புதன், 7 செப்டம்பர், 2016

நிர்வாக சங்கிலி



நான் துபாய்ல வேலை செஞ்ச கம்பெனியோட (நீ வேலை செஞ்சியா.....???? அட நம்புங்க எசமான்... அப்போ எல்லாம் ராத்திரி எட்டு மணிக்கு மேலயும், லீவு நாள்லயும் தான் பேஸ்புக்ல வேலை) வேர்ஹவுஸ்ல ஒரு மெசனைன் ஃப்ளோர் பண்ணி இருந்தாங்க...

அதாவது வேர் ஹவுசோட அளவு 5000 சதுர அடி... உயரம் சுமார் அம்பது அடி இருக்கும்... தரைல இருந்து இருபது அடி உயரத்துக்கு இவங்க நடுவுல டெம்ப்ரவரியா ஒரு ஃ ப்ளோர் ரெடி பண்ணி அதையும் ஸ்டோரேஜ்க்கு பயன் படுத்தினாங்க... 5000 SQ FT வாடகைக்கு எடுத்து , 4000 SQ FT எக்ஸ்ட்ராவா ரெடி பண்ணி ஸ்டோரேஜ் பண்ணினாங்க... ( இப்போ புரிஞ்சுருக்குமே... கரெக்ட்... கம்பெனி ஓனர் இந்தியனே தான் )

ஒரு நாள் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு இன்ஸ்பெக்டர் வந்தார்... யாரையும் எதுவும் கேக்கல...நாலைஞ்சு போட்டோ எடுத்துகிட்டு போய்ட்டார்... ஓனர் வந்ததும் நான் தான் சொன்னேன்.. "இது மாதிரி இன்னாரு வந்தாங்க... போட்டோ எடுத்தாங்க.. போய்ட்டாங்க... "ன்னு...

"ஏதாவது சொன்னாரா அந்த ஆள்"ன்னு கேட்டார்...

"ஒன்னும் சொல்ல"ன்னு நான் சொன்னேன்..

ஒரு வாரம் அப்புறம் துபாய் முனிசிபாலிட்டில இருந்து ஒரு நோட்டீஸ் வந்துது...அதாகப்பட்டது..."நீங்க இப்படி இப்படி டெம்ப்ரவரி வேலை பண்ணி இருக்கீங்க.. அதுக்கு முனிசிபாலிட்டி அப்ரூவல் இல்ல... அதனால அதுக்கு அப்ரூவல் வாங்குங்க.."ன்னு...

அந்த லெட்டரை கொண்டு போய் நான் ஓனர்கிட்ட கொடுத்தேன்.. அவரும் அத வாங்கி தூக்கி போட்டுட்டார்... அப்புறம் அடுத்த வாரம் ஒரு ரிமைண்டர் நோட்டிஸ் வந்துது.. அதையும் தூக்கி போட்டாச்சு... ஒரு நாள் திடீர்னு கரெண்டு நின்னு போச்சு... துபாய் ல கரென்ட் கட்டா.... என்னடா இதுன்னு போய் பார்த்தா.. அங்க DEWA (Dubai Electricity & Water Authority) ஊழியர் ஒருத்தர் நம்ம கம்பெனிக்கு வர லயனோட பீச புடுங்கிட்டு நிக்கிறார்.... அவர என்ன சங்கதின்னு கேட்டா எனக்கு தெரியாது.. ஆபீஸ்ல சொன்னாங்க.. நான் புடுங்கிட்டேன்னார்... அவர் பீச புடுங்கினதுக்கு மொத நாளு நம்ம கம்பெனிக்கு DEWA இருந்து ஒரு நோட்டிஸ் வந்திருக்கு.. அன்னிக்கு யாரும் போஸ்ட் பாக்ஸ் செக் பண்ணாததால அந்த நோட்டீஸ் விஷயம் தெரியல... அப்புறம் அத பிரிச்சு படிச்சா "இந்த மாதிரி நீங்க முனிசிபாலிட்டில அப்ரூவல் வாங்காம என்னமோ பண்ணி இருக்கீங்க.. முனிசிபாலிட்டில இருந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு.. முனிசிபாலிட்டில இருந்து "அவங்க பிரச்சினை முடிஞ்சுது.. அவங்களுக்கு கரெண்டு கொடுங்க"ன்னு சொன்னா தவிர உங்களுக்கு கரண்டு தர மாட்டோம் " ன்னு...

ஆஹா... இப்போதான் நம்ம ஒன்றுக்கு நிலைமையோட தீவிரம் புரிய ஆரம்பிச்சுது... என்னை துரத்தினார்.. ஓடு.. ஓடு.. என்னன்னு பாருன்னு..... நேரா DEWA ஆபீஸ்க்கு ஓடினேன்... ரம்ஜான் நேரம் அது.... அந்த அதிகாரி "ஒரு மாசம் கிரேஸ் பீரியட்" தரோம்.. அதுக்குள்ளே வேலை முடிச்சுட்டு முனிசிபாலிட்டி அப்ரூவலோட வாங்க.. அதுக்கு முன்னாடி இப்போ கனெக்ட் பண்றதுக்கு 10000 திராம்ஸ் செக்யூரிட்டி டெபாசிட் கட்டுங்க ன்னு சொன்னார்.. அத கட்டி கரென்ட் கனெக்ஷன வாங்கிட்டு அப்புறம் பழைய நோட்டீஸ தூக்கிகிட்டு முனிசிபாலிட்டிக்கு ஓடினோம்.. அவங்க தெளிவா சொல்லிட்டாங்க... "எங்ககிட்ட அப்ரூவல் வாங்காம நீங்க இந்த வேலைய பண்ணி இருக்கீங்க.. எங்க அப்ரூவல் டிபார்ட்மென்ட்ல இருந்து அப்ரூவல் லெட்டர் வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லிட்டாங்க... அது வேற இடம்... அங்க ஓடினா.. "மொதல்ல நீ பண்ணின எக்ஸ்ட்ரா வேலையோட டிராயிங் எடுத்துட்டு வா"ன்னாங்க.... ஏற்கெனவே எசெஞ்ச வேலைக்கு இப்போதான் டிராயிங் ரெடி பண்ணனும்.. அதுக்கு ஒரு தனியார் கம்பெனிய புடிச்சா... அவன் ஒரு டிராயிங் ரெடி பண்ணி கொடுத்தான்.... அத எடுத்துகிட்டு மறுபடியும் முனிசிபாலிட்டி அப்ரூவல் டிபார்ட்மென்ட் க்கு போனோம்... முதல்ல இத CIVIL DEFENSE ல ( உள்நாட்டு பாதுகாப்பு- தீயணைப்புத்துறை) காட்டி அப்ரூவல் வாங்கிட்டு வான்னு சொன்னாங்க....

நேரா அங்க ஓடினோம்... "இதுக்கு அப்ரூவல் கொடுக்கணும்னா Fire Alarm , Smoke detector, sprinkler எல்லாம் வச்சு அத யார் வச்சு கொடுத்தாங்களோ அவங்க கிட்ட இருந்து ஒரு செர்டிபிகேட் வாங்கிட்டு வா" ன்னு சொன்னாங்க ...

ஷ்.... ஷப்பா.... ஒரு அம்பது வரி சேந்தாப்ல படிக்கவே கண்ண கட்டுதே.... இதை எல்லாம் நிஜமா செஞ்சவனுக்கு எப்படி இருக்கும்... எனக்கு அப்படி தான் இருந்துச்சு.. ஏன்னா மேல சொன்ன எல்லா இடத்துக்கும் போனவன் நான் தான்... அப்புறம் ஒரு பயர் பைட்டிங் எக்யூப்மென்ட் கம்பெனிய புடிச்சு அந்த வேலைய முடிச்சு, அப்புறம் மறுபடியும் civil defense , municipality, அப்புறம் DEWA ன்னு ஆன்டி கிளாக்வைஸ் ல அப்ரூவல் வாங்கி கரென்ட் கொண்டு வரும்போது அபராதம் சேர்த்து ஆன செலவு ஒருலட்சத்து அம்பதாயிரம் திராம்ஸ்...

இதே நம்மூர்ல நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்??? விசிடிங் வந்த இன்ஸ்பெக்டர் அவங்க டிபர்ட்மென்டக்கே சொல்லாமையோ, இல்ல மேலதிகாரிகளின் துணையுடனேயோ ஒரு அமவுண்ட வாங்கிகிட்டு யாருக்கும் சொல்லாம வீட்டுக்கு போய் இருப்பர்....

சரிடா.... காலைல துபாய் கவர்ன்மென்ட் தையும் தும்மலையும் லிங்க் பண்ண போறதா சொன்னியே.... இதுக்கும் தும்மலுக்கும் என்ன சம்பந்தம்...???

நம்ம மூச்சுக்குழல்ல அனுமதி இல்லாம ஏதாவது தூசு தும்பு புகுந்திடும்... அந்த மாதிரி நேரத்துல மூச்சுக்குழல் உடனே கம்ப்ளைன்ட் அனுப்பும் மூளைக்கு.... மூளை உடனே இதயம், நுரையீரல், கணையம், கிட்னின்னு உடம்புல இருக்க எல்லா டிபர்ட்மென்ட் க்கும் நோட்டீஸ் அனுப்பும் உடனே அந்த தூசுக்கு எதிரா எல்லா உறுப்புகளும் வேலை நிறுத்தம் செய்யும்... இது எல்லாம் மாசக்கணக்குல நடக்குறது இல்ல.... எல்லாமே மைக்ரோ செகன்ட் டைம்ல நடக்குறது... அடுத்து ஒரு தும்மல் வரும்.. அந்த அனுமதி இல்லாம உள்ள புகுந்த தூசிய வெளில அனுப்பிட்டு தான் மத்த வேலை... அப்படி தும்மும் ஆக்சன் நடக்கும் போது உடம்புல எந்த உறுப்பும் வேலை பண்ணாது.. கண்ணு கூட முடிக்கும்...அனுமதி இல்லாம நம்ம உடம்புல புகுந்தத வெளியேத்த நம்ம உடம்பு காட்டுற ஆர்வம் தான் துபாய் கவர்ன்மென்ட் மக்கள் நலனில் காட்டும் ஆர்வமும்...

நம்மூர் எப்ப சார் அப்படி ஆவும்?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக