சனி, 7 மார்ச், 2015

குழந்தை தொழிலாளர்கள் இவர்கள் மட்டும் தானா..??

டீக்கடைகளிலும் மது விநியோக கூடங்களிலும் தொழில் கற்றுக்கொள்ளவோ- பொழுது போக்காகவோ சிறுவர்கள் வேலைக்கு வரவில்லை.. அவர்களின் குடும்பத்தின் இன்றைய நிலைக்கு உதவும் பொருட்டுதான் வருகிறார்கள்..
பணக்காரர்கள் சாப்பாட்டு தட்டையும் , இது போன்ற ஏழை சிறார்களின் சாப்பாட்டு தட்டையும் போட்டோ ஷாப்பில் ஒப்பீடு செய்து இந்தியா வல்லரசாகுமா என்று கேட்கும் இணைய புரட்சியாளர்கள் சொல்லும் புரட்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இதெல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் கணினியின் விசைப்பலகையில் மட்டுமே சாத்தியம்..

அந்த சிறுவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிடுவதுடன் புரட்சி முடிவுக்கு வந்து விடுமா?? இந்த சிறுவனின் தினசரி பத்துரூபாய் வருமான இழப்பில் அந்த குடும்பம்??/

வீட்டின் வயிறு பசிக்காக டீக்கடையிலும் , மது விநியோக கூடங்களிலும் பணி செய்யும் சிறார்கள் மட்டும் தான் இவர்கள் கண்ணுக்கு தெரிந்த குழந்தை தொழிலாளிகள்... ஏனென்றால் இவர்களை பிடித்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துவிட்டால் இவர்களின் பெற்றோர்கள் பயந்து விடுவார்கள்.. ஆனால் சூப்பர் சிங்கரில் அறுபது லட்சமோ, விளம்பரங்களில் ஆயிரக்கணக்கிலோ சம்பாதிக்கும் குழந்தைகள் எல்லாம் குழந்தை தொழிலாளர்கள் வரிசையிலேயே வர மாட்டார்கள்.. ஏனென்றால் அங்கே புரட்சி பண்ண சென்றால்.. "மூடிட்டு போய்யா எனக்கு தெரியும் " என்று துரத்திவிடும் அளவிற்கு அந்த பணக்கார பெற்றோர்கள் வசதியானவர்கள்.. அல்லது பலம் படைத்தவர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக