வியாழன், 20 செப்டம்பர், 2018

பாரம்பரிய உணவும் ஆபத்தே...

பாரம்பரிய உணவுகள் உண்பது தற்போது பேஷனாகி வருகிறது... இதை இப்போது பேஷனாக்கும் அதே கும்பல் தான் சில-பல வருடங்கள் முன்பு பீட்சாவையும், பர்க்கரையும் அறிமுகம் செய்து கேழ்வரகு கூழ், கம்பஞ்சோறு உண்பவனை எல்லாம் "காட்டான்"களாக அடையாளப்படுத்தியது...

சரி... விஷயத்திற்கு வருவோம்... நம் முன்னோர்கள் உணவாக கொண்ட கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டார்கள்... இதிலிருந்து கிடைக்கும் அபரிமிதமான சக்தியை கொண்டே நாள் முழுதும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள்..

ஏர் உழுதல், வரப்பு வெட்டுதல், களை எடுத்தல், நடவு நடுதல், கதிர் அறுத்தல், அம்மி, ஆட்டுக்கல்லில் மசாலா/மாவு அரைத்தல், கிணற்றில் தண்ணீர் இறைத்தல், வெகு தொலைவில் இருந்து தலை-இடுப்பு-கை என மூன்று குடங்களில் தண்ணீர் கொண்டு வருதல்.... வெகுதூரம் நடை பயணம் மேற்கொள்ளுதல்... அப்புறம்.. சைக்கிள் ஒட்டுதல்.... இவை எல்லாம் அன்றாட வேலைகளாக இருந்தது.... இப்படியாகப்பட்ட கடின உழைப்பிற்கு தேவையான சக்தியை அந்த சிறுதானியங்கள் கொடுத்தது....

ஆனால்.... இன்று விவசாயமற்றுப்போன நிலையில் .. அல்லது.. இயந்திரங்களை முன்னிறுத்தி விவசாயம் செய்கின்ற நிலையில்.... , மிக்சி, கிரைண்டர், ஓவர்ஹெட் வாட்டர் டாங்க், கார்/மோட்டார் சைக்கிள்.. என எல்லா வேலைகளுமே மனித உடலை கொஞ்சம் கூட அலட்டாத வகையில் வாழ பழக்கி இருக்கிறது....
மேலும்... நவீன தலைமுறை உடலுழைப்பை துறந்து புத்தியை வைத்து சம்பாதிக்கும் பழக்கத்திற்கும் வந்து விட்டது...

இந்த நிலையில்.... ஒரு நாள் முழுதும் உடலுழைக்க சக்தியை கொடுத்த அந்த சிறுதானியங்கள் , இந்நாளைய உடலுழைப்பட்ற வாழ்க்கைக்கு எவ்விதம் பொருந்தும்??




அந்த சிறுதானியங்களில் பெறப்படும் அபரிமிதமான சக்தி "எரிக்கப்பட" இன்று உடல் உழைப்பில்லாத நிலையில்... அப்படி கிடைத்த சக்தி என்னவாகும்?? கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கப்படும் தானே?? இது உடலிற்கு நல்லதா??? இது கெடுதல் ஏற்படுத்தாதா??

நாம் எப்படி பழைய உழைப்பிற்கு தயாராக இல்லையோ.... அதே போல பழைய உணவும் நமக்கு பொருந்தாத உணவாகி விட்டது...

பர்க்கரையும், பீட்சாவையும் எப்படி நாகரீகம் என்று நம்ப வைத்து அறிமுகம் செய்தார்களோ... அந்த முட்டாள் தனத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இன்று பாரம்பரிய உணவு என்பதும்....

இறைவன் படைப்பு நியதியில் அந்தந்த பகுதியில் வாழும் மக்களுக்கேற்ற உணவே அந்தந்த பகுதியில் விளையவும், அதற்கு தேவையான அளவு அந்த மக்கள் உழைக்கவும் வாய்ப்பிருந்தது.... மனிதன் எப்போது தங்கள் வாழிடங்கள், உணவு முறைகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டானோ.... அப்போதே அந்த நியதி உடைந்து விட்டது...

இப்போது "நான் பாரம்பரிய காவலன்" என்பது சுத்த கோமாளித்தனம்... ஆபத்தை வேறொரு பரிமாணத்தில் வரவழைக்கும் முட்டாள்தனம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக