வியாழன், 20 செப்டம்பர், 2018

விஷ வேர்கள்

பெரும்பாலும் கையூட்டு வாங்கும் அலுவலர்கள் (!!??) சொல்லும் காரணம்.... "நான் எவ்ளோ செலவு பண்ணி இந்த வேலைக்கு வந்திருக்கேன் தெரியுமா...??"
அதாவது இவர் தற்போது வகிக்கும் பதவிக்கு வருவதற்காக இவர் ஒரு பெருந்தொகையை கையூட்டாக கொடுத்து இருக்கிறார்... அந்த தொகையை ஈடுகட்டத்தான் இவர் கையூட்டு வாங்குகிறாராம்....



இதே போல மருத்துவ கல்வி கற்க இடம் வாங்க பெருந்தொகைகளை கொடுத்துவிட்டு பிறகு அவர் கல்லூரியில் இடம் வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டார் என்று ஒருவர் மீது ஒரு கும்பல் புகார் தெரிவித்து பிறகு சம்மந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்...

நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன்... இப்படி கையூட்டு வாங்குபவர்களை மட்டும் கைது செய்தால் போதாது.... கையூட்டு கொடுப்பவர்களையும் கைது செய்ய வேண்டும்.... இன்று கையூட்டு கொடுத்து பதவிக்கு வருபவர் பின்னாளில் இதே காரணத்தை சொல்லி பெரிய அளவில் கையூட்டு வாங்குவார் என்பது மிக நிச்சயம்.... மேலும்.... இவரிடம் பணம் இருக்கும் ஒரே காரணத்தால் தகுதியான யாரோ ஒருவருக்கு போக வேண்டிய வாய்ப்பை இவர் தட்டிப்பறித்திருக்கிறார் என்பதும் உறுதியாகிறது....

இவர்களை முளையிலேயே கிள்ளாவிட்டால் பின்னாளில் இவர்களால் பொது நிர்வாகம் சீரழியும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக