வியாழன், 20 செப்டம்பர், 2018

ஏமாறப்பிறந்தவர்கள்

கன்னியாக்குமரியில் நிதி நிறுவனம் நடத்தியவர் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலை மறைவு... முதலீட்டாளர்கள் போராட்டம்... அரசு உடனடியாய் தலையிட்டு எங்கள் பணத்தை வாங்கித்தர வேண்டும் என்று கோரிக்கை..

இப்போ நாம யாரையாச்சும் குறை சொல்லணுமே.... சாட்டையை சுழற்றுவோமா...



ஒரு மாநகராட்சி-நகராட்சி- ஊராட்சியில் எந்த தொழில் தொடங்குவதென்றாலும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும் என்பது விதி.. அப்படி உரிமமில்லாமல் தொடங்கப்படும் நிறுவனம்/கடைகளை பூட்டும் அதிகாரம் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு உண்டு... டீக்கடை வைக்கிறவன், பொட்டிக்கடை வைக்கிறவன் எல்லாம் இப்படி உரிமம் பத்தி எல்லாம் கவலை படுறதில்ல... இங்க பெரிசா ஒன்னும் நடந்துடாது... பெரும்பாலும் கடன் சொல்லி சொல்லி டீ குடிச்சுட்டு, ஐநூறு ரூபா ஏறினதும் இருநூறு ரூபாய கொடுத்து, இத வரவு வச்சுக்கோ.... பேலன்ஸ் சீக்கிரம் கொடுத்துட்றேன்னு சொல்லி அவனை நம்பவச்சு கூடுதலா முன்னூறு ரூபாய் கடன் வாங்கி கணக்க அறுநூறா ஏத்தி நாமதான் அவனுங்கள ஏமாத்துவோம்.... அதனால அத விட்டுடலாம்... ஆனா... லட்சக்கணக்குல முதல் போட்டு தொழில் பண்றவன் கண்டிப்பா உரிமம் வாங்கணும்.. வரி கட்டனும்... அதுலயும் இந்த சிட் பண்ட்ஸ், பினான்ஸ், பாண் புரோக்கர் போல பொதுமக்கள் கிட்ட நேரடியா கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் பண்றவங்க கண்டிப்பா இந்த உரிமம் வாங்கியே ஆகணும்....

மேற்கொண்டு... இந்த சீட்டு நிறுவனம் பெரிய ஆபீசா போட்டு தான் கடை நடத்தி இருக்கான்... இதெப்படி அரசு நிர்வாகத்துக்கு தெரியாம போச்சு.... லைசன்ஸ் கொடுக்கும்போது அவனோட ப்ராஜெக்ட் ரிப்போர்ட் என்ன... அத அவன் எப்படி இம்ப்ளீமென்ட் பண்ண போறான்... அது ஆர் பி ஐ வரைமுறைகளுக்குட்பட்டதா... லொட்டு, லொசுக்கு ன்னு எல்லாத்தையும் செக் பண்ணித்தான் லைசன்ஸ் கொடுத்திருக்கணும்....

அதோட மட்டுமில்லாம... ஆண்டுக்கொருமுறை "படித்த" ஆடிட்டரை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணும்போது, வரிய மட்டும் வாங்கிட்டு சலாம் போட்டு அனுப்பாம (அதுலயே நிறைய வரி ஏய்ப்பு செஞ்சு வருமான வரித்துறையையும் ஏமாத்தி இருப்பான்றது வேற விஷயம் ) அவன் என்ன பண்றான்னு ஒழுங்கா செக் பண்ணாம விட்டது யாரோட தப்பு?? உடனே ஆட்சியாளர்கள் மேல குத்தம் சொல்ல வேண்டாம்... ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைய உடனே அமல் செய்யனும்னு கிளம்பி போராட தெரியுது... ஏன்னா 25% சம்பள உயர்வு கிடைக்குமாம்.... ஆனா தன்னோட கடமையை ஒழுங்கா செய்யனும்னு எந்த அரசு ஊழியருக்கும் தோணவே இல்ல... இவனுங்கள என்ன பண்ணலாம்...??

சரி விடுங்க.... அவனுங்க என்னிக்குதான் செஞ்சாய்ங்க ,... இன்னிக்கு செய்ய??

நாம என்ன பண்றோம்....?? கந்து வட்டி வசூல் பண்றவன ஒருபக்கம் திட்டி மண்ணை வாறி தூத்திகிட்டே எவனாவது அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொன்னதும் என்ன... ஏது.... நீ ஒழுங்கா லைசன்ஸ் வாங்கித்தான் கடை போட்டிருக்கியா.... அதிகமா வட்டி கொடுக்கிறேன்னு சொல்றியே.... எப்படி கொடுப்ப......ன்னு எதை பத்தியும் கேக்காம, பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட கூட சொல்லாம நம்ம கிட்ட இருக்க காச கொண்ட கொட்டிடுவோம்.... பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்னா அவனும்ல முதலீடு பண்ணி ரொம்ப சம்பாதிச்சிடுவான்....

வங்கிகள், மியூச்சுவல் பண்ட்ஸ், காப்பீட்டு நிறுவனங்கள் இன்னும் என்னென்ன புண்ணாக்கோ இருந்தாலும் அவன் எல்லாம் வட்டி கம்மியா தரான்... நாங்க நிறைய சம்பாதிச்சு சீக்கிரம் பணக்காரனாகனும்னு போயிடறது... அப்புறம் அவன் பொட்டிய கட்டிக்கிட்டு கிளம்பிட்டான்னா தலைல துண்ட போட்டுக்கிட்டு நேரா போலீஸ்காரன் தாலிய அறுக்க கிளம்பிட்றது.....

எத்தன ஈமு, தேக்கு, முதலாளி இல்லாத முதல் உலகம்னு டைப்பு டைப்பா ஏமாந்திருந்தாலும் நீங்க திருந்தவே போறதில்ல.... சனியன் புடிச்சவனுங்களா.... செத்து தொலைங்கடா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக