சனி, 9 மே, 2015

உடையும் தனிக்குடித்தனம்

நாம் எது நடக்க கூடாது என்று அலறிக்கொண்டிருக்கிரோமோ... எது நடந்துவிடும் என்று அஞ்சிக்கிடந்தோமோ அந்த விஷயம் மெல்ல தொடங்கி இருக்கிறது... 
நடுக்கூடத்திற்குள் வந்து உட்கார்ந்த நரகம் இந்த தொலைகாட்சி பெட்டிகள் வாயிலாக கூட்டுக்குடும்பத்தை கூறு போட்டு தனிக்குடும்பமாக்கி.... ஒரு குடும்பத்தை நான்கு குடும்பமாக்கி தன்னுடைய தயாரிப்புகளை ( டி வி, வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர்... இத்யாதி.. இத்யாதி...) நான்கு மடங
்காய் உயர்த்திக்கொள்ள திட்டமிட்ட கார்பொரேட் கம்பெனிகள், கூட்டுக்குடித்தனம் என்னவோ சர்வதேச குற்றம் போல் ஒரு மாயையை ஏற்படுத்தி... இங்கே எலும்பு பொறுக்கி படைப்பாளிகளை வைத்து நெடுந்தொடர்களையும், விவாத நிகழ்ச்சிகளையும் ஊக்குவித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டன...
மாமியாருக்கு மருமகள் மீதும்.. மருமகளுக்கு மாமியார் மீதும் காழ்ப்புணர்ச்சியை வளர்த்ததன் மூலம் அவர்களை இரு வேறு துருவங்களாக்கி இருக்கின்றன.. தன்னால் நேரடியாக காட்டிக்கொள்ளமுடியாமல் சகிப்புத்தன்மை அறவே தொலைத்திருந்த குடும்பத்தலைவிகளுக்கு தூபம் போடும் வேலையை இன்றளவும் மிக ஆர்வமாய் செய்வதில் முனைப்பாயிருக்கின்றனர்.. அந்த எலும்பு துண்டு பொறுக்கி படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் மும்முரமாயிருக்கும் கார்பொரேட் நிறுவனங்கள் தமது அடுத்த கணையை தொடுக்க ஆரம்பித்திருக்கிறது...

சமீபகாலமாக ஒளிபரப்பாகும் எல் அன்ட் டி மியூச்சுவல் ஃபண்டு நிறுவன விளம்பரம் மூலமாக... கணவனையும் மனைவியையும் தனிக்குடித்தனமாக்கியவர்கள்.. இப்போது கணவனுக்காக சமைப்பது பெண்களின் அடிமைத்தனமெனவும்.. அதை சாப்பிடுவது ஆண்களின் அடிமைத்தனமெனவும் 
பொருள்ப்படும்படியாய் ஒரு விளம்பரத்தை முன்வைக்கிறார்கள்...

நமது செய்தி ஊடக துறையோ.. கலாச்சார பாதுகாப்புதுறையோ இதை எல்லாம் கவனிக்கப்போவதில்லை... ஈமு கோழிகள் தங்கத்தில் முட்டை இடும் என்பது போன்ற பொதுமக்களின் பணத்தை குறிவைத்த விளம்பரத்தையே கவனிக்காதவர்கள் தான் கலாச்சாரம் பற்றி கவலைப்பட போகிறார்களா...???
ஊதுற சங்க ஊதி வைப்போம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக