குங்குமம்... அம்மா ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணி புகைபோட்டு, வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு, தேங்காய், பூ (கதம்பம்) அத்துடன் ஒரு சிறிய அளவிலான புத்தகம் ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தட்டில் வைத்து பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்க..... வீட்டிற்கு பின்னாலிருந்த பலாமரத்தில் இருந்து ஒடித்துக்கொண்டுவந்த இலைகளை வைத்து அப்பா தொன்னை தைத்துக்கொண்டிருப்பார்... இரண்டு அல்லது மூன்று இலைகளை இணைத்து அழகாக தொன்னை தைப்பார்...

பெரியக்கா கரைத்து வைத்த சந்தன கிண்ணத்தில் இருந்து சந்தனம் எடுத்து எல்லா பொருட்களுக்கும் சந்தன பொட்டு வைக்க... சின்னக்கா அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமம் வைத்துக்கொண்டிருப்பாள்... பத்தாயம், அம்மாவுக்கு சீர்வரிசையாய் வந்த பீரோ, கலப்பை, நுகத்தடி, கூனு, நிலைப்படி, கதவு என எல்லா இடங்களிலும் சந்தன-குங்கும பொட்டு வைத்து முடித்ததும் பூஜை தொடங்கும்...

(வயலில் தங்கிவிட்ட கலப்பை-நுகத்தடிக்கு அப்பா காலையில் சென்று பொட்டு வைத்து பூ சூட்டுவார் )

அப்பா தைத்த தொன்னைகளில் கொண்டக்கடலை, பச்சரிசி, அவல்-பொறி நிறைக்கப்பட்டு சாமிக்கு படையல் வைக்கப்பட்டிருக்கும்...

எல்லா பொருட்களுக்கும் பொட்டுவைத்துவிட்டு அக்காள்கள் பூஜை இடத்திற்கு வந்ததும் அம்மா மறக்காமல் கேட்பாள்...."ஏள்ள... பீரோலுக்கு பொட்டுவச்சியா...."

என்னதான் வீட்டில் ஆயிரம் பொருட்கள் இருந்தாலும், திருமணமாகி எத்தனை ஆண்டுகளானாலும் பெண்களை பொறுத்தவரை பிறந்தவீட்டு சீதனம் மட்டும் எல்லாவற்றிலும் உயர்வானதுதான்...

எங்களின் புத்தகப்பைகள் பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும்.... ஓரிரு புத்தகங்களுக்கும் கூட சந்தனம்-குங்குமம் வைக்கப்படும்...

இதுவரை சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்த பூஜை... இப்போது லேசாக திணற ஆரம்பிக்கும்... "ஏம்பா.. எல்லோரும் ஒம்பொஸ்தவத்தை எடுத்து ஏதாவது படிங்க...."
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... சின்னக்கா மட்டும் உஷாராகி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்.... எனக்கும்-பெரியக்காவிற்கும் படிக்கிறதுன்னா பாழுங்கிணத்துல குதிக்கிற மாதிரி ஒரு பயம்....

இரண்டு மூன்றுமுறை சொல்லியும் நானும் பெரியக்காவும் கண்டுகொள்ள மாட்டோம்....

தாம்பூலத்தட்டில் இருக்கும் அந்த சிறிய புத்தகத்தை எடுத்து, அப்பா கணீர் குரலில் ராகமாய் வாசிக்கத்தொடங்குவார்....

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...

கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் குரல் உயரும்...

"நாவக்கொழுந்தே.. நாமஷ்ட்டே
இண்டங்கொழுந்தே நாமஷ்ட்டே
அரளிக்கொழுந்தே நாமஷ்ட்டே
ஆவாரங்கொழுந்தே நாமஷ்ட்டே ....."
என்று முடிப்பார்....

அப்பா சொல்லும் நாமஷ்ட்டே என்பதற்கான சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்ளும்பொழுது அப்பா இறந்து சில வருடங்கள் கழிந்திருந்தது..... "நமஸ்தே" என்பதைத்தான் அப்பா அப்போது ராகமாய் நீட்டி "நாமஷ்ட்டே " என்று உச்சரித்திருக்கிறார்...

அப்பா வாசித்து முடித்ததும் ஆளுக்கு ஒரு தொண்ணையாக எடுத்துக்கொள்வோம்...

இந்த ஆயுதபூஜை சந்தன-குங்கும பொட்டு சில மாதங்களுக்கு பின்னாலும் கூட எப்போதாவது சட்டையில் ஒட்டிக்கொள்ளும்....

ம்ம்ம்.....................

காரில் படிந்திருந்த தூசியை ப்ரெஷால் துடைத்துவிட்டு அலுவலக மடிக்கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுக்கும், அலைபேசியில் அக்காள்களுக்கும் வாழ்த்து சொல்லி கழிந்துகொண்டிருக்கிறது என் ஆயுதபூஜை...

இத்தனை பெரிய பதிவு எழுதுவதற்கான அனுபவத்தை கொடுத்தது என் குழந்தைகால ஆயுதபூஜை.... இன்னும் சில- வருடங்கள் கழித்து எழுதுவதற்கு அபிக்கும்-ஆதிக்கும் நான் ஏதாவது நினைவுகளை சேர்த்து வைத்திருக்கிறேனா??? தெரியவில்லை....

ஆர்யா என்கிற பாஷ்யம்

ஆர்யாவை தெரியுமா என்று கேட்டால் நம்மில் அனைவரும் உடனே சொல்வோம்.. "அய்யே... ஆர்யா யாருன்னு கூட தெரியாதா....? அவர் பெரிய ஹீரோ..."

ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம் என்றால்.... நாம் உடனே பின்வாங்குவோம்... யோசிப்போம்.... நடிகர் ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யாமா... என கூகுள் செய்வோம்...."

தாம் எப்பாடு பட்டாவது தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று மாபெரும் கொள்கையுடன் "தமிழர் நலன்.. தமிழ் தேசியம்.." என்றெல்லாம் உணர்ச்சிகளை தூண்டிவிடும் சமகால தந்திரசாலிகளை தலைவன் என்று போற்றிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஆர்யா என்ற பாஷ்யம் சற்று அந்நியப்பட்ட பெயர்தான்...

1932 ஜனவரி மாதம் 25ம் நாள் அந்த ஆர்யா என்கிற பாஷ்யம் திருவல்லிக்கேணியின் கடைத்தெருவில் துணிக்கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான்... அவன் கேட்டது..."இங்கே இந்திய தேசியக்கொடி இருக்கிறதா.."

பலர் "இல்லை" என்று சொல்லிவிட்டார்கள்... சிலர் அவர்கள் ரகசியமாய் விற்பனைக்கு வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள்....

பாஷ்யத்தின் தேவை அந்த சிறிய கொடி அல்ல... அவனின் கற்பனையில் இருந்த கொடியின் அளவில் காலேஅரைக்கால் அளவுகூட இல்லை அவர்கள் காட்டிய கொடி... அவனின் தேவை பெரிய அளவு... மிகப்பெரிய அளவு.... யோசித்தான்....

ஒரு பெரிய நான்கு முழ வேட்டியை வாங்கினான்... வண்ணப்பொடிக்கடையில் காவியும் பச்சையும் நீலமும் வாங்கிக்கொண்டான்.... தம்பு செட்டி தெருவில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.... வாங்கி வந்த வேட்டியில் ஒருபக்கம் காவியையும், ஒருபக்கம் பச்சையும் கரைத்து நனைத்து நடுவே நீல ராட்டை வரைந்து ஒரு இந்திய தேசியக்கொடியை உருவாக்கினான்.... அதில்..."இந்தியா இன்றுமுதல் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது.." என்று எழுதினான்....அதை காயவைத்து மடித்து இடுப்பில் சுற்றிக்கொண்டான்... மேலே காக்கி அரைடவுசரும், காக்கி சட்டையும் அணிந்துகொண்டான்..

மீண்டும் திருவல்லிக்கேணி வந்தான்.... சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபால சந்தித்தான்... "நான் எங்கு போனாலும் என் பின்னே தூரமாக தொடர்ந்து வா" என கட்டளையிட்டான்...

இருவருமாக மவுண்ட் ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச்சீட்டு வாங்கி நுழைந்தார்கள்.. இரவு 12 மணி.. படம் முடிந்து அனைவரும் வெளியேற.... செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணிமுடிந்து பொழுதுபோக்க சினிமா பார்க்க வந்து வெளியேறியவர்களுடன் கலந்தான்... அதற்காகத்தான் அந்த காக்கி சீருடை தயார் நிலை...

காக்கி சீருடையில் கூட்டத்தில் கலந்து நுழைந்ததால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இவனை யாரும் கண்டுகொண்டு தடுக்கவில்லை...

காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்க... இவன் மட்டும் ரகசியமாய் பிரிந்து, கோட்டையின் கொடிமரம் நோக்கி நடந்தான்... 200 அடி உயர கொடிமரத்தில் 140 அடி ஏறிவிட்டான்.... அந்த அளவுவரைதான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது.. அதற்கும் மேலே 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்புதான்.... மனதில் எரிந்த சுதந்திர வேட்கை , அந்த இரும்புக்குழாயை இறுகப்பற்றும் உறுதியை தந்தது அவனுக்கு...

அடி அடியாய் ஏறி 60 அடியையும் கடந்து உச்சியை அடைகிறான்... ஒரு உடும்பை போல தன்னை குழாய்களில் பிணைத்து இறுக்கிக்கொண்டு , தன இடுப்பில் இருந்த இந்திய தேசியக்கொடியை உதறி அந்த கம்பத்தில் கட்டுகிறான்...



சறுக்கியபடி கீழிறங்கி நழுவி. மீண்டும் தம்புச்செட்டித்தெருவை அடைகிறான்... மறுநாள் காலை ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது...... எல்லா உயரதிகாரிகளும் கோட்டை கொடிமரத்தின் அருகே குழுமுகிறார்கள்...

"யார்.. யார்.... "
கேள்விகள் அவர்கள் புருவங்களை உயர்த்த.. ஆத்திரம் அவர்களின் கண்களை சிவக்க வைக்க... கொடிமரத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது... அந்த திகாரிகள் கூட்டம்.... அதுவே அந்த தேசியக்கொடிக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தந்தது...

எதுவுமே தெரியாதது போல தம்புச்செட்டித்தெருவில் தனியாளாய் நடந்துகொண்டிருந்தன பாஷ்யம் என்ற ஆர்யா...

அதே 1932ம் வருடம் ஜனவரி 26ம் தேதியை நாம் சுதந்திரதினமாக கொண்டாடவேண்டும்.. என்று ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறைகூவலை செயலாக்கவே பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினான்... இதை செய்தபோது அவனுக்கு வயது 25.

தற்போதைய திருவாரூர் மாவட்டம்.. அந்நாளைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் சேரன் குளம் தான் அந்த ஆர்யா என்கிற பாஷ்யத்தின் சொந்த ஊர்...

இவன் ஒரு பார்ப்பனன் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால்... நீங்கள் ஒரு சமகால சமூகநீதி காவலன் என்பதை சொல்லவே வேண்டாம்...

சீமானும், திருமுருகன் காந்தியும் பிரித்துக்கொண்டுபோக தமிழ்நாடு ஒன்றும் இவர்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல....... இந்தியாவை உருவாக்கியது நாம்.... தேசியத்தமிழ் என்று சொல்லிப்பழகுவோம்......... இந்த தந்திர நரிகளின் தலைமை ஆசைக்கு பலிக்கடாவாகி தமிழ் தேசியம் என்று சீரழிய வேண்டாம்...

டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ.... சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தானப்பிறகுதான் அங்கிருந்த கோட்டைகளில் தேசியக்கொடி பறந்தது.... ஆனால்... சுதந்திரம் வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி அழகுபார்த்தவர்கள் நாம்

யாரோ சிலரின் நாற்காலி ஆசைக்கு எம் தேசத்தை கூறுபோட அனுமதிப்பதா...??

பொருளாதார தேடலில் எங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த "திரைகடலோடி திரவியம் தேட" நாங்கள் பூமிப்பந்தில் ஏதோ ஒரு மூலையில் நிலைகொண்டிருக்கலாம்... இந்தியா என் தேசம்.... என்ற நினைவுகள் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டுதான் நாங்கள் விமானமேறி இருக்கிறோம்....

வாழ்க இந்தியா....!!!

வியாழன், 20 செப்டம்பர், 2018

அந்நியமாகும் தாய்-தந்தை வாசனை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரத்யோகமாக வாசனை உண்டு... அதை வியர்வை வாசனை என்றோ.. உழைப்பின் வாசனை என்றோ.. எதோ ஒரு பெயரில் சொல்லிக்கொள்ளலாம்....

பெண்களின் அக்குளில் இருந்து வரும் வாசனைக்கு ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை சுரக்க செய்யும் தன்மை உண்டு என்கிறது மருத்துவ விஞ்ஞானம்... காமம் ஆர்ப்பாட்டமாய் கிளர்த்தெழும் பதின் பருவ வயதை கடந்து... அது நிதானமடைந்து கரம்பற்றி மெல்ல நடைபோடும் காலத்தில் பாலியல் கூடலுக்கு இந்த வாசனை மிகவும் முக்கியம் என்றும் இந்த உடல்வாசனை ஒப்பாத தம்பதிகளால் கூடலில் ஈடுபாடுகொள்ள முடியாது என்றும் சொல்கிறது உளவியல் விஞ்ஞானம்...

மேற்பாரா ஒரு இடைச்செறுகள்தானே அன்றி.. பதிவு இதைப்பற்றியதில்லை...

அப்படி மனிதர்களுக்கான பிரத்யோக வாசனை பற்றி யோசிக்கையில்.. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை-தாயின் வாசனை மனதில் பதிந்த ஒன்று.. இருபதாம் நூற்றாண்டு குழந்தைகளுக்கு இந்த வாசனை அநேகம் சாத்தியப்பட்டது... வெளியூர் பயணம் செல்ல வேண்டும் என்றால்.. குறைந்த தூரமாக இருந்தால் கால் நடையாகவும், சற்றே தூரப்பயணம் என்றால் மரச்சக்கர மாட்டு வண்டியும் கட்டி பயணப்படும் விவசாய கிராம பின்னணி கொண்ட எனக்கும் அப்படித்தான்....

எல்லா ஆண் குழந்தைகளை போலவே எனக்கும் அப்பாவுடன் அதிக நெருக்கமில்லை என்றாலும்... எப்போதாவது பயணப்படும் வெளியூர் பயணங்களில் நடக்க முடியாமல் தவிக்கும் பொழுது என்னை தூக்கிக்கொண்டு நடக்கும் அப்பாவின் வாசனை இன்றும் என்னுள் பசுமையாயிருக்கிறது.... அருகில் இருந்து சாப்பிடும் போதோ... சைக்கிளில் பின் அமர்ந்து எங்காவது பயணப்படும்போதோ நுகந்த வாசனை இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை... அப்பா-அம்மாவை உணர்வதில் இந்த வாசனையின் பங்கு அளப்பரியது... அப்பா மரணித்து பத்தாண்டுகள் கழிந்துவிட்ட பிற்பாடும்.... நான் நாற்பதுகளின் தொடக்கத்தில் நுழைந்திருந்தாலும்.. என்றோ உணர்ந்த அப்பா வாசனை அப்படியேதான் இருக்கிறது...

அப்பாவிற்கு இருந்ததை போல எனக்கும் ஒரு வாசனை இருக்கும் தானே?? ஆனால்... எல்லா இருபத்தோராம் நூற்றாண்டு குழந்தைகளை போலவே.. என் மகனும் என் வாசனை அறியாதவனாய் தான் வளர்கிறான்....

அவனை பொறுத்தவரை அப்பாவின் வாசனை என்பது ராயல் மிரேஜ் லாவண்டர் வாசனையாகவோ, மோண்ட் ப்ளாங் இண்டிஜுவல் வாசனையாகவோ தான் இருக்கிறது.... அப்பா நெருக்கம் அன்னியப்பட்டு போயிருக்கிறது...

முதியோர் இல்லங்கள் பெருக இதுமாதிரியான "அன்னிய"த்தன்மையும் காரணமாயிருக்குமோ???

அள்ளிக்கொண்டு போகும் அரசு ஊழியர்கள்

இப்போ தான் எங்க பக்கம் எங்கிட்டு திரும்பினாலும் தென்னந்தோப்பு..... 30-35 வருஷம் முன்ன எல்லாம் யாரோ ஒருத்தர்-ரெண்டு பேர்தான் தென்னந்தோப்பு வச்சிருப்பாங்க... மத்த வீடுகள்ல வீட்டுக்கிட்ட ஒரு தென்னை மரமோ-ரெண்டு தென்னை மரமோதான் இருக்கும்....

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல அப்படி ஒரு தென்னை மரம் நின்னுச்சு.... அதுல ஓவியமா ரெண்டே ரெண்டு தேங்கா காச்சிருந்துச்சு..... இப்போ தேங்காய் வெட்றவங்க அம்பது-அறுபதடி உயர மரமானாலும் வாங்கு கத்தி வச்சு அறுத்துடறாங்க... ஆனா... அந்த காலத்துல கால்ல தளதாடிய* கட்டிட்டு மரத்துல ஏறித்தான் தேங்கா பறிப்பாங்க.... அதுவும் ஒரு சில குறிப்பிட்ட ஆளுங்கதான் மரமேறுவங்க... பறிக்கிற தேங்காய்ல ஒரு தேங்காய் அவங்களுக்கு.. அதுதான் கூலி...

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல நின்ன அந்த தென்னை மரத்துல ரெண்டே ரெண்டு தேங்கா இருந்துச்சுன்னு சொன்னேன்ல.... எங்க பெரியம்மா சாரதாம்பாள் , அப்படி மரமேறுற "ராமன்"ன்னு ஒரு ஆளை கூப்பிட்டு "ஏலே ராமா... இந்த தேங்காயை கொஞ்சம் பறிச்சு கொடுடா"ன்னு சொல்ல...

ராமனும் மரம் ஏறினான்... ரெண்டு தேங்காயை பறிச்சுப்போட்டுட்டு கீழ இறங்கிட்டான்... பறிச்சு போட்டதும் தான் தெரிஞ்சுது.. அந்த ரெண்டு தேங்காய்ல ஒன்னு ஒல்லி*...

ராமன் கீழ எறங்கி... அந்த ரெண்டு தேங்காய்ல நல்ல தேங்காய கூலியா எடுத்துகிட்டான்....

"ஏலே.. ஏலே... கொழம்பு வைக்கணும்டா... 5 ரூபா வாங்கிக்கோடா.... அந்த தேங்காய கொடுத்துட்டு போடா"ன்னாத்துக்கு..... "ம்ம்.... அதெல்லாம் முடியாது... எனக்கு தேங்காய்தான் வேணும்"னு எடுத்துட்டு போய்ட்டான்....

ஆக.... ரெண்டு தேங்கா.. ரெண்டுல ஒன்னு ஒல்லி.... அது எதுக்கும் உதவாது... பறிச்சவனுக்கு கூலியா இருந்த ஒரே ஒரு நல்ல தேங்காய அவன் கொண்டு போய்ட்டான்...

இப்படித்தான் இருக்கு நம்ம தமிழ்நாட்டோட நிலைமையும்.... ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு கூலியா , மாநிலத்தோட வருமானத்துல 80% போகுதுன்னு ஒரு பேச்சு இருக்கு... இதுல அகவிலைப்படி 2% உயர்வாம்....

இந்த தேங்காய் எப்போ பெரிசாகும்.. பெரிசாகும்ன்னு மரத்த வச்சு வளத்து பறிக்கலாம்னு காத்துக்கிட்டிருந்து... காய்ச்சதுல நல்ல தேங்காயை கூலியா கொடுத்துட்டு கொழம்பு வைக்க தேங்கா கிடைக்காம போன எங்க பெரியம்மா மாதிரித்தான் தமிழக மக்களும்...

வரிய கொடுத்துட்டு, ஓட்டையும் போட்டுட்டு "நமக்கு ஏதாவது நடக்கும்"ன்னு நம்பி உட்கார்ந்திருக்காங்க.... "நாங்க உங்களுக்காகத்தான் வேலை செய்றோம்"ன்னு இந்த அரசு ஊழியர்களும்.. ஆட்சியாளர்களும் மொத்தமாலவட்டிட்டு போய்டுறானுங்க...

ராமா... ராமா....

*தளதாடி - இரு கால்களையும் மாட்டிக்கொண்டு மரத்துடன் அணைந்து பற்றிக்கொள்ள உதவும் கயிறால் ஆன வளையம்

*ஒல்லி- தேங்காய் மாதிரியே இருக்கும்.. ஆனால் உள்ளே பருப்பு இருக்காது...

சுயநலத்தை கற்பிக்கும் கல்வி

ஒரு காக்காக்கு ரொம்ப தாகமா இருந்துச்சாம்... ஊரெல்லாம் அலைஞ்சும் காக்கா குடிக்கிற மாதிரி திறந்து வச்ச பாத்திரம் எதுலயும் தண்ணியே இல்லையாம்... கடேசியா ஒரே ஒரு குடத்துல அடில கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம்...

காக்கா பானை மேல உட்கார்ந்து குனிஞ்சு குடிக்க ட்ரை பண்ணுச்சாம்.. ஆனா தண்ணி எட்டலையாம்... ஒடனே காக்கா.... கீழ கெடந்த கூழாங்கல்ல எடுத்து எடுத்து அந்த பானைக்குள்ள போட்டுச்சாம்.... கல்லு பானைக்குள்ள நிறைய நிறைய.. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துச்சாம்.. காக்கா குடிச்சுட்டு சந்தோஷமா பறந்து போச்சாம்...

நம் பிரச்சனைகளை தீர்க்க புத்திசாலித்தனமான உழைப்பு அவசியம்.. என்பதை விளக்கும் விதமாக இப்படி ஒரு கதையை நான் தொடக்கப்பள்ளி படிக்க ஆரம்பித்த காலங்களில் சொல்லிக்கொடுப்பதுண்டு.... பெரும்பாலான தாத்தா-பாட்டிகளும் கூட இந்த கதைகளை பேரக்குழந்தைகளுக்கு பெட்-டைம் ஸ்டோரியாக சொல்வது வழக்கம்...

நேற்றிரவு, கடந்த ஆண்டு அபி படித்து விட்டு போட்டிருந்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்த்தேன்... அதிலும் இந்த கதை இருந்தது.... ஆனால்... சமகாலத்திற்கேற்ப அந்த கதை மாற்றம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ந்தேன்...





ஆம்... இந்த காக்கைக்கும் தாகம் எடுத்தது... தண்ணீர் தேடியது.. ஒரு பானையில் தண்ணீரை கண்டது... ஆனால்... இந்த காகம் கூழாங்கற்களை எல்லாம் தேடவில்லை... பானையின் அடிப்பகுதியில் தன்னுடைய அலகால் குத்தி துவாரமிட்டது... தண்ணீரை குடித்துவிட்டு பறந்து சென்றது...

அட பாவிகளா.... குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள் இதுதானா??

பானைக்கு "வாய்" இருந்தாலும் கூட ஓட்டை போட்டு தண்ணீர் குடிக்கும் குறுக்கு வழியை கற்று தருகிறீர்கள்..

இருக்கும் நல்ல பானையை உடைத்து அது அடுத்து வருபவனுக்கு உபயோகம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை... நம் காரியம் ஆனால் சரி என்று கற்று தருகிறீர்கள்...

வன்முறையை பிரயோகித்து, அடுத்தவனுக்கு சொந்தமானதை உங்கள் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று கற்று தருகிறீர்கள்..

உங்கள் தேவைக்கு குடித்தது போக மிச்சமுள்ளது வீணாக போனாலும் பரவாயில்லை என்று கற்று தருகிறீர்கள்...

# எது நாசமாய் போனாலும் பரவாயில்லை.. என் காரியம் நடக்க வேண்டும் என்று "சுயநலமாய்" மட்டுமே சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்று கற்று தந்தால்...

"தீக்குளிக்கும்" போது செல்பியோ-வீடியோவோ எடுக்காமல் அவன் எப்படி காப்பாற்ற நினைப்பான்??

சபாஷ் கல்வி அமைச்சரே

இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வர காரணம் ஜப்பானில் வீசப்பட்ட அமெரிக்காவின் "லிட்டில் பாய்" என்ற பெயரை உடைய ஹைட்ரஜன் அணுகுண்டு வீச்சு என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும்.. இதற்காக வரலாறும் நாமும் அமெரிக்காவை நிறைய திட்டி விட்டோம்... ஆனால்... அந்த அணுகுண்டு வீச்சுக்கு காரணமான , அதற்கு முந்தைய விஷயம்.... ஜப்பான் , அமெரிக்காவின் கடற்படை மீது நடத்திய படுபயங்கர தாக்குதல் என்பது நம்மில் சில பேருக்குத்தான் தெரிந்திருக்கும்.. "பேர்ல் ஹார்பர் அட்டாக்" என்று குறிப்பிடப்படும் அந்த தாக்குதலை விரிவாக காட்டிய ஒரு ஆங்கில திரைப்படம் "பேர்ல் ஹார்பர்"

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி... அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு கருப்பின இளைஞனை, அவனது மேலதிகாரியாக இருக்கும் வெள்ளைக்காரர் ஆயுத பிரயோகத்திற்கு அனுமதிக்கவே மாட்டார்... ராணுவ கப்பலின் சமையலறையில் தான் அவனுக்கு வேலை... அந்த கருப்பின இளைஞன் பலமுறை விண்ணப்பித்தும் அவனை சமையலறையிலேயே முடக்குவார் அந்த அதிகாரி...

இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு நள்ளிரவில் சாரை சாரையாக வரும் ஜப்பானிய விமானங்கள் அந்த பேர்ல் ஹார்பர் மீதி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த, அந்த உயரதிகாரியும் அடிபட்டு விழ... அப்போது இந்த கருப்பின இளைஞன் , தானும் ஆயுத தாக்குதல் செய்ய அனுமதிக்க வேண்டுமாய் கேட்பான்... அந்த அடிபட்டு விழுந்த வெள்ளை உயரதிகாரி, அப்போது தான் கண்ணசைவின் மூலம் அனுமதி கொடுப்பார்..

தன்னுடைய திறமையை எல்லாம் வெளிப்படுத்த நினைக்கும் அந்த கருப்பின இளைஞன் இருப்பதிலேயே பெரிய ஆயுதங்களாக பார்த்து , கையாண்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதாக அந்த கதைக்கள காட்சி அமைக்கப்பட்டிருக்கும்...

நிற்க...




தற்போதைய தமிழக அமைச்சர்களிலேயே அப்படியான ஒருவரை, மன்னார்குடி சதிகார கும்பலால் திறமையை பயன்படுத்த முடியாமல் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நம் கண்முன்னே நிறுத்துகிறது சமகால காட்சிகள்...

மரியாதை நிமித்தமாக சில பதவிகளுக்கேற்ப சில வார்த்தைகளை உச்சரிப்பது நம் வழக்கம்... "மேதகு" ஆளுநர்..., "வணக்கத்திற்குரிய" மேயர்... என்பது போலவே... "மாண்புமிகு" முதலமைச்சர்......

அப்படியான "மாண்புமிகு" என்ற வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்க தெரியாத முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் "மான்மிகு அம்மா அரசு... " என்று ட்ராமா போடும் வேளையில்.... அம்மாதிரி ட்ராமா எதுவும் போடாமல் , கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தி கலக்குகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்...

இன்று காலை, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்த சந்திப்பில் அவர் "அம்மா அரசு என்றோ... அம்மாவின் வழியில் செயல்படும் அரசு" என்றோ சொல்லவில்லை.... ஏனென்றால்... இது அம்மாவின் அரசும் அல்ல... அம்மா வழியில் செயல்படும் அரசும் அல்ல என்பதை முழுமையாய் உணர்ந்து, தமக்கு கொடுக்கப்பட்ட அமைச்சருக்கான கடமையை மிகவும் திறம்படவும், தொலைநோக்கு பார்வையுடனும் செய்து கொண்டிருக்கும் நிதானம் அவரிடம் இருக்கிறது

ஹாட்ஸ் ஆப் திரு செங்கோட்டையன் அவர்களே....

முழு விடுமுறைக்கு அதிகாலை துயிலெழுச்சி

நாளைக்கு லீவுன்னா, இன்னிக்கு காலைல எழுந்துக்கும் போதே மனசுல ஒரு சந்தோசம் வரும்...
"நாளைக்கு காலைல இப்படி சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம்... அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்..."அப்படின்னு ..

டெய்லிதான் அலாரம் வச்சு எழுந்துக்கிறோமே... இன்னிக்கு ஒருநாளாச்சும் அலாரம் அடிக்காம நல்லா தூங்கலாம்... என்று நினைத்து எட்டுமணி வரையோ, பத்துமணி வரையோ தூங்கி... பல்லு கூட தேய்க்காமல் அப்படியே டீ/காபி குடித்து... சோம்பல் முறித்து, மெதுவாக குளித்து, துணி துவைத்து, சமைத்து... சாப்பிட உட்காரும் போது... மணி இரண்டோ, மூன்றோ ஆகி இருக்கும்....

சாப்பிட்ட உடன் லேசாக கண்ணை சொக்கும்... ஒரு குட்டி தூக்கம் போட்டால் தேவலாம் போல இருக்கும்... தூங்கி விழித்து பார்த்தால்... நேரம் அஞ்சு மணியோ, ஆறு மணியோ ஆகி இருக்கும்... சோம்பலாய் இருக்கும்... அப்படியே டி வி முன்னாலோ, லாப்டாப்/மொபைலுடன் அமர்ந்தாலோ... அன்றைய தினம் முடிந்திருக்கும்.... மறுநாள் மீண்டும் அலாரம்... அவசர ஓட்டம்...



இந்த ஒரு நாள் விடுமுறைக்காக ஆறுநாள் காத்திருந்து, அந்த ஒரு நாளை எப்படி அனுபவித்தோம் என்று நினைத்தால்... ஒன்னுமே இருக்காது...

விடுமுறை தினம் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றால்... முதலில் பத்துமணி, பதினோரு மணி என்று தூக்கம் தொடர்வதை விட்டு, எப்போதும் வேலைக்கு போக எழுந்திருக்கும் நேரத்திலயோ, அதற்கும் முன்பாகவோ எழுந்துவிட வேண்டும்...

பிறகு... நாம் எப்போதுமே அவசர அவசரமாக செய்யும் வேலைகளை, மிகவும் நிதானமாக, பரபரப்பில்லாமல்...ரசித்து செய்ய வேண்டும்... சம்பளத்திற்காக தினசரி செய்யும் அலுவலக பணிகள் எதுவுமே இல்லாமல்.... நமக்காக தினசரி அவசரம் அவரசமாக செய்யும் வேலைகளை.... நமக்கே நமக்காக செய்து கொள்கிறோம் என்ற நினைப்புடன்... நிதானமாக ரசித்து, அனுபவித்து செய்யும் பொழுது புரியும்... வாழ்வின் சுவை எத்தனை இனிது என்று.....

ஆறுநாள் காத்திருந்து கிடைத்த விடுமுறையை நொடி நொடியாய் அனுபவித்த திருப்தி கிடைக்கும்...

நீட்... புதிய அரசியல்..


கடந்த ஓரிரு வருடங்களாய் அல்ல-சில்லறைகளின் அரசியல் வாழ்விற்கு உதவியதில் நீட் முக்கிய பங்கு வகிப்பது சமகால சமூக நகர்வுகளை கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...



தற்போது புதிய சர்ச்சை... வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்....

தமிழக மாணவர்களுக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... இல்லை.... வேறுபல மாநில மாணவர்களுக்கும் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... என்ற தெளிவான தகவல் இல்லை...

இருந்தாலும்.... தேர்வு எழுதுவதற்காக , தேவு மையங்கள் அமைக்க கூடிய வசதிகளும், உள்கட்டமைப்பும் இல்லாத மாநிலங்களை பற்றி நாம் பேச தேவை இல்லை... ஆனால்.... வெகு நிச்சயமாக தமிழ்நாடு அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பது உறுதியான விஷயம்.. இந்நிலையில்... தமிழ்நாட்டில் படிக்கும் அனைவருக்கும் அந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வை எழுதக்கூடிய உள்கட்டமைப்பை வைத்திருக்கும் தமிழகத்தில்.... அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் மட்டும் எழுத கூடிய நீட் தேர்வு மையங்களை உருவாக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய வாதம் இல்லை..

இதுபற்றி நாம் பிறகு விவாதிக்கலாம்.... தீப்பற்றி எரியும் நேரத்தில் அதை அனைப்பதுதான் உடனடி தேவையே தவிர... எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணை அல்ல.... அதை பிறகு செய்து கொள்ளலாம்... முதலில் தீயை அணைப்போம்...

சரி.... ஆமாம்.... இந்நேரம் நமக்கு வேறு சில கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது...

இன்று காலை , வெளிமாநிலத்திற்கு பயணித்து நீட் தேர்வு எழுதும் அளவிற்கு வசதி இல்லாததால்.... நீட் தேர்வு எழுத செல்லாத திருச்சி மாணவரை பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.... ஆமாம்.... திருச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்று பரீட்சை எழுத கூட வசதி இல்லாத மாணவர் , திருச்சியிலேயே தேர்வு எழுதி பாஸ் செய்திருந்தாலும் கூட எப்படி அடுத்த ஐந்தாண்டுகள் மருத்துவ கல்லூரியில் பயில்வார்???

மருத்துவ படிப்பு என்பதன் பின்னணியில் விளையாடும் லட்சங்கள்-கோடிகள் பற்றி எல்லோருக்குமே தெரியும்.... எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாய் கோடிகளை வாங்கி ஏமாற்றிய வேந்தர் மூவிஸ் "மதன்" அவர்களை நாம் மறந்திருக்க முடியாது... முன்பெல்லாம் வெகு சில மாணவர்களே மார்க்கின் அடிப்படையில் மருத்துவ கல்வியில் சேர்ந்தார்கள்.. மிகப்பெரும்பாலானவர்கள் "பண பலத்தின் " காரணமாகவே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள்.... ஏழை-நடுத்தர குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாகனியாகத்தான் இருந்திருக்கிறது....

இந்நிலையில், எர்ணாகுளம் சென்று தேர்வு எழுதும் அளவிற்கு கூட வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவனுக்கு "மருத்துவ கல்வி" மீதான நம்பிக்கையை விதைத்தது நீட் மட்டும் தான் என்பதை எப்படி வசதியாக மறந்துவிட்டோம்??

நிச்சயம் சமகாலத்தில் படிக்கும் மாணவர்களும் - மாணவர்களின் பெற்றோர்களும் மிக நன்றாகவே உணர்ந்திருகிறார்கள்..... நீட் தேர்வுகள் வந்த பிறகுதான் நாமும் மருத்துவ கல்வி பற்றி கனவு காண முடிந்திருக்கிறது.....என்ற உண்மையை..... சிற்சில நிர்வாக குளறுபடிகள் இருந்தாலும்... இவைகள் சீரமைக்கப்பட்ட பிறகு நிச்சயம் பல ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கான வாய்ப்பை பெறுவார்கள்...

ஆனால்... எப்போதும் போல... தமிழக மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தே அரசியல் ஆதாயம் அடைந்த தமிழக அரசியல்வாதிகளும்..... எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி மட்டுமே தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி பழக்கப்பட்ட ஊடகங்களும் சேர்ந்து மாணவர்களின் அந்த நம்பிக்கையை உடைத்து குழப்ப பார்க்கிறார்கள்..

கடந்த வருடம் அனிதாவை பலி கொடுத்து தங்களின் அரசியல் இருப்பபை காட்டியவர்கள்... இவ்வருடம் வேறு யாரோ ஒரு அனிதாவை உருவாக்கவே முயல்கிறார்கள்....

ப்ளீஸ்...... எனதருமை
மாணவர்களே... நன்றாக படித்தால்.... உள்வாங்கி புரிந்துகொண்டு திறமையாய் படித்தால்... நிச்சயம் நீட் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்..... அதை செய்யுங்கள்..... இந்த தமிழக அரசியல்வாதிகளின் நரித்தனத்தை நம்பினால்...... ஒரு ஒரு கேள்விதான்....

"உங்களில் யார் அடுத்த அனிதா....??"

நம்மை ஆள எடப்பாடி எப்படி வந்தார்??

ஒரு கதை...

ஒரு தமிழன், ஒரு மலையாளி, ஒரு தெலுங்கன்.. ஒரு கன்னடன்.... நாலு பேரும் ஒன்னா தங்கி இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு "இயற்கை அன்னை" கோயில் பாழடைஞ்சு போய் இருந்தத பார்த்தாங்க....

தமிழனுக்கு மனசு கேக்கல.... உடனே அந்த கோயில சுத்தம் பண்ணி, கழுவி.. ஒரு அகல் விளக்குல எண்ணெய் ஊற்றி விளக்கு ஏத்தி வச்சான்....

மறுநாள் வந்து பார்த்தப்போ.... அந்த அகல் விளக்குல திரி மட்டும் அப்படியே இருக்கு... ஆனா... எண்ணெய் இல்ல.... இதே மாதிரி தினசரி நடக்குது...
ஆரம்பத்துல அத என்னமோன்னு கண்டுக்காம விட்டுட்ட தமிழன் யோசிக்க ஆரம்பிச்சான்...

அதெப்படி... நியாயமா மொத்த எண்ணெயும் எரிஞ்சிருந்தா திரியும் சேர்ந்து எரிஞ்சு சாம்பலா போயிருக்கும்... ஒருவேளை விளக்கேத்தின கொஞ்ச நேரத்துலையே காத்துல விளக்கு அனைஞ்சிருந்தா மிச்ச எண்ணெய் அப்படியே இருக்கணும்... இங்க திரியும் அப்படியே இருக்கு.. ஆனா எண்ணெய் மட்டும் காணோம்...

ஆஹா... இதுல என்னமோ தப்பு இருக்கு.. கண்டு பிடிக்கணும்னு நினைச்சு ஒருநாள் விளக்கேத்தி வச்சுட்டு அங்கேயே ஒரு இடத்துல மறைஞ்சு நின்னு மொபைல்ல ரேடியோ கேட்டுகிட்டே நின்னான்...

ரேடியோல நியூஸ் சொன்னாங்க.... விவசாயம் செய்ய தண்ணி இல்லாததால மனம் உடைஞ்ச தஞ்சை விவசாயி ஒருத்தர் தற்கொலை செய்து கொண்டார்... கேரளாவில் நல்ல மழை.... ஆந்திராவில் அணைகள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் பஞ்சம் இல்லை... கர்நாடகாவில் விளைச்சல் நல்லமுறையில் இருப்பதால் கர்னாடக விவசாயிகள் மகிழ்ச்சி.... இப்படியா நியூஸ் சொல்லிகிட்டிருக்காங்க ரேடியோவுல...

திடீர்னு.. இவன் கூட தங்கி இருந்த மலையாளி, கன்னடன், தெலுங்கன் மூணு பேரும் அங்க வந்தாங்க... இந்த தமிழன் ஏத்தி வச்சிருந்த விளக்க ஊதி அணைச்சுட்டு, அந்த அகல் சட்டில இருந்த எண்ணெய எடுத்து தலைல தேய்ச்சுகிட்டு போய்ட்டாங்க...

நம்மாளுக்கு காண்டாயிடுச்சு.... நேரா "இயற்கை அன்னை" சாமிகிட்ட போனான்...

"ஏ சாமி.... இருந்தாலும் உனக்கு இவ்ளோ எகத்தாளம் ஆகாது... பாழடைஞ்சு போய் கிடக்குறியேன்னு நான் உன் கோயில சுத்தம் பண்ணி விளக்கேத்தினா.... நீ என் தமிழக விவசாயிங்கள வஞ்சிச்சு மழை பெய்யாம சாவடிக்கிற... ஆனா.... நான் விளக்குல ஊத்தின எண்ணெய திருடி தலைல தேய்ச்சுகிற அந்த மலையாளி, தெலுங்கன், கன்னடனுக்கு எல்லாம் நல்ல மழை பெய்ய வச்சு அங்க இருக்க விவசாயிங்கள சந்தோஷமா வச்சிருக்க... உனக்கு மனச்சாட்சியே இல்லையான்னு கதறினான்....

இயற்கை அன்னை நேரடியாவே இவன் முன்னாடி வந்துட்டாங்க... " அட தமிழா.... உனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட நேரம் டா... உன்னோட இனமே அழிஞ்சு போற அளவுக்கு உனக்கு கெட்ட நேரம் நடக்குது.... ஆனா... அவனுங்களுக்கு நேரம் நல்லா இருக்கு..... நீ பண்ற புண்ணியம்தான் உன்னை இந்த அளவுக்காவது பாதுகாக்குது.... அவன் நேரம் நல்லா இருக்கிறதால..அவனுக்கு நிறைய நல்லது கிடைக்கணும்... ஆனா... அவன் பாவம் பண்ணிக்கிட்டு இருக்கதால கொஞ்சமா நல்லது மட்டும் கிடைக்குது.... " ன்னு சொன்னாங்க...

உடனே தமிழன்... "புரியலையே.." ன்னான்...

"அட பக்கிப்பயலே.... நியாயமா அந்த தெலுங்கன், கன்னடன், மலையாளிக்கு இருக்க நல்ல நேரத்துக்கு அவனுங்களுக்கு ராமனோ -புத்தரோ-நபியோ-ஏசுவோ அவதாரம் எடுத்துதான் முதலமைச்சரா வந்திருக்கணும்... ஆனா அவனுங்க பாவம் பண்றதால சித்தராமையாவும், பினராயி விஜயனும், சந்திரபாபு நாயுடுவும் முதலமைச்சரா வந்திருக்காங்க....

ஆனா...உனக்கு நடக்குற கெட்ட நேரத்துக்கு கருணாநிதியோ-ஸ்டாலினோ தான் முதலமைச்சரா வந்திருக்கணும்... நீ பண்ண புண்ணியம் தான் இந்த எடப்பாடியோட தப்பிச்ச....




ம்ம்... ஓங்கி அடிக்க வேண்டியத தாங்கி அடிச்ச இயற்கை அன்னையை வணங்குவோம்...

அதீத கற்பனை வேண்டாம்

எல்லா பெரிய தயாரிப்பு/சந்தைப்படுத்துதல் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் துறை என்று ஒன்று இருக்கும்... இவர்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலின் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், ஏற்கெனவே இருக்கும் பொருளின் தரத்தை, உபயோகத்தை, வசதியை மேம்படுத்தவுமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பார்கள்...



இவர்களின் பார்வை சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுகளை கடந்ததாக இருக்கும்...

ஆனால்... பூமியில், மானுடவியலில், வாழ்வியலில் நிகழும் எல்லா மாற்றங்களுமே இவர்களை சார்ந்ததாக இருக்காது... காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக.... இவர்களின் ஆராய்ச்சிக்கு உட்படாமல்.. எதார்த்தமாக நிகழும் பல மாற்றங்களை இவர்கள் தங்களுக்கு சாதகமாய் மாற்றிக்கொள்வதும் உண்டு...

சமகால சமூக வலைத்தள ஊடகவியலாளர்களும், "திடீர்" விஞ்ஞானிகளும், "குபீர்" ஆராய்ச்சியாளர்களும் மானுடவியலில், பூகோளவியலில், வாழ்வியலில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும்... "இது கார்பொரேட்" சதி.... என்று அதற்கு பொருத்தமாக ஒரு கற்பனை கதையை இவர்களாகவே உருவாக்கி பரப்புகிறார்கள்....

"சென்னையில் இருந்து கோவைக்கு பஸ் கட்டணம் எவ்ளோ.... டிக்கெட் எடுக்காட்டி அதுக்கு பைன் எவ்ளோ.... சரி... நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்...இந்தா புடி... 500 ரூபா பைன்..." என்பது போன்ற அறிவார்ந்த மீம்ஸ்களை கண்டவுடன் பகிரும் பல ஆர்வக்கோளாறுகள் .. அதிவேகமாய் இம்மாதிரியான "கார்பொரேட்" சதிகளையும் பகிர்ந்து சமூக விழிப்புணர்ச்சி சேவை செய்துவிட்டதாய் திருப்தி அடைகிறார்கள்...

கொஞ்சம் யோசித்து பார்த்தால்... இம்மாதிரியான செய்திகளை படித்து, உள்வாங்கி,அதை அப்படியே நம்பி...அதை பலருக்கு பரப்பி... கடைசியில் எதையுமே நம்பாமல்... எல்லாவற்றையும் பார்த்து பயந்து... யாரோ நம்மை வஞ்சிப்பதாய் எப்போதுமே ஒரு கற்பனை உலகில் சிக்கி... மனநோயாளியாய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்..

இன்னும் சிலபல வருடங்களில் ஐயோ... என் சோத்துப்பானையை அபகரிக்க கார்பொரேட் சதி.... என்னை தூங்க விடாமல் கார்பொரேட் சதி.... எங்கள் வீட்டு ஜன்னல் வழியாக காற்று வராமல் கார்பொரேட் சதி என்று புலம்பி புலம்பி சாகப்போகிறார்கள்...

#கொஞ்சம் உஷாரா இருக்கிறது நல்லதுதான்... அதே நேரம் சில மாற்றங்களை ஏற்றும், சில மாற்றங்களை சகித்தும் வாழ்வதுதான் வாழ்க்கையே தவிர.... 24X7 உஷாரா இருக்கேன்னு வாழ்க்கையை தொலைத்து பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்..

மகளிர் தின வாழ்த்து

பெண்கள் உண்மையிலேயே மிகவும் திறமைசாலிகள்.. புத்திசாலிகள்... ஆனால்... அவர்களுக்குள் எப்போதும் ஒரு தயக்கம்.. சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.... "நம்மால் இதை செய்ய முடியுமா.... நமக்கு இது தெரியுமா.." போன்ற ஆரம்பகால சந்தேகமும்... "நான் இதை செய்தால் மற்றவர்கள் நம்மை கேலி செய்வார்களோ.... நமக்கு இது அவசியமா... நாம் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்.... ஒருவேளை தவறாக முடிந்துவிட்டால் என்ன செய்வது...." போன்ற தயக்கமும் பெண்களுக்குள் ஆழ வேரூன்றி இருக்கிறது...



"உனக்கு ஒன்னும் தெரியாது.... நீ பேசாம இரு.." என்று காலம் காலமாய் அவர்களை அடக்கி வைத்ததன் தொடர் விளைவுகள் தான் இவை.." என்பதை நானும் அறிவேன்...

என்னடா இது.. சாத்தான் வேதம் ஓதுதே.... என்ற ஏளனச்சிரிப்பு உங்கள் உதடுகளில் இப்போது தவழும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.... ஆயினும்... அது உங்களின் தவறான புரிதல் என்பதை இங்கே ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்...

பெரும்பாலான என்னுடைய பதிவுகளில் பெண்களின் பாதுகாப்பு என்ற ஒன்றையே நான் முன்னெடுத்திருக்கிறேன்.... ஏனென்றால் பெண்கள் உலடளவில் பலவீனமானவர்கள்... இவர்களை மூர்க்கர்களால் எளிதில் பாதிப்படைய செய்துவிட முடியும்... ஆகவே பாதுகாப்பாக நிற்க சொல்லி இருக்கிறேனே தவிர..... நிற்கவே கூடாது என்று நான் என்றுமே சொன்னதில்லை....

மேலும்... ஆசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள்... குறிப்பாக இந்திய பெண்கள் பேரழகானவர்கள்... அதிலும் தாய்மை அழகை பெற்ற முப்பதுகள்-மற்றும் நாற்பதுகளில் இருக்கும் பெண்கள் மிக மிக பேரழகானவர்கள்... இவர்களின் உடலமைப்பு மிகவும் கிளர்ச்சியானது... கடற்கரை மணலில் இரண்டு துண்டு ஆடைகளுடன் முக்கால் நிர்வாணமாக சூரிய குளியல் நடத்தும் வெள்ளைக்கார பெண்ணை காட்டிலும்.... முழங்கால் தெரிய பாத்திரம் கழுவும் நம்மூர் பெண் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியும்... நாடா வைத்த , அகல முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டுகள் மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை.... இயல்பாகவே ஆண்களின் ஹார்மோன்கள் கண்களால் பார்ப்பதாலும், காதுகளால் கேட்பதாலும் கூட வெகு விரைவில் சுரக்கும் உடலமைப்பை கொண்டது.... உங்களை போல வெகு அழகான பெண்கள் அகல முதுகு தெரியும் படியான ஜாக்கெட் அணிந்தோ... கவ்விப்பிடிக்கும் லெக்கின்ஸ் அணிந்தோ பொதுவெளியில் உலா வரும்போது.. அது பல ஆண்களை நிச்சயம் கிளர்ச்சி அடைய செய்யும்.... மனக்கட்டுப்பாடு இல்லாத சில ஆண்கள் அதை வேறு ஒரு பலவீனமான பெண்ணிடத்திலே வெளிப்படுத்த முயலக்கூடும்... ஆகவேதான் பெண்களின் ஆடை கலாச்சாரம் பற்றியும் பல இடங்களில் நான் சுட்டிக்காட்டுகிறேன்...

இவ்வளவு திறமையான, அழகான பெண்கள் வாழ்க்கையை ஜெயிக்க முன்வந்து அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது... நிச்சயம் அவர்களுக்கு ஆண்கள் பக்கபலமாக இருப்பார்கள்... இருக்கிறார்கள்..... ஆனால் துரதிஷ்டவசமாக.... சிலரின் தவறான போதனையில் மயங்கிய பெண்கள்... ஆண்களை ஜெயித்து விட நினைக்கிறார்கள்... அங்கேதான் அவர்கள் தோற்றுப்போகிறார்கள்...

நிச்சயம் நீங்கள் வாழ்க்கையை வெல்ல வேண்டும்.. அதற்கு நாங்கள் எப்போதுமே பக்க பலமாக இருப்போம்.... எங்களை ஜெயிக்க நினைத்து நாம் இருவருமே வாழ்க்கையில் தோற்க காரணமாகாதீர்கள்...

அன்பு மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்

த்துகள்...

மோடி ஊதிய புகைமுட்டி

எங்கூர்ல நாங்க கடலை சாகுபடி செய்றப்போ.... (பார்த்தீங்களா..... உடனே கடலை சாகுபடின்னதும் யாரோ பொண்ணு கூட பேசிகிட்டிருந்த விஷயம்னு உங்களை எல்லாம் இந்த பாழா போன சம்முவம் நம்ப வச்சிருக்கு.... ) சரி... விஷயத்துக்கு வருவோம்..... கடலை சாகுபடி செய்றப்போ..... எலி அங்கங்க வளை பறிச்சு கடலை எல்லாம் கட் பண்ணி கொண்டு போய் பதுக்கிடும்.... அப்போ நாங்க என்ன செய்வோம் தெரியுமா....?? அந்த எலி வலைல புகை முட்டி வச்சு ஊதுவோம்... புகை முட்டி தெரியுமா.... உங்களுக்கு....??

ஒரு சிறிய மண் கலையத்திகுள் (சிறிய அளவிலான பானை) வைக்கோலை நிறைத்து.. பானையின் அடிப்பகுதியில் சிறிய துளை வைத்து... அதில் சில நெருப்பு கங்குகளை போட்டு... பின்புறமுள்ள துளை வழியாக காற்றை ஊதும்பொழுது... தீ கங்குகளின் சூட்டில் உள்ளே இருக்கும் வைக்கோல் மீதும் தீ பரவும்.... இது கனிந்த நெருப்பாக அடர்ந்த புகையை வெளியிடுமே தவிர.... நெருப்பாக எரியாது....

இந்த அடர் புகையை அந்த எலி வலைக்குள் நிரப்பும்பொழுது... உள்ளிருக்கும் எலிகள் தப்பிக்க முயலும்... சில எலிகள் புகையின் தாக்கத்தால் மயங்கி வலைக்குள்ளேயே சிக்கிக்கொள்ளும்.... சில எலிகள் வேறொரு பக்கம் வெளியேறி ஓடும்.... அப்படி ஓடும் அந்த எலிகளை கையில் குச்சியுடன் இருக்கும் வேறொருவர் ஒரே அடியில் வீழ்த்துவார்.... சில சமயம் அதையும் மீறி சில எலிகள் தப்பித்துவிடுவதும் உண்டு...


நிற்க....



விஜய் மல்லையா - எஸ் பி ஐ உள்ளிட்ட நிறைய வங்கிகள்..

நீரவ் மோடி - பஞ்சாப் நேஷனல் பேங்க்

குப்தா - பேங்க் ஆப் பரோடா...

# மேற்கண்ட நபர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிக்கணக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கியில் / வங்கி உதவியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள்...

ஆமாம்..... இத்தனை ஆயிரம் கோடிகளை ஓரிரு மாதங்களிலோ .. ஓரிரு வருடங்களிலோவா ஏமாற்றி இருப்பார்கள்??

"சும்மா கத விட்றானுங்கப்பா.....இதெல்லாம் ரொம்பகாலமா நடந்திருக்கும்... இப்போதான் வெளில வருது...." என்று சொல்ல நீங்கள் பெரிய பொருளாதார மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....

ஆனா இப்போ ஏன் திடீர் திடீர்னு கண்டு பிடிக்கிறாங்க .. அல்லது ஏமாத்தினவனே பிச்சுகிட்டு ஓடறான்???

இப்போ திரும்பவும் ஒரு தடவை "புகைமுட்டி" வேட்டையை நினைவில் கொள்க....

புகை முட்டி ஊதும் வேலையைத்தான் இப்போ மத்திய அரசு பண்ணுது.... இவ்வளவு காலமும் கேப்பாரும் இல்ல... மேய்ப்பாரும் இல்ல.... என்றபடி தேச பொருளாதாரத்தை சுரண்டி கொழுத்தவர்கள் வேறு வழி இல்லாமல் ஓட கூடிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்...

மோடி ஒழிக ன்னு எழுதலன்னா கண்டிப்பா இந்த கட்டுரை நிறைவடையாது....

நம் கை கோர்த்திருந்து கரைந்து போனவர்கள்

ஒரு துயர சம்பவத்தின் வீடியோவை ஏற்கெனவே பலதடவை பார்த்திருந்தபோதும்... மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என்று தோன்ற.... பார்க்க ஆரம்பித்தேன்...



சுய சோகங்களை ஒருபுறம் நகர்த்தி வைத்துவிட்டு.. அந்த காணொளியில் நடமாடும் மனிதர்களை கவனித்தேன்.... அடடா.. இதில் உயிரோடு நடமாடும் எத்தனை மனிதர்கள் இப்போது நம்மோடு இல்லை...

அதோ... கீழ வீட்டு ஆறுமுகம் மாமா... அதோ... கருத்தாண்டி வீட்டு அய்யா அண்ணன்... அதோ இந்திரஜித் அத்தான்... அதோ அருணாமூட்டு சங்கர் அத்தான்... அதோ.... என்னை தூக்கி வளர்த்த பாப்பாத்தி அம்மா.... அதோ என் மாமியார்...அதோ உமாபதி.... அதோ.... ஜெகன்னாத காலிங்கராயர்....

இன்னும் நிறைய நிறைய பேர்.... என் வாழ்வில் ஒரு அங்கமாய் நான் அடிக்கடியோ.. தினசரியோ சந்தித்த நபர்கள்... இவர்களை பற்றி நினைக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் நிறைய சம்பவ நினைவுகள்...

இவர்கள் எல்லாம் என் வாழ்வின் எதோ ஒரு நிமிடத்தில்... எதோ ஒரு மணியில்.... எதோ ஒரு நாளில் என்னுடன் பயணித்தவர்கள்.... இவர்களை எல்லாம் அந்த தீ தின்று தீர்த்துவிட்டது.... புகைப்படத்தில் மட்டுமே சிரிக்கிறார்கள் இப்போது...

வருடம் ஒரு முறை இதில் சிலருக்கு திவசம் என்ற நினைவுநாள் நினைவுகூறல் நிகழும்... சிலருக்கு அதுவும் சாத்தியமில்லை....

எங்கிருந்து வந்தோம் நாம்...எதை நோக்கி பயணிக்கிறோம் நாம்... என்னவாக போகிறோம்... இந்த பயணப்பாதையில் நம்மோடு சேர்ந்தது எது.. நாம் உதிர்த்தது எது... இப்படி எல்லாம் நிறைய தோன்றினாலும்... லௌதீக வாழ்வில் இயல்பான ஒரு பிரஜையாய் நாமும் கலந்துவிட்டபடியால்... இந்த சிந்தனைகளை அங்கேயே கத்தரித்துவிட்டு..... மீண்டும் அவர்களை பற்றிய நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்த பொழுது...

அந்த காணொளி முடிந்து வெகுநேரம் ஆகி இருந்தது...

மீண்டும் என்றாவது ஒருநாள் அந்த துயர சம்பவ வீடியோவை காண ஆவல் எழும்... அப்போது நம்மிடையே இல்லாமல் போன அந்த இருந்தவர்களின் நினைவுகள் மீண்டும் கிளர்த்தெழும்....

எத்தனையோ இலைகள் சருகுகளாய் உதிர்கிறது.... எத்தனயோ விதைகள் முளைக்கிறது....அதுதானே வாழ்க்கை...

உங்களில் நிறைய பேருக்கும் பிடிபட்டிருக்கும்... ஏனென்றால்... அதுபோல ஒரு துயர சம்பவம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும்... அதேதான்... என் திருமண காணொளி தான் அது...

ஆட்டுக்கறி- அத்தனை ஆபத்தானது அல்ல

எங்கள் பகுதியில் ஆலத்தூர் என்ற கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவில் பிரசித்தி பெற்றது... கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்கு முக்கிய வழிபாட்டு முறை... ஆலத்தூர் மட்டுமல்லாது அக்கம் பக்கம் இருக்கும் கிராமத்தவர்களும் இந்த கோயிலுக்கு வருகை தந்து வழிபடுதல் வழக்கம்...

முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே நடந்து வந்த இந்த வழிபாட்டு முறை, பக்தர்கள் எண்ணிக்கை.. அதிலும் வசதியான பக்தர்களின் எண்ணிக்கை (ஒரு கிடாவெட்டு நேர்த்திக்கடனுக்கு குறைந்தது 50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும் ) கூட கூட இரண்டு என்பது மூன்றாகி, நான்காகி.. தற்போது ஐந்து நாட்களும் இந்த கிடா வெட்டும் நேர்த்திக்கடன் வழிபாடு தொடர்கிறது...

இதில் இன்னொரு விஷயம்... இந்த கோயிலுக்கு நேர்ந்து வெட்டும் கிடாவை அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டுத்தான் வர வேண்டும்... ஆனால் தற்போது பெருமைக்கு எருமை மேய்த்தே பழகிய எம்மக்கள் அந்த கிடாக்கறியுடன் கூடுதலாய் கோழி வறுவல், முட்டை அவியல்,மீன் வறுவல் என்று அசத்துகிறார்கள்... (அலட்டுகிறார்கள் என்பதே சரி )

இவர்களின் அலட்டலை குறிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்... இப்படியாக நேர்த்திகடன் விருந்தில் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம் ..... ஆகவே அந்த கோயிலுக்கு அருகில் இருப்பவர்களும் கலந்துகொள்வார்கள்.. குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு கறி விருந்தில் இவர்கள் கலந்துகொள்வார்கள்....

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.... "ஆட்டுக்கறி சாப்பிட்றதையே நான் நிறுத்திட்டேன்.... கொலஸ்ட்ரால் கூடிப்போச்சு..." "ஆட்டுக்கறி அதிகமா சாப்பிடாதே.... " போன்ற பெருமைகளையும், அறிவுரைகளையும் அடிக்கடி கேட்டிருப்பதால்...

ஆமாம்.... இவர்கள் வாரத்திற்கு மூன்று-நான்கு முறை கிடாக்கறி சாபிடுகிறார்களே... இவர்களுக்கு கொலஸ்ட்ரால் பற்றிய பயம் இல்லையா??

உள்ளபடியே அது அவர்களை கேட்டால் தான் தெரியுமென்றாலும்... இந்த சமூகத்தை உற்று நோக்கும் பழக்கமிருப்பதால் ஒரு உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது... அப்படி அங்கு வந்து சாப்பிடுபவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகள்... அவர்களுக்கு அந்த கிடாக்கறி உழைப்பதற்கான சக்தியை தான் தருமே தவிர... அது நிச்சயம் உயிர் குடிக்கும் கொழுப்பாய் மாறாது என்பதுதான் அந்த உண்மை...

மேலும்.... நம் கிராம பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் நூற்றுக்கு நூறு இலை-தழைகளை மட்டுமே உணவாக கொள்கின்றன.... எவ்வித ரசாயன ஊக்க மருந்துகளும் இவைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை....

உள்ளபடியே பார்த்தால் எல்லோரும் பயப்படுத்தும் அளவிற்கு ஆட்டுக்கறி ஒன்றும் அபாயகரமானதல்ல.... பிராய்லர் கோழிகளை விட பாதுகாப்பானது... ரசாயன பயமில்லாதது....

என்ன.... கொஞ்சம் உடலை வருத்தி வேலை செய்யணும்... வியர்க்க வைக்கணும்.... அவ்ளோதான்...

குறிப்பு: - தங்களின் கிடா விருந்து அழைப்புகள் இவ்விடம் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும்...

விஷ வேர்கள்

பெரும்பாலும் கையூட்டு வாங்கும் அலுவலர்கள் (!!??) சொல்லும் காரணம்.... "நான் எவ்ளோ செலவு பண்ணி இந்த வேலைக்கு வந்திருக்கேன் தெரியுமா...??"
அதாவது இவர் தற்போது வகிக்கும் பதவிக்கு வருவதற்காக இவர் ஒரு பெருந்தொகையை கையூட்டாக கொடுத்து இருக்கிறார்... அந்த தொகையை ஈடுகட்டத்தான் இவர் கையூட்டு வாங்குகிறாராம்....



இதே போல மருத்துவ கல்வி கற்க இடம் வாங்க பெருந்தொகைகளை கொடுத்துவிட்டு பிறகு அவர் கல்லூரியில் இடம் வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டார் என்று ஒருவர் மீது ஒரு கும்பல் புகார் தெரிவித்து பிறகு சம்மந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்...

நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்... இப்படி கையூட்டு வாங்குபவர்களை மட்டும் கைது செய்தால் போதாது.... கையூட்டு கொடுப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்.... இன்று கையூட்டு கொடுத்து பதவிக்கு வருபவர் பின்னாளில் இதே காரணத்தை சொல்லி பெரிய அளவில் கையூட்டு வாங்குவார் என்பது மிக நிச்சயம்.... மேலும்.... இவரிடம் பணம் இருக்கும் ஒரே காரணத்தால் தகுதியான யாரோ ஒருவருக்கு போக வேண்டிய வாய்ப்பை இவர் தட்டிப்பறித்திருக்கிறார் என்பதும் உறுதியாகிறது....

இவர்களை முளையிலேயே கிள்ளாவிட்டால் பின்னாளில் இவர்களால் பொது நிர்வாகம் சீரழியும்.....

பாரம்பரிய உணவும் ஆபத்தே...

பாரம்பரிய உணவுகள் உண்பது தற்போது பேஷனாகி வருகிறது... இதை இப்போது பேஷனாக்கும் அதே கும்பல் தான் சில-பல வருடங்கள் முன்பு பீட்சாவையும், பர்க்கரையும் அறிமுகம் செய்து கேழ்வரகு கூழ், கம்பஞ்சோறு உண்பவனை எல்லாம் "காட்டான்"களாக அடையாளப்படுத்தியது...

சரி... விஷயத்திற்கு வருவோம்... நம் முன்னோர்கள் உணவாக கொண்ட கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டார்கள்... இதிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை கொண்டே நாள் முழுதும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள்..

ஏர் உழுதல், வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், நடவு நடுதல், கதிர் அறுத்தல், அம்மி, ஆட்டுக்கல்லில் மசாலா/மாவு அரைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைத்தல், வெகு தொலைவில் இருந்து தலை-இடுப்பு-கை என மூன்று குடங்களில் தண்ணீர் கொண்டு வருதல்.... வெகுதூரம் நடை பயணம் மேற்கொள்ளுதல்... அப்புறம்.. சைக்கிள் ஒட்டுதல்.... இவை எல்லாம் அன்றாட வேலைகளாக இருந்தது.... இப்படியாகப்பட்ட கடின உழைப்பிற்கு தேவையான சக்தியை அந்த சிறுதானியங்கள் கொடுத்தது....

ஆனால்.... இன்று விவசாயமற்றுப்போன நிலையில் .. அல்லது.. இயந்திரங்களை முன்னிறுத்தி விவசாயம் செய்கின்ற நிலையில்.... , மிக்சி, கிரைண்டர், ஓவர்ஹெட் வாட்டர் டாங்க், கார்/மோட்டார் சைக்கிள்.. என எல்லா வேலைகளுமே மனித உடலை கொஞ்சம் கூட அலட்டாத வகையில் வாழ பழக்கி இருக்கிறது....
மேலும்... நவீன தலைமுறை உடலுழைப்பை துறந்து புத்தியை வைத்து சம்பாதிக்கும் பழக்கத்திற்கும் வந்து விட்டது...

இந்த நிலையில்.... ஒரு நாள் முழுதும் உடலுழைக்க சக்தியை கொடுத்த அந்த சிறுதானியங்கள் , இந்நாளைய உடலுழைப்பட்ற வாழ்க்கைக்கு எவ்விதம் பொருந்தும்??




அந்த சிறுதானியங்களில் பெறப்படும் அபரிமிதமான சக்தி "எரிக்கப்பட" இன்று உடல் உழைப்பில்லாத நிலையில்... அப்படி கிடைத்த சக்தி என்னவாகும்?? கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கப்படும் தானே?? இது உடலிற்கு நல்லதா??? இது கெடுதல் ஏற்படுத்தாதா??

நாம் எப்படி பழைய உழைப்பிற்கு தயாராக இல்லையோ.... அதே போல பழைய உணவும் நமக்கு பொருந்தாத உணவாகி விட்டது...

பர்க்கரையும், பீட்சாவையும் எப்படி நாகரீகம் என்று நம்ப வைத்து அறிமுகம் செய்தார்களோ... அந்த முட்டாள் தனத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இன்று பாரம்பரிய உணவு என்பதும்....

இறைவன் படைப்பு நியதியில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்கேற்ற உணவே அந்தந்த பகுதியில் விளையவும், அதற்கு தேவையான அளவு அந்த மக்கள் உழைக்கவும் வாய்ப்பிருந்தது.... மனிதன் எப்போது தங்கள் வாழிடங்கள், உணவு முறைகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டானோ.... அப்போதே அந்த நியதி உடைந்து விட்டது...

இப்போது "நான் பாரம்பரிய காவலன்" என்பது சுத்த கோமாளித்தனம்... ஆபத்தை வேறொரு பரிமாணத்தில் வரவழைக்கும் முட்டாள்தனம்...

எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்

சமகால அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்கள்... கொள்கை-ஒழுக்க பிறழ்வுகள் தெரியாதவர்கள்தான் அவர்கள் நடத்தும் கட்சிகளில் இருகிறார்களா??

கிராம-ஒன்றிய-வட்ட-நகர-மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என எல்லோருமே முட்டாள்களா என்ன?? தங்கள் கட்சி தலைமை/இரண்டாம் கட்ட/ மூன்றாம் கட்ட என அடுத்தடுத்த நிலை தலைவர்கள் அவர்களின் சக்திக்கேற்ற பித்தலாட்டங்களை செய்வதை அறியாத அளவிற்கு ஞானமற்றவர்களா என்ன??

அதுதான் இல்லை..... இவர்கள் நம்மை எல்லாம் விட பெரிய சிந்தனையாளர்கள், அறிவாளிகள்...

இவர்களது தலைவர்களை பற்றிய மோசமான செய்திகள் நமக்கு எவ்வளவு தெரியுமோ... அதை விட பன்மடங்கு கூடுதலாக தெரிந்தவர்கள்.... ஆனால் அவை எல்லாம் தெரிந்தும் சம்மந்தப்பட்டவரை "தலைவா.... வாழ்க.." என்று இவர்களால் கோஷம் போட முடிகிறதென்றால்... நம் நாட்டில் வாழ்க்கை முறை அவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றும்.... அந்த கேவலமான வாழ்க்கை முறையை தம் வசதிக்கேற்ற திருப்ப இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றும் தான் பொருள்...

ஆம்.... ஒரு பொதுவான கருத்தை உரக்க பேச வேண்டுமென்றால்... இங்கே அரசியல் பின்புலம் தேவையாயிருக்கிறது.... தொழில் செய்ய அரசியல் பின்புலம் தேவையாயிருகிறது.... சட்டத்தை மீறவும், குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்கவும் அரசியல் பின்புலத்தால் முடிகிறது... இதை எல்லாம் விட சமயங்களில் சாலையில் நடக்கவே அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது....

இப்படி ஒரு பின்புலத்தை தனி மனிதனால் / நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.... அதற்கு ஒரு பெரிய அறிமுகம் தேவையாயிருக்கிறது....

தமிழ் வியாபாரம் செய்தோ, சினிமாவில் நடித்தோ, ஜாதி மக்களை ஒருங்கினைத்தோ கிடைத்த பரவலான அறிமுகத்தை/பிரபல்யத்தை வைத்து யாரோ ஒருவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசியல் கட்சி என்ற பின்புலத்தை கொண்டு இயங்கும்போது இயல்பாக ஒரு பாதுகாப்போ, சம்பாதிப்பதற்கான வழியோ கிடைக்கிறது....

அதனால் தான் அவர்கள் "தலைவன் வாழ்க" என்று போலியாக குரல் கொடுத்தாவது அந்தந்த கட்சியில் இருக்கிறார்கள்..

மற்றபடி அவர்களுக்கு எல்லாம் தெரியும்...

என்ன.... இதற்காக அவர்கள் மனச்சாட்சியை அடகு வைத்திருக்கிறார்கள்.... அவ்வளவுதான்...

நமக்கு அம்மாதிரியான பின்புல அவசியம் இல்லாததால் மனச்சாட்சிக்கு விரோதமாக எந்த அரசியல்வாதியையுமே தலைவனாக ஏற்க முடியவில்லை...

துக்க மண்டபங்களும் சாத்தியம்தான்

திருமண,பெண்-மாப்பிள்ளை அழைப்பு , காதுகுத்து, பூப்புனித நீராட்டு போன்ற நல்ல விசேஷங்கள் பெரும்பாலும் வீட்டு வாசலில் பந்தலிட்டு, வாழை மரம் -தோரணங்கள் கட்டி, மின்விளக்கு அலங்காரங்கள் செய்தது, சாப்பாட்டிற்கென தனி பந்தல் அமைத்து, சமைக்க தனி கொட்டகை அமைத்து நடத்தப்பட்டன..

இதற்கென பந்தல்கால் நடுதல், சமையல் பாத்திரங்கள் எடுத்தல், நாற்காலி - மேஜைகள் ஏற்பாடு செய்தல்... பந்தலின் உட்புறம் வேட்டி கட்டுதல், அலங்கார தோரணங்கள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரம் செய்தல் என்று அல்லோகோலப்படும்... இவைகள் எல்லாம் ஒரு திருவிழா போல பரபரப்பாக இருக்கும்...

முன்பு இருந்த இந்த வழக்கம் தற்போது மண்டபங்களை நோக்கி நகர்த்தப்பட்டு விட்டது... மண்டபங்கள் என்றால் தனியான அலங்காரங்கள் தேவையில்லை... தனியான இருக்கைகள் எடுக்க வேண்டியதில்லை... சமையல் பாத்திரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை... சாப்பாட்டு பந்தலில் மேஜை-நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கும்...
பழைய காலம் மாதிரி பந்திப்பாய் விரிச்சு கீழ எல்லாம் உட்கார்ந்து சாப்ப்பிட முடியாது... சாப்பிடவும் கூடாது.... அது அசிங்கம்... நாமள்லாம் படிச்சவங்க... டீசண்டா பிகேவ் பண்ணனும்.... என்ற எண்ணமும்....

கூடவே...கொஞ்சம் செலவானாலும் அலைச்சல் மிச்சம்.... வண்டி பிடிக்க வேண்டாம்... ஆள் திரட்ட வேண்டாம்... அதோடு... விசேஷத்திற்கு வருபவர்களுக்கு போக்கு வரத்து வசதிக்கும் நன்றாக இருக்கும்...

இப்படியான மக்கள் மனநிலை மாற மாற... குக்கிராமங்களிலும் கூட திருமண மண்டபங்கள் பெருகி விட்டன...

சமகாலம் வரை நல்ல விசேஷங்களுக்கு மட்டுமே மண்டபங்களை நாடுகிறோம்... 



ஆனால்... சமகாலம் வரை மரணம் என்பது தொடர்பான சடங்குகள் எல்லாமே வீடுகளிலேயே நடத்தப்படுகிறது.. எதிர்காலத்தில் மக்கள் இதற்காகவும் மண்டபங்களை நாடக்கூடும் என்பது என் எண்ணம்...
(இது தற்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும், பெருந்தலைவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் உள்ளது.... உதாரணம்- ராஜாஜி ஹால் )

யாரேனும் இறந்துவிட்டால் பூத உடலை ஒரு மண்டபத்தில் வைத்துவிட்டால் வருகிறவர்களுக்கு போக்கு வரத்து வசதி, இருக்கை வசதிகள் தனியாக ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும்....

அதை எல்லாம் விட மிக முக்கியமாக......இது நம்ம கவுரைதைய காட்டுற விஷயமில்லையா... நாம எவ்ளோ டீசண்டான ஆளுங்க... கொஞ்சம் யோசிங்க மக்கா...

சராசரி குடும்பஸ்தன் பயம்

இதோ தெரிகிறது சென்னை... எப்போதுமே எனக்கு மிரட்சியை தரும் சென்னை இப்போது பறவைப்பார்வையில்... முன்னிரவில் எங்களூர் ஏரிக்கரையில் இருக்கும் கருவேலமரத்தில் அடர்ந்து அமர்ந்திருக்கும் மின்மினி பூச்சிகள் மாதிரி வெளிச்ச புள்ளிகள்... நெருங்க நெருங்க.... வெளிச்சம் விரிகிறது...

அந்த இண்டிகோ நிறுவன இயந்திர பறவை எங்களையும் சுமந்துகொண்டு தாழ... தாழ..... இன்னும் தாழவென தரையிறங்குவதற்கான முஸ்தீபுகளில் இருக்கிறது... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்... ஹா... அதோ மீனம்பாக்கம் வானூர்தி நிலையம்... அதோ விமான ஓடுபாதை.....

மடியில் அமர்ந்திருக்கும் ஆதிக்கு எதுவும் புரியாவிட்டாலும் நான் முணுமுணுக்கிறேன்... இருவரும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.... இன்னும் சில வினாடிகளில் இந்த விமானம் தரை தொட்டு ஓடும்... என்ற எங்கள் எண்ணம் அடுத்த வினாடியே மாறியது...

ஆம்.... ஓடுபாதையை தொடப்போகும் சமயம் மீண்டும் விமானம் மேல் நோக்கி எழும்பி பறக்க ஆரம்பித்தது... ஏன்... என்னாச்சு.... எதுவும் பிரச்சினையா... விமான பயணிகளின் முகங்களில் பயம், பீதி, கலவரம் , சந்தேகம்... எதிர்பார்ப்பு என கலந்துகட்டிய பாவங்கள்...

மேலெழும்பிய விமானம் மீண்டும் வங்காள விரிகுடாவின் மீதும்... சென்னை நகர் மீதும் சற்றேறக்குறைய இருபது நிமிடங்கள் வட்டமிட.... மீண்டும்.... அதோ..... மெரீனா கடற்கரை.... அதோ.... அண்ணா சாலை.... அதோ... அந்நாளில் என்னுடன் அன்பாய் பழகி மாரடைப்பால் காலமான அன்புசிவன் அண்ணா வேலை செய்த ஸ்பிக் டவர்...அதோ.... கிண்டி மேம்பாலம்..

ஆனால்... அரை மணி நேரம் முன்பாக இருந்த அந்த ஆச்சர்ய மகிழ்ச்சி இம்முறை சற்று குறைந்திருந்தது... இன்னும் சொல்லப்போனால் இல்லாமலே இருந்தது....



ஏதேனும் இயந்திரக் கோளாறாய் இருக்குமோ... விமானத்தின் சக்கரம் வெளியில் வராமல் சிக்கி இருக்குமோ.... ரன்வே கிளியர் இல்லை என்றால் விமானிக்கு சிக்னல் கிடைத்திருக்காதே..... பிறகெப்படி அவர் ஓடுபாதை வரை வருவார்.... இல்லை... எதோ பிரச்சினைதான்... பார்க்கலாம்... எப்போதுமே மூன்றாவது கோணத்திலேயே யோசித்து பழகிய மனசு... இப்போதும் அப்படியே....

பொதுவாக விமான , ரயில் பயணங்களில் காப்பீடு செய்யாமல் பயணிப்பதில்லை என்றாலும்... இம்முறை குடும்பத்துடன் இதே விமானத்தில்... காப்பீட்டை என்ன செய்ய...

அட்ரினல் சுரப்பிகள் அதி வேகமாய் வேலை செய்தன...

அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு பெரிய குலுங்கலுடன் அந்த அல்லாய் பறவை ஓடுபாதையை தொட்டு உலா வந்து இளைப்பாறியது....
அப்ப்பாடா.... தப்பிச்சோம்டா....

மீண்டும் அதே இண்டிகோ... காப்பீடு செய்திருக்கிறேன்... இப்போது தனி... அதனால் கவலை இல்லை...

கவனம் தேவை கதாசிரியர்களே -- மெர்சல்

தமிழ் சினிமாவின் கதைக்களம் என்று எடுத்துக்கொண்டால்... ஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலும் புராண- இதிகாச கதைகளாகவும், கதை மாந்தர்களாகவுமே இருந்தார்கள்... பிறகு அது கொஞ்சம் மாற்றமடைந்து வரலாற்று கதாபாத்திரங்கள், மன்னர்கள் பக்கம் திரும்பியது...... இடையிடையே சுதந்திர போராட்டம் போன்றவற்றின் கதாநாயகர்களும் திரையில் மின்னி மறைந்தார்கள்...



புராண-இதிகாச கதாப்பாத்திரங்களில் சம்பவங்கள் எல்லாம் புராணங்கள்-இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் வசனங்கள், காட்சி அமைப்புகள், கதை மாந்தர்கள் , இடங்கள் எல்லாம் கதாசிரியர்-இயக்குனர்களின் விருப்பப்படியும், கற்பனை திறனுக்கேற்பவும்தான் இருந்தன....

இது வரலாற்று புருஷர்களை குறிக்கும் விதமாக மாறியபொழுது அவைகளை பற்றிய/ அவர்களை பற்றிய பற்பல தேடல்கள் மூலம் முழுக்க முழுக்க உண்மையில்லை என்றாலும் ஆதரங்களுடனே தான் அந்த பாத்திரங்கள் உருவாக்கப்பட்டது... இவைகளில் ஏதேனும் தவறான தகவல்கள் இருபினும் அவைகளை பற்றிய தெளிந்த அறிவு உரிய சிலரால் மட்டுமே அந்த குறைகள் கண்டறியப்பட்டது... ஆனாலும் அதற்கு பெரிய எதிர்வினைகள் எதுவும் ஏற்பட வில்லை...

அதன் பிறகு தனிமனித வாழ்வியல், ஜாதீய வாழ்வியல், பூகோள வாழ்வியல் முறைகள் கதைக்களங்களாக உருவெடுத்தது... இதில் சில எதிர்ப்புகள் வந்தாலும் தனிமனித அனுபவம் சார்ந்த, சமகால கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த பார்முலா வெற்றி பெற்றது...

ஸ்ரீதரின் கதைக்களமான மேல்தட்டு வர்க்க வாழ்வியல், விசு இயக்கிய குடும்ப கதைகள், கமல் நடித்த பதினாறு வயதினிலே , ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எல்லாம் சமகால மனிதர்கள்.... அவர்களை போல் எல்லோரும் இல்லாவிட்டாலும் எங்கோ வாழும் நிஜ பாத்திரங்கள்....

மேலே குறிப்பிட்ட எல்லாம்.. நம் முன்னோர்களின் கற்பனைகள், நாம் பார்த்தறியாத பாத்திரங்கள்.... இவர்களை பற்றிய புனைவுகள் ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது....

சமகாலத்தில், ஆளும் ஆசையுடன் இருக்கும் சிலர் தங்களின் ஆளுமையை காட்டுவதாக நினைத்து அதற்கேற்ப கதைக்களங்களை தேடுகிறார்கள்... இதனை உணரும் கதாசிரியர்கள்/இயக்குனர்கள் இவர்களின் கால்சீட் வாங்குவதற்காக இவர்களை தேவலோக புருஷர்களையும், ஆளப்பிறந்தவர்களாயும் உருவகப்படுத்தி கதை சொல்ல நினைக்கிறார்கள்.. இதற்காக இவர்கள் சமகால பொது விஷயங்களை சேர்த்துக்கொள்கிறார்கள்...

பெருகிவிட்ட ஊடக தொடர்புகள், தெளிவான /தெளிவில்லாத அரசியல் அறிவு, தான் நினைத்ததை, அறிந்ததை உடனடியாக உலகத்தோரிடம் பகிர்ந்துகொள்ளும் வசதி என எல்லாம் பெற்ற சமகால சந்ததிகள், இப்படியான சமகால நடப்புகளை வைத்து சொல்லப்படும் கதைகளின் உண்மை தன்மையை உடனடியாய் அறிந்துகொள்வதால் வெகுவான விமர்சன கணைகளை தொடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...

தலைவனாக வேண்டும் என்ற விஜயின் ஆசை... விஜய் அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற அட்லியின் ஆசை, இந்த இருவர் கூட்டணியை பயன்படுத்தி சம்பாதித்துவிட வேண்டும் என்ற தயாரிப்பாளரின் ஆசை.... இந்த மூன்று ஆசைகளும் கைகோர்த்து சமகால விஷயங்களை கலந்து சமைக்க முற்படும்பொழுது கூடுதல் கவனமாக இருந்திருக்க வேண்டும்....

புராண-இதிகாச-வரலாற்று தகவல்களை வைத்து படமெடுத்தவர்கள் எல்லாமே நிறைய தேடல்களுடன், பல்வேறு ஆய்வுகளுடன் படமெடுத்தார்கள்.... ஆனால் இந்த கூட்டணியோ.... வாட்ஸ் ஆப் வசனங்கள், டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அதை உண்மையாக நினைத்தபொழுது....

செம்ம அடி வாங்கி இருக்கிறார்கள்....

இனிமேலாவது மிக சரியான தகவல்களுடன், தேவைப்பட்டால் நிரூபிக்கும் ஆதாரங்களுடன் சமகால நடப்புகளை பற்றிய கதைக்களங்களை உருவாக்க வேண்டும்... இல்லை என்றால்... பேய்-ஆவி கதைகள், நாட்டாமை பொண்ண வேலைகாரன் லவ் பண்ற கதைகள் போன்ற சமூக சீர்திருத்த படங்களோடு நின்றுவிடுதல் நலம்...

இப்போது எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள்... அவர்கள் மிகுந்த புரிதல்களுடன் விபரமாய் வேறு இருக்கிறார்கள்... ஜாக்கிரதை...

இது சாமான்யனின் எச்சரிக்கை...!!..

டெங்கு பீதி

சில நேரங்களில் சில விஷயங்களை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.... சமீபத்திய விஷயம் "டெங்கு மரணங்கள்" 



சமீபத்திய ஊடக செய்திகள் எங்கெங்கு டெங்கு மரணம் நிகழ்ந்தாலும் தேடிப்பிடித்து படமாக்கி ஒளிபரப்பி ஜனநாயக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன... நிஜமாகவே நிலைமை சற்று சீரியஸ்தான்... வந்த டெங்குவை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், இனிமேல் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும்... பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி வெற்றி பெறாது....

நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.... என்று நிச்சயம் எந்த ஒரு அரசும் ஒப்புக்கொள்ளாது... இதற்கு இரண்டு காரணங்கள் .... ஒன்று அரசின் கையாலாகாத தனத்தை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... அதே நேரம்... அரசு "ஆமாம்.... நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... கட்டுப்படுத்த முடியாத அளவு பரவிக்கொண்டிருகிறது..." என்று சொன்னால்..... நிலைமை என்னாகும்?? மக்கள் பீதிக்குள்ளாவார்கள்.... அதை சமூக விரோதிகள் வதந்திகளை கிளப்பி மேலும் பயப்படுத்துவார்கள்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.... அதை தொடர்ந்த தனியார்/அரசு பொருளிழப்புகள் ஏற்படும்.... இன்னும் பற்பல இன்னல்கள் உருவாகும்... ஆகவே அரசு ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது...

அதே நேரம்... இல்லை.... டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது... அப்படி இப்படி என்று மைக் கிடைத்தவர்கள் எல்லாம் உளறிக்கொண்டிராமல்... சம்மந்தப்பட்ட அமைச்சகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.... தரமான மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதற்கான வாகன வசதிகள் என எல்லாவற்றையும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்...

அதே நேரம்.. இதெல்லாம் அரசின் கடமை... நமக்கு குறை சொல்வது மட்டுமே வேலை.... என்று இருந்துவிடாமல்.... ஆங்காங்கே இருக்கும் இளைஞர்/மகளிர் குழுக்கள், நற்பணி மன்றங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பிளாஸ்டில் டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள் இன்னும் பற்பல கொள்கலன்களை உடனடியாக நீரின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்... (ஏரி- குளங்கள்-ஆறுகளில் மட்டும் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள மணல் மாபியாக்களும் , ரியல் எஸ்டேட் தாதாக்களும் இருக்கிறார்கள்... )

மேலும்.... நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற... டெங்கு வைரஸ்க்கு எதிரான , இரத்ததட்டுக்களை பெருக்க கூடிய மூலிகை மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க முன் வர வேண்டும்...

எல்லா செய்தியையும் பிரேக்கிங் நியூசாக்கி பீதியை கிளப்புவதை வாடிக்கையாக கொள்ளாமல்... ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் அரசுக்கு துணை நின்று மக்களிடம் ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்...

வேறென்ன சொல்ல..... சாமான்யன் அவ்ளோதான் சொல்ல முடியும்....

"நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாயன் திங்கணுமா..."


சமகால போராளிகள் கேட்கும் கேள்வி... அதிலும் குறிப்பாக தொப்புள் கொடி வார்த்தைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் தேசிய போராளிகள்...

அவர்கள் கேட்கும் கேள்வி.... இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (இத இங்கிலீஸ் ல ஜி டி பி ன்னு சொல்லி நம்மாளுங்க நாங்களும் பொருளாதார மேதைகள்தான்னு காட்டிக்குவாங்க ... ஆஹா... அண்ணாச்சி என்னென்னவோ பேசுறாக.... வெவரமான ஆளுதான்னு நாமளும் கைதட்டுவோம்...) பெரும்பகுதியை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் (புதுச்சேரியையும் சேர்த்தா அஞ்சு ) வடக்க நாலஞ்சு மாநிலங்களும் தான் உற்பத்தி செய்யுது... நாங்க உற்பத்தி செய்யுறத ஏன் மத்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்....?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.... எங்க முப்பாட்டன் திருவள்ளுவன் சொன்னது.... அப்புறம்... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... யாதும் ஊரே ... யாவரும் கேளீர்ன்னு எங்க பாட்ட முப்பாட்டன் எல்லாம் ஆளுக்கொன்னா சொல்லி எங்க பண்பாட்டையும் நாகரீகத்தையும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கி இருக்காங்கன்னு மேடைபோட்டு பேசுவோம்.... சரி... இப்போ அத விட்டுடலாம்... அத இன்னொரு நாளைக்கு பேசலாம்...

இந்த கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் ன்னு சொல்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில அவங்க சொல்ற மாதிரி ஒட்டுமொத்த இந்தியாவுல முழு தென்னிந்தியாவும், வடக்க ஒரு அஞ்சாறு மாநிலங்களும் தான் இருக்கு..இது முழு உண்மை இல்லன்னாலும்.... ஒரு குறிப்பிட்ட முக்கிய பங்கு இருக்கு..... இதுக்கு காரணம் என்னன்னா.... இங்க இருக்கவன் எல்லாம், அறிவாளி, உழைப்பாளி, நேர்மையானவான்... அங்க இருக்கவனெல்லாம் சோம்பேறி... முட்டாள் ன்னு அர்த்தம் இல்ல...

இந்த மாநிலங்கள் அமைந்திருக்க கூடிய பூகோள அமைப்பு.... ஒவ்வொன்னா பார்க்கலாம்..

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள், நெல்லையிலும், ஸ்ரீஹரிகேட்டாவிலும் அமைந்திருக்க கூடிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அணு மின் நிலையங்கள், சேலம் இரும்பு உருக்காலை... அப்படி இப்படின்னு நிறைய மத்திய அரசு நிறுவனங்கள் தென்னிந்தியப்பகுதியில் அமையப்பெற்ற காரணம்.... பூகோள அமைப்பில் இருக்கும் உறுதி செய்யப்பட பாதுகாப்பு.... என்னதான் இன்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்க கூடிய ஏவுகணைகள் வந்துவிட்டாலும், இவைகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் பாகிஸ்தான், சீனா போன்ற எதிரி நாடுகள் எளிதில் தாக்கி விடாதபடிக்கு தூரமான இடம்... சுற்றளவு மொத்தமும் இந்தியா மட்டுமே ஆதிக்கம் செலுத்த கூடிய கடல்.... இடையில் இருக்கும் இலங்கைக்கு இந்தியாவை தவிர்த்து வேறெங்கும் போக முடியாத நிர்பந்தம்... ஆக.... வட இந்திய மாநிலங்களை காட்டிலும் ரிஸ்க் ஃபேக்டர் குறைந்த தென்னிந்திய பகுதிகளில் இப்படியான தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது....
மேலும்... இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைந்த துறைமுகங்கள், நிலக்கரி படிமம், சுண்ணாம்பு கற்கள், தங்க படிமங்கள்...போன்ற கனிம வளங்கள் இங்குதான் அமையப் பெற்றிருக்கிறது.... வைகை, காவிரி, தாமிரபருணி , பாலாறு, கிருஷ்ணா போன்ற வற்றாத நதிகளின் போக்கும் இங்குதான் இருக்கிறது.... இந்த இயற்கை வளங்கள், பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசின் தொழிற்சாலைகள்.. எல்லாம் சேர்ந்துதான் தென்னிந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டது.... அப்படி மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளின் காரணமாக மேலும் மேலும் நிறைய தொழிலகங்கள் உருவானது....
ஆனால்...... இப்படி பாதுகாப்போ, இயற்கை வளங்களோ இல்லாத இடங்களை அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது இயல்பான விஷயம்.. அம்மாதிரியான இடங்களில் முதலீடும் இருக்காது என்பதுதான் எதார்த்தம்.... இயற்கை வளங்கள் நிறைந்ததால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு மட்டுமே இந்த மாநிலங்கள் ஜிடிபி யில் முக்கிய பங்காற்றுகிறதே தவிர.... இங்கு இருக்கும் மக்கள் மட்டுமே அறிவாளிகள், உழைப்பாளிகள் என்பதனால் இல்லை என்பதை இந்த பிரிவினைவாதிகளுக்கு யார் புரியவைப்பது...

ஒன்றாய் பிறந்த அண்ணன் தம்பிகளில் ஒருவர் ஊனமாக இருந்தால் அது அவர் தவறல்ல.... ஆனாலும்... இந்த பிரிவினைவாதிகள் உடன் அம்மாதிரி யாராவது பிறந்துவிட்டால்.... சம்பாதிக்கும் வயது வரும்வரை மொத்த குடும்பத்துடன் இருந்துவிட்டு, சம்பாதிக்க முடிந்த உடன் தான் சம்பாதிப்பது எனக்கு மட்டும்தான் என்ற குறுகிய நோக்கத்துடன் மட்டுமே வளர்ந்தவர்கள்....

ஒருவேளை இவர்கள் கேட்பதுபோல தனி நாடு கொடுத்துவிட்டால்.... இவர்களின் வழித்தோன்றல்கள் அடுத்த அரசியல் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? தஞ்சாவூர் காரன் வெளைய வைக்கிற நெல்லை எல்லாருக்கும் கொடுக்கனுமா.... மதுர மல்லிய ஏன் சேலத்துக்காரனுக்கு கொடுக்கணும்... திருநெல்வேலி அல்வாவ ஏன் காஞ்சிபுரத்துகாரனுக்கு கொடுக்கணும்.... காஞ்சிபுரம் பட்ட ஏன் ராமநாதபுரத்துக்கு கொடுக்கணும்னு கெளம்புவானுங்க.... ஏன்னா இவனுங்க வளர்ந்த விதம் அப்படி...
இவர்களை எல்லாம் திருத்துவது நம் நோக்கமல்ல என்றாலும்... இந்த பொருளாதார மேதைகளின் உண்மை நோக்கத்தை சாமான்யர்களுக்கு புரியவைப்பதே இந்த சாமான்யனின் இந்த நீண்ட கட்டுரை...
நன்றி...

புகைப்படம் இணையத்திலிருந்து... புரிதலுக்காக மட்டும்

இலவசத்திற்கு அலையும் மக்கள்

எங்கள் பகுதியில் திருமண நாளின் முதல் நாள் பெண் அழைப்பு... அதற்கும் முந்தின நாள் மூன்றான் தண்ணீர் ஊற்றுதல்.. என்றொரு சடங்கு நடக்கும்... (இது பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் திருமண நாளின் முந்தின இரவில் நலங்கு வைத்தல் என்று நடத்தப்படுகிறது...)
இந்த மூன்றாம் தண்ணீர் ஊற்றுதல் என்ற நிகழ்வில், ஊரில் இருக்கும் சுமங்கலி பெண்களை அழைத்து மாப்பிள்ளை/ பெண் (அவரவர் வீட்டில்) இருவருக்கும் எண்ணெய் தேய்க்க சொல்வார்கள்... எல்லோரும் எண்ணெய் தேய்ப்பதில்லை என்றாலும்.. வயது முதிர்ந்த சுமங்கலிப்பெண்கள் எண்ணெய் தேய்த்து ஆசி கூறுவார்கள்...

அவர்கள் இணையப்போகும் திருமண வாழ்க்கை அமோகமாய் அமைந்து, குழந்தை செல்வங்களை பெற்று அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், அதுவரை அவர்களை பிடித்திருந்த பீடைகள் ஒழிந்து அவர்கள் வாழ்வில் அமைதியும், பொறுப்பும் வரவும் வேண்டும் என்பதற்கான ஆசி கூறும் வைபவம் அது... (அடுத்த இரண்டு நாட்களில் ஜென்மசனி பிடிக்கும் என்பது நிதர்சனம் )
சரி... விஷயத்திற்கு வருவோம்...

முன்னெல்லாம் இம்மாதிரி விசேஷங்களுக்கு அழைக்கப்படும் பெண்களுக்கு கொஞ்சம் பூ, கொஞ்சம் வெற்றிலை -பாக்கு, கொஞ்சம் சர்க்கரை-பொட்டுக்கடலை... என்று கொடுப்பார்கள்... பின்னாளில் வலிக்காமல் வந்த வருமானம் கூட கூட.... தங்களின் செல்வ வாளிப்பை பறை சாற்றும் விதமாக எவர் சில்வர் தட்டு, சொம்பு போன்ற அன்பளிப்புகளை வழங்குவதை வாடிக்கையாக்கி விட்டார்கள்...
இதுதான் சொல்ல வந்த விஷயமா.. என்றால்.... இதுவும் இல்லை.... மேற்கொண்டு படிக்கவும்...

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள், ஒரு மாமியார் என மூன்று பேர் இருக்கும் பட்சத்தில்.... ஊரில்/உறவில் யாராவது இறந்தால்... மருமகள்களில் எவளாவது ஒருத்தி துக்கம் விசாரிக்க போகட்டும் என்று மாமியாரும்..... இந்த கெழட்டு முண்டம் சும்மாத்தான கெடக்கு.... எழவுக்கு போயிட்டு வரட்டும் என்று மருமகள்களும் ஒதுங்கிக்கொள்வார்கள்..... நாங்கல்லாம் ஒரே குடும்பம் தானே.... ஒரு ஆள் போனா போதும்....

ஆனால்... மேலே குறிப்பிட்ட மூனாம் தண்ணி விசேஷத்திற்கு மாமியார் தனியாகவும்... மருமகள்கள் தனியாகவும் செல்வார்கள்... மூன்று பேர் போனால் மூணு தட்டு கிடைக்கும்.. நாங்கல்லாம் தனித்தனியால்ல காச்சி குடிக்கிறோம்....

இதில் வசதியானவர், வசதி குறைந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது... நம்மிடம் கோடி அளவு வசதி இருந்தாலும்.. இலவசமாய் கிடைக்கும் எவர் சில்வர் தட்டை விட்டுவிட்டால் ஜென்மமே வீண் என்ற மனநிலை...

இது எங்கள் பகுதி நடைமுறை என்றாலும்.... எங்கள் பகுதியில் மட்டும் இருக்கும் மனோநிலை அல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தையும் திராவிட சகதிகள் (சகதிகள் - எழுத்து பிழை அல்ல) இப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றன....

இதை கழுவி களையப்போவது யார்... என்பதே மில்லியன் டாலர் கேள்வி....