புதன், 7 செப்டம்பர், 2016

உனது எல்லைக்குள் நில்...




பாதுகாப்பு விதிமுறைகளை கடை பிடிக்க சொன்னால் அதை மீறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் நினைக்கும் நாம், அதனால் பாதிப்பு ஏற்பட்ட உடன் அரசை குறை சொல்கிறோம்...

பண்டிகை காலங்களில் கடற்கரையில் காவல் துறை தடுப்பு வேலி அமைத்தால் அதை மீறிக்கொண்டு கடலுக்குள் இறங்குவது.. காவல் துறை தடுத்தால் "எங்கள் உரிமையை தடுக்கிறீர்கள்.. எங்கள் கொண்டாட்டத்தை குலைக்கிறீர்கள்" என்று கோஷம் போடுவது.. அதேநேரம் யாரையாவது அலை இழுத்துச்சென்றால்.. உடனே.. "காவல்துறை கடமையை செய்யவில்லை என்று கூவுவது....

ஆட்கொல்லி விலங்குகள் இருக்கும் மிருக காட்சி சாலைகளில் பாதுகாப்பு வேலிகள் அமைத்திருப்பார்கள்... டெல்லி மிருக காட்சி சாலையில் அதை மீறி சென்ற ஒருவர் நேற்று புலியால் இழுத்து செல்லப்பட்டார்...

தடுப்பு வேலியின் உயரம் குறைவு என்று இப்போது அரசை குறை சொல்கிறார்கள்... புலி அந்த வேலியை தாண்டி வெளியே வந்திருந்தால் மட்டுமே வேலியின் உயரம் குறைவு என்பதை பற்றி பேச முடியும்.. இவன் சாகசத்தை காட்ட வேலியை தாண்டி உள்ளே குதித்தால் யார் பொறுப்பாக முடியும்.. இதனால் போனது இவன் உயிர்.. இதனால் பாதிக்கப்பட்டது இவன் குடும்பம்...

எதெற்கெடுத்தாலும் அரசை குறை சொல்வதை கை விட்டுவிட்டு, தனி மனித ஒழுக்கத்தையும், அரசின் கட்டுப்பாடுகளை கடை பிடித்தலையும் எப்போது நாம் முன்னேடுகிறோமோ.. அப்போதுதான் இது போன்ற செயல்களை கண்டிக்கும் உரிமை நமக்கு வருகிறது....

அப்படி கடை பிடிக்க தயாராக இல்லை எனில்...

என்னுடைய பாஷையில் சொல்வதென்றால்.... "சாவட்டும் விடு சனியன...."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக