சனி, 7 மார்ச், 2015

காவிரி நாடகம்

கடைமடை விவசாயிகளே.. திரண்டு வாருங்கள் என்று பச்சை துண்டு அடையாளத்துடன் விவசாய அரசியல் வாதிகளும்... 
ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என கன்னட தட்ஷின வேதிகே.. தெலுங்கு தட்சின அம்பிகே என்றெல்லாம் முளைக்கும் காளான்களும் இருபது பேர் நாற்பது பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் நடத்தியும்..
வழக்கம் போல் "பிளீஸ் தண்ணிய தொறந்து விட சொல்லுங்க..." என்று தமிழக அரசும்... " சாரி.. எங்களுக்கே பத்தல .. தொறக்க கூடாதுன்னு சொல்லுங்க.." என்று கர்னாடக அரசும் மாற்றி மாற்றி உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தும்..
மத்திய குழு வறட்சியை பார்வையிட வருகிறது என்று ஊரை கூட்டி நாடகம் நடத்தியும்..

இந்த செஷனுக்கான காவிரி நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது...

மழை பெய்ய தொடங்கிவிட்டது.. "பலநாள் மூதேவியை தாங்கி விடலாம்.. ஒரு நாள் சீதேவியை தாங்க முடியாது.." என்ற கிராம சொல்வழக்கு மாதிரி.." இந்த சனியம்புடிச்ச மானம் என்னத்துக்கு இப்படி கொட்டுதுன்னு தெரியலையே..." என்ற புலம்பலுடன் விவசாய பெருங்குடி மக்கள்..

"எங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது.. இந்த மழையின் காரணமாக.. அரசு ஏதாவது செய்யணும்.." என்று மழையை நிறுத்த வருணபகவானுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று தனியார் தொலைகாட்சிகளில் அரசை குறை சொல்லும் நகர மாந்தர்கள்..
இப்படியாக மழைக்காலமும் முடிவுக்கு வந்துவிடும்..

மறுபடியும் அடுத்த கோடைக்கு தூசு தட்டப்படும் காவிரி நாடகம்..

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 % கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருக்கிறது.. அந்த மழை தண்ணீரை சேகரித்து வைக்க அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது..? ஏற்கெனவே காணாமல் போயிருக்கின்றன ஏரி குளங்கள் எல்லாம்.. குட்டி குட்டியாய் ஏரி இருந்ததென அடையாளம் சொல்லும் கொஞ்ச நஞ்ச பரப்புகளோ புதர்கள் மண்டி கிடக்கிறது.. இந்த ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி , காணாமல் போன குளங்களை கண்டு பிடித்து செப்பனிட்டு வைத்திருந்தாலே நமது வறட்சிகால தேவைக்கு கர்நாடகாவை கெஞ்சும் அவசியம் பாதியாய் குறையும்..
எந்த அரசும் இதை செய்யாது.. ஏனென்றால் அடுத்த காவிரி சீசன் அரசியல் எப்படி செய்வதாம்..??
வழக்கம் போல புலம்பலுடன் குவாட்டருக்கும் குண்டானுக்கும் ஒட்டு போடும் புத்திசாலி மக்களை பெற்றவர்கள் அல்லவா அவர்கள்..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக