திங்கள், 14 ஆகஸ்ட், 2017

அடைக்கோழிகள்

கிலோ கடலை புண்ணாக்கு கொடு மரைக்காயரே.." என்பார் அப்பா....

இருவரும் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டே சில கதைகளை பேசிவிட்டுத்தான் பிறகு அவர் எடை போட்டுக்கொடுப்பார்..... அப்பாவும் வாங்கிக்கொண்டு நகர்வார்....

பிறகு அப்பா காலமாகி விட்டார்.... நெற்பயிர் விவசாயம் தண்ணீர் பற்றாக்குறை- கூலியாள் பற்றாக்குறை- என்னால் அங்கு இருந்து விவசாயத்தை தொடரமுடியா நிலை என பல்வேறு காரணிகளால்... நெல் நடவு செய்த வயல்கள் எல்லாம் தென்னந்தோப்புகளாக மாறிவிட்டன....
இப்போது .. மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் ஒரே ஒரு மாடு இருக்கிறது....

நான் ஊருக்கு போகும் நேரத்தில் அரிசி வாங்கவும், அந்த ஒரு பசுமாட்டிற்கு புண்ணாக்கு, தவிடு வாங்கவும் அதே பூரான் மரைக்காயர் கடைக்கு செல்வது வழக்கம்....

இப்போது "வா நடேசு மகனே..." என்று அதே அன்புடன் அழைத்து நலம் விசாரித்து, தந்தையுடனான சில நினைவுகளை அசை போட்டு.... அப்புறம் நம் தேவைக்கு கேட்பதை கொடுப்பார்...

தலைமுறைகள் கடந்து வரும் இந்த நட்பை- உறவை.... ஊடகங்களால் சிதைக்க முடியாது....
Image may contain: 1 person, food
பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றுகூட தெரியாத வெற்று அடைகோழிகள்.... இந்தியா முழுக்க இந்து முஸ்லிம் கலவரம் என்பதை போல நம்பிக்கொண்டு "மாட்டுக்கறி தின்பவனை கொன்று விடுகிறார்களாம் " என்பதுபோல சமூக ஊடகங்களில் ஆக்ரோஷமாய் ஸ்டேடஸ் போடுவதை பார்த்து சிரிப்புதான் வருகிறது....

எங்கள் ஊரில் முட்டையிட்டு முடிந்து வெகுகாலம் வரை தவிட்டு சாக்கில் ஓடிப்போய் உட்கார்ந்துகொள்ளும் செல் பிடித்த வெற்று அடைக்கோழிகளை சாணியை கரைத்து அதில் முக்கி துரத்தி அடிப்பார்கள்...

குறிப்பு:- புகைப்படத்தில் இருப்பவர் அல்ல கட்டுரையில் வரும் பூரான் மரைக்காயர்
புகைப்படம் : இணையத்தில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக