வியாழன், 20 செப்டம்பர், 2018

முழு விடுமுறைக்கு அதிகாலை துயிலெழுச்சி

நாளைக்கு லீவுன்னா, இன்னிக்கு காலைல எழுந்துக்கும் போதே மனசுல ஒரு சந்தோசம் வரும்...
"நாளைக்கு காலைல இப்படி சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம்... அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்..."அப்படின்னு ..

டெய்லிதான் அலாரம் வச்சு எழுந்துக்கிறோமே... இன்னிக்கு ஒருநாளாச்சும் அலாரம் அடிக்காம நல்லா தூங்கலாம்... என்று நினைத்து எட்டுமணி வரையோ, பத்துமணி வரையோ தூங்கி... பல்லு கூட தேய்க்காமல் அப்படியே டீ/காபி குடித்து... சோம்பல் முறித்து, மெதுவாக குளித்து, துணி துவைத்து, சமைத்து... சாப்பிட உட்காரும் போது... மணி இரண்டோ, மூன்றோ ஆகி இருக்கும்....

சாப்பிட்ட உடன் லேசாக கண்ணை சொக்கும்... ஒரு குட்டி தூக்கம் போட்டால் தேவலாம் போல இருக்கும்... தூங்கி விழித்து பார்த்தால்... நேரம் அஞ்சு மணியோ, ஆறு மணியோ ஆகி இருக்கும்... சோம்பலாய் இருக்கும்... அப்படியே டி வி முன்னாலோ, லாப்டாப்/மொபைலுடன் அமர்ந்தாலோ... அன்றைய தினம் முடிந்திருக்கும்.... மறுநாள் மீண்டும் அலாரம்... அவசர ஓட்டம்...



இந்த ஒரு நாள் விடுமுறைக்காக ஆறுநாள் காத்திருந்து, அந்த ஒரு நாளை எப்படி அனுபவித்தோம் என்று நினைத்தால்... ஒன்னுமே இருக்காது...

விடுமுறை தினம் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றால்... முதலில் பத்துமணி, பதினோரு மணி என்று தூக்கம் தொடர்வதை விட்டு, எப்போதும் வேலைக்கு போக எழுந்திருக்கும் நேரத்திலயோ, அதற்கும் முன்பாகவோ எழுந்துவிட வேண்டும்...

பிறகு... நாம் எப்போதுமே அவசர அவசரமாக செய்யும் வேலைகளை, மிகவும் நிதானமாக, பரபரப்பில்லாமல்...ரசித்து செய்ய வேண்டும்... சம்பளத்திற்காக தினசரி செய்யும் அலுவலக பணிகள் எதுவுமே இல்லாமல்.... நமக்காக தினசரி அவசரம் அவரசமாக செய்யும் வேலைகளை.... நமக்கே நமக்காக செய்து கொள்கிறோம் என்ற நினைப்புடன்... நிதானமாக ரசித்து, அனுபவித்து செய்யும் பொழுது புரியும்... வாழ்வின் சுவை எத்தனை இனிது என்று.....

ஆறுநாள் காத்திருந்து கிடைத்த விடுமுறையை நொடி நொடியாய் அனுபவித்த திருப்தி கிடைக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக