புதன், 7 செப்டம்பர், 2016

கணக்கு.



மில்லியன் கணக்கில் ட்ரான்சாக்ஷன் செய்ய கூடிய ஒரு தொழிலதிபர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் போய் , தனக்கு உடனடியாக 50000 டாலர் கடன் தேவைப்படுவதாகவும், அதற்கு ஈடாக தன்னுடைய பென்ஸ் காரை வைத்துக்கொள்ளும் படியும், தாம் அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி கட்டிவிட்டு தன்னுடைய காரை மீட்டுக்கொள்வதாகவும் சொன்னார்...

பென்ஸ் காரின் டாக்குமென்ட் எல்லாம் மிக சரியாகவே இருந்தது.. அந்த தனியார் நிதி நிறுவனமும் அந்த தொழிலதிபரின் காரை வைத்துக்கொண்டு டாலர்களை கடனாக கொடுத்தது.. வட்டி 1% என்ற விகிதத்தில்...

ஒரு மாதம் கழித்து வந்த அந்த தொழிலதிபர் வட்டித்தொகை 5௦௦ டாலர் மற்றும் அசல் 50000 சேர்த்து கட்டினார்... அப்போது அங்கிருந்த அந்த நிதி நிறுவன அதிகாரி...
"சார்... உங்களது கார் டாக்குமென்ட்களை வைத்து விசாரித்த பொழுது நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் மில்லியன் கணக்கில் வங்கிகளில் பண பரிமாற்றம் செய்பவர் என்றும் அறிந்தோம்,... நீங்கள் கேட்டால் வட்டியே இல்லாமல் கடன் கொடுக்க அந்த வங்கிகள் தயாராக இருப்பதாகவும் அறிந்தோம்.. பிறகு ஏன் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் வெறும் 50000 டாலருக்கு தங்களின் விலை உயர்ந்த பென்ஸ் காரை அடமானமாக கொடுத்தீர்கள்..."

அப்போது அந்த தொழிலதிபர் சொன்னார்... இப்படியான கணக்குகளின் மூலமே என்னால் பெரிய தொழிலதிபராக வளர முடிந்தது.. எனக்கு 30 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது... என்னுடைய காரை பார்க்கிங் ஏரியாவில் விட்டு சென்றால் ஒரு நாளைக்கு 30 டாலர் வீதம் 900 டாலர் கொடுக்க வேண்டும்.. அதோடு பப்ளிக் பார்க்கிங்கில் என்னுடைய காருக்கு பாதுகாப்பும் குறைவு... இப்போது உங்களிடம் வாங்கிய 50000 டாலருக்கு வட்டியாக நான் வெறும் 500 டாலர் மட்டுமே கொடுத்து இருக்கிறேன்.. எனக்கு 400 டாலர் மிச்சம்... அதோடு என்னுடைய காரையும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டீர்கள்..."

## நாம எப்போ பணக்காரன் ஆவுறது???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக