சனி, 7 மார்ச், 2015

உருவாகும் நவீன ஜாதிகள்.

மனச்சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்... இட ஒதுக்கீட்டில் கல்வியோ - வேலை வாய்ப்போ பெற்ற ஒரு நபர் தான் இட ஒதுக்கீடு பெற எந்த வகுப்பில் பிறந்திருந்தாரோ அந்த வகுப்பில் இன்னும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் எத்தனை பேருக்கு உதவி இருக்கிறார்...??

தந்தை- மகன் என்று இரண்டாவது தலைமுறையும் இட ஒதுக்கீட்டில் மருத்துவ/பொறியாளர் படிப்பிற்கு இடம் கிடைத்த பின் அவர்களால் பணம் செலவு செய்து படிக்கும் அ
ளவிற்கு வசதி வாய்ய்ப்புகள் இருந்த போதும் தாம் எந்த வகுப்பில் பிறந்ததற்காய் அந்த இட ஒதுக்கீடு பெற்றோமோ அந்த வகுப்பில் பிறந்த இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ஒருவருக்கு அந்த ஒதுக்கீடு கிடைக்கட்டுமே என்று யார் வழி விட்டிருக்கிறார்,,,??
நம்முடைய உறவினருக்கு, சகோதரர்களுக்கு, நம்மைப்போலவே கஷ்டப்பட்ட ஒருவருக்கு நாம் உதவவோ - வழி விடவோ தயாராயில்ல போது மற்றவர்கள் வழிவிடவில்லை என்று குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது நமக்கு ???

ஒரு பேருந்தில் ஒரு கர்ப்பிணி பெண் ஏறும்போது தாம் எழுந்து இடம் கொடுக்காமல் பக்கத்தில் இருப்பவர் இடம் கொடுக்கவில்லை என்று சண்டை போடுவதும் இதுவும் ஒன்றுதான்..


அரசு திட்டங்களை குறை சொல்வதோடு  நமது கடமை முடிந்துவிடுவதில்லை.. இதற்கான தீர்வுகள் எதுவும் இருக்கிறதா..??

நமக்கு கிடைத்த இட ஒதுக்கீட்டை நாம் முறையாக பகிர்ந்தளிக்க  வேண்டும். அப்படி கிடைத்த இட ஒதுக்கீட்டின் பயனை நாம் அனுபவித்து ஓரளவு முன்னேற்றம் கண்ட உடன் நமக்கு பொருளாதார- கல்வி பலம் ஓரளவு வந்த உடன் நமது முன்னேற்றத்தை நாமே சுயமாக எற்படுத்திக்கொள்வோம் என்று நினைக்க வேண்டும்.
நமது இனத்தில் இன்னும் முன்னேறாமல் எத்தனையோ மக்கள் இருப்பார்கள். நாம் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். 
ஓரிரு தலை முறைகளை இட ஒதுக்கீட்டின் பலநாள் நாம் பெற்ற பலனை இன்னொருவர் அனுபவிக்க நமக்கு மனம் இல்லை என்றால் எப்படி காலம் காலமாய் உங்களை அடக்கி ( உங்கள் பாஷையில் ) சுகம் கண்டவர்கள் விட்டுக்கொடுக்க சம்மதிப்பார்கள்..??? 

அரசு இட ஒதுக்கீடு என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை / அந்த குடும்ப உறுப்பினர்களின் கல்வி நிலை / அவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பெற்றிருக்கும் வேலை வாய்ப்புகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு வழங்கப்பட்டால் மட்டுமே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தாவது ஓரளவு சமத்துவம் ஏற்படும்.
இப்போதுள்ள ஜாதீய அடிப்படியிலான இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றினால் இரு வேறு ஜாதிகளுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளோடு சேர்ந்து ஒரே ஜாதிக்குள்ளேயே பணக்காரன்- ஏழை என்ற வேறுபாடும் நெடிந்து வளரும்..

இது அரசியல் வாதிகளின்/ ஆளும் வர்க்கத்தினரின்/ பணக்காரர்களின் ( இவர்கள் எந்த ஜாதி என்பது முக்கியமில்லை ) பிரித்தாளும் சூழ்ச்சி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக