சனி, 20 ஜூன், 2015

கோபிநாத்துக்கு ஒரு குட்டும்.. என் சந்ததிக்கு ஒரு ஆதாரமும்..

லாப நோக்கமில்லாத சமூக சீர்திருத்தத்தை மட்டுமே முன்னிறுத்தி (????!!) ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் இரு பாலினத்தவர்கள், இருவேறு சமூகத்தவர்கள்.. இரு வேறு மதத்தினர்களை கொம்பு சீவி விடும் அற்புற சமூக போராளி திரு நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் இவரது மனோநிலைக்கு ஒத்தில்லாத கருத்தை பேசுபவரிடம் கேட்டும் அதி புத்திசாலித்தனமான கேள்வி "என்ன ஆதாரம்.... எங்க இருக்கிறந்து அந்த ஆதாரம்...?"

தெரியாமல் தான் கேட்கிறேன்... ஆதாரம் என்பது என்ன??? எத்தனையோ நூற்றாண்டுகளாய் நமது முன்னோர்கள் பாரம்பரியமாய் சொல்லி வந்தார்களே மஞ்சள் ஒரு நோய் நிவாரணி.. கிருமி நாசினி என்று... வேம்பு ஒரு மருத்துவ குணம் நிறைந்தது என்று... அதற்கெல்லாம் என்ன ஆதாரம்...??? எல்லாவற்றையுமே கண்கூடாக பார்த்தவர்கள் நாம்.. அனுபவித்து உணர்ந்தவர்கள் நாம்... ஆனால் அமெரிக்கா காரன் அதற்கு பேடன்ட் ரைட் வாங்கி வைத்துக்கொண்டிருப்பதும்... அவர்களது ஆய்வு கூடத்தில்.."மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது" என்று யாரோ ஒரு ஆய்வாளர் வழங்கிய சான்றிதழும்தான் ஆதாரமா..? அதைதான் இவர் ஏற்றுக்கொள்வாரா..???


எந்த ஒரு கருத்தையும் நம்ப வேண்டுமானால் அதற்கு இணையத்திலிருந்து சில இணைப்புகளை கொடுப்பதை வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றனர் சில அறிவாளிகள்.. இணையத்தில் எழுதி வைத்தது யார்... அவரும் என்னை போன்ற.. உங்களை போன்ற ஒரு மனிதர் தானே..அவர் பத்து வருடங்களுக்கு முன்போ.. இல்லை நேற்று க்கொடவோ எழுதியது உங்களுக்கு இன்று ஆதாரமென்றால் நான் இப்போது எழுதுவது நாளைக்கு ஆதாரம்... நாளை என்னுடைய சிந்தனையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நான் ஆராதத்தை விட்டு செல்கிறேன்..
பதிவு செய்யப்படாத விஷயங்கள் எல்லாமே பொய்யாகி விடுமா என்ன???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக