வியாழன், 20 செப்டம்பர், 2018

நம்மை ஆள எடப்பாடி எப்படி வந்தார்??

ஒரு கதை...

ஒரு தமிழன், ஒரு மலையாளி, ஒரு தெலுங்கன்.. ஒரு கன்னடன்.... நாலு பேரும் ஒன்னா தங்கி இருந்த இடத்துக்கு பக்கத்துல ஒரு "இயற்கை அன்னை" கோயில் பாழடைஞ்சு போய் இருந்தத பார்த்தாங்க....

தமிழனுக்கு மனசு கேக்கல.... உடனே அந்த கோயில சுத்தம் பண்ணி, கழுவி.. ஒரு அகல் விளக்குல எண்ணெய் ஊற்றி விளக்கு ஏத்தி வச்சான்....

மறுநாள் வந்து பார்த்தப்போ.... அந்த அகல் விளக்குல திரி மட்டும் அப்படியே இருக்கு... ஆனா... எண்ணெய் இல்ல.... இதே மாதிரி தினசரி நடக்குது...
ஆரம்பத்துல அத என்னமோன்னு கண்டுக்காம விட்டுட்ட தமிழன் யோசிக்க ஆரம்பிச்சான்...

அதெப்படி... நியாயமா மொத்த எண்ணெயும் எரிஞ்சிருந்தா திரியும் சேர்ந்து எரிஞ்சு சாம்பலா போயிருக்கும்... ஒருவேளை விளக்கேத்தின கொஞ்ச நேரத்துலையே காத்துல விளக்கு அனைஞ்சிருந்தா மிச்ச எண்ணெய் அப்படியே இருக்கணும்... இங்க திரியும் அப்படியே இருக்கு.. ஆனா எண்ணெய் மட்டும் காணோம்...

ஆஹா... இதுல என்னமோ தப்பு இருக்கு.. கண்டு பிடிக்கணும்னு நினைச்சு ஒருநாள் விளக்கேத்தி வச்சுட்டு அங்கேயே ஒரு இடத்துல மறைஞ்சு நின்னு மொபைல்ல ரேடியோ கேட்டுகிட்டே நின்னான்...

ரேடியோல நியூஸ் சொன்னாங்க.... விவசாயம் செய்ய தண்ணி இல்லாததால மனம் உடைஞ்ச தஞ்சை விவசாயி ஒருத்தர் தற்கொலை செய்து கொண்டார்... கேரளாவில் நல்ல மழை.... ஆந்திராவில் அணைகள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் பஞ்சம் இல்லை... கர்நாடகாவில் விளைச்சல் நல்லமுறையில் இருப்பதால் கர்னாடக விவசாயிகள் மகிழ்ச்சி.... இப்படியா நியூஸ் சொல்லிகிட்டிருக்காங்க ரேடியோவுல...

திடீர்னு.. இவன் கூட தங்கி இருந்த மலையாளி, கன்னடன், தெலுங்கன் மூணு பேரும் அங்க வந்தாங்க... இந்த தமிழன் ஏத்தி வச்சிருந்த விளக்க ஊதி அணைச்சுட்டு, அந்த அகல் சட்டில இருந்த எண்ணெய எடுத்து தலைல தேய்ச்சுகிட்டு போய்ட்டாங்க...

நம்மாளுக்கு காண்டாயிடுச்சு.... நேரா "இயற்கை அன்னை" சாமிகிட்ட போனான்...

"ஏ சாமி.... இருந்தாலும் உனக்கு இவ்ளோ எகத்தாளம் ஆகாது... பாழடைஞ்சு போய் கிடக்குறியேன்னு நான் உன் கோயில சுத்தம் பண்ணி விளக்கேத்தினா.... நீ என் தமிழக விவசாயிங்கள வஞ்சிச்சு மழை பெய்யாம சாவடிக்கிற... ஆனா.... நான் விளக்குல ஊத்தின எண்ணெய திருடி தலைல தேய்ச்சுகிற அந்த மலையாளி, தெலுங்கன், கன்னடனுக்கு எல்லாம் நல்ல மழை பெய்ய வச்சு அங்க இருக்க விவசாயிங்கள சந்தோஷமா வச்சிருக்க... உனக்கு மனச்சாட்சியே இல்லையான்னு கதறினான்....

இயற்கை அன்னை நேரடியாவே இவன் முன்னாடி வந்துட்டாங்க... " அட தமிழா.... உனக்கு ரொம்ப ரொம்ப கெட்ட நேரம் டா... உன்னோட இனமே அழிஞ்சு போற அளவுக்கு உனக்கு கெட்ட நேரம் நடக்குது.... ஆனா... அவனுங்களுக்கு நேரம் நல்லா இருக்கு..... நீ பண்ற புண்ணியம்தான் உன்னை இந்த அளவுக்காவது பாதுகாக்குது.... அவன் நேரம் நல்லா இருக்கிறதால..அவனுக்கு நிறைய நல்லது கிடைக்கணும்... ஆனா... அவன் பாவம் பண்ணிக்கிட்டு இருக்கதால கொஞ்சமா நல்லது மட்டும் கிடைக்குது.... " ன்னு சொன்னாங்க...

உடனே தமிழன்... "புரியலையே.." ன்னான்...

"அட பக்கிப்பயலே.... நியாயமா அந்த தெலுங்கன், கன்னடன், மலையாளிக்கு இருக்க நல்ல நேரத்துக்கு அவனுங்களுக்கு ராமனோ -புத்தரோ-நபியோ-ஏசுவோ அவதாரம் எடுத்துதான் முதலமைச்சரா வந்திருக்கணும்... ஆனா அவனுங்க பாவம் பண்றதால சித்தராமையாவும், பினராயி விஜயனும், சந்திரபாபு நாயுடுவும் முதலமைச்சரா வந்திருக்காங்க....

ஆனா...உனக்கு நடக்குற கெட்ட நேரத்துக்கு கருணாநிதியோ-ஸ்டாலினோ தான் முதலமைச்சரா வந்திருக்கணும்... நீ பண்ண புண்ணியம் தான் இந்த எடப்பாடியோட தப்பிச்ச....




ம்ம்... ஓங்கி அடிக்க வேண்டியத தாங்கி அடிச்ச இயற்கை அன்னையை வணங்குவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக