சனி, 20 ஜூன், 2015

மக்களை திசை திருப்பும் யுக்தி- 100 நாள் வேலை

எங்க ஊர் கலுங்கடில (ஏரியின் வடிகால் பகுதிக்கு கலுங்கு என்று பெயர்) நாங்க தூண்டில் போட்டு மீன் பிடிக்க போவோம்... கொஞ்சம் ஆழமான பகுதிகள்ல தான் பெரிய மீன் இருக்கும்... மேல் பகுதியில கெண்டைகுஞ்சுகளும் புருட்டி மீனுமா சுத்திகிட்டிருக்கும்.... தூண்டில் முள்ளுல மண் புழுவ கோர்த்து வீசினா அந்த தூண்டில் முள் கீழ போறதுக்கு முன்னாடியே இந்த கெண்டை குஞ்சுகளும் புருட்டி மீனும் அந்த புழுவ கடிச்சு சாப்பிட்டுடும்.... ரொம்ப சின்ன குஞ்சுகளா இருக்கறதால தூண்டில்லையும் இந்த குஞ்சுங்க மாட்டாது... பெரிய தொல்லை பண்ணும்...

அப்போ கொஞ்சம் மண்புழுவ எடுத்து கொஞ்சம் தூரமா தண்ணில வீசினா அந்த குஞ்சு குலுவானெல்லாம் அத கடிக்க ஓடும்... அந்த நேரத்துல தூண்டில் முள்ள தண்ணில போட்டுட்டா அது நீரோட அடிப்பகுதிக்கு, பெரிய மீன்கள் இருக்க பகுதிக்கு போயிடும்... அப்புறம் என்ன... பெரிய மீனு புழுவ தின்ன வரும்... நெட்டி முழுந்தினா இழுத்துட வேண்டியது தான்....

100௦௦ நாள் வேலை அதுதான்.... இந்த குஞ்சு மீனுங்களுக்கு புழுவ போட்டு திசை திருப்பி பெரிய மீனபுடிச்சது மாதிரி... ஜனங்க வாங்கற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ரதில்லன்னு தெரிஞ்சும் அரசாங்கம் தலைக்கு 12௦ ரூபா கொடுக்குதுன்னா சும்மா இல்ல..... உங்கள இப்போதைக்கு திசை திருப்பி பெரிசா எதையோ ஆட்டைய போட போறானுங்க... 
காக்காணி அரக்காணி வச்சிருக்கவனை எல்லாம் தண்ணி கொடுக்காம, உரம் கொடுக்காம, கரண்டு கொடுக்காம அழிச்சவனுங்க இப்போ உங்கள வச்சு வேலைக்கு ஆள் கிடைக்காமையும் அழிக்கிரானுங்க.... தரிசு போட்டு வைக்கிறத விட வித்துபுடலாம்னு எங்களையே நினைக்க வைப்பாய்ங்க... அப்போ தான் இவனுங்க சுய ரூபம் தெரியும்.... பெரிய பெரிய கம்பெனி காரன் எல்லாம் உள்ள வந்து அந்த நிலத்தை எல்லாம் மொத்தமா வாங்கி வேலி போட்டு விவசாயம் பண்ணுவான்.... இன்னிக்கு நாங்க விளைய வைக்கிறதுக்கு எவனோ விலை வைப்பான்... ஆனா அது பெரிய கம்பெனி காரன் கைல போச்சுன்னா அவன் சொல்றதுதான் விலை...

இன்னிக்கு வேலை செய்யாம ஓசில கெடைக்குதுன்னு எங்கள மாதிரி சின்ன சின்ன விவசாயிங்க பொழப்புல மண்ணள்ளி போட துணை போனீங்க..... அப்புறம் நாம ரெண்டு பேருமே சேர்ந்து எவன்கிட்டயோ கூலிக்கு தான் போகணுமே தவிர.... நீங்க முதலாளி ஆகவே முடியாது....

என்னிக்கும் கூலிக்கு மாரடிச்சவன் உனக்கு அது பெருமையா இருக்கும்.... நட்டம் கிடையாது... ஆனா நாங்க அப்படி இல்ல.... அதே நேரம் பெரிய கம்பெனிகாரன்கிட்ட கூலிக்கு போனா உங்கள சார புழிஞ்சுகிட்டு சக்கயத்தான் துப்புவான்....
ஆனா எங்கள மாதிரி சிறு குறு விவசாயிங்க அப்படி இல்ல.. பொன் முட்டை இடுற வாத்து மாதிரி... அவனுங்களோட சேர்ந்துகிட்டு எங்க கழுத்த அறுகாத.... அப்புறம் வந்து..."தெரியாம கெட்டுபோயிட்டோம்"ன்னு கதற வேண்டி வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக