சனி, 20 ஜூன், 2015

தாவணி...

தாவணி...

(இன்றைய என் பதிவு.. நாளைய வரலாறு)

கண்காட்சியகத்திலாவது காண கிடைக்குமா என ஏங்க செய்யும்
எங்கள் பாரம்பரிய ஆடைகளில் ஒன்று... ஒரு பெண் பருவமடைந்த உடனோ.. 
அல்லது பாலின அடையாளங்களை சுமக்க தொடங்கும் நாட்களிலோ இந்த ஆடை 
அணிய தொடங்குவார்கள். ஒரு சிலர் திருமணத்திற்கு முன்பு வரை 
இதை அணிந்து இருப்பார்.. திருமணத்திற்கு பின் சேலைக்கு மாறி விடுவர்... 
ஒரு சிலர் திருமணத்திற்கு பின்னாலும் இதை அணிந்துகொண்டிருப்பர்..

தாவணி அணியும் பழக்கம் சுமார் 17ம் நூற்றாண்டுகளில் தொடங்கி இருக்கலாம்
என்று சரித்திர ஆய்வாளர் (??) செந்தில் கே நடேசன் தெரிவிக்கிறார்.

இந்த தாவணி உடை என்பது உள்ளாடைகளை தவிர்த்து டிசைனர் பாவாடை ,
சட்டை(Blouse ) மற்றும் ஒரு முழு சேலையின் பாதி அளவு இருக்கும் ஒரு துணி.
(இதுதான் பிரதான தாவணி). 
இந்த மூன்றையும் உள்ளடக்கியது..டிசைனர் பாவாடையின் நிறத்திலேயே 
சட்டையும் இருக்கும்.. அல்லது தாவணியின் நிறத்திலேயே இருக்கும்.. 
அவரவர் ரசனைக்கு ஏற்ப இருக்கும்.












இது பட்டு, டெரிகாட்டன், பாலியெஸ்டர் , உள்ளி உள்ளி, பூனம் , ஷிபான் போன்ற துணி 
வகைகளில் கிடைக்கும்.. பண்டிகை காலங்களிலோ, உறவினர்களின் 
திருமண வைபவங்களிலோ பெரும்பாலும் பட்டு பாவாடை, 
மற்றும் பட்டு சட்டை ஆகியவற்றுடன் தாவணிகள் அணியப்படும்.. 
இது ஒருவித அழகையும் கம்பீரத்தையும் கூடிய தோற்றம் தரவல்லது..

பெரும்பாலான வருமானம் குறைந்த குடும்பங்களில் பிறந்த பெண் குழந்தைகள் 
வளர வளர அவர்களுக்கு மாற்று தாவணி வாங்கி கொடுக்க வசதி இல்லாத தாய்மார்கள் 
தம்முடைய சேலையை இரண்டாக கிழித்து தன்னுடைய மகளுக்கு 
இரண்டு தாவணியாய் அணிவித்து அழகு பார்ப்பார்,,

















இதை அணியும் முறை..

பாவாடை மற்றும் சட்டையை அணிந்த பிறகு நீளமாக இருக்கும் தாவணியின் 
ஒரு மூலையை இடது கையால் வயிற்று பகுதியில் செருக வேண்டும்.. 
அதை அப்படியே பின்புறமாக எடுத்து வலது புறத்தில் மேலே கொண்டுவந்து 
இடது தோள் பட்டையின் வழியாக முதுகு புறம் விட வேண்டும்.. 
இப்படி முதுகு புறம் இடும் தாவணியின் முனை பனை ஓலை போல் மடிப்புகளுடன் 
அமைய வேண்டும்.. அவ்வாறு தோள்பட்டை வழியாக பெண் எடுக்கும் தாவணி முனை 
நழுவி விடாமை இருக்க அதனை தோள்பட்டை பகுதியில் சட்டையுடன் சேர்த்து 
ஊக்கு என்னும் கருவியால் இணைக்க வேண்டும்..

நேர்த்தியாக அணியப்படும் தாவணியை பின் புறமிருந்து பார்த்ததால் மிக சரியாக 
அளவெடுத்து வரையப்பட்ட தலைகீழ் முக்கோணத்தின் தோற்றம் தரும்.

(ஒரு வரலாற்று தகவலை பதிவிடும் நோக்கத்துடனும். 
என் எதிர்கால சந்ததிகள் தெரிந்துகொள்ள வேண்டியும் தொலைநோக்கு 
பார்வையுடன் மட்டுமே இந்த கட்டுரை எழுதப்படுகிறது...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக