சனி, 9 மே, 2015

அண்ணாச்சிகளும் அந்நிய முதலீடும்

ஒருமுறை என்னுடைய நண்பர் ஒருவர் சொந்த தொழில் துவங்கும் பொருட்டு கோதுமை மாவு தயாரிக்கும் சிறிய நிறுவனமொன்றின் ஏஜென்சி எடுத்து ( அவ்வளவாக பிரபலமாகாத ஆனால் தரம் கூடிய தயாரிப்பு அது ) சில்லறை விற்பனை கடைகளுக்கு விநியோகிக்க முடிவு செய்து அண்ணாச்சி கடைகளில் ஏறி இறங்கினார்.. சுமார் தொண்ணூறு சதவிகித அண்ணாச்சிகள் கேட்ட ஒரே கேள்வி.. டி வி யில் விளம்பரம் வருகிறதா...??

தெருக்களில் கடை வைத்திருக்கும் அண்ணாச
்சிகள் நினைத்தால் இது போன்ற சிறு குறு தொழில் நிறுவனங்களை வளர்க்க முடியும்.. தெருக்களில் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்கும் இல்லத்தரசிகள் விளம்பரங்களில் வரும் பொருட்களை கேட்டாலும் கூட அவர்களிடம் இது போன்ற பொருட்களின் தரத்தை எடுத்து சொல்லி விற்பனை செய்ய முடியும்.. 

ஆனால் அதற்கெல்லாம் அண்ணாச்சிகள் தயாராயில்லை.. ஏனென்றால்... அவர்களுக்கு அவர்களுடைய லாபம் மட்டுமே குறிக்கோள்... உள்ளூர் வியாபாரிகளோ தொழில் முனைவோர்களோ வளர்ந்தால் இவர்களுக்கென்ன லாபம்??
இந்த அண்ணாச்சிகள்தான் இன்று வால் மார்ட் வந்தால் நாங்கள் அழிவோம் என்று குதிக்கிறார்கள்..
அவன் அவனுக்கு அவன் அவன் ஆதாயம் தான் முக்கியம்.. தன வீடு எரியாதவரை அடுத்த வீடு எரிவது நமக்கு வேடிக்கை தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக