சனி, 20 ஜூன், 2015

காற்று வியாபாரம்.....

மனித உடலை இயக்கம் தலையாய உறுப்பான மூளையை செயல்படவைப்பது ஆக்ஸிஜன் வாயு .. வளிமண்டலத்தில் 19.5 முதல் 23.5 விழுக்காடு (%) ஆக்ஸிஜன் கலந்திருக்கிறது. நமது நுரையீரல் ,நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை தனியே பிரித்து இரத்தத்தின் வழியாக மூளைக்கு அனுப்புகிறது.. (இதை பற்றிய விரிவான தகவல்களுக்கு ஒரு மருத்துவரையோ- அல்லது ஒரு உயிர் வேதியல் வல்லுனரையோ (BIO -CHEMIST ) தொடர்புகொள்ளுதல் நலம்..)



பூமியின் அட்ச ரேகைகளிலும் தீர்க்க ரேகைகளிலும் கூட கதிரியக்கத்தை கலந்துவிட்டு காற்றை மாசாக்கி வைத்திருக்கும் மானுட விஞ்ஞானம் மனித நுரையீரல் ஆக்ஸிஜனை பிரித்தெடுப்பதையே ஒரு சவாலாக்கி வைத்திருக்கிறது... கரியமில வாயுக்கள் நிரம்பிய வளிமண்டல காற்றை சுவாசித்தாலே போதும்.. வேறு எந்த கெட்டப்பழக்கமுமே தேவை இல்லை.. எல்லா நோய்களும் வருவதற்கான சாத்திய கூறுகள் நிரம்பி வழிகின்றன..


அதிகாலையில் 3 லிருந்து 5 மணிவரை (பிரம்ம முஹூர்த்தம்) காற்றில் இந்த ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும்.. அதனாலேயே நம் முன்னோர்கள் "பிராணயாமம்" செய்ய கற்று தந்தார்கள்... காற்று மாசுபடாத காலத்திலேயே ஆக்ஸிஜனின் அதிகபட்ச உபயோகம் மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைக்கும் என்று கண்டறிந்திருந்த முன்னோர்கள் நீண்ட , ஆரோக்கியமான வாழ்வை பெற்று வந்திருக்கின்றனர்..

காற்று மாசுபட்டு நுரையீரல் ஆக்ஸிஜனை கண்டறியவே சிரமப்படும் இந்த காலத்தில் வசிப்பவர்கள் நாம்.. நம்மால் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்?


இதற்காகவே மேலை நாடுகளில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கத்தரும் மையங்கள் வியாபார நோக்கில் செயல்படுகின்றன...இந்த வணிக மையங்களில் ஆக்ஸிஜனுடன் நறுமணங்களும் சேர்க்கப்பட்டு ஒரு நிமிடத்திற்கு ஒரு அமெரிக்க டாலர் என்ற முறையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் என்ற அளவில் வெற்றிகரமாக செயல் படுகிறது..


இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இதற்கான வணிக வாய்ப்பு கொட்டிக்கிடப்பதாகவே தெரிகிறது... வாகனங்கள் மற்றும் குளிர்சாதனங்களால் கரியமில வாயு கலந்துவிட்ட காற்றை சுவாசித்தலும், தொடர் வேலை பளுவும் கூடி ஒரு வித மனோ அழுத்தத்தில் துவண்டுகொண்டிக்கும் நகரத்து மாந்தர்கள் இதுபோன்ற நிலையங்களை நிச்சயம் அணுகுவார்கள்.. உயர் வட்ட சம்பளக்காரர்களுக்கும் , தொழில் முனைவோருக்கும் இதுபோன்ற ஆக்ஸிஜன் மையங்கள் ஒரு வரப்பிரசாதமாகவே திகழும்.
நிச்சயம் இந்தியாவில் இதற்கான உற்பத்தி செலவும் மிக குறைவு.. ஆகவே இதனை குறைந்த விலையிலும் கூட வழங்க முடியும்...


இதெல்லாம் பணக்காரர்களுக்கு... நம் போன்ற சாமானியர்கள் என்ன செய்வது..?? அதற்கும் வழி இருக்கிறது...
சில-பல மரங்களை நடுவோம்... தொட்டிச்செடிகளை வளர்ப்போம்... தாவரங்கள் பகலில் நமக்கு தேவை இல்லாத, நமக்கு ஆபத்தான கரியமிலவாயுவை கிரகித்துக்கொண்டு சுத்தமான ஆக்ஸிஜனை தருகிறது...


வணிக மையங்களில் ஒரு மாஸ்க்கை மாட்டிக்கொண்டு தமக்கு மட்டும் சுவாசிக்க போகும் சுயநல பணக்கார்களை விட ஒரு மரம் நடுவதன் மூலம் நமக்கும் சமூகத்திற்கும் இலவசமாய் ஆக்ஸிஜன் வழங்குவோம்...


(குறிப்பு.. வீட்டிற்குள் வளர்க்கும் தொட்டிசெடிகளை இரவில் வெளியிலும் பகலில் வீட்டிற்குள்ளும் வைத்தல் நலம்.. தாவரங்கள் இரவில் கரியமில வாயுவை வெளியிடும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக