வியாழன், 20 செப்டம்பர், 2018

சபாஷ் கல்வி அமைச்சரே

இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வர காரணம் ஜப்பானில் வீசப்பட்ட அமெரிக்காவின் "லிட்டில் பாய்" என்ற பெயரை உடைய ஹைட்ரஜன் அணுகுண்டு வீச்சு என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும்.. இதற்காக வரலாறும் நாமும் அமெரிக்காவை நிறைய திட்டி விட்டோம்... ஆனால்... அந்த அணுகுண்டு வீச்சுக்கு காரணமான , அதற்கு முந்தைய விஷயம்.... ஜப்பான் , அமெரிக்காவின் கடற்படை மீது நடத்திய படுபயங்கர தாக்குதல் என்பது நம்மில் சில பேருக்குத்தான் தெரிந்திருக்கும்.. "பேர்ல் ஹார்பர் அட்டாக்" என்று குறிப்பிடப்படும் அந்த தாக்குதலை விரிவாக காட்டிய ஒரு ஆங்கில திரைப்படம் "பேர்ல் ஹார்பர்"

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி... அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு கருப்பின இளைஞனை, அவனது மேலதிகாரியாக இருக்கும் வெள்ளைக்காரர் ஆயுத பிரயோகத்திற்கு அனுமதிக்கவே மாட்டார்... ராணுவ கப்பலின் சமையலறையில் தான் அவனுக்கு வேலை... அந்த கருப்பின இளைஞன் பலமுறை விண்ணப்பித்தும் அவனை சமையலறையிலேயே முடக்குவார் அந்த அதிகாரி...

இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு நள்ளிரவில் சாரை சாரையாக வரும் ஜப்பானிய விமானங்கள் அந்த பேர்ல் ஹார்பர் மீதி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த, அந்த உயரதிகாரியும் அடிபட்டு விழ... அப்போது இந்த கருப்பின இளைஞன் , தானும் ஆயுத தாக்குதல் செய்ய அனுமதிக்க வேண்டுமாய் கேட்பான்... அந்த அடிபட்டு விழுந்த வெள்ளை உயரதிகாரி, அப்போது தான் கண்ணசைவின் மூலம் அனுமதி கொடுப்பார்..

தன்னுடைய திறமையை எல்லாம் வெளிப்படுத்த நினைக்கும் அந்த கருப்பின இளைஞன் இருப்பதிலேயே பெரிய ஆயுதங்களாக பார்த்து , கையாண்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதாக அந்த கதைக்கள காட்சி அமைக்கப்பட்டிருக்கும்...

நிற்க...




தற்போதைய தமிழக அமைச்சர்களிலேயே அப்படியான ஒருவரை, மன்னார்குடி சதிகார கும்பலால் திறமையை பயன்படுத்த முடியாமல் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நம் கண்முன்னே நிறுத்துகிறது சமகால காட்சிகள்...

மரியாதை நிமித்தமாக சில பதவிகளுக்கேற்ப சில வார்த்தைகளை உச்சரிப்பது நம் வழக்கம்... "மேதகு" ஆளுநர்..., "வணக்கத்திற்குரிய" மேயர்... என்பது போலவே... "மாண்புமிகு" முதலமைச்சர்......

அப்படியான "மாண்புமிகு" என்ற வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்க தெரியாத முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் "மான்மிகு அம்மா அரசு... " என்று ட்ராமா போடும் வேளையில்.... அம்மாதிரி ட்ராமா எதுவும் போடாமல் , கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தி கலக்குகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்...

இன்று காலை, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்த சந்திப்பில் அவர் "அம்மா அரசு என்றோ... அம்மாவின் வழியில் செயல்படும் அரசு" என்றோ சொல்லவில்லை.... ஏனென்றால்... இது அம்மாவின் அரசும் அல்ல... அம்மா வழியில் செயல்படும் அரசும் அல்ல என்பதை முழுமையாய் உணர்ந்து, தமக்கு கொடுக்கப்பட்ட அமைச்சருக்கான கடமையை மிகவும் திறம்படவும், தொலைநோக்கு பார்வையுடனும் செய்து கொண்டிருக்கும் நிதானம் அவரிடம் இருக்கிறது

ஹாட்ஸ் ஆப் திரு செங்கோட்டையன் அவர்களே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக