ஞாயிறு, 8 மார்ச், 2015

சாணக்ய தந்திரம்

நவீன உலகின் மனிதர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் ரிசல்ட் உடனே தெரிய வேண்டும்.. முடிவுகளுக்காக காத்திருக்க இங்கே யாருக்கும் நேரமில்லை. இதன் வெளிப்பாடுதான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் ஐம்பது ஓவர் அடங்கிய ஒருநாள் போட்டிகளானது..
ஐம்பது ஓவர் வரை முடிவுக்காக காத்திருக்க யாருக்கும் நேரமில்லை.. இதனை இருபது ஓவர்களாக்கி வியாபார வெற்றி கண்டது .
இது விளையாட்டுக்கு மட்டுமில்லை.. எல்லாவற்றுக்குமே பொருந்தும்.. ஏனென்றால் தினசரி புது பது விஷயங்கள்.. அத்தனையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்.. பழைய விஷயங்களை கிளறிக்கொண்டிருந்தாலோ அசைபோட்டுக்கொண்டிருந்தாலோ புதிய விஷயங்களை நம்மால்  தொடர முடியாமல் போய் விடும்.. இந்த பார்முலாவைத்தான் செய்திநிறுவனங்கள் முதல் ஃ பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில்  பொழுது போக்குபவர்கள் வரை கடை பிடிக்கிறார்கள்.

மக்களின் மனநிலையை தெளிவாக புரிந்து வைத்திருக்கும் அரசு இயந்திரங்கள் மிக தந்திரமாய் இதே விஷயத்தை தமக்கு சாதகமாய் ரிவர்சில்  உபயோகித்து வெற்றி பெற்று இருக்கின்றன.. கூடங்குளம் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, 2 ஜி விவகாரம், லோக்பால் பிரச்சினை..., இப்போது நிலக்கரி ஊழல் பிரச்சினை.. இப்படி எல்லாவற்றிலும் காலம் தாழ்த்தி காலம் தாழ்த்தி மக்கள் அதன் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை நீர்த்துப்போக செய்து மக்கள் புது விஷயங்களில் கவனம் செலுத்த பழைய விஷயங்கள் பரணுக்கு போய்விடும்..
ஊடகங்களுக்கு  புதிய  செய்திகளை பிடித்துக்கொண்டு பழைய செய்திகளை மறப்பது  வருமானம்,,  சமூக தளங்களில் பதிவிட்டு அன்றைய பொழுதை போக்குபவர்களுக்கு இது ஒரு விளையாட்டு,,

ஆனால் அரசுக்கு இன்றைய இந்த வெற்றிகள் பின்னாளில் பாதிக்கப்பட்டோர் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு அபாயகரமான கத்தி என்பதி அரசு புரிந்துகொள்ள வேண்டும். 
பொதுப்பிரச்சினைகளில் அரசு உடனே முடிவெடுக்கும் சக்தியை பெறவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக