வியாழன், 20 செப்டம்பர், 2018

ஓவர் ஆக்டிங்

சரவணா ஸ்டோர் சரவணன் விளம்பரப்படங்களில் நடிப்பதை பற்றி மூண்டு விதமான கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே,...
ஒன்று.... ங்கொய்யால இவன் மூஞ்சிக்கு ஹன்சிகா கேக்குதா.... ஆஞ்சநேயர் தம்பி மாதிரி இருந்துகிட்டு இதுக்கு ஏன் இந்த வேலை...

இரண்டு.... ஹ்ஹ்மம்ம்ம்ம்..... கொடுத்து வச்சவன்... அதான்யா... பணக்காரன் நினைச்
சா என்ன வேணா செய்யலாம்.... என்று பெருமூச்சு...



மூன்று.... ஏன்... அவருக்கு என்ன குறைச்சல்.... எம்பியே படிச்சிருக்கார்... நிறைய சாதிக்கணும்னு ஆர்வம் இருக்கு.. அதை செயல்படுத்தி பணம் பண்ண கத்து வச்சிருக்கார்.... அவர் ஏன் நடிக்க கூடாது....

சரவணனை விடுங்கள்.... ஆனால்.. இந்த கருத்து சொல்லும் மூன்று விதமானவர்களை பற்றி இருக்கும் உளவியல் விஷயத்தை பார்க்கலாம்...
முதலாவது வகையினர் மிகவும் இயல்பானவர்கள்... தன்னுடைய ஆதங்கத்தை .. கவனிக்கவும்... பொறாமை அல்ல.... ஆதங்கம்.... தன்னால் இப்படி பணக்காரனாக முடியவில்லையே.. என்றோ.... ஹன்ஷிகா போன்ற அழகிகளுடன் கை கோர்க்க முடியவில்லையே... என்றோ ஏங்குபவர்கள்.. அவர்கள் ஏக்கத்தை இப்படி விமர்சனமாக வெளிப்படுத்தி தீர்த்துக்கொள்பவர்கள்.... இவர்கள் இயல்பானவர்கள்...

இரண்டாவது வகை... சாமான்யர்கள்.... மற்றவர்களின் நிலைக்கு தன்னால் வர முடியவில்லையே.. என்று தன்னைத்தானே நொந்துகொண்டு அதை ஒரு பெருமூச்சாய் உதிர்த்து விட்டு தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் கவனத்தை திருப்பி விடுவார்கள்... இவர்கள்தான் சாமான்யர்கள்..

மூன்றாவது வகை தான் கொஞ்சம் வில்லங்கம்.... இவர்கள் தங்களை தாங்களே பெருமையாய் நினைத்துக்கொண்டு... அடடா.. பாருங்கள்.. என்னால் எல்லாவற்றையும் இயல்பாய் எடுத்துகொள்ள முடியும்.. எனக்கு யார் மீதும் பொறாமையோ-ஏக்கமோ இல்லை.... பாருங்கள்.. நான் எல்லோரையும் மதிக்கிறேன்... அவர்களின் திறமையை மதிக்கிறேன்... நான் நேர்மையாளன்.. என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள முயலும் ஆயாசக்காரர்கள்... இவர்கள் என்னதான் பெரிய மனதுக்காரர்கள் போல நடித்தாலும்.. உடன் இருந்து கவனிப்பவர்களால் மட்டுமே இவர்களது வக்கிர எண்ணத்தை உணரவும், அனுபவிக்கவும் முடியும்..

#ரொம்ப சீன் போடாதீங்கடே.... இயல்பா இருங்
கடே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக