சனி, 9 மே, 2015

நவீன விளம்பர பலகையாய் நடமாடும் யுவதிகள்

சில காலமாகவே பாலியல் வன்முறைக்கு பெண்களின் ஆடை ஒரு காரணமா என்ற விவாதங்கள் தொடர்கிறது... ஆடை நாகரீகம் இல்லாத இடங்களில் பாலியல் வன்முறைகள் நிகழாமல் இல்லை,,, ஆனால் அங்கு அதன் சதவிகிதம் குறைவு... சிறு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாக ஆடை காரணமில்லை என்பது உண்மை தான்.. அதே நேரம் இன்னொன்றையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.. 
நமது கலாச்சார ஆடைகளை பொறுத்தவரை அந்தரங்க உறுப்புகளை மட்டுமல்லாமல் கூடுமா
ன வரை உடல் முழுதும் மறைக்கும் ஆடை கலாச்சாரமே பின்பற்றப்படுகிறது.. குறிப்பாக மார்பகங்கள்.. மாறாக.. " மூக்கு" என்ற உறுப்பை மட்டும் மறைக்கும் படியான கலாச்சாரத்தை நாம காலம் காலமாக பயன் படுத்தி வந்திருந்தால் எதிர்பால் கவர்ச்சி என்பது அந்த மூக்கை பார்க்க வேண்டும் என்ற ஆவலை மட்டும் தூண்டி இருக்கும்.. மறைக்க மறைக்கத்தான் ஆர்வம் மிகும் என்ற கோட்பாடுதான் இதற்கு காரணம்..

காலம் காலமாய் நமது கலாச்சாரத்தில் மறைக்கப்பட்ட உறுப்பை இப்போது திறந்துகாட்ட தொடங்கி இருப்பதும் பாலியல் வன்முறைகளுக்கு முக்கிய காரணம்...விளம்பர பலகைகளை வைத்து அதனை நோக்கி மற்றவர் பார்வையை திருப்ப வேண்டும் என்பதற்காக நியான் விளக்குகள் பொருத்தப்படுவது மாதிரி தற்கால பெண்கள் ஆடைகளில் மார்பகங்களுக்கு என்று  
 பிரத்யோகமான வேலைபாடுகள் கவன ஈர்ப்பு அம்சங்களை அமைத்து மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு விளம்பர பலகையாகவே ஆக்கி விட்டிருக்கிறார்கள்நவீன யுவதிகள்...


இதனை பார்க்கும் உணர்சிகளை அடக்க தெரியாத ஆண் பாலியல் வன்முறையை கையில் எடுக்கிறான்... அப்படி அந்த வன்முறையை கையிலெடுக்கும் தைரியமில்லாமல் ஆசைகளையும் அடக்க தெரியாதவனோ குழந்தைகளிடம் தன்னுடைய இச்சைகளுக்கு வடிகால் தேட நினைக்கிறான்.. குற்றம் செய்தவனுக்கும் தண்டனை.. அதற்கு தூண்டியவனுக்கும் தண்டனை என்றால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அந்த பலவீனமான ஆணை தன்னுடைய விளம்பரம் மூலம் தள்ளிய அந்த பெண்களும் காரணமானவர்களே.. இவர்கள் செய்யும் புரட்சிக்கு ஒன்றுமறியா அப்பாவி பெண் குழந்தைகள் பலியாவது வேதனைக்குரிய கொடுமை..

உடைகள் என்பது நம்முடைய வசதிக்குத்தான் என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதே அளவு உண்மை சமூகத்தில் அதன்மூலம் ஏற்படும் தாக்கமும்... இன்றைய யுவதிகள் நிகழ்த்தும் ஆடை புரட்சி போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும்.. அந்த வெற்றிக்கு பின் மற்ற காரணங்களை தவிர்த்து இந்த காரணத்திற்காக ஏற்படும் பாலியல் வன்முறைகள் அறவே இருக்காது... ஆனால் அதற்கு சில நூற்றாண்டுகள் ஆகலாம்.. அதுவரை ஏற்படப்போகும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு??????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக