வியாழன், 20 செப்டம்பர், 2018

டெங்கு பீதி

சில நேரங்களில் சில விஷயங்களை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை.... சமீபத்திய விஷயம் "டெங்கு மரணங்கள்" 



சமீபத்திய ஊடக செய்திகள் எங்கெங்கு டெங்கு மரணம் நிகழ்ந்தாலும் தேடிப்பிடித்து படமாக்கி ஒளிபரப்பி ஜனநாயக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன... நிஜமாகவே நிலைமை சற்று சீரியஸ்தான்... வந்த டெங்குவை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும், இனிமேல் வராமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும்... பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி வெற்றி பெறாது....

நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது.... என்று நிச்சயம் எந்த ஒரு அரசும் ஒப்புக்கொள்ளாது... இதற்கு இரண்டு காரணங்கள் .... ஒன்று அரசின் கையாலாகாத தனத்தை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.... அதே நேரம்... அரசு "ஆமாம்.... நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது... கட்டுப்படுத்த முடியாத அளவு பரவிக்கொண்டிருகிறது..." என்று சொன்னால்..... நிலைமை என்னாகும்?? மக்கள் பீதிக்குள்ளாவார்கள்.... அதை சமூக விரோதிகள் வதந்திகளை கிளப்பி மேலும் பயப்படுத்துவார்கள்.... சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.... அதை தொடர்ந்த தனியார்/அரசு பொருளிழப்புகள் ஏற்படும்.... இன்னும் பற்பல இன்னல்கள் உருவாகும்... ஆகவே அரசு ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது...

அதே நேரம்... இல்லை.... டெங்கு கட்டுக்குள்தான் இருக்கிறது... அப்படி இப்படி என்று மைக் கிடைத்தவர்கள் எல்லாம் உளறிக்கொண்டிராமல்... சம்மந்தப்பட்ட அமைச்சகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.... தரமான மருந்துகள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதற்கான வாகன வசதிகள் என எல்லாவற்றையும் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்...

அதே நேரம்.. இதெல்லாம் அரசின் கடமை... நமக்கு குறை சொல்வது மட்டுமே வேலை.... என்று இருந்துவிடாமல்.... ஆங்காங்கே இருக்கும் இளைஞர்/மகளிர் குழுக்கள், நற்பணி மன்றங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் பிளாஸ்டில் டப்பா, தேங்காய் சிரட்டை, டயர்கள் இன்னும் பற்பல கொள்கலன்களை உடனடியாக நீரின்றி பார்த்துக்கொள்ள வேண்டும்... (ஏரி- குளங்கள்-ஆறுகளில் மட்டும் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள மணல் மாபியாக்களும் , ரியல் எஸ்டேட் தாதாக்களும் இருக்கிறார்கள்... )

மேலும்.... நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு போன்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற... டெங்கு வைரஸ்க்கு எதிரான , இரத்ததட்டுக்களை பெருக்க கூடிய மூலிகை மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்க முன் வர வேண்டும்...

எல்லா செய்தியையும் பிரேக்கிங் நியூசாக்கி பீதியை கிளப்புவதை வாடிக்கையாக கொள்ளாமல்... ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களில் அரசுக்கு துணை நின்று மக்களிடம் ஒரு பாதுகாப்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்...

வேறென்ன சொல்ல..... சாமான்யன் அவ்ளோதான் சொல்ல முடியும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக