புதன், 7 செப்டம்பர், 2016

எல்லாம் தெரிஞ்சவர்..


கொஞ்சம் வில்லங்கமான கதை... ஆனா விவரமான கதை...!!!

ஒரு பாலைவனப்பகுதியில ஒரு ராணுவ முகாம் அமைஞ்சு இருந்துச்சு... அங்க புதுசா ஒரு மேலதிகாரி மாற்றலாகி வந்தார்... கேம்ப சுத்தி பார்த்தப்போ அங்க ஒரு ஒட்டகம் கட்டி இருந்துச்சு...


இந்த ஒட்டகம் எதுக்காக இங்க கட்டி இருக்கு?ன்னு கேட்டார்...

அப்போ உடன் வந்த இரண்டு வீரர்கள் சொன்னாங்க... " கேப்டன்.. இங்க சூடு கொஞ்சம் அதிகம்.. வீரர்களுக்கு அடிக்கடி பாலியல் வடிகால் தேவைப்படும்...."ன்னு சொன்னாங்க...

அவங்கள மேல பேச விடாம "ஓகே ஓகே .. போதும்... எனக்கு புரிஞ்சுடுச்சு.." என்ற படி அந்த வீரர்களை முழுதாக சொல்ல விடாமல் தடுத்துவிட்டார்...

ஓரிரு நாட்கள் கழிந்தபின் ஒரு நாள் இரவு புதிதாக வந்த கேப்டன் அந்த ஒட்டகம் கட்டி இருந்த பக்கம் இருந்து தன்னுடைய பேன்டின் ஜிப்பை இழுத்து விட்டபடியே வந்தார்...

முன்பு அவருடன் வந்த அந்த இரு வீரர்களும் அதை பார்த்ததும்.. கேப்டன் என்பதையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்...

"எதற்காக சிரிக்கிறீர்கள்...? "

"கேப்டன்... நம்முடைய வீரர்களுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அந்த ஒட்டகம் மீதேறி அருகில் இருக்கும் பாலியல் தொழிலாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று வருவார்கள் என்று சொல்ல வந்தோம்... ஆனால் எங்களை பேசவே விடாத நீங்கள் இப்போது அந்த ஒட்டகத்தையல்லவா புணர்ந்து இருக்கிறீர்கள்..."

# அரசு தரப்பில் ஒரு அறிக்கை வெளிவரும் போது அதை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் அரைகுறையாக தெரிந்து கொண்டு, தமக்கு எல்லாமே தெரியும் என்பது போல அந்த கேப்டன் மாதிரி சிலர் ஒட்டகங்களை பபுணர்ந்துகொண்டு திரிகிறார்கள்...

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதையாவது கிளப்பி விட்டால் தான் பிழைப்பு ஓடும்... ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உடனே விமர்சன கனைகளை தூக்கிக்கொண்டு திரியும் சிலரை என்ன சொல்வது????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக