வியாழன், 29 ஜூன், 2017

தனியார் மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்- காரணகர்த்தா???



  ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறதாம்... அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்து விட்டதாம்...

பொதுவாக இந்த விமான நிறுவனங்களை பொறுத்தவரை கட்டணங்களில் எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது... பயணக்கட்டணம், எரிபொருள் செலவு, சேவைக்கட்டணம் எல்லாமே பயணிகள் தலையிலேயே விடியும்... பண்டிகை காலங்கள், வெளிநாடுகளில் பள்ளி விடுமுறை காலங்கள் போன்ற நேரங்களில் கட்டண உயர்வு சொல்லி மாளாது.... அப்படி அப்படி இருக்கும் பொழுது ஏர் இந்தியா நிறுவனம் எப்படி 52 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது??? இதில் இன்னொரு விஷயம்... மத்திய அரசு இந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த சுமார் 30 ஆயிரம் கோடிகளை கொட்டியும் கூட அது நிற்பதாயில்லை...



இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?? பொறுப்பற்ற நிர்வாகமும், தன கடைமையை சரி வர செய்யாத அதன் ஊழியர்க்களும்தான்....

அவர்கள் மட்டும் முறையான திட்டமிடுதலும், ஒழுங்கான பராமரிப்பும்-சேவையும் செய்திருந்தால்... பெரும்பாலான விமான நிறுவனங்களை போல ஏர் இந்தியா நிறுவனமும் லாபத்துடனே செயல்பட்டிருக்கும்...

இவ்வளவு நஷ்டத்தில் இயங்கும் ஒரு விமான நிறுவனத்தை தனியார் கையகப்படுத்த எப்படி முடியும்?? அவர்களால் மட்டும் எப்படி லாபத்தில் இயக்கி விட முடியும்...??

இந்திய அரசு ஊழியர்களை (மத்திய/மாநில) பொறுத்தவரை , வேலையில் சேர்ந்துவிட்டால் போதும்.. உடனே கொம்பு முளைத்து விடும்... 58/60 வயது வரை அவர்களின் வேலை உறுதி செய்யப்பட்டு விடும்... பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் வாரிசுக்கும் வேலை உறுதி... வயதாகி ரிட்டயர்டு ஆனால் பென்ஷன் ....

அவர்கள் கடமையை செய்யாவிட்டாலும், ஊழல் செய்தாலும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு நேர்மையாக இல்லாவிட்டாலும், அவர்களின் வேலைக்கான நோக்கத்தில் இருந்து விலகினாலும் பெரிதாக ஒரு பிரச்சினையும் இல்லை.... அதிகபட்சம் இடமாற்றம் அல்லது விசாரணை கமிஷன் அல்லது இடைநீக்கம்.... அவ்வளவுதான்....

பிரதமரே நேரடியாக நாட்டுமக்களுக்கு அறிவித்த 1000/500 ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட விதிகளுக்கு புறம்பாக பணத்தை மாற்ற உதவிய வங்கி ஊழியர்களுக்கு கூட அதிகபட்ச தண்டனை "இடமாற்றம்" என்பது சமகால உதாரணங்கள்...

நோட்டுக்களை மாற்ற அரசு விதித்த கெடு முடிந்த ஆறு மாதம் கழித்தும் பழைய பணத்தை மாற்ற உதவிய ஒரு காவல்துறை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதுதான் அதிகபட்ச தண்டனை.... இது சமீபத்திய செய்தி...

அதையும் மீறி ஒருவேளை நடவடிக்கை எடுக்கப்பட்டால் "அரசு ஊழியர் சங்கங்கள்" வேலை நிறுத்தம் அறிவிப்பார்கள்... அதற்கு எதிர்கட்சிகள் குடை பிடிப்பார்கள்...

இப்படி இருக்கும் நிலையில் எவன் ஒழுங்காக வேலை செய்வான்....?? பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும்??? (பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கம் அற்றவை என்று சிலர் சொல்வார்கள்... ஆனால் நிர்வாகத்துறை வேறு... சேவைத்துறை வேறு.... உற்பத்தித்துறை வேறு.... நிர்வாகத்துறையில் லாபமே இருக்காது... சேவைத்துறையில் லாபம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நஷ்டம் இருக்க கூடாது.... உற்பத்தி துறை நிச்சயம் லாபத்தோடுதான் இருக்க வேண்டும் )

இவளோ நாள் எவன் எல்லாம் ஏமாத்தி, கடமையை ஒழுங்காக செய்யாமல், ஊழல் புரிந்து அந்த நிறுவனத்தை நஷ்டப்படுத்தினானோ அவனுக்கு எல்லாம் புதிதாக அந்த நிறுவனத்தை ஏற்று நடத்தப்போகும் தனியார் நிறுவனம் ஆப்பை செதுக்கி அடிக்கப்போகிறான்..

ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்கும் என மத்திய அமைச்சர் சொல்லி இருப்பதாக செய்திகள் வருகின்றன...
No automatic alt text available.
அதனை அந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளலாம்.... ஆனால் ஊழல் செய்வதற்கோ- பணியை ஒழுங்காக செய்யாமல் இருப்பதற்கோ அந்த தனியார் நிறுவனம் நிச்சயம் அனுமதிக்காது..... அதை அனுமதிக்க சொல்லி அரசும் நிர்பந்திக்க முடியாது.... ஏனென்றால்.... அந்த தனியார் நிறுவனம் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் அல்ல.... எவன் வேண்டுமானாலும் தின்னுவிட்டு போகட்டும்... நமக்கு நாம் ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்க....

இது ஒரு எச்சரிக்கை மணி... அரசு ஊழியர்கள் தங்கள் கடைமையை சரி வர செய்ய வேண்டும்.... அரசு அதனை கண்காணிக்க வேண்டும்.... இல்லை என்றால்... இப்படி எல்லா நிறுவனங்களும் நஷ்டத்தில் கணக்கு காட்டி காட்டி.... பின்னாளில் அவைகள் தனியார் மயமாக்கப்பட்டு.... பிறகு தனியார் சொல்லும் விலைக்கு எல்லாவற்றையுமே வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் ஆளாகப்போவது உறுதி...

அந்த "பொதுமக்களில்" இந்த அழிவுகளுக்கெல்லாம் காரணமான தற்போதைய அரசு ஊழியர்களும், அவர்கள் குடும்பமும் உள்ளடங்கும்...

சும்மா ஒரு ஞாபகம்


பணி நிமித்தமாக செய்யாறு சென்றுவிட்டு உறைவிடமான காஞ்சிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன்.... முன்னிரவு ஏழரை-எட்டுமணி இருக்கலாம்... செய்யாறு காவல் எல்லை முடியும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்
Image may contain: motorcycle and outdoor
வழக்கம் போல பைக்கை நிறுத்தியதும் முதல் வேலையாக சாவியை உருவிக்கொண்டார்கள்... என்னிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் எதுவும் சொல்லாமல் ஓரமாக கொஞ்ச நேரம் நின்றபிறகு அருகில் வந்த காவலர் ஓட்டுனர் உரிமமோ- வாகன சான்றிதழ்களோ- காப்பீட்டு சான்றிதழோ கேட்கவில்லை... மாறாக.."கொடுத்துட்டு கிளம்பு.." என்றார்...

சார்... என்கிட்டே வெறும் இருபது ரூபாதான் இருக்கு... வண்டி அல்ரெடி ரிசர்வ்லதான் வருது... காஞ்சிபுரம் போய் சேருமா தெரியல.. அப்படி போயிட்டா இந்த இருபது ரூபாக்கு தான் பெட்ரோல் போடணும்.. என்று உண்மையை சொன்னேன்...
என் முகத்தில் இருந்த நேர்மையை கண்ட அந்த காவலர் “சரி சரி.. அத கொடுத்துட்டு கிளம்பு.... இதுக்கப்புறம் வேற எங்கயாச்சும் போலீஸ் மடக்கினா இங்க கொடுத்த விஷயத்த சொல்லாத” (என்ன காரணமோ தெரியல) என்றார்...

கையில் இருந்த இருபது ரூபாயை கொடுத்துவிட்டு , வண்டி வழியில் பெட்ரோல் இல்லாமல் எங்கேயும் நிற்க கூடாது என்று குல தெய்வத்தை வேண்டிக்கொண்ட படியே பயணத்தை தொடர்ந்தேன்...

குலதெய்வம் கைவிடவில்லை... உறைவிடம் வந்துவிட்டேன்..

இந்த சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் பிறகு.. அதே நேரம்.. அதே பயணம்... வானம் மேகமூட்டத்துடன் கருத்து இருந்தது... சற்று நேரத்தில் மழை வந்து விடலாம்...
இந்த முறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக அந்த சோதனை சாவடியை அடையும் முன்பாக மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்தேன்... "அங்க இன்னிக்கும் நின்னா அவனுக்கு அம்பது-நூறு அழனும்... " எனக்குள்ளே சொல்லிக்கொண்டபடியே மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கிய வேளையில் எதிர்பாத்தபடியே மழை கொட்ட ஆரம்பித்தது....
மின்சார விளக்கற்ற மிகக்கொடிய இரவில் முன்னெப்போதும் பயணித்தறியாத பாதையில் தொடர்ந்த அந்த பயணம் மிக நீண்டு நெடிந்தது... எங்கே போகிறோம்..... எப்படி போகிறோம்.. என்றே தெரியவில்லை.... சாலை சென்ற பக்கமெல்லாம் நீண்டது என் பயணம்... ஓட்டை விழுந்த பானையில் இருந்து கொட்டும் நீராய் கொட்டிய மழை , நேரம் ஆக ஆக உடைந்த பானையிலிருந்து கொட்டும் நீராய் மாறியது.... பைக்கின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திற்கு சவால் விடும் இரவு... சாலை தெரியாத அளவு அடைமழை... அடடா... அங்கே போலீஸ்காரர்கள் மடக்கி இருந்தால் ஐம்பது ரூபாயோடு போயிருக்குமோ... அதுவும் இந்த அடைமழையில் அவர்கள் நிற்பதற்கான வாய்ப்பும் இல்லை... நாம் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு மிக முட்டாள்த்தனமாக போய்விட்டதோ.... என்ற சிந்தனை வான் மின்னலுக்கு ஈடாக எனக்குள் அவ்வப்போது மின்னி மறைந்தது.. 

நிலா-நட்சத்திரம்-மின்மினி-தெருவிளக்கு என எந்த வெளிச்சமுமற்ற இரவில் என் பைக்கின் வெளிச்சமும், அவ்வப்போது மின்னல் வெளிச்சமும் மட்டுமே.... திடீரென வேறொரு வாகனம் வரும் வெளிச்சம் எதிரில் தெரிய.... நன்னம்பிக்கை முனையை அடைந்த வாஸ்கோடகாமா போல மகிழ்ந்தேன்.... என் வண்டியை நிறுத்தி அந்த வாகனம் என் அருகில் வரும் வரை காத்திருந்தேன்... நான் இப்போது எங்கே இருக்கிறேன்.... எந்த பக்கம் போனால் காஞ்சிபுரம் செல்லும் சாலையை அடைய முடியும் என கேட்பதே என் நோக்கம்... அந்த வாகனம் என் அருகில் வந்ததும் “அண்ணே...” என்று குரல் கொடுத்தேன்.... என் குரல் கேட்டதும் அதிவேகமாக என்னை கடந்த அந்த பைக் பயணியோ .. இன்னும் அதிவேகமாக திராட்டிலை முறுக்கி பயணிக்க... நானோ, கண்ணில் கண்ட ஒரு மனிதனையும் தவறவிட்டு விட கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய வண்டியை திருப்பி அவரை துரத்த ஆரம்பித்தேன்... 
நான் துரத்த துரத்த... அவர் இன்னும் அதிவேகமாக பயணித்தார்.... சிறிது நேரத்தில் சில வீடுகள் தென்பட்ட கிராமத்திற்குள் அவர் செல்ல.... சட்டென எனக்கும் பொறி தட்டியது.... நிச்சயம் இந்த மனிதன் இந்த கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது.... ஒருவேளை அவர் சட்டென “திருடன் என்னை துரத்துகிறான்” என்று கூச்சலிட்டுவிட்டால்.... சத்தம் கேட்டு கூடுபவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே முடியாது... அடித்து துவைத்து விட்டுத்தான் விளக்கம் கேட்பார்கள்.... ஏழாம் அறிவு கூச்சலிட்டது.... வேண்டாம்... உடனே திரும்பி விடு....

ஏழாம் அறிவின் கட்டளையை ஏற்று.... இப்படியான ஒரு பயத்தை மக்கள் மனதில் விதைத்திருக்கும் திருடர்களை சபித்தபடி.... என் நெடிய பயணத்தை தொடர்ந்தேன்...

என்னிடம் இருந்து தப்பிக்க (??!!) ஓடிய மனிதன் மறுநாள் “ஒரு வழிப்பறி திருடன் என்னை வேகமாக துரத்தினான்... அவனிடம் இருந்து தப்பிக்க நான் அதிவேகமாக வண்டியை ஒட்டி வந்தேன்” என்று தன மனைவி, சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் சாகசமாய் விவரித்திருக்க கூடும்...


ஒருவழியாக ஒரு மெயின் ரோட்டை அடைந்து, பிறகு கொஞ்ச தூரம் போனதும் அங்கிருந்த பெயர்பலகையை படித்த பின்பு கண்டுபிடித்தேன்... காஞ்சிபுரம் செல்வதற்கு பதிலாக, காஞ்சிபுரத்திலிருந்து வேறொரு ஊருக்கு செல்லும் திசையில் பயணித்துக்கொண்டிருபதை....

சரிதான்... இரவு.... மழை... எரியாத மின்விளக்கு... கையூட்டுக்காகவே வழிமறிக்கும் காவல்துறை.... நிற்காமல் சென்ற அந்த பயந்த மனிதன்... அவருக்குள் அப்படியோர் பயத்தை விதைத்திருக்கும் வழிப்பறி கொள்ளைக்காரர்கள்... என எல்ல்லோரையும் சபித்தபடி.... பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தேன்...


# எங்கோ ஞாபக நினைவடுக்கில் பதிந்திருந்த சம்பவத்தை கிளறிய பொழுது சுவாரஸ்யமாய் சொல்ல இந்த விஷயம் கிடைத்தது.... அவ்வளவுதான்....
இதனால் எங்களுக்கு என்ன பயன்.... என நீங்கள் கேட்டால்.... ஹா... ஹா... ஹா.... இதுவரைக்கும் ஸ்க்ரோல் பண்ணிட்டே இருந்தீங்களே... எத்தனை பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்தது....??? சும்மா பொழுதுபோக்கா படிச்ச லிஸ்ட் ல இதையும் சேர்த்துக்குங்கோ.... 
 

பறந்து விரிகிறது எதிர்மறை சிந்தனைகள்

போலீஸ்காரங்க சந்தேக கேஸ்ல புடிக்கிறாங்க...... வெப்பன்ஸ், கோட் வேர்ட், மேப் ன்னு சர்வதேச தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு யோசிக்கிறாங்க.... நாம என்னமோ...."அய்யோ.... போச்சு... போலீஸ்காரன் எல்லாத்தையும் புடுங்கிட்டு எதையாவது கேச போட்டு உள்ள தள்ளிடப்போறானுங்க...."ன்னு நினைக்கிற நேரத்துல..... வேறொருத்தர்கிட்டவிசாரிச்சுட்டு, அவங்க அப்பாவிங்கன்னு தெரிஞ்சதும் அவங்க கிட்ட இருந்து எடுத்த பணத்த கூட திரும்ப கொடுத்து அனுப்பிடறாங்க....
அந்த வயசுப்பொண்ணு தனியா லாரில ஏறி வருது.... அந்த டிரைவர்-கிளீனர் மூஞ்சியே சரி இல்ல.... "அடப்பாவமே.... இவனுங்க அந்த பொண்ண நாசம் பண்ண போறானுங்க"ன்னு நாம நினைக்கிற வேளையில... அந்த பொண்ண ரொம்ப பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டு போறார் அந்த லாரி டிரைவர்...
Image may contain: 1 person, beard
கடற்கரைல ஒரு பொண்ணு தனியா நிக்கிறத பார்த்துட்டு "இங்க என்னடி பண்ற.."ன்னு மிரட்டுற அந்த லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர பார்க்கவே கர்ண கொடூரமா இருக்கா.... "அய்யய்யோ.... இந்த பொண்ண புடிச்சு கொண்டுபோய் என்ன்ன பாடு படுத்த போறாளோ"ன்னு நாம நினைக்கும்போது.... பக்குவமா அட்வைஸ் பண்ணி ஒரு கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி பத்திரமா பஸ் ஏத்திவிட சொல்றாங்க அந்த இன்ஸ்பெக்டர்....

அந்த கான்ஸ்டபிள் என்னமோ பண்ணிடப்போறான்னு நாம நினைக்கும்போது.... ரொம்ப அன்பா விசாரிச்சு.... நீ தேடி வந்த ஆள இங்க தேடினியா.... அங்க தேடினியா..... அந்த இடத்துல போய் தேடு.... ரொம்ப இருட்டுற வரை நிக்காத.... கிடைக்கலன்னா பஸ் ஏறி ஊருக்கு போய்டு... செலவுக்கு காசு இருக்கான்னு கேட்டு நெகிழ வைக்கிறார் அந்த கான்ஸ்டபிள்....

இந்த "கயல்" படத்துல வர காட்சிகள் தான் நான் மேல குறிப்பிட்டது.... இதுல ஒரு பெரிய உளவியல் விஷயம் இருக்கு.... இந்த படத்துல எலா கட்சிகளுமே பாசிடிவ் விஷயங்களா இருக்கு.... ஆனா படம் பார்க்கிற ஒவ்வொருவருமே நெகடிவா ஏதாவது நடக்குமோன்னு பயந்துகிட்டும், எதிர்பார்த்துகிட்டும் இருக்கோம்....

இயல்பான மனிதர்களின் நற்குணங்கள் தான் அதுல சொல்லி இருக்க எல்லா விஷயமுமே.... இது ஒன்னும் பெரிய ஆச்சர்யமான விஷயமோ.... உலகத்துல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயமோ இல்ல.... ஆனா.... நாம ஏன் நெகடிவா ஏதாவது நடக்குமோன்னு எதிர்பாத்துகிட்டே இருக்கோம்....

ஏன்னா.... தினசரி தொலைக்காட்சி செய்திகள்.... சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள்... ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட சினிமாக்களின் தாக்கம் நம்ம மனசை எல்லாம் ஒரு நெகடிவ் திங்கிங் மெஷினா மாத்தி இருக்கு....

நம்ம யாரோட மனசுலயும் நேர்மை இல்லை.... சந்தோசம் இல்ல.... எதார்த்தம் இல்ல... எப்போதும் ஒரு பயம்.... ஒரு குறுக்குபுத்தி, கெட்ட சிந்தனை... எதிர்மறை எதிர்பார்ப்புகள்..... சபலம்.... இப்படி வேண்டாத குப்பைகளா நிறைஞ்சு கிடக்கு..... அதோட வெளிப்பாடுதான் நம்மளால எதையுமே நல்ல விதமா யோசிக்க முடியாம போகுது....

"இல்ல... நானெல்லாம் அப்படி இல்ல... "ன்னு உங்கள்ள யாராவது இங்க வாதம் பண்ணலாம்.... ஆனா.... அந்த வாதம் உண்மை இல்லைன்னு உங்க மனச்சாட்சி பிடரியில் அடிப்பதை உங்களால் தடுக்கவே முடியாது....

நல்ல விஷயங்களையும் பார்த்து வளர்ந்த நாமளே இப்படி மாறிட்டோமே..... நம்மள பார்த்து வளர்ற எதிர்கால சந்ததி எப்படி இருக்க போகுது....???

ஜஸ்ட் திங்க் பண்ணுங்க......!!!

இயந்திரக் கறி

இங்கன மாட்டுக்கறி சாப்பிட கூடாதுன்னு சட்டம் போட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுல 50% க்கு மேல நிஜமாவே மாட்டுக்கறி சமைக்காதவங்க / சாப்பிடாதவிங்கதான்....
Image may contain: one or more people
அதே நேரம் , மாட்டுமேல பாவப்பட்டோ, அது லட்சுமின்னோ எல்லாம் சாப்பிடாம இருக்கிறது இல்ல.... பாட்ட-முப்பாட்டன் காலம் தொட்டே அவங்க வீட்ல சமைக்கல.... அதனால அவங்க அத சாப்பிடல...


பாட்ட-முப்பாட்டன் காலத்துல அவங்க ஏன் மாட்டுக்கறி சமைக்கலன்னா.... மாடுங்க அவங்க குடும்பத்துல ஒருத்தரா இருந்துதுங்க.... வண்டி இழுக்க, ஏர் உழுவ... கமலை இறைக்க... பிணையல் அடிக்க.... பால் கொடுக்க... இயற்கை உரம் கொடுக்க... பிள்ளையார் சாமி செய்ய.. வாசல் தெளிக்க... இப்படி நிறைய நிறைய உபயோகங்கள் மாட்டை வைத்து இருந்ததால்.... அந்த மாடுங்களும் குடும்பத்துல ஒருத்தர்.... நம்ம புள்ளைய நாம வெட்டி சாப்பிட முடியுமா... அதனால அவங்க காலத்துல அவங்க சமைக்கல... சாப்பிடல.... அம்புட்டுதேன்...

இப்போ இருக்கவங்களுக்கு போக்குவரத்துக்கு டீசல்/பெட்ரோல்ல ஓடுற வாகனங்கள் இருக்கு.. என்ன ரசாயனத்த கலந்தாலும் பால் பாக்கெட்டுல கிடைக்குது.... வாசல் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாம அபார்ட்மென்ட் வாழ்க்கையாயிடுச்சு... வயல்ல உழுது பயிர் வச்சு வந்த காசுல படிச்சிருந்தாலும் கூட.... இவங்க உழுவுற, பயிர் வைக்கிற வேலைக்கு போகல.... அப்படியே போனாலும் அதுக்கு மாடு அவசியமில்லாம ட்ராக்டர, பாம்பு செட்டுன்னு எல்லாமே இயந்திரமயமா போச்சு..... இவிங்களுக்கு மாட்டோட அருமையும் தெரியாது...அருகாமையும் இல்ல.... சோ.... இவிங்க குடும்பங்கள்ல அந்த மாடுங்க ஒரு ஆளு கிடையாது.... அதனால மாட்டுக்கறி சாப்பிடறது இவிங்கள பொறுத்தவரை பெரிய பாவமெல்லாம் கிடையாது...


அப்படி இருந்தாலும்.... இவிங்க மாட்டுக்கறி சாப்பிட மாட்டாய்ங்க... காரணம்.... மேல சொன்னதுதான்... எங்க வீட்டுல அந்த காலத்துல இருந்தே நாங்க மாட்டுக்கறி சமைக்கறது இல்ல... அதனால சாப்பிட்றது இல்ல.... அவ்வளவுதான்...

நீதான் சாப்பிடமாட்டியே... அப்புறம் எவன் என்ன சட்டம் போட்டா உனக்கென்ன.... ஏன் இப்படி தம் கட்டிக்கிட்டு எதிர்க்கிற...??

ஒ.... அதுவா.... நாங்க வார்டன்னா அடிப்போம் குரூப்பு..... ஆட்சில இருக்கவன் மோடி.... அந்தாள் கவுருமென்டு என்ன சொன்னாலும் எதுக்கனும்.... அவ்வளவேதான்.......

ரஜினியின் அமைச்சரவையும்- அதிகார மையங்களும்

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா.... மாட்டாரா.... வரலாமா... கூடாதா.... வந்தால் தனிக்கட்சி தொடங்க வேண்டுமா... ஏதேனும் ஒரு கட்சியில் இணைய வேண்டுமா.... என்பதாக பல்வேறு ஊகங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என தமிழக அரசியல் ரஜினிகாந்த் அவர்களை மையப்படுத்தி சுழன்றுகொண்டிருக்கிறது..
Image may contain: 5 people, people smiling, beard and text
வழக்கம் போல தான் நடித்த திரைப்படம் திரைக்கு வரும் முன்பாக தன்னுடைய ரசிகர்களை சற்றே சூடேற்றும் விதமாக அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுவார் என்பதும்யல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுவார் என்பதும்...  திரைப்படம் வெளியான பின்பு அது வெற்றியோ-தோல்வியோ... அத்துடன் தன அரசியல் விமர்சனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆன்மீக பயணமோ... அடுத்த தொழில்முறை பயணமோ அவர் சென்று விடுவார்.... என்பதுதான் நாம் இதுவரை கண்ட உண்மை என்றாலும்... இம்முறை அப்படி என்ன தோன்றவில்லை...

ஏனென்றால்.... தமிழக அரசியல் களத்தில் வெல்ல முடியாத ஆளுமைகளாக இருந்தவர்கள் இப்போது இல்லாத சூழ்நிலையில் அடுத்த தலைவர் யார் என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது...

தற்போதைய கள நிலவரத்தில் , திரு கலைஞர் அவர்களால் உருக்குலையாமல் ஒப்படைக்கப்பட்ட தி மு க என்ற இயக்கத்தின் பலத்தோடு முன்னணியில் நிற்பவர் திரு ஸ்டாலின் அவர்கள்தான்... இவர் அனுபவமும் நிர்வாக திறமையும் நிறைந்தவர்...அதற்கடுத்தபடியாக... வட தமிழ்நாட்டின் செல்வாக்கு பெற்ற பா ம க வின் தலைவராக செயல்பட்டுகொண்டிருக்கும் திரு அன்புமணி ராமதாஸ்... படித்தவர், தொலைநோக்கு பார்வையும், திட்டங்களும் கொண்டவர்..

இவர்களுடன் அல்லது இவர்களுக்கு மேலாக திரு வைகோ அவர்கள்... ஆனால் மக்கள் செல்வாக்கை பெறமுடியாத இவருக்கான வாய்ப்பு இனி இல்லை என்ற நிலையை எட்டிவிட்டதால் இவரை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை..

திரு கலைஞர் அவர்களும் , அம்மா அவர்களும் களத்தில் நின்றபோதே ஒரு மாற்று சக்தி என்று எதிர்பார்க்கப்பட்ட திரு விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய முன் கோபத்தினாலும், அவரது மனைவியின் முறையல்லாத வழிகாட்டுதலாலும், ஊடக சதியாலும் இயல்பாகவே களத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்...

தேசியகட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் மட்டும் சில்லறை கட்சிகள் எல்லாம் எப்போதும் போல யாரோடோ ஒட்டிக்கொண்டு காலம் கழித்தே ஆக வேண்டும்..

இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் சமீப காலமாக திரு ரஜினிகாந்த் அவர்களின் நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வந்தே விடுவார் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த.... அவரது ரசிகர்கள் புது ரத்தம் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்கள்..

இப்போது சாமான்யன் ஏதோ சொல்ல வருகிறார்... அதையும் கேட்போமா...??

வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வசனங்களை பேசி, சண்டை பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுத்த அசைவுகளை செய்து, இயக்குனர்கள் சொல்வதை நடித்துக்கொடுப்பதுதான் ஒரு நடிகரின் வேலை.. அதை அவர் செய்கிறார்... அவ்வளவுதான்.. இயல்பில் அந்த நடிகரும் ஒரு சாமான்யர்தான்... சிந்தனாசக்தியை தொலைத்துவிட்ட ஒரு கூட்டம் எப்போதுமே அந்த செல்லுலாய்டு பிம்பங்களின் செயல்களை உண்மை என்றே நம்பி கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது முதல், பட்டாசு வெடிப்பதுவரை ஏராளமான கோமாளித்தனங்களை செய்வார்கள்... அவர்களை அப்படியே விட்டு விடலாம்... ஆனால்.... அவர்கள் அப்படியே இருக்கும் வரைதான் அவர்களை அப்படியே விடலாம்...

அந்த கோமாளித்தனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனையும்போது அவைகளை வெறும் கோமாளித்தனம் என்று ஒதுக்கி விட முடியாது...
ஒரு அரசு என்பது தனி நபர் சார்ந்த விஷயம் இல்லை... என்னதான் அரசு நிர்வாகத்தில் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உலக தரமுடைய அறிவாளிகள் இருந்தாலும்... அவர்களை இயக்குபவர்கள் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களே... ஒரு ஐ ஏ எஸ் – ஐ பி எஸ் படித்து தேர்ந்து பல ஆண்டுகள் அனுபவமுடைய அலுவலருக்கு ஆணை பிறப்பிப்பவர் ரவுடியிச, கள்ளச்சாராய, குற்றப்பின்னணி உடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்பதுதான் நடைமுறை... இது ஒரு வெட்கக்கேடான, வேதனையான விஷயம் என்றாலும்... ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்...

திரு ஸ்டாலின் அவர்கள் நல்ல தலைவர் என்பதில் சற்றும் ஐயமில்லை.... திரு அன்புமணி அவர்கள் சிறந்த நிர்வாகியாக இருப்பார் என்பதில் மாற்றுகருத்து இல்லை... சீமான்-திருமாவளவன்-வைக்கோ இப்படி எல்லோருமே நல்ல தலைவர்கள்தான்... ஆனால்.. இவர்கள் மட்டுமே ஒரு ஆட்சியை நிகழ்த்திவிட முடியாது... இவர்கள் முதலமைச்சர்கள் என்றால்... இவர்களின் அடுத்தடுத்த உட்கட்டமைப்பு பதவிகளில் யாரை அமர வைப்பார்கள் என்பதுதான் கேள்விக்குறி... ஸ்டாலின்-அன்புமணி-சீமான்-திருமாவளவன்.. இப்படி “தலைவர்களின்” அறிவார்ந்த, புத்திசாலித்தனமான, வீராவேசமான, உணர்ச்சி மிகுந்த உரைகளை கேட்டு நாம “இவர்கள் நல்லவர்கள்.. திறமையான நிர்வாகிகள்..” என்று முடிவு செய்திருக்கலாம்... ஆனால்.. இவர்களுக்கு அடுத்தடுத்த படிகளில் அமரப்போகிறவர்கள்????

தற்போதைய திமுக, பாமக போன்ற கட்சிகள் ஏற்கெனவே ஒரு உள்கட்டமைப்பு வசதியை பெற்றவை.... பல அனுபவங்கள், தவறுகள், பாடங்கள் மூலம் நிறைய மாறுதல்களை செய்து அவைகள் ஓரளவிற்கு நிர்வாக சக்தியை பெற்று இருக்கிறார்கள்... அப்படி இருந்தும் கூட, தன்னுடைய நிலையை, வெற்றியை காப்பாற்றிக்கொள்ள.... “தவறானவர்கள்...” என்று தெரிந்தாலும் கூட சிலர் மீது எளிதாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது.... அப்படி ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் தன்னுடைய வெற்றிக்கு அவர்களால் ஏதேனும் குந்தகம் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.... கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வேட்பாளராக நிற்கவைக்கப்பட்ட திரு முத்துக்கருப்பன் அவர்களே அதற்கு சமகால சாட்சி.....

வளர்ந்த கட்சிகளுக்கே இந்த நிலைமை என்றால்....

ஒருவேளை...... புதிதாக ஒரு கட்சியை திரு ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கினால்... அவருக்கு அடுத்தடுத்த படிகளில் அமரப்போகிறவர்கள் யார்...??? இவர் பொருளாதார நிபுணர்... இவர் கல்வியாளர்... இவர் பல ஆராய்ச்சிகளை செய்தவர்... இவர் சட்டத்தில் புலி..... என்று யாரோ ஒருவரை கொண்டுவந்து அமர வைக்க முடியுமா???
காலம் காலமாக தன்னுடைய கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்த ரசிகர்களை திரு ரஜினிகாந்த் அவர்கள் திருப்திபடுத்த வேண்டாமா??? அப்படி திருப்தி படுத்த அவர் என்ன செய்வார்....?? உள்ளூர், ஒன்றிய,வட்ட, மாவட்ட, மாநில பொறுப்பாளர்களாக இவர்களைத்தான் நியமிப்பார்... தேர்தலில் போட்டியிட நேர்ந்தால்... சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் இவர்களை தான் முன்னிறுத்துவார்...

ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரை... ஒரு பெரிய காவல்துறை அதிகாரியாக, இருப்பதை எல்லாம் தானம் கொடுக்கும் பண்ணையாராக, நேர்மையான கடத்தல்காரனாக, கெடுதல் செய்வோரை எல்லாம் அடித்து துவைக்கும் நல்லவராக, உழைப்பாளியாக,தேவதூதனாக, கடவுளாக பார்த்து பார்த்து பரவசமடைந்திருகும் நாம்..... அவர் தேர்தலில் நின்றால்... நிச்சயம் நம்மையும் அதை போல காப்பாற்றுவார் என்று நம்பி அவருக்கு வாக்களிப்போம்.. வெற்றிபெறவும் செய்வோம்...
சத்தியமாக நாம் ரஜினிகாந்த் என்ற ஒரு நல்ல மனிதனுக்குதான் வாக்களிப்போம்... ஆனால்... நம்மை ஆளப்போகிரவர்கள்.... ??????????????

எஸ்.... அவர்களேதான்..... யார் உங்கள் ஊரில் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியான அன்று கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தானோ.... எவன் தன் தலைவனுக்கு வழுக்கை விழுந்துவிட்டது என்பதற்காக சலூன் கடைக்கு சென்று தன் தலையை வழுக்கையை போல சவரம் செய்துகொண்டானோ....
எவன் தன்னுடைய தலைவன் திரைப்படம் வெளியான அன்று உங்களூர் தியேட்டர்களின் தோரணம் கட்டினானோ..... அவனே தான்....
அவன்தான் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்... அவன்தான் உங்கள் அமைச்சர்... அவன்தான் உங்கள் நகரமன்ற தலைவர்... அவன்தான் உங்கள் ஒன்றிய தலைவர்...அவன்தான்.. உங்கள் மாவட்ட கவுன்சிலர்...

இவர்களின் ஆணைப்படிதான் படித்த, அனுபவமிக்க அரசு அலுவலர்கள் செயல்படுவார்கள்... இவர்களின் விருப்பப்படிதான் அரசு இயந்திரம் இயங்கும்...

நாம் ரஜினிகாந்த் அவர்களுக்குத்தான் வாக்களித்தோம்...

வாழ்க ஜனநாயகம்...!!!!

உலக சினிமா

பொழுது போகாத சமயங்களில் ஏதாவது ஒரு உலக சினிமாவை (??!!)இணையத்தில் பார்ப்பது வழக்கம்...

பெரும்பாலும் ரஷ்ய, பெர்ஷிய, பெங்காலி,பிரெஞ்ச் போன்ற புரியாத மொழி திரைப்படங்களே அந்த வரிசையில் இருக்கும்...... அந்த மொழிகள் எனக்கு புரியாதென்றாலும் கூட... அந்த கதா மாந்தர்களின் நடிப்பும், அந்த திரைப்பட இயக்குனர்களின் கதை சொல்லும் திறமையும் நமக்கு கதையை நன்கு புரியவைக்கும்... 


அப்படி ஒரு வரிசையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தெலுங்கு படம் பார்த்தேன்.. இதுவரை தெலுங்கு படங்களை பார்த்ததில்லை (மொழி மாறி வந்த ஓரிரு திரைப்படங்களை தமிழில் கண்டிருந்தாலும் நேரடி தெலுங்கு படம் பார்த்ததில்லை..)

Image may contain: 1 person, closeup
புரியாத மொழி திரைப்படங்களை தேடி எடுத்து பார்ப்பதென்றால்.. அவைகள் மிகச்சிறந்த கதை அமைப்புடனோ... மிகச்சிறந்த ஒளிப்பதிவுடனோ... தொழில்நுட்பத்துடனோ கூட வந்த படங்களாய் தானிருக்கும்... சர்வதேச விருதுகளை குவித்து படங்களாகத்தான் இருக்கும்...

தெலுங்கு கூட நமக்கு புரியாத பாஷைதான்.. அப்படியானால்... அந்த திரைப்படத்தை ஏன் பார்க்க தோன்றியது??


சிறந்த ஒளிப்பதிவா...? சிறந்த கதை அமைப்பா...? சிறந்த தொழில்நுட்பமா?? என்ன... என்ன.... என்ன...??

அதில் கதாநாயகி அனுஷ்கா....

இதை விட வேறன்ன வேண்டும் ஒரு உலக சினிமா ரசிகன் அந்த படத்தை பார்க்க, ரசிக்க...????

எல்லா காதலிகளுமே அருகாமையில்

Image may contain: 1 personம்கூம்..... இப்போ அவ எங்க இருக்காளோ.... என்ற படி தன்னுடைய பள்ளி கால, பால்யகால காதலியை பற்றி பெருமூச்சோடு முனங்குவதெல்லாம் அடுத்த வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றே தெரியாத நகர வாழ்க்கையிலோ.... அல்லது நாலைந்து வருடத்திற்கு ஒருமுறை வேறு வேறு ஊர்களில் குடி ஏறுபவர்களுக்கோ தான் சாத்தியம்...

எங்களை போன்ற கிராமவாசிகளுக்கு இது சற்றும் சாத்தியமில்லாத விஷயம்... விடலை பருவக் காதலோ.... விபரமறிந்த காதலோ.... தான் காதலித்த பெண் உள்ளூரிலோ, அக்கம்-பக்கம் பதினைந்து இருபது கிலோமீட்டர் சுற்றளிவிற்குள்ளோ தான் நடமாடி கொண்டிருப்பார்கள்..

சமகாலத்தில் சில பலர் வெளிநாடுகளுக்கு போயிருந்தாலும் கூட சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவுகள் உள்ளூரிலே தான் இருப்பார்கள்...


"நான் பத்தாம் வகுப்பு படித்தபோது காதலித்த கண்ணம்மா.... " என்று ஒரு பெண்ணின் பெயரை வெளிப்படையாக சொல்லி விட முடியாது.... அது சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நம் வாயை கிழிக்கவோ, சம்மந்தப்பட்ட பெண்ணின் கணவன் அந்த பெண்ணின் நடத்தைய சந்தேகப்பட்டு பிரச்சினை செய்யவோ மட்டுமே வழிவகை செய்யும்.


சினிமாவில் காட்டுவதை காட்டிலும் கூடுதல் கிளுகிளுப்புடன் கிராமத்துக்காதல்கள் பல உண்டு..
சொல்லாத காதல்கள்.. சொல்லி ஏற்கப்படாமல் போன காதல்கள்.... ஏற்று சேர முடியாமல் போன காதல்கள்.... என எல்லா வெரைட்டியும் உண்டு... ஆனால்... இவற்றை எல்லாம் எங்கேயும் திறந்து சொல்ல முடியாது....

அவ்வப்போது மனதிற்குள்ளாகவே அசை போட்டுக்கொள்ளலாம்.... ஏற்றும் சேர முடியாமல் போன காதல்கள் என்றால்.. ஏதோ ஒரு இழவு வீட்டிலோ- கல்யாண வீட்டிலோ காணும்போது யாருக்கும் தெரியாமல் வலிகளையும்- ஏக்கங்களையும்-புன்னகைகளையும் பரிமாறிக்கொள்ளலாம்.... அவ்வளவுதான்...

எனக்கு கூட சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.... நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது உடன் படித்த .....................வி மீது நான் கொண்ட காதல்.... படிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு உள்ளூரிலேயே சுற்றிய காலத்தில் என் தூக்கம் களவாடிய...........தி மற்றும் ........................., .................., ............... இன்னும் சிலர்..


இவர்கள் எல்லோரும் நான் ஊருக்கு வரும் போதெல்லாம் ஏதோ ஒரு கல்யாண வீட்டிலோ, தெரு முனையிலோ, ஜவுளிக்கடையிலோ, கோயிலிலோ..மருத்துவமனையிலோ எங்கோ ஓர் இடத்தில் கண் முன்னால் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

இப்படி சுவாரஸ்யமாய் பதிவிட நமக்கும் நிறைய ஆட்டோகிராப் இருந்தாலும்.... இப்போ இல்ல.. எத்தனை வயசு ஆனப்புறம் இதை வெளில சொன்னாலும் அதை ரசிக்கும் பக்குவமில்லாத அந்த பெண்களின் அண்ணன்/தம்பி பாகுபலிகள் என் வாயை உடைப்பார்கள்... என்பதால்...

இத்துடன் உரையை முடித்துக்கொள்கிறேன்...

சோடா....
 

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

“ I am a member of a team, and I rely on the team, I defer to it and sacrifice for it, because the team, not the individual, is the ultimate champion.”


அமெரிக்காவின் பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை “மாரியல் மார்கரெட் மியா ஹாம்ம் கார்சியாபர்ரா” (Mariel Margaret "Mia" Hamm-Garciaparra) உதிர்த்த, உலகம் முழுக்க பிரபலமான வாசகம்தான் நாம் மேலே சொன்னது...

ஒரு விளையாட்டு வீராங்கனையாக அவர் இதை சொல்லி இருந்தாலும்... இது எங்கெல்லாம் பொருந்தும் என்ற யோசனை சாமான்யனுக்குள் எழுந்தது...


Image may contain: 1 person, playing a sport and outdoor
ஒரு விளையாட்டு குழுவில்.... ஒரு அலுவலக குழுவில்... ஒரு அரசியல் குழுவில்... என பல இடங்களுக்கும் பொருத்தமான வாசகம் இது... sacrifice என்ற ஆங்கில வார்த்தையை தியாகம் என்று தமிழ்படுத்துவதை காட்டிலும் அனுசரித்துபோதல், விட்டுக்கொடுத்தல் போன்ற தமிழாக்கமே பொருத்தமாக இருக்கும் என்பது சாமான்யன் கருத்து...

இந்த அனுசரித்தலின்/விட்டுக்கொடுத்தலின் காரணமாக நமது தனித்தன்மையை சில நேரங்களில் இழக்க நேரிடலாம்.. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு பயணித்தால் மட்டுமே நாம் குழு உறுப்பினராக தொடர முடியும்...

விளையாட்டுகுழுவில், நிறுவன பணியாளர் குழுவில், அரசியல் குழுவில்.. என பல குழுக்களில் இருக்கும்போது “எங்கே நம்மை குழுவில் இருந்து நீக்கி விடுவார்களோ” என்ற பயமோ, கிடைக்கும் சம்பளமோ, கிடைக்கும் புகழோ, கிடைக்கும் பதவியோ... அப்படி ஒரு அனுசரிக்கும் மனநிலையை நம்முள் விதைக்கிறது...
குடும்பம் என்பதும் ஒரு குழுதான்... குடும்பத்தில் இருக்கும் கணவன்-மனைவி-மாமியார்-மாமனார்-நாத்தனார்-ஓரகத்தி-கொழுந்தன்-மைத்துனன் என பல உறுப்பினர்கள் அடங்கிய குழுதான் குடும்பம் என்பதும்.. இதில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமலும், அனுசரித்துபோகாமலும், தனித்தன்மையை காப்பாற்றிவிட நினைத்து மற்றவர்களை காயப்படுத்துவதாலும் எத்தனை குழும்ப உறவுகள் விரிசலடைந்து கிடக்கின்றன?? இதில் வேடிக்கையான ஒரு விஷயம் என்ன தெரியுமா... இப்படி விரிசலடந்த உறவுகளுக்கு காரணமாகும் பல சமகால யுவ-யுவதிகளில் நிறையபேர் நிறுவன குழுக்களிலோ – அரசியல் - மகளிர் – விளையாட்டு குழுக்களில் உறுப்பினர்கள்..
யாரோ சில-பலருடன் இணைந்து குழுவாக செயல்படும்போது தன்னைத்தானே சாக்ரிபைஸ் செய்துகொள்ள தயாராகும் இவர்களால் ஏன் தன் உறவினர்களுடன், தன் மனைவியுடன், தன் கணவருடன் சாக்ரிபைஸ் செய்ய முடியவில்லை...??

உறவுகளை விட பணம்/பதவி/புகழ் இவைகள்தான் உயர்வானது என்ற விதை ஆழ்மனதில் ஒன்றப்பட்டு வேரோடி வளர்ந்ததன் கோர விளைவே இந்த சிதைதல்... இந்த சிதைவு மேலும் மேலும் வலுவாகி மொத்த மானுட கட்டமைப்பை உடைக்கும் முன்பாக விழித்துக்கொள்வது நல்லது...

கணவனுடன், மனைவியுடன், உறவுகளுடன் அவர்கள் குறைகளை முடிந்தால் நிறைகளாக்கி, இல்லை என்றால் அப்படியே ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்லுங்கள்.. நாளடைவில் எல்லாமே நிறைகளாக தெரியும்...

மியா ஹாம்ம் அவர்கள் நீளமாக சொன்னதை நம் முன்னோர்கள் நான்கே வார்த்தைகளில் நறுக்கென்று சொல்லிவிட்டார்கள்..

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..”

ஒரு மானுட குமுறல்

Go..Grab your Sexual Rights..
Image may contain: one or more people
ஓத்தா...ஒம்மால...பாடு...

எத்தன பொண்ணுங்களால இந்த வார்த்தைகள வாய்விட்டு சொல்ல முடியும் ?

சொல்ல முடிஞ்சாலும், அந்த வார்த்தைக்கே உரிய வீரியத்தோட சொல்ல முடியுமா ?

எத்தன பொண்ணுங்களால A ஜோக்க கூச்சமில்லாம ஜோக்காவே ரசிச்சி சொல்ல முடியும் ?

எத்தன பொண்ணுங்களால நண்பர்கள் மத்தியில ஒரு தோழன் ரெட்டை அர்த்தத்துல காமெடி பண்ணா, அது புரிஞ்சதா காமிச்சிக்க முடியும்?

புரிஞ்சதா காமிச்சாலும், பசங்க எல்லாரும் சிரிக்குற மாதிரி 'கெக்க பெக்க'ன்னு சிரிக்க முடியுமா ?

எத்தன பொண்ணுங்க ரொமான்ஸ் அல்லது செக்ஸ் வீடியோஸ் பாப்பீங்க ?

பாத்ததுக்கப்புறம் இதெல்லாம் தப்புங்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லாம இருக்க முடியுமா ?

எத்தன பொண்ணுங்க காதலன் அல்லது கணவன் கிட்ட "உன் மேல என்னனு தெரியல இன்னைக்கு ரொம்ப ஆசையா இருக்குடா"ன்னு சொல்லுவீங்க ?

சொன்னதும் "அடியேய்..உனக்கு எப்பப்பாரு இதே யோசனை தானா"ன்னு பதில் வந்தா "ஆமா.. எப்போவும் உன் மேல் இதே யோசனை தான்டா என் கிறுக்கா"னு அதே ஆசையோடவே சொல்ல முடியுமா ?

பதில் எதுவும் சொல்லாட்டியும், வாய்விட்டு ஆசைய சொன்னதுக்காக குற்ற உணர்வு இல்லாம, 'இந்த மாதிரி விஷயத்த நா முதல்லஆரம்பிக்க கூடாதோ'ன்னு யோசிக்காம இருக்க முடியுமா ?

இதுல நெறைய கேள்விகளுக்கு மாட்டேன், முடியாதுன்னு பதில் சொன்னிங்கனா, இயற்கையா பெண்ணுக்கு இருக்குற அதீத காம உணர்ச்சிய நீங்களே கொஞ்ச கொஞ்சமா கம்மி பண்ணிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்.

இல்லாத 'கற்பு'ன்னு ஒண்ண பொண்ணுங்க மண்டைல விதைக்குறதுக்கும் அப்படி ஒண்ணு இல்லவே இல்லன்னு ஆணித்தரமா தெரிஞ்சாலும் அதுலயிருந்து வெளிய வர முடியாதபடி சமூகத்த கட்டமைக்குறதுக்கும் எத்தன சீதை கதைகள், எத்தன இதிகாசங்கள், எத்தன கலாச்சார காவியங்கள், எத்தன நூற்றாண்டுகள் ஆகிருக்கும்னு தெரியல. அந்த mental lockக ஒடச்சிட்டு வெளிய வரவே முடியாத நிலைமையில, இன்னொரு mental lock தயாராகிட்டு இருக்குன்னு தெரியுமா ?

ஒரு பொண்ண எல்லா விஷயத்துலயும் ஆண் அடக்கிட்டே வந்தாலும், கலவியில அவளோட உச்சநிலை இன்பத்த முழுசா குடுக்க முடியாம, அவளோட திருப்தியின்மைனால ஆண்மையின் பெருமைய கொண்டாட முடியாம, மாற்றான் மேலுள்ள அவளோட ஆசைய பொறுத்துக்கவும் முடியாம, கற்புக்கு செஞ்ச மாதிரியே அவளோட காம உணர்ச்சிகள அவள வச்சே மட்டுப்படுத்த உருவாக்குன பூட்டு தான் 'குடும்ப பொண்ணு' கான்செப்ட்.

கெட்ட வார்த்தைலாம் உனக்குத் தெரியுமா ?

என்னது பேச வேற செய்வீயா ?!!

அந்த A ஜோக் எனக்கே புரியல, உனக்கு எப்படி புரிஞ்சது ?

என்ன இந்தப் பொண்ணு A ஜோக்குக்கு இப்படி பையன் மாதிரி சிரிக்குறா ?!!

"இவ ஹர ஹர மஹாதேவக்கி என்ன, சமையல் மந்திரமே பாத்திருப்பாடா"

என்ன சொன்ன, செக்ஸ் வீடியோஸ் பாப்பியா..உனக்கே அசிங்கமா இருக்காதா இதுலாம் பாக்குறமேன்னு ??

அடியேய்..எப்பப்பாரு உனக்கு இதே யோசனை தானா?

நீ எல்லாம் ஒரு குடும்ப பொண்ணா..

குடும்ப பொண்ணுனா இப்டிலாம் பேசவே மாட்டாங்க. புருசன் கூப்டதும் வெக்கம் மட்டும் தான் படுவாங்க. அவங்களுக்கு திருப்தி இல்லனாலும் அத வெளிப்படுத்தாம, கணவனோட சந்தோசத்துக்காக "நீங்க என்ன ரொம்ப சந்தோசமா வச்சிருக்கீங்க"ன்னு தான் சொல்லுவாங்க. உன்ன மாதிரி இவ்ளோ கேவலமா இருக்க மாட்டாங்க. இப்படி பேசுறியே முதல்ல நீயெல்லாம் ஒரு பொண்ணா ??

இந்த மாதிரி பல வருசமா சொல்லி சொல்லித் தான் நம்ம பாட்டி, அம்மா எல்லாம் குடும்ப குத்துவிளக்காவே இருந்தாங்க.. இருக்கவும் செய்றாங்க.

அவங்கள விடுங்க இந்தக் காலத்துப் பொண்ணுங்களே "குடும்பத்துக்கு ஏத்தப் பொண்ணு"னு சொன்னா சந்தோசமாவும், மேல உள்ள எதாவது ஒரு கேள்வி இல்லனா கேலிய சந்திச்சா அசிங்கமாவும் தான நெனைக்குறாங்க.

இந்த mental lockக உடைக்குறது கண்டிப்பா ஒரே நாளுல சாத்தியம் கெடையாது. 'என்னோட பாலியல் உணர்வு இயற்கை எனக்குக் குடுத்த வரம். இத ஏன் நான் மட்டுப்படுத்தணும். என் புருசன்ட இத கேக்குறதுல என்ன அசிங்கம் இருக்கு. ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்னு பாட்டே பாடுறங்க, நா என்னோட ஆசைய சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்களா என்ன' - இப்படி நமக்குள்ளேயே நெறைய கேள்விக் கேட்டு, சில பதில்கள் அவமானமா உணர வச்சாலும் மறுபடியும் யோசிச்சு, சமயம் பாத்து புரிய வச்சி, இப்பத்துலயிருந்தே கொஞ்ச கொஞ்சமா வெளிய வர முயற்சி செய்வோம் தோழிகளே.

Try to break your mental lock and grab your sexual rights my dear women


மணி மண்டபம்

மணிமண்டபம் என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம்..
தகவல் தொடர்பு சாதனங்களை வரிசைப்படுத்த சொன்னால்.. போன், இ.மெயில், சமூக வலைத்தளங்கள் , கடிதங்கள், தந்தி என வரிசைப்படுத்தலாம்..


இன்னும் கொஞ்சம் யோசித்தால்... சங்கேத சப்தங்கள்.. கலங்கரை விளக்கம், ஒளிக்கற்றைகள்..
வாகனங்களில் இருக்கும் ஹார்ன், இண்டிகேட்டர்.. போன்றவை.. இன்னும் பின்னோக்கி பயணித்தால்... ஒற்றர்கள், புறா, கழுகு போன்றவை...
இவைகள் எல்லாமே ஒரு செய்தியை வேறொருவருக்கு கொண்டு செல்ல (சொல்ல ) பயன்படுத்தப்படுபவை..


அப்படியான ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் மணிமண்டபம்...

Image may contain: plant, sky, tree and outdoor
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை தொடங்கிவிட்டதை நாற்பது மைல் தொலைவில் இருக்கும் பாளையங்கோட்டை பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அறிவிக்க
அப்போது இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அதாவது கோயிலில் பூஜை தொடங்கும் நேரத்தில் அங்கிருக்கும் மணி ஒலிக்கும்.. அந்த சப்தம் கேட்கும் தூரத்தில் இருக்கும் இன்னொரு மணி உடனே ஒலிக்கச்செய்யப்படும்... இப்படியாக மணியோசை கேட்கும் தூரத்தில் இருக்கும் அடுத்தடுத்த மணிகள் ஒலிக்க.... “ஒலிவேகத்தில்” பூஜை தொடங்கிவிட்ட தகவல் மன்னரின் காதுகளை எட்டும்... அவரும் உடனே அரண்மனையில் பூஜையை தொடங்குவார்...


மணி கட்டப்பட்ட (மணிக்காக கட்டப்பட்ட) மண்டபங்கள் “மணி மண்டபம்”..

சமகாலத்தில் உள்ளூர் கவிஞர்கள்/ஜாதி தலைவர்கள் முதல்... இங்கிலாந்து பென்னிகுக் வரை ஒரு நினைவு மண்டபத்தை கட்டி அதற்கு “மணிமண்டபம்” என்று எதற்காக பெயரிட்டார்கள் என்பதே சாமான்யனின் சந்தேகம்...
விபரமறிந்தவர்கள் பகிர்தல் நலம்...!!! 

தோல்வியடைந்த மாற்று சிந்தனை

இன்று நம் வாழ்க்கை முறைக்கு உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களின் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி வரலாறு இருக்கும்.. மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உபயோகத்திற்கு உகந்ததல்ல என ஒதுக்கப்பட்டிருக்கும்.. உதாரணமாக... சிகரெட் குடை, ஒற்றை சக்கர வாகனம் போன்றவை..


இதில் சிகரெட் குடை என்பது சிகரெட் ஹோல்டரின் முன்பகுதியில் சிகரெட் நட்டு வைக்கப்பட்டிருக்கும்.. அதற்கு மேலே ஒரு குடை இருக்கும். ம
ழை காலத்தில் சிகரெட் நனைந்து விடாமல் பற்றவைக்க இப்படி 
ஒரு கண்டுபிடிப்பு
 Image may contain: one or more people
ஒற்றை சக்கர வாகனம் என்பது.. ஒரு பெரிய சக்கரத்தின் நடுவில் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணிக்கும் வாகனம்.. இது பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததல்ல என்று ஒதுக்கப்பட்டது...

No automatic alt text available.
அதே நேரம் சில ஆராய்ச்சி தவறான வழியில் சென்றதால்... உருவான பொருள் மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்த கதைகளும் உண்டு...

நிற்க... நாம் விஷயத்திற்கு வரலாம்..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் 175 ஏக்கர் பரப்புள்ள சில்வர் லேக் என்ற நீர்த்தேக்கத்தில் சுமார் 96 மில்லியன் பிளாஸ்டிக் பந்துகள் கொட்டப்பட்டன.... இந்த பந்துகள் சம அளவில் பரவி நீர் தேக்கத்தின் மேல் மட்டத்தை மூடி விட்டதால்... நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டது... மிகக்கடுமையான கோடை காலத்தில் நீர் சேமிப்பை கையாள இந்த முறையை அவர்கள் செய்தார்கள்... இது ஒரு விஞ்ஞான யுக்தி...

அப்படியான ஒரு முயற்சிதான் தமிழக அமைச்சர் திரு செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகளால் மிக சமீபத்தில் வைகை அணையில் சோதனை செய்யப்பட்டது.. எப்போதும் மிக குறைந்த செலவில் நிறைவான பயனை எதிர்பார்க்கும் சமயோசித இந்திய மூளையின் சிந்தனைதான் இது...


இது ஒரு கிண்டல் செய்யப்பட வேண்டிய விஷயமே இல்லை... ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்குமாயின் எத்தனை ஆயிரம் கன அடி நீர் சேமிக்கப்படும் தெரியுமா??

பிளாஸ்டிக் பந்துகள் உருளையாக இருப்பதால் ஒன்றின் மீது ஒன்றாக ஏற முடியாது... ஆனால் தெர்மோகோல் அட்டைகள் பரந்து தட்டையாக இருப்பதால் காற்றில் பறந்தும் ஒன்றின் மீது ஒன்றாக ஏறியும் விட்டன...

Image may contain: outdoor
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் 175 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்த்தேக்கத்தை ஆவியாதலில் இருந்து பாதுகாக்க கோடிகளில் செலவழிக்க முடியும்.. ஆனால்.. நாம் அப்படி அல்ல.... எப்போதுமே நம்மிடம் இருப்பதை வைத்து குறைந்த செலவில் பலனடையவே நாம் முயற்ச்சிப்போம்... அப்படியான ஒரு முயற்சிதான் அந்த அதிகாரிகளும் –அமைச்சரும் செய்தது...

வழக்கம் போல ஒரு கேவலமான விஷயத்தை பரபரப்பாக்கி காசு பார்க்கும் ஊடகங்கள்.. இந்த ஒரு நல்ல முயற்சியை கிண்டல் செய்தும்- கேலி செய்தும் செய்தியாக்கி விட்டன...

எப்போதும் போல ஊடகங்களை பின்பற்றியே ஆமாம் சாமி போட்டு பழக்கப்பட்ட நாம் இப்போது மட்டும் யோசிக்க போகிறோமா என்ன??

நிச்சயமாக இந்த அறிய சிந்தனையை மேலும் மெருகேற்றி மேம்படுத்தி செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றியை எட்ட முடியும்... அமெரிக்கர்கள் கொடிகளில் செலவு செய்து நடைமுறை படுத்திய விஷயத்த.. சில லட்சங்களிலேயே நம்மால் செய்துகாட்ட முடியும்..

CHILDREN OF HEAVEN

Image may contain: 2 people, people standing and outdoor
ஈரானின் தலைநகர்... டெஹ்ரானின் ஒரு ஏழ்மை நிறைந்த பகுதி... தங்கையின் (சாரா ) கிழிந்துபோன காலணியை தைக்க கொண்டுபோகும் அண்ணன்(அலி) .. அதை தைத்து வாங்கி ஒரு இடத்தில் மறைவாய் வைத்துவிட்டு, வேறு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வந்து பார்க்கையில் அந்த காலனி காணாமல் போய் விடுகிறது.... 



ஏழை தந்தையுடன் சொல்லி வேறு வாங்கித்தர சொன்னால் அடிப்பாரோ என்று பயந்த அந்த சிறுவர்கள், பள்ளிக்கூடம் செல்வதற்காக அண்ணனின் ஒரே காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு போவது வலியின் உச்சம்...
காணாமல் போன காலணியை உடன் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்து வர... அவளிடம் நேரடியாக கேட்காமல் அவளை பின் தொடர்ந்து அவளது வீடுவரை செல்கிறாள்.. சாரா...! காலணியை பறிகொடுத்த சிறுமி... அங்கு.. கண்பார்வை இல்லாத அவளின் தகப்பனின் நிலைகண்ட இந்த பிஞ்சு, அந்த காலணியை பற்றி எதுவும் கேட்காமல் திரும்பி விடுகிறது...



வேறொருநாள்... தான் தொலைத்த காலணியை அணிந்துவரும் சிறுமி, வேறொரு புதிய காலணியை அணிந்து வர... இப்போதாவது தன்னுடைய காலணி கிடைத்துவிடாதா.... என்ற ஆவலில் அந்த சிறுமியிடம்..”எங்கே உனது பழைய காலணிகள்..” என கேட்க... அவற்றை தன் தாயார் பழைய பொருட்கள் வாங்குபரிடம் கொடுத்துவிட்டதாய் சொல்கையில் நம் கதாநாயகி சிறுமி சாராவின் கண்களில் தெரியும் ஏமாற்றம் எமனையும் கலங்கவைக்கும்...



இப்படியான நிலையில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால் இரண்டாம் பரிசாக ஒரு புதிய காலணி கிடைக்கும் என்ற தகவல் கிடைத்த உடன், தங்கை “அண்ணா... எப்படியாவது இரண்டாம் பரிசு வாங்கி விடு..” என வேண்டுகோள் வைக்க.... நம் கதாநாயக சிறுவனும் இரண்டாம் பரிசை குறிவைத்து களமிறங்குகிறான்...

வெற்றியாளர்கள் வரிசையில் மூன்றாவதாக வந்துகொண்டிருக்கையில்.. நான்காவதாக வரும் வேறொரு சிறுவன் வேண்டுமென்றே காலை இடறிவிட.... விழுந்துவிடுபவனை பின்னால் வருபவர்கள் எல்லாம் முந்தி விடுகிறார்கள்... தங்கையின் தொலைந்துபோன காலணி... ஒருஜோடி காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடும் வேதனை.. எல்லாம் கண்முன்னே நிழலாட... வெறிகொண்டு எழுந்து ஓடுபவன்.. எல்லோரையும் முந்தி சென்று முதலாவதாய் வெற்றிக்கோட்டை தொடுகிறான்... பள்ளி ஆசிரியர்கள்.. சக மாணவர்கள்... போட்டி நடத்தியவர்கள் எல்லோரும் கொண்டாட.... ஆனால் இரண்டாம் பரிசாக காலணியை குறிவைத்து ஓடிய நம் கதாநாயக சிறுவனால்.. முதலாவதாக பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்கவோ.. கொண்டாடவோ முடியவில்லை.... கோப்பையுடன் வீடுதிரும்புபவன் வீட்டிற்குள் செல்லாமல் வெகுவாக தேய்ந்து கிழிந்த தன்னுடைய பழைய காலணியை கழற்றிவிட்டு புண்பட்ட காலை நீருக்குள் வைத்தபடி புழுங்குவதாய் கதை முடிகிறது..

இரண்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை எடுக்கமுடியுமா... என ஆச்சர்யப்பட வைக்கிறது...

(நிற்க... நம்மூர் காக்காமுட்டையும் இந்த ரகம் தான் என்பவர்கள் கருத்தும் ஏற்கப்படுகிறதுஆனாலும்.. இந்த படம் வெளியானது 1999 – ஜனவரி 22... ஆகவே நம்மூர் இயக்குனர் இந்த படத்தை கண்டு.. அதனை மாற்றி யோசித்து கூட காக்காமுட்டையை எடுத்திருக்கலாம் )


மாஜித் மாஜிதி அவர்கள் எழுதி இயக்கி இருக்கும் இந்த பெர்சிய மொழி திரைப்படம் ஒரு நெகிழ்வின் உச்சம்... இணையத்தில் பார்க்க கிடைக்கிறது.... நீங்களும் பார்க்கலாமே...

(பெர்சிய மொழி எல்லாம் உனக்கு தெரியுமா என கேட்கவேண்டாம்... உணர்வுகளை உணரவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்களுக்கு மொழிகள் அனாவசியம்..)

Need NEET

No automatic alt text available.
எனக்கு தெரிந்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிபுரிய வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளில் இருக்க கூடிய உடல்நலம் சார்ந்த அமைச்சகத்தில் (ministry Of Health / Supreme Council Of Health) பதிவு செய்து அவர்கள் நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று உரிமம் (License) பெற வேண்டும்.வேறு எந்த நாடுகளில் தங்க பதக்கத்துடன் மருத்துவ பட்டம் பெற்றிருந்தாலும் கூட இந்த தகுதித்தேர்வில் வெற்றிபெற வில்லை என்றால் அவர்கள் இந்த நாடுகளில் மருத்துவம் சார்ந்த தொழில்களில் (மருத்துவர், செவிலியர்,மருத்துவ தொடர்புடைய மற்ற வேலைகள்) ஈடுபட முடியாது..


மேற்கத்திய, தெற்காசிய நாடுகளிலும் இந்த வழக்கம் தான் பின்பற்றப்படும் என நம்புகிறேன்.. (அதுபற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை )
இந்தியாவில் மருத்துவம் பயில்வதற்கான தகுதியை நிர்ணயிக்க எல்லோருக்கும் பொதுவான ஒரு தேர்வை நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவெடுத்தால்.... மற்ற அனைத்து மாநில அரசுகளும் மக்களும் அந்த போட்டிக்கு தயாராக இருக்கும் நிலையில்.. தமிழக ஆட்சியாளர்களும்-அரசியல்வாதிகளும் மிக மூர்க்கமாய் எதிர்க்கிறார்கள்..


ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை சற்று யோசித்து ஐம்பது ஆண்டுகால அரசியல் நிகழ்வுகளை கிளறிப்பார்த்தால்... தமிழக மாணவர்களை எப்படி இந்திய மாணவர்களுடன் போட்டியிட முடியாத/ பயப்படும் அளவிற்கு மழுங்கடித்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது...

ஒடுக்கப்பட்ட உங்களை தூக்கி விடுகிறேன் என்று சொல்லி சொல்லியே அவர்களை குனியவைத்து ஆட்சி பீடத்திர்ல் ஏறியவர்கள்... நிஜமாகவே திறமையானவர்களை ஜாதீய காரணம் காட்டி காலை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது மனச்சாட்சியுடன்- தொலைநோக்கு பார்வையுடன்- நியாயமாக யோசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்...

ஒரு சமூகத்தை உயர்த்தும் முறை என்பது அவர்களை விட முன்னேறிய சமூகத்துடன் போட்டியிடும் அளவிற்கு அவர்களின் திறமையை வளர்ப்பதுதானே அன்றி... முன்னேறியவனை கீழே இழுத்து விட்டு எல்லோரும் சமம் என்று சொல்வது அல்ல... அப்படி கடந்த ஐம்பது வருடங்களாய் குனியவைத்து குதிரை ஏறியவர்களால் ... இன்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் அகில இந்திய போட்டியாளர்களை சந்திக்க தயங்குகிறார்கள்.... அப்படி அவர்களை சந்திக்க போட்டியாளர்கள் தயாராக இருந்தாலும் கூட..... ஐம்பது வருடமாய் நாம் இவர்களை மழுங்கடித்திருப்பதை கண்டுள்(கொல்)வார்களோ என்ற பயத்தில்.... “எங்களுக்கு அந்த போட்டியில் இருந்து விலக்கு அளித்து நேரடியாக பரிசினை வழங்கிட வேண்டும் “ என்று ஒரு கேவலமான கோரிக்கையை முன்வைத்து நாடகமாடுகிறார்கள்...


“இது உங்களுக்கு அவமானமாக இல்லையா.... உங்கள் மாணவர்கள் தகுதி இவ்வளவுதானா...?” என்று உயர்நீதிமன்றம் காறி உமிழ்ந்திருப்பது ஒரு வரலாற்று கேவலம்...

இடஒதுக்கீட்டில் பெற்றுக்கொடுத்த வெற்றிப்பழம் இப்போது கசக்கிறது...அப்படியானால்... இட ஒதுக்கீடே கூடாதா?? அவர்களை முன்னேற்றும் வழிதான் என்ன???

நிச்சயம் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.... காலம் காலமாய் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் மரபணுக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது... அதற்கு அவர்களை உற்சாகமூட்டும் நிறைய வசதிகளை செய்து கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால்... அந்த சலுகைகள் பயிற்சி காலத்தில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமே தவிர... போட்டிகளில் அல்ல... என்பதை உணர வேண்டும்... ஆட்சியாளர்களின் நோக்கம் அந்த ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளே அன்றி... அவர்களின் முன்னேற்றம் அல்ல....


இப்போது அவர்கள் சொல்லிக்கொள்ளும் இந்த முன்னேற்றம் வெறும் எலும்பு துண்டு... இந்த எலும்பு துண்டை வைத்துக்கொண்டு உள்ளூரில் உதார் விடலாம்...
அகில இந்திய போட்டியாளர்களையே சமாளிக்க பயப்படும் இவர்கள் எப்படி உலக போட்டியாளர்களை எதிர்கொள்வார்கள்??

இனியாவது அந்த அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை கண்டுகொள்வார்களா தமிழக மக்கள்????