புதன், 27 செப்டம்பர், 2017

ஸ்ட்ரெயிட்டா சி எம் தானா ?



உங்க உழைப்பு... நீங்க சம்பாதிக்கிறீங்க..... அத நீங்க எவனுக்கும் கொடுக்கணும்னு அவசியமே இல்ல..... நீங்க ஏன் அந்த விஷயத்துல உதவல.... இந்த விஷயத்துல உதவல.... மக்களுக்கு என்ன செஞ்சீங்க.... உங்களுக்கு சேவை மனப்பான்மை இல்ல.... இப்படி எல்லாம் யாரும் யாரையும் கேக்க முடியாது.... ஏன்னா ... நம்ம சம்பாதிச்ச காச எடுத்துக்கொண்டு போய் எவனுக்கும் உதவித்தான் ஆகணும்னு கட்டாயம் இல்ல.... அது உங்க உரிமை.. உங்க விருப்பம்.... செஞ்சாலும் செய்யலாம்.... செய்யாட்டியும் இருக்கலாம்... எவனும் சம்பாதிச்சு கொண்டுவந்து நம்மகிட்ட கொடுக்கல.... அப்புறம் எப்படி "நீ அத செஞ்சியா... இத செஞ்சியா"ன்னு கேள்வி கேக்க முடியும்??

சரிதானே ரஜினி/கமல்.... நான் சொல்றது....??
Image may contain: 2 people, people smiling, beard
கண்டிப்பா இத நீங்க மறுக்கவே மாட்டீங்க.... ஆனா... ஆனா...

அப்படி நீங்க சம்பாதிச்சதோட மூடிகிட்டு உங்க வேலைய பார்த்துகிட்டு, உங்க குடும்பத்த பார்த்துகிட்டு இருந்திருந்தா மட்டும் தான் மேல உள்ளது பொருந்தும்.... எப்போ நீங்க முதலமைச்சர் நாற்காலிய குறிவச்சு, இப்போ எவனும் இல்ல.... நம்மோட பாப்புலாரிட்டிய யூஸ் பண்ணி நாமளும் தான் கொஞ்ச நாள் அதிகாரம் பண்ணி பார்ப்போமேன்னு அரசியல் பக்கம் வர துடிக்கிறீங்களோ அப்போவே முதல் பாரால சொல்லி இருக்கிற விஷயத்துல இருந்து நீங்க அவுட் ஆயிட்டீங்க....

ஓட்டுரிமை இருக்கிற/இல்லாத ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் உங்கள கேள்வி கேப்பான்... நீங்க சம்பாதிச்சதுல இருந்து பங்கு கொடுக்கலன்னு பிச்சக்காரத்தனமா எல்லாம் கேக்கல..... எங்க பிரச்சினைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?? எங்களோட எத்தனை அன்றாட/ வாழ்வாதார பிரச்சினைகள்ள எங்க கூட நின்னிருக்கீங்க??? இதுவரை எங்களுக்காக என்ன கிழிச்சீங்க... இப்போ எங்களை ஆள துடிக்கிறீங்க ??

மொதல்ல இறங்கி வெளில வாங்க.... ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு பாருங்க.... மக்களோட பிரச்சினைகள் என்னன்னு தெரிஞ்சுக்குங்க.... மக்களோட மக்களா கொஞ்ச நாள் நின்னு பாருங்க..... கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் பிரச்சினைகள்... காவிரி, முல்லை-பேரியாறு , கிருஷ்ணா போன்ற விவசாய - குடிநீர் ஆதார பிரச்சினைகள் என்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க... மீனவர்கள் பிரச்சினை என்ன்னன்னு அவங்களோட நின்னு தெரிஞ்சுக்குங்க.... சென்னை மக்களோட குடிநீர் பிரச்சினைகள்... சாலைப்பிரச்சினைகள்ள அவங்க கூட நின்னுங்க....

அதுக்கான தீர்வுகள் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.... அத செயல்படுத்த நீங்க என்ன திட்டம் வச்சிருக்கீங்க... நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி வச்சிருகீங்கன்னு சொல்லுங்க....

இதெல்லாம் செஞ்சப்புறம் நாங்க முடிவு பண்றோம்..... நீங்க அந்த நாற்காலிக்கு தகுதியானவரா... இல்லையான்னு...

அத விட்டுட்டு....தமிழ்நாடு என்னமோ உங்க பாட்ட- முப்பாட்டன் சொத்து மாதிரி நாலு விசிலடிச்சான் குஞ்சுங்க உங்க போஸ்டர்க்கு பாலூத்தின உடனே முதலமைச்சர் கனவு காண்ட்றீங்க......

எங்களை எல்லாம் பார்த்தா சொம்பு மாதிரி தெரியுதா என்ன ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக