ஞாயிறு, 8 மார்ச், 2015

வளைகுடா நாடுகளில் அந்நிய நேரடி முதலீடு சில்லறை வணிகத்தில் கொட்டி விளையாடுகிறது.. கேரிஃ போர் , வால் மார்ட் , டெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் , வளைகுடாவில் பிரபலமான லூலூ என்ற இந்தியரின்  நிறுவனமும் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களை நிறுவி திறம்பட நிர்வகித்து வருகின்றன.. பண்டிகை காலங்களில் வியாபாரத்தை அதிகரிக்கும் பொருட்டு அந்த நிறுவனங்கள் 50 % முதல் 80 % வரை தள்ளுபடி செய்வதாகவும், ஒரு குறைந்த பட்ச தொகையை நிர்ணயித்து அந்த தொகைக்கு மேல் வாங்குபவர்களுக்கு கூப்பன்கள் வழங்கி லான்ட் க்ரூசர் / மெர்சிடிஸ் /பி எம் டபிள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களையும் வழங்குகின்றன.. ஆனால் இந்த குலுக்கல்கள் எல்லாம் முறையாக நடக்குமா.. என்ற சந்தேகம் எனக்கும் கூட இருந்தது.

இந்த தள்ளுபடி விலைகளை இவர்கள் அறிவிக்கும் முன் அந்த பொருட்களின் தயாரிப்பு விலை, தள்ளுபடிக்கு பிறகான விலை, காலாவதி தேதி ஆகியவற்றை இந்த நாடுகளின் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபார மேம்பாட்டு  ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற பிறகே  தள்ளுபடி அறிவிக்க முடியும். மேலும் இந்த தள்ளுபடி காலங்களில் இவைகள் சோதனைக்கு உட்பட்டும் இருக்கும்.
மேலும் பரிசுக்குலுக்கல் அரசு அலுவலர்களின் முன்னிலையிலேயே நடக்கும்.  இதற்கான விளம்பரங்களையும் சம்பந்தப்பட்ட அரசு துறையின் அனுமதி பெற்ற பின்புதான் வெளியிட இயலும்.

ஈமூ   வளர்த்து சம்பாதிப்பது முதல்...புரட்சி போராட்டம் வரை காசுக்காக விபச்சாரம் செய்யும் நடிக விளம்பரங்களை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அப்புறம் ஏமார்ந்தவர்களின் புகார்களுக்கு எப் ஐ ஆர் போட்டுக்கொண்டு திரியும் இந்திய அரசு துறைகளை நினைத்தால் வெட்கபடாமல் இருக்க முடியாது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக