சனி, 20 ஜூன், 2015

காற்று வியாபாரம்.....

மனித உடலை இயக்கம் தலையாய உறுப்பான மூளையை செயல்படவைப்பது ஆக்ஸிஜன் வாயு .. வளிமண்டலத்தில் 19.5 முதல் 23.5 விழுக்காடு (%) ஆக்ஸிஜன் கலந்திருக்கிறது. நமது நுரையீரல் ,நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை தனியே பிரித்து இரத்தத்தின் வழியாக மூளைக்கு அனுப்புகிறது.. (இதை பற்றிய விரிவான தகவல்களுக்கு ஒரு மருத்துவரையோ- அல்லது ஒரு உயிர் வேதியல் வல்லுனரையோ (BIO -CHEMIST ) தொடர்புகொள்ளுதல் நலம்..)



பூமியின் அட்ச ரேகைகளிலும் தீர்க்க ரேகைகளிலும் கூட கதிரியக்கத்தை கலந்துவிட்டு காற்றை மாசாக்கி வைத்திருக்கும் மானுட விஞ்ஞானம் மனித நுரையீரல் ஆக்ஸிஜனை பிரித்தெடுப்பதையே ஒரு சவாலாக்கி வைத்திருக்கிறது... கரியமில வாயுக்கள் நிரம்பிய வளிமண்டல காற்றை சுவாசித்தாலே போதும்.. வேறு எந்த கெட்டப்பழக்கமுமே தேவை இல்லை.. எல்லா நோய்களும் வருவதற்கான சாத்திய கூறுகள் நிரம்பி வழிகின்றன..


அதிகாலையில் 3 லிருந்து 5 மணிவரை (பிரம்ம முஹூர்த்தம்) காற்றில் இந்த ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும்.. அதனாலேயே நம் முன்னோர்கள் "பிராணயாமம்" செய்ய கற்று தந்தார்கள்... காற்று மாசுபடாத காலத்திலேயே ஆக்ஸிஜனின் அதிகபட்ச உபயோகம் மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைக்கும் என்று கண்டறிந்திருந்த முன்னோர்கள் நீண்ட , ஆரோக்கியமான வாழ்வை பெற்று வந்திருக்கின்றனர்..

காற்று மாசுபட்டு நுரையீரல் ஆக்ஸிஜனை கண்டறியவே சிரமப்படும் இந்த காலத்தில் வசிப்பவர்கள் நாம்.. நம்மால் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்?


இதற்காகவே மேலை நாடுகளில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கத்தரும் மையங்கள் வியாபார நோக்கில் செயல்படுகின்றன...இந்த வணிக மையங்களில் ஆக்ஸிஜனுடன் நறுமணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு அமெரிக்க டாலர் என்ற முறையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் என்ற அளவில் வெற்றிகரமாக செயல் படுகிறது..


இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இதற்கான வணிக வாய்ப்பு கொட்டிக்கிடப்பதாகவே தெரிகிறது... வாகனங்கள் மற்றும் குளிர்சாதனங்களால் கரியமில வாயு கலந்துவிட்ட காற்றை சுவாசித்தலும், தொடர் வேலை பளுவும் கூடி ஒரு வித மனோ அழுத்தத்தில் துவண்டுகொண்டிக்கும் நகரத்து மாந்தர்கள் இதுபோன்ற நிலையங்களை நிச்சயம் அணுகுவார்கள்.. உயர் வட்ட சம்பளக்காரர்களுக்கும் , தொழில் முனைவோருக்கும் இதுபோன்ற ஆக்ஸிஜன் மையங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே திகழும்.
நிச்சயம் இந்தியாவில் இதற்கான உற்பத்தி செலவும் மிக குறைவு.. ஆகவே இதனை குறைந்த விலையிலும் கூட வழங்க முடியும்...


இதெல்லாம் பணக்காரர்களுக்கு... நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்வது..?? அதற்கும் வழி இருக்கிறது...
சில-பல மரங்களை நடுவோம்... தொட்டிச்செடிகளை வளர்ப்போம்... தாவரங்கள் பகலில் நமக்கு தேவை இல்லாத, நமக்கு ஆபத்தான கரியமிலவாயுவை கிரகித்துக்கொண்டு சுத்தமான ஆக்ஸிஜனை தருகிறது...


வணிக மையங்களில் ஒரு மாஸ்க்கை மாட்டிக்கொண்டு தமக்கு மட்டும் சுவாசிக்க போகும் சுயநல பணக்கார்களை விட ஒரு மரம் நடுவதன் மூலம் நமக்கும் சமூகத்திற்கும் இலவசமாய் ஆக்ஸிஜன் வழங்குவோம்...


(குறிப்பு.. வீட்டிற்குள் வளர்க்கும் தொட்டிசெடிகளை இரவில் வெளியிலும் பகலில் வீட்டிற்குள்ளும் வைத்தல் நலம்.. தாவரங்கள் இரவில் கரியமில வாயுவை வெளியிடும்)

புதைந்த ரகசியங்கள்... தோண்ட ஆளில்லை.....



ஜனவரி 24 ம் தேதியிட்ட புதிய தலைமுறை வார இதழ் கொஞ்சம் தாமதமாக கிடைத்தது... அதில் அதன் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் "என் ஜன்னலுக்கு வெளியே... " என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில்  ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் புலவர்  காக்கை பாடினியார் தன்னுடைய ஒரு பாடலில் வட்டத்தின் பரப்பளவறியும் சூத்திரத்தை சொல்லி இருப்பதாக எழுதி இருந்தார்... 

இந்த சூத்திரத்தில் பயன் படும் "PI  ("பை" 22/7) பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில்  வந்ததாக பள்ளிக்கூடங்களில் சொல்லித்தரப்படுவதாக சொல்லி இருந்தார்... ( எங்க வாத்தியார் இப்படி எதுவும் சொன்னதா ஞாபகம் இல்லை.. அவர் சொல்லி இருப்பார்.. நாம என்னிக்கு கவனிச்சோம்...)

அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது... தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள்... எல்லாம் தமிழில் இருந்தாலும் தமிழர்களுக்கு புரியாமலேயே இருக்கிறதே... என்ன காரணம்...  தொல்காப்பியம்.. பதினென்கீழ் கணக்கு, மேல் கணக்கு, எல்லா நூல்களுமே சாமான்ய தமிழனுக்கு புரியாமலேயே இருக்கிறதே...  ஏன் அப்படி...

இலக்கணம் என்று எடுத்துக்கொண்டால். எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளில் இலக்கணம் இல்லையா. .. எல்லோருக்கும் புரியும் படி எழுதினால் அது இலக்கியம் இல்லையா??

காக்கை பாடினியார் இவ்வளவு பெரிய விஷயத்தை ஆறாம் நூற்றாண்டில் சொல்லியும் கூட அது இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலும் சாம்மான்ய தமிழனுக்கு புரியவே இல்லையே..  இப்படி எத்தனை தகவல்கள் புரியாமலேயே ஒளிந்திருக்கும்...??

ஒரு வேளை  அப்போது வாழ்ந்த தமிழர்கள் அந்த வார்த்தைகளை தான் புழக்கத்தில் வைத்திருந்தார்களா..?? அவர்களுக்கு புரிந்திருக்குமோ...??

நான் கண்டுபிடித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கு புரியாமல் சொல்லும்போதோ.. எழுதி வைக்கும் போதோ அந்த கண்டுபிடிப்புக்கு என்ன பலன்..?? என்ன பயன்..??

லியார்னாடொ  டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியத்தின் கண்களை பெரிதுபடுத்தி பார்க்கும் பொது அதில் சில குறியீடுகள் இருக்கிறதாம். அதில் ஏதோ ரகசியம் புதைந்திருக்கிறது என்று ஆய்வு செய்கிறார்களாம்... 
அதுபோல் தமிழ் இலக்கியங்களை ஏன் யாரும் ஆராய்ச்சி பார்வையில் பார்க்கவில்லை,...
இந்த காலத்தில் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு மொழிக்கு வண்ணமெல்லாம் கொடுத்துக்கொண்டு மேடை தோறும் முழங்கும் இலக்கிய வியாதிகள்  அடுக்கு மொழியிலும் வசனங்களும் பேசி மக்களை மயக்கியும் அவர்களிடம் ஒட்டாமல் விலகியும் நிற்பதை போலதான் அன்றைய இலக்கியவாதிகளும் புலவர்களும் இருந்தார்களா...??

அப்படியாயின்... அந்த இலக்கியங்களால் என்ன பயன்..?? ஒன்று ஆராய்ந்து அதில் இருக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவும் தகவல்களை கண்டுபிடித்து உலகிற்கு சொல்ல வேண்டும்... அப்படி இல்லை என்றால் எல்லாவற்றையும் தீயிட்டு கொழுத்திவிட்டு அமெரிக்கா காரன் பேடண்ட் வாங்கிவிட்டான் என்று சொல்லிவிட்டு மஞ்சள் பொருட்களுக்கு ராயல்டி கொடுக்க சம்மதித்து வாழ பழக வேண்டும்...

கஞ்சி  கஞ்சி  என்றால் பானை நிறையாது.. சிந்தித்து முன்னேற வேணுமடி...
என்று எம் பட்டுக்கோட்டையார் எல்லோருக்கும் புரியும் படி சொல்லிவிட்டார். விளக்க உரை எழுதி யாரும் யாருக்கும் புரியவைக்கவேண்டிய அவசியமின்றி...!!!

கோபிநாத்துக்கு ஒரு குட்டும்.. என் சந்ததிக்கு ஒரு ஆதாரமும்..

லாப நோக்கமில்லாத சமூக சீர்திருத்தத்தை மட்டுமே முன்னிறுத்தி (????!!) ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் இரு பாலினத்தவர்கள், இருவேறு சமூகத்தவர்கள்.. இரு வேறு மதத்தினர்களை கொம்பு சீவி விடும் அற்புற சமூக போராளி திரு நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் இவரது மனோநிலைக்கு ஒத்தில்லாத கருத்தை பேசுபவரிடம் கேட்டும் அதி புத்திசாலித்தனமான கேள்வி "என்ன ஆதாரம்.... எங்க இருக்கிறந்து அந்த ஆதாரம்...?"

தெரியாமல் தான் கேட்கிறேன்... ஆதாரம் என்பது என்ன??? எத்தனையோ நூற்றாண்டுகளாய் நமது முன்னோர்கள் பாரம்பரியமாய் சொல்லி வந்தார்களே மஞ்சள் ஒரு நோய் நிவாரணி.. கிருமி நாசினி என்று... வேம்பு ஒரு மருத்துவ குணம் நிறைந்தது என்று... அதற்கெல்லாம் என்ன ஆதாரம்...??? எல்லாவற்றையுமே கண்கூடாக பார்த்தவர்கள் நாம்.. அனுபவித்து உணர்ந்தவர்கள் நாம்... ஆனால் அமெரிக்கா காரன் அதற்கு பேடன்ட் ரைட் வாங்கி வைத்துக்கொண்டிருப்பதும்... அவர்களது ஆய்வு கூடத்தில்.."மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது" என்று யாரோ ஒரு ஆய்வாளர் வழங்கிய சான்றிதழும்தான் ஆதாரமா..? அதைதான் இவர் ஏற்றுக்கொள்வாரா..???


எந்த ஒரு கருத்தையும் நம்ப வேண்டுமானால் அதற்கு இணையத்திலிருந்து சில இணைப்புகளை கொடுப்பதை வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றனர் சில அறிவாளிகள்.. இணையத்தில் எழுதி வைத்தது யார்... அவரும் என்னை போன்ற.. உங்களை போன்ற ஒரு மனிதர் தானே..அவர் பத்து வருடங்களுக்கு முன்போ.. இல்லை நேற்று க்கொடவோ எழுதியது உங்களுக்கு இன்று ஆதாரமென்றால் நான் இப்போது எழுதுவது நாளைக்கு ஆதாரம்... நாளை என்னுடைய சிந்தனையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நான் ஆராதத்தை விட்டு செல்கிறேன்..
பதிவு செய்யப்படாத விஷயங்கள் எல்லாமே பொய்யாகி விடுமா என்ன???

பெற்றோரின் வலி

அப்பனாத்தா கட்டி வச்ச வீடு வேணும்... அவுக சேத்துவச்ச சொத்து வேணும்... அவுக வாங்கி வச்சிருக்குற நல்ல பேரு வேணும்... சோறு போடணும்... துணிமணி எடுத்து கொடுக்கணும்... படிக்க வைக்கணும்.. செலவுக்கு காசு கொடுக்கணும்... ஊர்ல போய் ஏதாவது ஏழரைய கூட்டிட்டு வந்து நின்னா பெத்த பாவத்துக்கு பஞ்சாயத்துல கை கட்டி நிக்கணும்...

ஆனா "நீ இல்லன்னா செத்து போயிடுவேன்..." அப்படின்னு டிராமா பண்றவன/பன்றவள நம்பி ஓடிடுவ...... அப்பனாத்தா கவுரவத்த குழி தோண்டி பொதச்சுடுவ ....

நீ கருவா உருவான காலத்துல இருந்து உனக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து பண்ணின அப்பனாத்தாவுக்கு உனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வைக்க தெரியாதான்னு கேட்டு... அப்படி ஏதாவது நடந்தா ஒரு ஆத்துரத்துல "வெட்டி போட்டுடுவேன்"ன்னு சொல்ற அப்பன ஊரு நடுவுல மன்னிப்பு கேட்டு தலைகுனிஞ்சு நிக்கணும்... வெளங்குவியா நீ??

உன்ன பெத்ததுக்கு உண்டான பலன அந்த ஒரு நொடில அனுபவிச்சுடறாங்க அந்த அப்பனாத்தா......

அவங்கள வெட்டி போட நீ யாருன்னு கேக்கற எந்த...... ங்கியும் வரல.. உனக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட... உனக்கு துணி மணி வாங்கி தர.. உனக்கு நல்லது கெட்டது பண்ண... உனக்கு உடம்பு சரியில்லாம போனா வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு கடன ஒடன வாங்கி செலவு பண்ணி டாக்டர் கால்ல விழுந்து கதற....

எல்லாம் அன்னிக்கு அவுகதான் செஞ்சாக... எத்தன எடத்துல கைகட்டி நின்னிருப்பான்..?எத்தனை இடத்துல வயித்த கட்டி புள்ளைக்கின்னு மடில கட்டி கொண்டு வந்திருப்பா....
எத்தன ராத்திரி "ஐயோ... புள்ளைக்கு எறும்பு கடிச்சிருக்குமோ... வயிறு கியிறு வலிக்குமோ... என்னன்னு தெரியலையே"ன்னு நீ எதுக்கு அழுவுறன்னு தெரியாம கெடந்து தவிச்சிருப்பாக...


அமெரிக்காவுல இல்லையாம்.. ஐரோப்பாவுல இல்லையாம்.. காதலுக்கு இத்தன பெரிய பிரச்சினை... ஆமா.. அது சரிதான்... அங்க அப்பன் சொத்து சேர்த்து வைக்கிறதில்ல... நல்லது கெட்டதுக்கு கூடிக்கிற சொந்த பந்தம் இல்ல... நான் சம்பாதிச்சு நான் சாப்பிட்டுக்குவேன்.. நீ சம்பாதிச்சு நீ சப்பிட்டுக்கோன்னு போயிடறான்...

அது மாதிரி உன் அப்பனாத்தா இருந்திருந்தா நீ இன்னிக்கு குண்டிய பைக்க விட்டு எறக்காம சுத்த முடியுமா..?? ஒரு வேளை இங்க அப்படி ஒரு நிலைமை வந்தா யாரவேனா காதல் பண்ணி எவன்/எவள் கூட வேணா ஓடிப்போ...

அப்படி எனக்கு இந்த புள்ளைய/பொண்ண புடிச்சிருக்கு... இவ/இவங்கூட வாழ்ந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சா அப்பனாத்தாகிட்ட 
சொல்லு... அவுக முடிவு பண்ணட்டும்...

இங்க யாரும் சுயம்பா வளரல... இன்னிக்கு நீ வளர்ந்திருக்கறதுக்கு பின்னால ஒரு சமுதாயத்தோட , உன் சொந்தக்காரங்களோட... உன் மக்க மனுஷாளோட உழைப்பு இருக்கு .. கனவு இருக்கு... இன்னிக்கு உனக்காக இந்த சமுதாயம் செஞ்சது கடன்.. எதுவும் ஓசி இல்ல... அத வட்டியும் மோதலுமா உனக்கடுத்து வரப்போற சந்ததிக்கு நீ திருப்பி செய்யணும்...
இன்னிக்கு உனக்கு ஒரு பொண்ணையோ /பையனையோ புடிச்சுருக்குன்னு அவுக பின்னாடி போறதுக்கு முன்னாடி... நீ அவுககிட்டல்லாம் வாங்கின கடனுக்கு வழிய சொல்லிட்டு போ....
அந்த கடன கொடுக்காம ஓடினா நீ என்ன மனுஷ ஜென்மம்..??
உன் இஷ்டம் போல ஓடிக்கோ... ஆனா அப்படி ஓடனும்னா அப்பனாத்தா கொடுத்த எல்லாத்தையும் விட்டுட்டு போ... யாரு வேணாம்னா...??

உன்னோட உயிரும் அந்த அப்பனாத்தா கொடுத்ததுதான்...!!!

## பல அப்பாவி அப்பனாத்தாவின் உள்ள குமுறல்..!!!

சனி, 9 மே, 2015

விஸ்வரூபம்

ஒரு வழியாய் அக்கினி குஞ்சின் மீது மழை பெய்திருக்கிறது... ஆனால் அந்த அக்கினி குஞ்சு மரப்பொந்திடை வைக்கப்பட்டு மழை பெய்யும் காலத்திற்குள்ளாக அதனை குரங்குகள் எல்லாம் தூக்கிப்போய் பல மரங்களில் பற்றவைத்திருக்கிறது...

விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூப பிரச்சினையில் வெளியில் தெரியாமல் இருந்த லெட்டர்பேட் குழுக்களும், சில தனிமனித பிரபலங்களும் , சில பல பாரம்பரிய பேரியக்கங்களும், மக்களாட்சியையே மன்னராட்சி ஆக்கிய பேரரசர்களும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளிர்காய்ந்திருக்கிறார்கள்.

கமலஹாசன் அவர்கள் நூறுகோடி ரூபாய் முதலீட்டில் எல்லோரையும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்...பிரதிபலனாக எல்லோரும் அவர் படத்தை விளம்பரபடுத்தி இருக்கிறார்கள்..

"எரியும் வீட்டில் பிடுங்கின வரை லாபம் " என்றும் , "வெந்தது போதும் என் முந்தானைல போடு " என்றும் எம் முன்னோர்கள் சொல்லிச்சென்றதை செயல் விளக்கமாய் செய்து காண்பித்த எல்லோரையும் பார்த்து மிரட்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது...
அன்பு செல்வன் என்ற அழகான பெயரை அன்பு செல்வன் ஐ பி எஸ் என்று கதாநாயகனுக்கு வைத்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை புகழ்ந்த ஒரு படித்தவர் அதே மேனன் இன்னொரு படத்தில் அமுதன்- இளமாறன் என்று தமிழ் பெயர்களை வில்லன் கதாபாத்திரத்திற்கு சூட்டிய பொது அதற்கு காரணம் கமல் தான் என்ற ஒரு அற்புத கண்டுபிடிப்பை நிகழ்த்தி அடுத்த நோபல் பரிசுக்கான பரிந்துரையை பெற்றிருக்கிறார்...

எது எப்படியோ.. ஒரு கலைஞனாய் , முதலீடு செய்தவனாய் தனுடைய படைப்புக்கும் பணத்திற்கும் இப்படி ஆபத்து வருகிறதே என்று கமலஹாசன் ஆதங்கப்பட்டது நியாயம். அந்த ஆதங்கமே நான் வேறு மாநிலத்திலோ வேறு நாட்டிலோ கூட குடியேறிவிடலாம் என்று நினைக்கிறேன் என்று அவரை சொல்ல வைத்தது... ஒரு கலைஞனை அப்படி வேதனைப்பட வைத்ததற்காக வெட்க்கப்பட்டோரையும்... 
கமலஹாசன் என்ற சிந்தனையாளனுக்கு தார்மீக ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பினரையும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் கமலஹாசன் இந்த நாட்டை விட்டு போனால்.. வேறு மாநிலத்திற்கு போனால்... நாங்கள் எங்கள் ரேஷன் கார்டை ஒப்படைப்போம் என்று ஒரு கும்பல் சொல்கிறதே. அதை என்னென்று சொல்ல???

கமலஹாசன் எங்கு வேண்டுமானாலும் குடியேறி விடுவார். ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு நீ எங்கே போவாய்..??? கமலஹாசனின் பின்னால் அவரது குடும்பம் போகும்... உன் குடும்பம்...???

ஒரு திரைப்படத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் வதந்திகளால் ஆபத்து வருகிறது என்ற உடன் அந்த கலை படைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தது நியாயம்... ஆனால் அரசியல் கட்சி ,,, அடுத்த முதல்வர் என்கிறாயே.... 

அட முட்டாள் தமிழா.. அறிவார்ந்து சிந்திக்க உனக்கு ஏனடா தெரியவில்லை??? உணர்சிகளுக்கு அடிமையாகி...... நீ ஒவ்வொரு முறையும் செய்த தவறால் தான் சுமார் அரை நூற்றாண்டுகள் அரசியல் வியாபாரம் செய்தும், சினிமா வியாபாரம் செய்தும் உன்னை ஒரு சிறு கும்பல் அடிமையாகவே வைத்திருக்கிறது.. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இப்படி இருக்க போகிறாயோ.!!!!

ஆப்பில் ஏறி அமர்ந்த கதை..

நற்பெயர் என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது.. மிக எளிதாய் உடைய கூடியது..நாம் மட்டும் கவனமாய் கையாண்டால் பத்தாது....நமக்கு தொடர்பே இல்லாத ஒருவரின் வார்த்தை கூட நமது பகுதியில் நாம் வெகுகாலமாய் சேர்த்து வைத்திருந்த நற்பெயர் எனும் கண்ணாடி பாத்திரத்தை உடைக்கும் என்பதை உணர்த்திய ஒரு நகைச்சுவையான நிகழ்ச்சி இது...

அப்போது காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் விற்பனை அலுவலராக ஒரு வடநாட்டு விவசாய பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன்.. காஞ்சிபுரத்தில் சுமார் ஐந்தாண்டுகாலம் ஒரு குடும்பத்தினருடன் கட்டண விருந்தாளியாக தங்கி உண்டு அவர்கள் குடும்பத்திலும் அந்த தெருவிலும் ஒரு நெருங்கிய உறுப்பினராக ஆகி இருந்தேன்... அந்த தெருவில் இருக்கும் அனைத்து குடும்பத்தினருமே மிகவும் மரியாதையான பார்வையும் , நம்பிக்கையும் வைத்திருந்தனர்... என் மீதான அவர்களின் மரியாதை, நம்பிக்கை என்ற கண்ணாடிப்பாத்திரத்தை கீறல் கூட விழாத அளவு நான் பக்குவமாய் பாதுகாத்து வந்தேன்...


ஒரு நாள் விடுப்பில் வீட்டில் இருந்த போது அந்த தெருவழியே எதிர்காலத்தை கிளியை வைத்து கணிக்கும் (???) ஒரு ஜோசியர் வந்தார். 
சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக நான் அவரை கூப்பிட்டு ஐந்து ரூபாய் கொடுத்து ( துட்ட கொடுத்து சூனியம் வச்சுகிட்றது இதுதான் ) என்னுடைய எதிர்காலத்தை கணிக்க சொன்னேன்... கிளி ஜோசியரை நான் அழைத்த வேளையில் அக்கம் பக்கம் இருந்த குடும்பத்தலைவிகள் ஒவ்வொருவராய் வந்துவிட்டனர்... 
அடுக்கி வைக்கப்பட்ட சீட்டில் இருந்து அதிகம் யோசிக்காமல் ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு ஒற்றை நெல்லை கூலியாக பெற்று , உழைப்புக்கு கூலி உடனே கிடைத்த சந்தோஷத்தில் மீண்டும் அது வீடு என்று நம்பிக்கிடக்கும் சிறைக்கு சென்று விட்டது....
எடுத்த சீட்டில் என் எதிர்காலம் வரவில்லை... வினை வந்தது.... ஆம்... கலயத்தில் இருந்து வெண்ணையை திருடி தின்றுவிட்டு இதழோரம் வழிய சிரித்துக்கொண்டிருந்தார் குழந்தை கிருஷ்ணன் ... கிளி ஜோசியர்.. அடடா என்று பாராட்டிக்கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து அந்த கிருஷ்ணர் படத்திற்கான பக்கத்தை விரித்து வாசித்த முதல் வரியில் விழுந்து உடைந்தது நான் ஐந்தாண்டுகலாய் பாதுகாத்து வைத்திருந்த என் மரியாதை கண்ணாடி பாத்திரம்...

"வெண்ணை திருடிய கண்ணன்,,,, இவன் வெண்ணையை மட்டுமல்ல. பெண்ணையும் திருடுவான்.." என்று போட்டாரே ஒரு போடு... அக்கம் பக்கத்து குடும்பத்தலைவிகள் அடி வயிற்றில் உருண்டிருக்கும் போலும் அந்த அக்கினி பந்து... ( அவர்கள் வீட்டில் ஓரிரு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்)

அன்றுமுதல் ஒரு எதிரியை பார்ப்பதுபோல் பார்க்கத்தொடங்கினார்கள் .. சகஜமாய் பேசிய பெண் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கினார்கள். அப்புறம் ஒரு வழியாக அடுத்து இரண்டாண்டுகள் கழித்து எனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வேலையையும் காஞ்சிபுரத்தையும் விட்டு நான் விலகி வர நேர்ந்தது... 
அப்போது அந்த குடும்பத்தலைவிகளிடம் சொல்லிவிட்டு வந்தேன்.. அப்போது அவர்கள் முகத்தில் தெரிந்தது சந்தோஷமா......... கவலையா??? அந்த கிருஷ்ணனுக்கே வெளிச்சம்.!!!

திருப்பதிக்கு ஒரு நெடும்பயணம்....

மிகத்திடீரென்றுதான் அந்த பயணம் அமைந்தது... ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்... அவர்களின் பக்கத்துவீட்டுக்காரர் ஏழுமலையானுக்கு கோ தானம் (பசு மாடு உபயம்) செய்வதாய் வாக்கு கொடுத்திருந்த நேர்த்திக்கடனை செலுத்த ஒரு டெம்போ வாகனத்தில் பயணப்பட்டார்கள்... நண்பர் அழைக்க அப்போது அவசர பணிகள் இல்லாத காரணத்தால் நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன்...

அந்த பசுமாட்டை வண்டி
யின் பாரப்பகுதியில் முன்னிறுத்தி கயிற்றால் பிணைத்துவிட்டு பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோம்... திருத்தணி- நகரி கடந்து வாகனம் கீழ்திருப்பதியை சென்றடைந்தது... அங்கு இருந்த கோசாலையில் நேர்த்திகடனான பசுவை ஒப்படைத்தபிறகு எங்கள் பயணம் ஏழுமலையான் தரிசனம் நோக்கி புறப்பட்டது...
அப்போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்ததால் கால்நடை பயணமாக மலையேற ஒருமனதாய் முடிவு செய்யப்பட்டு பயணம் தொடங்கியது...
ஆரம்பத்தில் மிக சுலபமாய் இருந்த பயணம் தூரம் கடக்க கடக்க.. சக்தி குறைய குறைய.. மிக கடியதோர் பயணமாக இருந்தாலும்.. ரசிப்புடனே கடந்தோம்.. நடு நடுவே சற்று நேர இளைப்பாறலும். "கோவிந்தா. கோவிந்தா.." என்ற கோஷமும் எங்களை படிக்கட்டுகளில் முன்னேற்றி சென்றன.... அல்லது அப்படி நாங்கள் நம்பினோம்...
ஒருவழியால் மேலேறியபின் அங்கிருக்கும் திருக்குளத்தில் புனித நீராடியபின் வெங்கடரமணா.. ஏடுகொண்டல வாடா... ஸ்ரீனிவாசா... கோவிந்த தரிச
னத்திற்காக காத்திருக்கும் பட்டியில் எங்களையும் அடைத்துக்கொண்டோம்... ஒவ்வொரு பட்டியும் மூன்று மணி நேர இடைவெளியில் கடக்க முடிந்தது... ஒன்று.. இரண்டு.. மூன்று... நான்கு....
அடடா.. தெரியாம வந்து மாட்டிகிட்டோமோ... என்று நினைக்க வைத்தது அந்த காத்திருப்பு...
அவ்வப்போது புளியோதரை- பொங்கல்- சுண்டல் என்று வழங்கப்பட்டாலும் கூட அந்த காத்திருப்பு என்னவோ பெரும் உபாதையாய் இருந்தது....
ஒரு வழியாக 18 மணி நேர காத்திருப்புக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி நெருங்கி.. இதோ.. இன்னும் சில நிமிடங்களில்.. "கோவிந்தா... கோவிந்தா...... பணக்காரகடவுளின் பார்வை மட்டும் என் மீதும் பட்டுவிட்டால்.... அட அட.... அடுத்த விசிட்ல கட்டா கொண்டுவந்து கொட்றேன் " ... மனசுக்குள்ளயே உரக்க சொல்லிக்கொண்டேன்...

நெருங்கிவிட்டேன்.... வெளிச்ச பிரயோகத்தில் ஜொலிக்கும் அலங்காரத்தில் ஏழுமலையான்... 30 வினாடிகள் கூட இல்லை... அந்த புகை மண்
டலத்திலும் வெளிச்ச பிரவாகத்திலும் லேசாக கண்மணி சுருங்கி வெளிபிம்பத்தை உணர்ந்து மூளையின் சேமிப்பு பகுதியை சென்றடையும் முன்பாகவே..."ஜருகண்டி... ஜருக்கண்டி..."

ஏழுமலையானுக்கும் அதே பிரச்சினைதான் போலிருக்கிறது.... அவர் பார்த்திருந்தால் நானும் இந்நேரம் பணக்காரனாகி இருக்க வேண்டுமே... இழப்பு இப்போது அவருக்கும் தான்... "கட்டாய் கொண்டு வந்து கொட்றேன்" என்ற என் உரத்த சத்தம் நடைமுறைக்கு வராமலேயே நிற்கிறது...!!!

ஒரு பெண்ணை குறிவைத்த பாலியல் தீவிரவாதமும்.. ஒட்டுமொத்த பெண்களையும் குறி வைக்கும் ஓட்டு தீவிரவாதமும்...

இந்த கட்டுரைக்குள் நுழையும் முன்பாக மிக தெளிவாய் சொல்லி விடுகிறேன்... தலைநகர பாலியல் தீவிரவாத விவகாரத்தில் அவர்களிடம் விசாரிக்க எதுவும் இல்லை அவர்கள் தான் அதை செய்தார்கள் என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொண்டால் உடனடியாக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என்பதை அன்றே பதிவு செய்தவன் நான்.

தலை நகரத்தில் அந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள்.. ஆனால் அதனை தொடர்ந்த நிகழ்வுகளில் எவ்வளவு தூரம்ஓட்டு  தீவிரவாத அரசியல் விளையாடுகிறது என்பதை எந்த பெண்ணும் புரிந்துகொள்ள தயாராய் இருப்பதாய் தெரியவில்லை.

இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப உடை அணிய சொன்னால் "பெண்களை மூடிக்கொண்டு போக சொல்கிறாயே..." என்று என் மீதும் இப்படி சொல்பவர்கள் மீதும்  எரிந்து விழுகிறார்கள்  உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன் சகோதரிகளே..  சுமார் 37 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு பகுதியில் பெண்கள் மார்பகங்களை மூட அனுமதி அளிக்கப்பட்டது தெரியுமா.... அதற்கான போராட்டத்தின் வலி எத்தனை பேருக்கு தெரியும்??
முழு விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்..



ஆனால் இன்றைய போராட்டங்கள் சுதந்திரம் என்ற பெயரில் எதை நோக்கி செல்கிறது??? நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெருவணிகர்கள் புகுத்திய மேலை நாட்டு நாகரீக  மாயையில் சிக்கி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ள முயற்சிக்கிறீர்கள்.. அது உங்கள் சுதந்திரம்.. அதை பற்றி நான் எதுவும் சொல்ல தயாரில்லை. ஆனால் ஒரு சகோதரனாக ஒரு ஆலோசகனாக உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்... உங்களது பார்வையில் ஆணாதிக்கம் என்றோ- பெண்ணின் தனி மனித சுதந்திர குறுக்கீடு என்றோ நீங்கள் நினைக்கும் இந்த விஷம் இன்றோ- நேற்றோ தொடங்கியதல்ல.. அது பல நூற்றாண்டுகளாய் தொடர்வது... அதற்கு எதிரான உங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.. நீங்கள் வெற்றி பெற வில்லை அதற்கு இன்னும் சில பல ஆண்டுகள் ஆகலாம். 

ஒரு யுத்த களத்தில் நிற்கும் போதே கவசத்தையும் கேடயத்தையும் வீசி எறிபவன் புத்திசாலி இல்லை... அப்படி வீசுபவனுக்கு கண்டிப்பாய் இழப்பு நிச்சயம் ... இந்த போரில் கலாச்சார  உடைகள் என்பது இன்றைய நிலையில் உங்கள் கவசம்- கேடயம்.. அதை வெற்றிக்கு முன்பே துறக்காதீர்கள் என்று தான் சொல்கிறோம்..

இந்த போராட்டத்தில் உங்கள் வெற்றி என்பது ஆண்களை சட்டத்தை காட்டி மிரட்டுவதோ- பயப்பட வைப்பதோ இல்லை... 

உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனோ பக்குவத்திற்கும் , உங்களை முதலில் மனுஷியாய் பார்க்கும் நிலைக்கும் அவர்கள் வர வேண்டும்.. அதுதான் உங்கள் வெற்றி.. அந்த வெற்றியை அடைந்துவிட்டதாய் நீங்கள் நம்புகிறீர்களா?? 

தலைநகரத்தில் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் தீவிரவாத தாக்குதல் இங்கே எத்தனை பெண்களுக்கு கணவனாலேயே கூட நடத்தப்படுகிறது..?? ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பில் இன்று தமிழக முதல்வர் அவர்கள் வேதியல் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.. அதனை சில முகநூல் சகோதரிகள் "காயடிக்க வேண்டும்" என்று அப்பட்டமாய் பதிவு செய்து கொண்டாடுகிறார்கள்.. 

அப்படி காயடிக்க வேண்டும் என்றால் இங்கே எத்தனை கணவன்களுக்கு காயடிக்க வேண்டும் என்பதை இவர்கள் உணர்வார்களா??? ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளை உடல் ரீதியான தொடர்புக்கு வற்புறுத்துவதே வன்முறைதான்.. அது இங்கே எத்தனை மனைவிகளுக்கு கணவனாலேயே ஏற்படுகிறது தெரியுமா?? எந்த மனைவி தன கணவனுக்கு காயடிக்கும் தண்டனை கொடுக்க சொல்லி புகார் செய்ய போகிறார்..?? 

கற்பு என்பது பேனாவிலோ பென்சிலிலோ எழுதி வைக்கப்பட்டதல்ல அதனை அழிக்க... அது மொத்தமும் மனம், உடல், செயல்கள் சார்ந்த விஷயம் ஆனால் அது இன்று திரிக்கப்பட்டு விட்டிருக்கிறது...   பாலியல் வன்புணர்ச்சி என்பதுதான் சரியே தவிர "கற்பழிப்பு" என்ற வார்த்தையிலேயே ஒட்டு மொத்த பெண்ணினமும் கேவலப்படுத்தபடுவது ஏன் உங்களுக்கு புரியவில்லை??

ஒரு ஜனநாயக நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெண்ணுக்கு எதிராய் நடந்த வெட்கப்பட வேண்டிய விஷயத்தை ஊடகங்கள் விளம்பரம் செய்ததும் அதில் குளிர்காய அரசியல் வாதிகள் போட்டி போடுவதும் ஏன் இந்த பெண்களுக்கு புரியவில்லை.. நாட்டின் வீர திருமகளை இழந்துவிட்டோம் என்று ஜனாதிபதி சொல்கிறார். அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று ஒரு கட்சி சொல்கிறது. காயடிக்க வேண்டும் என்று ஒரு முதல்வர் சொல்கிறார்... 
இவை எல்லாம் ஓட்டு தீவிரவாதம் என்றும்.. ஆட்டிற்காக கவலை படும் ஓநாய்களின் கூக்குரல் என்றும் உங்களுக்கு புரியவில்லையா ??

இதற்கு முன்பு பாலியல் குற்றங்கள் பதிவானதே இல்லையா அப்படி பதிவானது எந்த அரசியல் வாதிக்கும் / ஆட்சியாளர்களுக்கும்  தெரியாதா???

ஆண்  என்பவன் வானத்திலிருந்து குதித்தவனல்ல .... அவனையும் ஈன்றவள் பாலூட்டி வளர்த்தவள் ஒரு பெண்தான் .... உங்கள் மகனுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள். உங்கள் மகளுக்கு நல்ல புத்தியை ஊட்டுங்கள்... இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்களை தூண்டும் காரணிகள் என்னவென்று சிந்தியுங்கள் அப்படிப்பட்ட காரணிகளை அகற்ற முயலுங்கள்.... அதற்காக போராடுங்கள்.. அதை விடுத்து காயடிக்க சொல்லும் சட்டம் கொண்டுவர முயலாதீர்கள் ஏனென்றால் பெண் ஆணுக்காகவும் ஆண்  பெண்ணுக்காகவும் படைக்கப்பட்டவர்கள்.  நேர் முனை மின்னூட்டமும்  எதிர்முனை மின்னூட்டமும்  இருந்தால் மட்டுமே மின் விளக்கு ஒளி  தரும் ...

மானுடம் அழிய சுனாமியோ- எரிகற்களோ  - பிரளயமோ வரவேண்டும் என்பதில்லை. 
விஷம் கொடுத்தும்  கொல்லலாம். வெல்லம் கொடுத்தும்  கொல்லலாம்  என்று எங்கள் கிராம பகுதியில் சொல்வார்கள் அரசு பாதுகாப்பு என்ற பெயரில் உங்கள் ஓட்டுக்களை குறிவைத்து வெல்லம் கொடுக்கிறது... 

புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம்

தலைநகரில் நடந்த பாலியல் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நிறைய புலிகள் பசுந்தோலை போர்த்திக்கொண்டு அறிக்கை விடுகின்றன.. இப்போது ஏதாவது சொன்னால் அது பெண்ணுரிமை வாதிகளை சீண்டி விடுவதாக இருக்குமோ என்ற பயம் அல்லது "நானெல்லாம் யோக்கியனாக்கும்" என்றுகாட்டிக்கொள்ளும் ஆர்வம் தான் தெரிகிறதே தவிர யாரும் மனச்சாட்சிப்படி பேசுவதாக தெரியவே இல்லை.. நூற்றாண்டுகளாய் , ஆயிரமாண்டுகளாய் தொன்றுதொட்டு வந்த இந்திய கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் நவீன யுவதிகள் உடைத்து சிதறடிக்க பதாகைகளை ஏந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு "நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாய்"ஆண்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

நடந்த சம்பவம் நமக்கெல்லாம் செய்தி.. ஊடகங்களுக்கோ தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங் கை உயர்த்த கிடைத்த வரம்.. ஆனால் அந்த பெண்ணின் நிலை.. அந்த பெண்ணை பெற்றோரின் நிலை...??
அந்த பெண் ஒன்றும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன்னுடைய பெற்றோருக்கு மருந்துவாங்கவோ , இல்லை தான் படிப்பை முடித்துவிட்டோ இரவு பதினோரு மணிக்கு வரவில்லை. ஒரு ஆண் நண்பனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்,,, இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதே.. அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முன்வருவாரா.??? இதனால் அவருக்கு இழப்பு என்ன?
கொஞ்ச நாளில் ஊடகங்கள் அவர்களை மறந்துவிடும். நாமும் மறந்துவிடுவோம். ஆனால் அவர்கள் உயிரோடிருப்பார்கள். இரவில் ஒரு இளம்பெண்ணுடன் ( யாரோ பெற்ற பெண்தானே ) ஜாலியாக ஊர் சுற்ற போனவர் தனக்கு மனைவியாக வேறொரு பெண்ணை தேடிப்போய் விடுவார்... ஆனால் அந்த பெண்ணை பெற்றவர்கள் அந்த பெண்ணை பார்த்து பார்த்து வாழ்நாளெல்லாம் நரகம் அனுபவித்து செத்து போவார்கள்.. அதையும் மீறி யாரோ ஒரு தியாகி அந்த பெண்ணை மணம் செய்ய முன்வரலாம். ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை...

ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே..
ஒரு பெண்ணுடன் நட்பாயிருக்க பத்து ஆண்கள் தயாராயிருப்பார்கள் ஆனால் அந்த பெண் காதலியாக இருந்தால் அவள் வேறொரு ஆணுடன் சகஜமாக பழகுவதை ஏற்க மாட்டார்கள்.. அவளே மனைவியாகிவிட்டாலோ வேறொரு ஆணுடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்... இதுதான் நிஜம்.
ஒரு பெண்ணுடன் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வெளியிடங்களுக்கு மிக சந்தோசமாக செல்லும் ஐந்து ஆண்கள் , அந்த பெண் "என்னை திருமணம் செய்துகொள்கிறாயா.." என்று கேட்கும்போது மறுத்து விடுவார்கள். இதை "லவ் டுடே " என்ற படத்தில் திரு பால சேகரன் என்ற இயக்குனர் ஆணி அடித்ததுபோல் சொல்லி இருப்பார்... இதுதான் ஆணின் நிஜ முகம்..

உங்கள் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.. நீங்கள் சுதந்திரம் என்று சொல்வது உங்கள் பெற்றோரின் வயிட்றில் புளிகரைப்பதை உங்களால் இப்போது உணர முடியாது.... அப்படி உணர நீங்கள் பெற்றோராக வேண்டும்.

சும்மா அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருப்பதுமாதிரி பேசினால் மட்டும் ஆகாது... நமது கலாச்சாரத்தை விரும்பி அந்த மக்கள் வாழ ஆசைபடுகிறார்கள்.. ஆனால் வியாபாரிகளோ.. அதுதான் நிஜமான நாகரீகம் என்று ஒரு மாயையை விதைத்து அதனை வளர்க்கிறார்கள்.. அதை நம்பி அந்த நாகரீகத்தை பின்பற்ற ஆர்வமாயிருக்கிரீர்கள்.அந்த மாயவலை உங்களை வீழ்த்தி அவர்களை பணக்காரர்கள் ஆக்கும்..

சிங்கத்தை வேண்டுமானால் வலை விரித்து பிடிக்கலாம்பிடிக்கலாம்... யானையை குழிவெட்டி பிடிக்கலாம்.. ஆனால் கொசுவுக்கு பயந்து வலைக்குள் ஒளிவது புத்திசாலித்தனமே தவிர அசிங்கம் இல்லை... உங்கள் பெற்றோரை நம்புங்கள்.. உங்கள் சகோதரனை நம்புங்கள்... உங்கள் கணவனை பிள்ளைகளை நம்புங்கள்...

லட்டு சாப்பிட்டால் எப்படி இனிப்பாக இருக்கும் என்று என்று யாரும் விளக்கி சொன்னால் அதை நாம் நம்பிக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை... உடனே ஒரு லட்டு வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம்... ஆனால் நெருப்பு சுட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவ மனையில் ஒருவரை பார்க்க நேர்ந்தால் நெருப்பிடம் விலகி இருப்பது மட்டுமே நலம்.. அதல்லாம் முடியாது நானும் சுட்டுகொண்டால் மட்டுமே நான் நம்புவேன் என்று யாரும் சொல்வார்களானால்... மௌனம் தான் எமது பதிலாக இருக்கும்
தூண்டில்காரனை நம்பாதீர்கள். அந்த புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம் இருக்கும்...

இணையம் வளர்க்கும் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்

டிபஸ் என்ற கிரேக்க மன்னன் தன்னுடைய தாயின் மீது காதல்வயப்பட்டு தன்னுடைய தந்தையை கொன்றுவிட்டு தாயை கட்டாய திருமணம் செய்துகொண்டான்...  தன்னுடைய தாயை போல் சற்றே வயது அதிகமான உடல் பருமனான பெண்களின் மீதுகாதல் வயப்படும் தன்மை எல்லா ஆண்களுக்குமே இருக்கிறது.. அடி மனதில் எல்லா ஆண்களுக்குமே இது இருக்கும்.. அதன் அளவு அதிகமாகும் ஆண்கள் தன்னைவிட வயது மூத்த , பருமனான பெண்களின் மீது மோகம்  கொள்வார்கள் இதனை மருத்துவ விஞ்ஞானம்  "ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்" என்று சொல்கிறது...


பொதுவாக ஆண்கள் எல்லோருக்குமே  உள்ளுக்குள் பெண் தன்மை இருக்கும்.. இதன் விகிதாச்சாரம் அதிகமானவர்கள் தான் திருநங்கைகள் ஆகிறார்கள்.. அதே போல தான் ஒவ்வொரு ஆணுக்கு உள்ளும் தாயின் மீது ஒரு காதல் இருக்கும்.. ஒவ்வொரு ஆண்  மகனுக்கும் முதல் காதலி தாய்தான்...
இதன் விகிதாச்சாரம் அதிகமாகிற போது  தான் எதிர் விளைவுகள் அதிகமாகிறது 

காலம் காலமாய் நம்மை வழிநடத்தும் கலாச்சாரம் தாயுடனோ- சகோதரியுடனோ உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது ஒரு அசிங்கமான / பாவமான காரியமாக சித்தரித்து வைத்திருக்கிறது.. 
இந்த கலாச்சாரமே இந்திய கலாச்சாரத்தின் மாண்பை உலகமே வியந்து நோக்க வைத்திருக்கிறது..

தன்னுடைய தாயின் வயதை ஒத்த வேறெந்த பெண்ணை வேண்டுமானாலும் பாலியல் இச்சையோடு  பார்க்கும் ஒரு ஆணால்  தன்னுடைய தாயை அவ்வாறு பார்க்க முடியாமல் இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்தது நமது இரத்தத்தில் ஊறிய இந்த கலாச்சாரம் தான்...

ஆனால் சமீப காலமாக நவீன கலாச்சாரம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை எல்லா வகையிலும் சீரழிக்க தொடங்கி,  இந்த தாய் -மகன், சகோதரி-சகோதரன் என்ற உறவு முறையான நமது கலாச்சாரத்தின் ஆணி வேரையும்    அசைக்க தொடங்கி இருக்கிறது..


தற்போது இணையம் என்ற ஒரு மாபெரும் விஷயம் எல்லோரது வாழ்விலும் அத்தியாவசியமாகி விட்டது...அந்த இணையத்தில் நல்லதும் கெட்டதும் கொட்டிக்கிடக்கிறது.. எந்த ஒரு விஷயத்தையும் இந்த இணையத்தின் தேடுதல் பொறியில் தேடும்போது நாம்  தட்டச்சு செய்யும் சொல்லுக்கு தொடர்பான விஷயங்களை அந்த தேடுதல் பொறியே பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன...

ஆனால் அவைகள் அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயம் நமது கலாச்சாரத்தை , அதன் ஆணிவேரை அசைப்பது எத்தனை பேருக்கு தெரியும்..? 

நாம் ஒரு விஷயத்தை தேட ஒரு சொல்லை தட்டச்ச்சு செய்யும் போது அதுவாக பரிந்துரைக்கும் விஷயம் நமக்கு முற்றிலும் அறிமுகமில்லாததாய் இருக்கும்...  அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நமது கவனம் அதன் மீது செல்லும்.. இதுதான் ஒரு சாதாரண மனிதனின் மனோ நிலை..

இணைய தேடுதல் பொறியில் அம்மா என்று தட்டச்சு செய்யும் போது "அம்மா- மகன் உறவு" என்றும், அக்கா என்று தட்டச்சு செய்யும் போது "அக்கா- தம்பி உறவு" என்றும் அவைகள் பரிந்துரைக்கிறது.. அப்படி பரிந்துரைக்கும் விஷயங்கள் எல்லாமே நமது கலாச்சாரத்திற்கும், மானுட நாகரீகத்திற்கும் முரணான பாலியல் உறவு தொடர்பான விஷயங்கள் என்பதுதான் வேதனை...

ஒரு சாதாரண இந்திய கலாச்சாரத்தில் வாழும் ஒரு இளைஞன் இப்படி ஒரு விஷயத்தை இணைய பரிந்துரையின் பேரில் படிக்க நேர்ந்தால்  காலம் காலமாக நமக்குள் விதைக்கப்பட்டிருந்த விஷயம் லேசாக தடுமாற தொடங்கும்... ஒருவேளை இது ஒரு சாதாரண விஷயம் தானோ... நமக்குதான் தெரியாமல் இருந்திருக்குமோ.. என்று அந்த இளைஞன் நினைக்க ஆரம்பித்தால் இந்திய கலாச்சாரம் என்ன ஆகும்..?/

அவ்வாறாக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுமானால் அம்மா- மகன் , சகோதர- சகோதரி உறவுகளே கேள்விக்குறி ஆகி விடாதா??

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்திருக்கும் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற விஷயத்தை இவைகள் கிளறி அதன் விகிதாச்சாரத்தை அதிகப்படுத்தி விடாதா..?

நமது கலாச்சாரத்தை குறிவைத்து அதனை உடைக்கும் வேலையில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கும் அந்நிய சக்திகள் கடைசியாக இதிலும் கை வைக்க நாம் அனுமதிகத்தான் போகிறோமா.??? 

இதற்காக நாம் என்ன செய்ய போகிறோம்.. நமது அரசு என்ன செய்ய போகிறது... எல்லா விஷயத்திலும் கடைசியாக விழித்துக்கொள்ளும் அரசு இதிலும் அப்படித்தான் போகிறதா??