ஞாயிறு, 8 மார்ச், 2015

ஒரு குழந்தையும் உனக்கு ஆசான்தான்...

அழுகையை தொடங்கும் போது மிக தீவிரமாய் வீறிடும் குழந்தைகள்/சிறுவர்கள்
( ஏதேனும் சொல்லத்தெரியாத வலியோ- பசியோ தவிர்த்து மற்ற காரணங்களுக்காக )  நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து பிறகு சில வினாடிகள் இடைவெளி விட்டு மீண்டும் "ம்ம்ம்ம்.... ம்ம்ம்...." என்று அழ தொடங்குவார்கள்..
இதற்கான மனோதத்துவ விளக்கம் தெரியுமா.. வேகமாய் அழ தொடங்கும் குழந்தையின் மூளையில் சிறிது நேரத்திலேயே அழுகைக்கான காரணம் மறைந்து விடும்.. சில வினாடிகளில் அழுகை நின்ற உடன் அவை மீண்டும் குழந்தையால் நினைவு கூறப்படும். மீண்டும் அழுகையை தொடங்கும்.. இப்படியே கண்டு கொள்ளாமல் விடப்படும் குழந்தையின் அழுகை அந்த குழந்தைக்கே " எதற்காக நாம் அழுகிறோம் " என்ற காரணம் தெரியாததால் அழுகையை முற்றிலுமாக நிறுத்தி விட்டு அடுத்த விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கும்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது..?

ஒருவரின் மீது அதீதமாய் வரும் கோபம் கண்டுகொள்ளப்படாமல் விடும்போது சில மணி நேரத்தில்- சில நாட்களில் வீரியம் குறைந்து விடும்.. சில மாதங்கள் கழித்து யோசித்தோமானால் அந்த காரணமே மறந்து போயிருக்கும்.. அப்படியே நினைவு கூர்ந்தால் கூட அது ஒரு நகைச்சுவையான காரணமாய் நமக்கே தோன்றும்.
அட..  இதுக்கா நாம சண்டை போட்டோம்.. என்று உங்களை நினைத்தே உங்களுக்கு சிரிப்பு வரும்.. அப்புறம் என்ன.. ஓரமாய் எட்டிப்பார்க்கும் "ஈகோ"வை முடியை பற்றி வெளியில் வீசிவிட்டு அந்த நண்பருடன் பேச தொடங்குங்கள்.. முன்னிலும் நெருக்கமாய் உணர்வீர்கள்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக