சனி, 9 மே, 2015

நாம் தரிசித்த கடவுள்

பத்துக்கு பத்து அளவுள்ள ஒரு கட்டிடத்தை கூட நாம் முழுவதுமாய் தரிசிக்க இயலாது... ஒரு பக்கம் பச்சை வண்ணமும், இன்னொரு பக்கம் மஞ்சள் வர்ணமும், இன்னொரு பக்கம் சிவப்பு வர்ணமும், வேறொரு பக்கம் வெள்ளை வண்ணமும் பூசப்பட்டிருக்கிரதென்றால் ஒரே நேரத்தில் ஒருவரால் எல்லா புறத்தையும் பார்க்க முடியாது... அதே நேரம் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு வந்து அந்த கட்டிடம் வெள்ளையாகத்தான் இருந்தது 
என்று பேசுவது புத்திசாலித்தனமில்லை..

ஒரு பத்துக்கு பத்து அளவுள்ள கட்டிடத்தையே நம்மால் முழுதாக தரிசிக்க முடியாத போது உலகெல்லாம் நிறைந்திருக்கும் இறைவனை என் மதம் சொல்வதுதான் கடவுள் என தயவு செய்து யாரும் விவாதிக்காதீர்கள்.

கடவுளின் எல்லா பக்கங்களையும் தரிசிக்க நமக்கு இந்த ஆயுள் பத்தாது... அதனால் உங்கள் பார்வையிளிருக்கும் ஒரு பக்கத்தையாவது முழுமையாய் தரிசியுங்கள்... அடுத்த பக்கத்தின் வர்ணத்தை விமர்சனம் செய்தோ.. அடுத்தொரு பக்கமே இல்லை என்றோ சொல்லி யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு சரி - கடவுள் விஷயத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக