ஞாயிறு, 21 அக்டோபர், 2018

"கழுவி ஊற்றுதல்"

இந்த பதிவை உங்களால் படிக்காமல் கடக்க முடியாது.... ஆனால்.. படித்தவர்கள் எல்லோருமே விருப்பக்குறி விடுவார்களா என்றால்.... நிச்சயமாய் சொல்ல முடியும்.... அதற்கு வாய்ப்பே இல்லை...

ஆம்..... அவர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள்.... இப்படி எல்லாம் பேசமாட்டோம்... இந்த செந்தில் கே நடேசனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை... பொது இடத்தில் எப்படி எழுவதென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத இறுமாப்பு மிக்க முட்டாள்...." என்ற போலி முகமூடி அணிந்து, நல்லது சொல்பவனை குற்றம் சொல்லிக்கொண்டே எல்லாவிதமான ஒழுக்க கேடுகளையும் ரகசியமாய் செய்பவர்கள்....

இந்த பதிவிற்கு ஒரே ஒரு விருப்பக்குறி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..... ஏனென்றால்... 10-15 விருப்பக்குறி கூட இல்லாவிட்டால் நம் பிரபலத்தன்மை மீது சந்தேகம் வந்துவிடுமோ.. என்ற எந்த விதமான இமேஜ் ஃபிரேமிற்குள்ளும் என்னை நான் அடைத்துக்கொண்டதே இல்லை...

நான் சில ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன்.... இந்த சொல்லாடலின் ஆரிஜின் தெரியாமல்.. அதன் முழு உள்ளர்த்தமும் தெரியாமல் பல அப்பாவிகள் இந்த வார்த்தைகளை மிகவும் சாதாரணமாய் உச்சரிக்கிறார்கள்..... என்று...

"கழுவி ஊத்துறது....." என்பதுதான் அது.... இதன் ஆரிஜின் சென்னை பகுதியை சுற்றி உள்ள நாலாந்தர குப்பங்கள்.... மனிதநாகரீகமோ, கல்வி அறிவோ , இங்கிதமோ தெரியாத பெண் தன்மை (குணங்கள்) கொஞ்சம் கூட இல்லாத பெண்கள் தான் இந்த வார்த்தையின் உற்பத்தியாளர்கள்..... யாருடனாவது சண்டை போடும்பொழுது "கூதி கழுவி அவன் மூஞ்சில ஊத்துடி...." " ங்கோத்தா.... கூதி கழுவி மூஞ்சில ஊத்திடுவேன்..." போன்ற வார்த்தைகளால் எதிராளியை அவமானப்படுத்துவார்கள்...




ஆனால்... இந்த "கழுவி ஊற்றுதல்" என்பது மிக சர்வசாதாரண புழக்கத்திற்கு வந்துவிட்ட நல்ல வார்த்தையாகி விட்டிருக்கிறது....

பெற்றோர்கள், அக்கம்பக்கத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை கொண்டே ஒரு குழந்தை பேசக்கற்றுக்கொள்கிறது.... அந்த வார்த்தைகளையே அந்த குழந்தைகளும் பேச ஆரம்பிக்கிறது... ஆகவே குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போட கூடாது..... அநாகரீக வார்த்தைகளை உச்சரிக்க கூடாது.. என்றெல்லாம் உளவியல் நிபுணர்களும், குழைந்தைகள் நல ஆலோசகர்களும் கழுதையாய் காத்துக்கொண்டிருக்கிறார்... ஆனால்.. சமூக நகர்வுகளில் அதற்கான வாய்ப்பு மங்கிக்கொண்டே வருகிறது..... நம் குழந்தைகள் முன்பாக நாம் பேசாமல் தவிர்க்கலாம்.. ஆனால்... சமூகத்தின் பல வெளிச்ச விஷயங்கள் இம்மாதிரிதான் சத்தமாக உச்ச்சரித்துக்கொண்டிருக்கிறது..... இந்த வார்த்தைகளை கேட்க விடாமல் நம்மால் குழந்தைகளின் காதுகளை பொத்தி விட முடியாது...

சமீபத்தில் வெளியான "வடசென்னை" என்றொரு திரைப்படத்தில் இம்மாதிரியான வார்த்தைகள் மிக சாதாரணமாய் புழங்ககப்படுகிறது.... கதாநாயகனை பார்த்து "மொக்க கூதி" என்கிறார் கதாநாயகி... "ங்கொம்மால" என்று அடிக்கடி கூவுகிறார்கள் பல கதாபாத்திரங்கள்....

இந்த படங்களை தியேட்டர்களிலோ, டவுன்லோடு செய்தோ பார்த்தே ஆகவேண்டும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம் நாம்.... அப்படியே இதை தியேட்டரிலோ, இணையத்திலோ பார்க்காமல் தவிர்த்தாலும்... "உலகத்தொலைக்காட்ச்சிகளில் முதல் முறையாக.." என்று ராகமாய் கூவி அதை திரையிட்டு காட்டக்கூடிய தொல்லைக்காட்சி சேனல்களை நாம் நம் படுக்கை அறை வரை கொண்டு வந்துவிட்டோம்... இனிமேல் தடுக்கவே முடியாது...

எதார்த்தம், சுதந்திரம், இயல்பு, புரட்சி என்று பல சொல்லாடல்களும், வெளிச்சங்களும் சமூக சீரழிவுகளை முன்னெடுத்து அழிவை நோக்கி நம்மை நகர்த்துவதற்கு நாமும் ஆதரவளித்து கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்...

என்ன செய்ய.... என்ன செய்ய.. என்ன செய்ய... கேள்விகள் மட்டுமே நம் போன்ற சாமானியர்களை குடைந்துகொண்டே இருக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக