வியாழன், 20 செப்டம்பர், 2018

நீட்... புதிய அரசியல்..


கடந்த ஓரிரு வருடங்களாய் அல்ல-சில்லறைகளின் அரசியல் வாழ்விற்கு உதவியதில் நீட் முக்கிய பங்கு வகிப்பது சமகால சமூக நகர்வுகளை கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...



தற்போது புதிய சர்ச்சை... வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்....

தமிழக மாணவர்களுக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... இல்லை.... வேறுபல மாநில மாணவர்களுக்கும் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... என்ற தெளிவான தகவல் இல்லை...

இருந்தாலும்.... தேர்வு எழுதுவதற்காக , தேவு மையங்கள் அமைக்க கூடிய வசதிகளும், உள்கட்டமைப்பும் இல்லாத மாநிலங்களை பற்றி நாம் பேச தேவை இல்லை... ஆனால்.... வெகு நிச்சயமாக தமிழ்நாடு அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பது உறுதியான விஷயம்.. இந்நிலையில்... தமிழ்நாட்டில் படிக்கும் அனைவருக்கும் அந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வை எழுதக்கூடிய உள்கட்டமைப்பை வைத்திருக்கும் தமிழகத்தில்.... அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் மட்டும் எழுத கூடிய நீட் தேர்வு மையங்களை உருவாக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய வாதம் இல்லை..

இதுபற்றி நாம் பிறகு விவாதிக்கலாம்.... தீப்பற்றி எரியும் நேரத்தில் அதை அனைப்பதுதான் உடனடி தேவையே தவிர... எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணை அல்ல.... அதை பிறகு செய்து கொள்ளலாம்... முதலில் தீயை அணைப்போம்...

சரி.... ஆமாம்.... இந்நேரம் நமக்கு வேறு சில கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது...

இன்று காலை , வெளிமாநிலத்திற்கு பயணித்து நீட் தேர்வு எழுதும் அளவிற்கு வசதி இல்லாததால்.... நீட் தேர்வு எழுத செல்லாத திருச்சி மாணவரை பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.... ஆமாம்.... திருச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்று பரீட்சை எழுத கூட வசதி இல்லாத மாணவர் , திருச்சியிலேயே தேர்வு எழுதி பாஸ் செய்திருந்தாலும் கூட எப்படி அடுத்த ஐந்தாண்டுகள் மருத்துவ கல்லூரியில் பயில்வார்???

மருத்துவ படிப்பு என்பதன் பின்னணியில் விளையாடும் லட்சங்கள்-கோடிகள் பற்றி எல்லோருக்குமே தெரியும்.... எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாய் கோடிகளை வாங்கி ஏமாற்றிய வேந்தர் மூவிஸ் "மதன்" அவர்களை நாம் மறந்திருக்க முடியாது... முன்பெல்லாம் வெகு சில மாணவர்களே மார்க்கின் அடிப்படையில் மருத்துவ கல்வியில் சேர்ந்தார்கள்.. மிகப்பெரும்பாலானவர்கள் "பண பலத்தின் " காரணமாகவே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள்.... ஏழை-நடுத்தர குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாகனியாகத்தான் இருந்திருக்கிறது....

இந்நிலையில், எர்ணாகுளம் சென்று தேர்வு எழுதும் அளவிற்கு கூட வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவனுக்கு "மருத்துவ கல்வி" மீதான நம்பிக்கையை விதைத்தது நீட் மட்டும் தான் என்பதை எப்படி வசதியாக மறந்துவிட்டோம்??

நிச்சயம் சமகாலத்தில் படிக்கும் மாணவர்களும் - மாணவர்களின் பெற்றோர்களும் மிக நன்றாகவே உணர்ந்திருகிறார்கள்..... நீட் தேர்வுகள் வந்த பிறகுதான் நாமும் மருத்துவ கல்வி பற்றி கனவு காண முடிந்திருக்கிறது.....என்ற உண்மையை..... சிற்சில நிர்வாக குளறுபடிகள் இருந்தாலும்... இவைகள் சீரமைக்கப்பட்ட பிறகு நிச்சயம் பல ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கான வாய்ப்பை பெறுவார்கள்...

ஆனால்... எப்போதும் போல... தமிழக மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தே அரசியல் ஆதாயம் அடைந்த தமிழக அரசியல்வாதிகளும்..... எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி மட்டுமே தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி பழக்கப்பட்ட ஊடகங்களும் சேர்ந்து மாணவர்களின் அந்த நம்பிக்கையை உடைத்து குழப்ப பார்க்கிறார்கள்..

கடந்த வருடம் அனிதாவை பலி கொடுத்து தங்களின் அரசியல் இருப்பபை காட்டியவர்கள்... இவ்வருடம் வேறு யாரோ ஒரு அனிதாவை உருவாக்கவே முயல்கிறார்கள்....

ப்ளீஸ்...... எனதருமை
மாணவர்களே... நன்றாக படித்தால்.... உள்வாங்கி புரிந்துகொண்டு திறமையாய் படித்தால்... நிச்சயம் நீட் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்..... அதை செய்யுங்கள்..... இந்த தமிழக அரசியல்வாதிகளின் நரித்தனத்தை நம்பினால்...... ஒரு ஒரு கேள்விதான்....

"உங்களில் யார் அடுத்த அனிதா....??"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக