வியாழன், 20 செப்டம்பர், 2018

அள்ளிக்கொண்டு போகும் அரசு ஊழியர்கள்

இப்போ தான் எங்க பக்கம் எங்கிட்டு திரும்பினாலும் தென்னந்தோப்பு..... 30-35 வருஷம் முன்ன எல்லாம் யாரோ ஒருத்தர்-ரெண்டு பேர்தான் தென்னந்தோப்பு வச்சிருப்பாங்க... மத்த வீடுகள்ல வீட்டுக்கிட்ட ஒரு தென்னை மரமோ-ரெண்டு தென்னை மரமோதான் இருக்கும்....

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல அப்படி ஒரு தென்னை மரம் நின்னுச்சு.... அதுல ஓவியமா ரெண்டே ரெண்டு தேங்கா காச்சிருந்துச்சு..... இப்போ தேங்காய் வெட்றவங்க அம்பது-அறுபதடி உயர மரமானாலும் வாங்கு கத்தி வச்சு அறுத்துடறாங்க... ஆனா... அந்த காலத்துல கால்ல தளதாடிய* கட்டிட்டு மரத்துல ஏறித்தான் தேங்கா பறிப்பாங்க.... அதுவும் ஒரு சில குறிப்பிட்ட ஆளுங்கதான் மரமேறுவங்க... பறிக்கிற தேங்காய்ல ஒரு தேங்காய் அவங்களுக்கு.. அதுதான் கூலி...

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல நின்ன அந்த தென்னை மரத்துல ரெண்டே ரெண்டு தேங்கா இருந்துச்சுன்னு சொன்னேன்ல.... எங்க பெரியம்மா சாரதாம்பாள் , அப்படி மரமேறுற "ராமன்"ன்னு ஒரு ஆளை கூப்பிட்டு "ஏலே ராமா... இந்த தேங்காயை கொஞ்சம் பறிச்சு கொடுடா"ன்னு சொல்ல...

ராமனும் மரம் ஏறினான்... ரெண்டு தேங்காயை பறிச்சுப்போட்டுட்டு கீழ இறங்கிட்டான்... பறிச்சு போட்டதும் தான் தெரிஞ்சுது.. அந்த ரெண்டு தேங்காய்ல ஒன்னு ஒல்லி*...

ராமன் கீழ எறங்கி... அந்த ரெண்டு தேங்காய்ல நல்ல தேங்காய கூலியா எடுத்துகிட்டான்....

"ஏலே.. ஏலே... கொழம்பு வைக்கணும்டா... 5 ரூபா வாங்கிக்கோடா.... அந்த தேங்காய கொடுத்துட்டு போடா"ன்னாத்துக்கு..... "ம்ம்.... அதெல்லாம் முடியாது... எனக்கு தேங்காய்தான் வேணும்"னு எடுத்துட்டு போய்ட்டான்....

ஆக.... ரெண்டு தேங்கா.. ரெண்டுல ஒன்னு ஒல்லி.... அது எதுக்கும் உதவாது... பறிச்சவனுக்கு கூலியா இருந்த ஒரே ஒரு நல்ல தேங்காய அவன் கொண்டு போய்ட்டான்...

இப்படித்தான் இருக்கு நம்ம தமிழ்நாட்டோட நிலைமையும்.... ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு கூலியா , மாநிலத்தோட வருமானத்துல 80% போகுதுன்னு ஒரு பேச்சு இருக்கு... இதுல அகவிலைப்படி 2% உயர்வாம்....

இந்த தேங்காய் எப்போ பெரிசாகும்.. பெரிசாகும்ன்னு மரத்த வச்சு வளத்து பறிக்கலாம்னு காத்துக்கிட்டிருந்து... காய்ச்சதுல நல்ல தேங்காயை கூலியா கொடுத்துட்டு கொழம்பு வைக்க தேங்கா கிடைக்காம போன எங்க பெரியம்மா மாதிரித்தான் தமிழக மக்களும்...

வரிய கொடுத்துட்டு, ஓட்டையும் போட்டுட்டு "நமக்கு ஏதாவது நடக்கும்"ன்னு நம்பி உட்கார்ந்திருக்காங்க.... "நாங்க உங்களுக்காகத்தான் வேலை செய்றோம்"ன்னு இந்த அரசு ஊழியர்களும்.. ஆட்சியாளர்களும் மொத்தமாலவட்டிட்டு போய்டுறானுங்க...

ராமா... ராமா....

*தளதாடி - இரு கால்களையும் மாட்டிக்கொண்டு மரத்துடன் அணைந்து பற்றிக்கொள்ள உதவும் கயிறால் ஆன வளையம்

*ஒல்லி- தேங்காய் மாதிரியே இருக்கும்.. ஆனால் உள்ளே பருப்பு இருக்காது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக