ஞாயிறு, 8 மார்ச், 2015

பொதுமக்கள் யார்??

அரசுப்பதவியில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் இருக்க கூடாது என்ற சட்டத்தை தவறாக புரிந்துகொண்ட அரசு அதிகாரிகள் தங்களுக்கு அரசு வேலை கிடைத்த உடன் பொதுமக்கள் என்ற பதவியை உடனே ராஜினாமா செய்து விடுகிறார்கள்.

அய்யா அரசு ஊழியர்களே.. இந்த பதவியை நீங்களாக ராஜினாமா செய்ய முடியாது.. நீங்கள் அனுமதி கொடுக்கும் "அது" போன்ற பேருந்தில் நாளை உங்கள் பேரக்குழந்தைகளே கூட விழலாம்.. 
இன்று மணல் மாபியாக்கள் திருடும் ஆறுகளால் பாதிக்கப்படப்போவோரில்  உங்கள் சந்ததியும் இருக்கும் . 

இன்று உங்களுக்கு கிடைக்கும் எலும்புத்துண்டுக்காக நீங்கள் திருடக்கொடுக்கும் கனிம வளங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் உங்கள் சந்ததியினரையும் பாதிக்கலாம்.. 

பொதுமக்கள் என்றால் யாரோ இல்லை.. நீங்கள்.. உங்கள் மனைவி மக்கள் பேரக்குழந்தைகள் உற்றார் உறவினர்கள் எல்லோரும்தான்... கொஞ்சம் புரிந்துகொள்ளுங்களேன்..!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக