ஞாயிறு, 8 மார்ச், 2015

இதுதான் நம் கலாச்சாரம்

ஒரு அழகான பெண் ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களை சந்தித்து தம்மை திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டார்.. பெர்னாட்ஷா காரணம் கேட்க.. "என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதுதான் இந்த உலகின் சிறந்த குழந்தையாக இருக்கும் " என்றார் அந்த பெண்..
"உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் கொண்டு அந்த குழந்தை பிறந்துவிட்டால் அதுதான் இந்த உலகத்திலேயே மோசமான குழந்தையாய் இருக்குமே.. என்ன செய்வது .." என்று கேட்டாராம் பெர்னாட்ஷா..

ஒரு அழகான பெண் ஒருவர் சுவாமி விவேகானந்தரை சந்தித்து தம்மை திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டார்.. காரணம் கேட்க.. " உங்களை போல ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் " என்றார் அந்த பெண்..

"அதற்க்கு ஏன் தாயே அத்தனை காலம் காத்திருக்க வேண்டும்.. இப்போதே என்னை தத்து எடுத்து கொள்ளுங்கள்..உங்கள் மகனாக ஆகி விடுகிறேன் .." என்றாராம் சுவாமி விவே கானந்தர்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக