வியாழன், 20 செப்டம்பர், 2018

எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்

சமகால அரசியல் தலைவர்களின் பித்தலாட்டங்கள்... கொள்கை-ஒழுக்க பிறழ்வுகள் தெரியாதவர்கள்தான் அவர்கள் நடத்தும் கட்சிகளில் இருகிறார்களா??

கிராம-ஒன்றிய-வட்ட-நகர-மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் என எல்லோருமே முட்டாள்களா என்ன?? தங்கள் கட்சி தலைமை/இரண்டாம் கட்ட/ மூன்றாம் கட்ட என அடுத்தடுத்த நிலை தலைவர்கள் அவர்களின் சக்திக்கேற்ற பித்தலாட்டங்களை செய்வதை அறியாத அளவிற்கு ஞானமற்றவர்களா என்ன??

அதுதான் இல்லை..... இவர்கள் நம்மை எல்லாம் விட பெரிய சிந்தனையாளர்கள், அறிவாளிகள்...

இவர்களது தலைவர்களை பற்றிய மோசமான செய்திகள் நமக்கு எவ்வளவு தெரியுமோ... அதை விட பன்மடங்கு கூடுதலாக தெரிந்தவர்கள்.... ஆனால் அவை எல்லாம் தெரிந்தும் சம்மந்தப்பட்டவரை "தலைவா.... வாழ்க.." என்று இவர்களால் கோஷம் போட முடிகிறதென்றால்... நம் நாட்டில் வாழ்க்கை முறை அவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றும்.... அந்த கேவலமான வாழ்க்கை முறையை தம் வசதிக்கேற்ற திருப்ப இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றும் தான் பொருள்...

ஆம்.... ஒரு பொதுவான கருத்தை உரக்க பேச வேண்டுமென்றால்... இங்கே அரசியல் பின்புலம் தேவையாயிருக்கிறது.... தொழில் செய்ய அரசியல் பின்புலம் தேவையாயிருகிறது.... சட்டத்தை மீறவும், குற்றங்களை செய்துவிட்டு தப்பிக்கவும் அரசியல் பின்புலத்தால் முடிகிறது... இதை எல்லாம் விட சமயங்களில் சாலையில் நடக்கவே அரசியல் பின்புலம் தேவையாக இருக்கிறது....

இப்படி ஒரு பின்புலத்தை தனி மனிதனால் / நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.... அதற்கு ஒரு பெரிய அறிமுகம் தேவையாயிருக்கிறது....

தமிழ் வியாபாரம் செய்தோ, சினிமாவில் நடித்தோ, ஜாதி மக்களை ஒருங்கினைத்தோ கிடைத்த பரவலான அறிமுகத்தை/பிரபல்யத்தை வைத்து யாரோ ஒருவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் அரசியல் கட்சி என்ற பின்புலத்தை கொண்டு இயங்கும்போது இயல்பாக ஒரு பாதுகாப்போ, சம்பாதிப்பதற்கான வழியோ கிடைக்கிறது....

அதனால் தான் அவர்கள் "தலைவன் வாழ்க" என்று போலியாக குரல் கொடுத்தாவது அந்தந்த கட்சியில் இருக்கிறார்கள்..

மற்றபடி அவர்களுக்கு எல்லாம் தெரியும்...

என்ன.... இதற்காக அவர்கள் மனச்சாட்சியை அடகு வைத்திருக்கிறார்கள்.... அவ்வளவுதான்...

நமக்கு அம்மாதிரியான பின்புல அவசியம் இல்லாததால் மனச்சாட்சிக்கு விரோதமாக எந்த அரசியல்வாதியையுமே தலைவனாக ஏற்க முடியவில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக