புதன், 7 செப்டம்பர், 2016

காக்கைக்கும் தன் குஞ்சு...


மனிதர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு... அதன் பளபளப்பு, அதன் நிறம், அதன் ஜொலிப்பு, அதன் விலை.. இப்படி அதற்கு பல காரணங்கள் உண்டு..



தங்கத்தை விட விலை கூடுதலான பிளாட்டினம் கூட நிறம் மற்றும் பளபளப்பில் தங்கத்தை வெல்ல முடியவில்லை.. மற்றபடி வைரம் பளபளத்தாலும்/ஒளியை சிதறடித்து மின்னினாலும் அது பெரிய பணக்காரர்களின் ஸ்டேடஸ் சிம்பலாய் மட்டும் தான் இருக்கிறது.. வைரத்தையும், பிளாட்டினத்தையும் பற்றி அவ்வளவாக எல்லோருக்கும் தெரியாது... ஆனால் தங்கம் அனைவராலுமே விரும்பப்படும் மிக விலையுள்ள, மதிப்புள்ள, கவர்ச்சி மிக்க பொருளாக தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது...

மனிதர்கள் தன்னுடைய குழந்தையை கொஞ்சும் போது.. என் தங்க மகனே/மகளே.. என் பவுனு மகனே/மகளே என்றெல்லாம் கொஞ்சி, தன்னுடைய குழந்தையை மிக மதிப்புள்ளதாய் கொண்டாடுவார்கள்..

மனிதர்களை பொறுத்தவரை தங்கம் என்பது மதிப்பானது... ஆனால் காக்கைகளை பொறுத்தவரை அந்த தங்கம் என்பது என்னவென்றே தெரியாது... கல், மண் போன்று தங்கமும் எதற்கும் உதவாத ஒரு பொருள்.. அவ்வளவுதான்... பின் எப்படி காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு ஆகும்??

காக்கையை பொறுத்தவரை, ஒரு வடை, முறுக்கு, இறைச்சி போன்றவைகளே பெரிய மதிப்பான பொருள்.. நியாயமாக "காக்கைக்கும் தன் குஞ்சு வடை குஞ்சு.. முருக்கு குஞ்சு.." என்று தானே இருக்க வேண்டும்...

மனிதர்களுக்கு என்ன தெரியுமோ அதையே மற்ற உயிரனங்கள், உயிரற்றவை மீதும் திணித்து, அவைகளின் எண்ணமும் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்று மனிதனாகவே முடிவு செய்து கொண்டு அதையே பேசிக்கொண்டும் இருக்கிறான்...

மனிதர்களிலும் இப்படித்தான்.. அதாவது ஒருவன் தான் நினைப்பவற்றைதான் அடுத்தவனும் நினைப்பான் என்று தவறான கற்பனை செய்துகொண்டு , மற்றவர்களின் மீதும் தன்னுடைய என்னத்தை திணிக்க முயல்வான்... அதை தான் நிஜம் என்று நம்புவான்... அவனுடைய எண்ணத்தை வைத்து அவனாகவே ஒரு உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள்.. நாம் தான் எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் இருப்பான்...

இப்படியானவர்களுக்கு தான் பகுத்தறிவாளன் என்று பெயர்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக