சனி, 9 மே, 2015

புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம்

தலைநகரில் நடந்த பாலியல் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நிறைய புலிகள் பசுந்தோலை போர்த்திக்கொண்டு அறிக்கை விடுகின்றன.. இப்போது ஏதாவது சொன்னால் அது பெண்ணுரிமை வாதிகளை சீண்டி விடுவதாக இருக்குமோ என்ற பயம் அல்லது "நானெல்லாம் யோக்கியனாக்கும்" என்றுகாட்டிக்கொள்ளும் ஆர்வம் தான் தெரிகிறதே தவிர யாரும் மனச்சாட்சிப்படி பேசுவதாக தெரியவே இல்லை.. நூற்றாண்டுகளாய் , ஆயிரமாண்டுகளாய் தொன்றுதொட்டு வந்த இந்திய கலாச்சாரம் பண்பாடு எல்லாவற்றையும் நவீன யுவதிகள் உடைத்து சிதறடிக்க பதாகைகளை ஏந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு "நனையும் ஆட்டிற்காக அழும் ஓநாய்"ஆண்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்..

நடந்த சம்பவம் நமக்கெல்லாம் செய்தி.. ஊடகங்களுக்கோ தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங் கை உயர்த்த கிடைத்த வரம்.. ஆனால் அந்த பெண்ணின் நிலை.. அந்த பெண்ணை பெற்றோரின் நிலை...??
அந்த பெண் ஒன்றும் மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தன்னுடைய பெற்றோருக்கு மருந்துவாங்கவோ , இல்லை தான் படிப்பை முடித்துவிட்டோ இரவு பதினோரு மணிக்கு வரவில்லை. ஒரு ஆண் நண்பனை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்,,, இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் நடந்துவிட்டதே.. அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முன்வருவாரா.??? இதனால் அவருக்கு இழப்பு என்ன?
கொஞ்ச நாளில் ஊடகங்கள் அவர்களை மறந்துவிடும். நாமும் மறந்துவிடுவோம். ஆனால் அவர்கள் உயிரோடிருப்பார்கள். இரவில் ஒரு இளம்பெண்ணுடன் ( யாரோ பெற்ற பெண்தானே ) ஜாலியாக ஊர் சுற்ற போனவர் தனக்கு மனைவியாக வேறொரு பெண்ணை தேடிப்போய் விடுவார்... ஆனால் அந்த பெண்ணை பெற்றவர்கள் அந்த பெண்ணை பார்த்து பார்த்து வாழ்நாளெல்லாம் நரகம் அனுபவித்து செத்து போவார்கள்.. அதையும் மீறி யாரோ ஒரு தியாகி அந்த பெண்ணை மணம் செய்ய முன்வரலாம். ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை...

ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே..
ஒரு பெண்ணுடன் நட்பாயிருக்க பத்து ஆண்கள் தயாராயிருப்பார்கள் ஆனால் அந்த பெண் காதலியாக இருந்தால் அவள் வேறொரு ஆணுடன் சகஜமாக பழகுவதை ஏற்க மாட்டார்கள்.. அவளே மனைவியாகிவிட்டாலோ வேறொரு ஆணுடன் பழகுவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்... இதுதான் நிஜம்.
ஒரு பெண்ணுடன் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வெளியிடங்களுக்கு மிக சந்தோசமாக செல்லும் ஐந்து ஆண்கள் , அந்த பெண் "என்னை திருமணம் செய்துகொள்கிறாயா.." என்று கேட்கும்போது மறுத்து விடுவார்கள். இதை "லவ் டுடே " என்ற படத்தில் திரு பால சேகரன் என்ற இயக்குனர் ஆணி அடித்ததுபோல் சொல்லி இருப்பார்... இதுதான் ஆணின் நிஜ முகம்..

உங்கள் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.. நீங்கள் சுதந்திரம் என்று சொல்வது உங்கள் பெற்றோரின் வயிட்றில் புளிகரைப்பதை உங்களால் இப்போது உணர முடியாது.... அப்படி உணர நீங்கள் பெற்றோராக வேண்டும்.

சும்மா அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழ்ந்துகொண்டிருப்பதுமாதிரி பேசினால் மட்டும் ஆகாது... நமது கலாச்சாரத்தை விரும்பி அந்த மக்கள் வாழ ஆசைபடுகிறார்கள்.. ஆனால் வியாபாரிகளோ.. அதுதான் நிஜமான நாகரீகம் என்று ஒரு மாயையை விதைத்து அதனை வளர்க்கிறார்கள்.. அதை நம்பி அந்த நாகரீகத்தை பின்பற்ற ஆர்வமாயிருக்கிரீர்கள்.அந்த மாயவலை உங்களை வீழ்த்தி அவர்களை பணக்காரர்கள் ஆக்கும்..

சிங்கத்தை வேண்டுமானால் வலை விரித்து பிடிக்கலாம்பிடிக்கலாம்... யானையை குழிவெட்டி பிடிக்கலாம்.. ஆனால் கொசுவுக்கு பயந்து வலைக்குள் ஒளிவது புத்திசாலித்தனமே தவிர அசிங்கம் இல்லை... உங்கள் பெற்றோரை நம்புங்கள்.. உங்கள் சகோதரனை நம்புங்கள்... உங்கள் கணவனை பிள்ளைகளை நம்புங்கள்...

லட்டு சாப்பிட்டால் எப்படி இனிப்பாக இருக்கும் என்று என்று யாரும் விளக்கி சொன்னால் அதை நாம் நம்பிக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை... உடனே ஒரு லட்டு வாங்கி சாப்பிட்டு பார்க்கலாம்... ஆனால் நெருப்பு சுட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவ மனையில் ஒருவரை பார்க்க நேர்ந்தால் நெருப்பிடம் விலகி இருப்பது மட்டுமே நலம்.. அதல்லாம் முடியாது நானும் சுட்டுகொண்டால் மட்டுமே நான் நம்புவேன் என்று யாரும் சொல்வார்களானால்... மௌனம் தான் எமது பதிலாக இருக்கும்
தூண்டில்காரனை நம்பாதீர்கள். அந்த புழுக்களுக்கு பின்னே ஒரு விபரீதம் இருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக