சனி, 20 ஜூன், 2015

ஆதரிப்போம்.. பூரண மதுவிலக்கை..

திரு வை கோ அவர்களின் அனேக போராட்டங்களின் மீதும், திரு ராமதாஸ் அவர்களின் அனேக கருத்துக்கள் மீதும் நமக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும்... 
மதுவுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தை பாராட்டவும் ஆதரிக்கவும் தான் வேண்டும்..

வழக்கம் போல என் தலைவன் சொல்லிவிட்டார் என்றோ தலைவி சொல்லிவிட்டார் என்றோ சொம்பை தூக்கி கொண்டு திரியாமல் இந்த போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்... இல்லையேல்.. குறைந்த பட்சம் மௌனமாவது கடை பிடியுங்கள்...

மதுவிலக்கை அமல் படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் .. அதனால் கள்ளச்சாராய சாவுகள் நிகழும் என்று சப்பை கட்டு கட்டுவது அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது...
அப்படி என்றால் கற்பழிப்புகள் பெருகுகிறது என்று விபசார விடுதிகளை திறக்க தயாரா?? சட்டத்திற்கு முரணான செயல்களை தடுக்க துப்பில்லாத அரசு..... சட்டத்திற்கு முரணான காரியங்களை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்குமா??
பாண்டிச்சேரிக்கு போய் குடிப்பார்கள்... ஆந்திரா- கர்நாடகாவிற்கு போய் குடிப்பார்கள் என்று சொல்லுகிறீர்களே... அப்படி போய் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் இந்த பூமிக்கு பாரம்.. சாகட்டும் விடுங்கள்...

பொங்கல் வியாபாரம் 300 கோடி... தீபாவளி வியாபாரம் 200 கோடி என்று புள்ளி விபரங்கள் சொல்பவர்கள் இது நிகர லாபமா .. இல்லை மொத்த வியாபாரமா என்று சொல்வதில்லை .. மொத்த வியாபாரம் என்றால் அவற்றின் கொள்முதல் விலை எவ்வளவு... இது யாருக்கு போகிறது...??
நிகர லாபம் என்றால் மொத்த விற்பனை எவ்வளவு... ஒரு மது பாட்டிலின் தயாரிப்பு செலவு 25 ரூபாய் என்றும் விற்பனை விலை 240 ரூபாய் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன..

இப்படி ஓரிரு குடும்பங்களை வாழவைக்க தமிழக தாய்மார்களின் தாலி அறுந்து போக வேண்டுமா..?? அவர்களின் பிள்ளை குட்டிகள் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா...
இவற்றை மறைக்க இலவசமாய் தூக்கி எரியும் எலும்புத்துண்டுகளை பொறுக்கி திருப்தியடையும் நாய்களாகத்தான் எம் தமிழ் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி இருக்கிறதா???

இந்த போராட்டத்தில் திரு வை கோ அவர்களுக்கும் திரு. ராமதாஸ் அவர்களுக்கும் ஆதரவளியுங்கள்... கட்சிகளை கடந்து.. அவர்களுக்கு நீங்கள் ஒட்டு எல்லாம் போட வேண்டாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக