சனி, 7 மார்ச், 2015

திருவள்ளுவர் என்ற கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் - திரு.வேணுகோபால் ஷர்மா


உலகின் நிறைய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரின் சட்டை காலரையும் ஒவ்வோர் அங்குலம் உயர்த்திய திருக்குறளை எழுதியது திரு வள்ளுவர் என்று படித்திருக்கிறோம்.. ஆனால் இதனை எழுதியவர் வள்ளுவர்தான் என்பதோ.. அவரது உருவம் இப்படித் தான் இருக்கும் என்பதோ தெரியாது.. பெயர், உருவம் எல்லாமே கற்பனையாய் உருவாக்கப்பட்டவைதான்..
மேலும் இவர் எழுதியதில் நமக்கு கிடைத்தது வெறும் 1330 பாடல்கள் தான்.. இன்னும் அதிகமாக எழுதி இருக்க கூடும்..


சரி.. இந்த திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தது யார்.. எப்போது.. என்ற தகவல்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அவர்...திரு அறிஞர் அண்ணா அவர்களால் "ஓவிய பெருந்தகை" என்று பாராட்டப்பட்ட கே ஆர் வேணுகோபால ஷர்மா.. 1950 ம ஆண்டு இதற்கான வேலைகளை துவங்கி முதலில் பென்சில் ஓவியமாக வரைந்தார்.. பிறகு அதற்கான வண்ணங்களை சேர்த்தார்.. 1953 ம ஆண்டில் இவரை சந்தித்த திரு பாரதி தாசன் அவர்கள் இவரை ஊக்குவித்து விரைவில் அந்த ஓவியத்தை வரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்..
ஒருவழியாக 1957 ம ஆண்டில் வரைந்து முடித்த அந்த ஓவியத்தை அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்களையும் , திரு அறிஞர் அண்ணா அவர்களையும் அழைத்து காண்பித்தார்.. அதனை பார்த்து வியந்த திரு அறிஞர் அண்ணா அவர்கள் அந்த படத்தை அங்கீகரிக்க திரு பக்தவத்சலம் அவர்களுக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்ற முதல்வர் அவர்கள் அந்த படத்தை தபால் தலையாக வெளியிட்டு தமிழுக்கும், வள்ளுவருக்கும், அதனை வரைந்த கே ஆர் வேணுகோபால் ஷர்மா அவர்களையும் கௌரவிக்க பரிந்துரைத்தார்..
அவரது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அஞ்சல் துறை 1960 ம ஆண்டு திருவள்ளுவர் படத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டது..


கூடுதல் தகவல் - எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடியவர்களை நமது வழக்கத்தில் வள்ளுவர்கள் என்று அழைப்பதால் இவருக்கு வள்ளுவர் என்ற பெயரும்.. மரியாதை நிமித்தம் திரு என்றும் சேர்த்து பெயரிடப்பட்டது..

கூடுதல் தகவல் - கன்னியாகுமரியில் நிறுவப்பட்டிருக்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவர் திரு. கணபதி ஸ்தபதி.. அதற்கு மாடலாக நின்றவர்  பிரபல பரதநாட்டிய கலைஞர் திருமதி.பத்மா சுப்பிரமணியம் 

( இதில் ஏதேனும் தவறு இருப்பின் தெரிந்தவர் சுட்டிக்காட்டவும் - நன்றி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக