ஞாயிறு, 8 மார்ச், 2015

கார்பொரேட் குடும்பம்.

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான மாதச் சம்பளம் - கணவன் கொடுக்கவேண்டும்.

அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்கிறதா.. குடும்ப பெண்களை விபச்சாரிகளாக்க முயல்கிறதா?? 

படுக்கையறை விஷயங்களிலும் கோர்ட் தலையிட தொடங்கிய நாளில் தான் திருமண கலாச்சாரம் சீரழிய தொடங்கி விவாக ரத்துகள் அதிகமாகி இருக்கிறது..
இப்போது கணவன், குழந்தைகள், தாய் தந்தை, மாமனார் மாமியார், நாத்தனார் என்ற உறவுப்பினைப்புக்கும் விலை நிர்ணயம் செய்து இந்திய கலாச்சாரத்தை கேள்விக்குறியாக்க மத்திய அரசு முயல்கிறது.

அரசின் ஊழல்களால் நாடு ஸ்தம்பிக்கும் வேளையில் அதனை தடுக்க திராணியில்லாத இந்த மானம் கெட்ட அரசு குடும்பத்திற்குள் குண்டு வைக்க முயல்வது எந்த விதத்தில் சரி..?? 

அன்பிற்கு இவர்கள் எந்த விதத்தில் விலை நிர்ணயம் செய்வார்கள்.. சம்பளம் கொடுக்கிறேன் என்று மனைவியை கணவன் சூபர்வைஸ் பண்ண முடியுமா.. இல்லை இரண்டாம் முறை உடலுறவுக்கு அழைத்தால் மனைவி ஓவர் டைம் செய்ததாக அர்த்தமா.. மானம்கெட்ட ஜென்மங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக