சனி, 9 மே, 2015

கமலஹாசனுக்கு பின்னால் பத்தாண்டுகள் நாம்

சுவர் ஓவியர்களின் வாழ்வாதாரம் போனதாய் போராடினார்கள்... அதற்காக ப்ளெக்ஸ் போர்டுகள் வராமலில்லை... சுவர் ஓவியர்கள் யாரும் தற்கொலைசெய்துகொள்ளவில்லை... ( தற்கொலை செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தாயா.. என்று அதிபுத்திசாலித்தனமாய் கேட்கும் அளவிற்கு என் நண்பர்களில் யாரும் முட்டாளில்லை என்பது என் எண்ணம் )
அந்த தொழில்நுட்ப மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.. அந்த சுவர் ஓவியர்களும் வேறு வேலை செய்து பிழைக்க க
ற்றுக்கொண்டார்கள்..
இதில் இன்னும் கூடுதல் வளர்ச்சியே.. அந்த சுவர் ஓவியர்களே நண்பனின் திருமணத்திற்கோ- தாம் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவருக்கோ தங்களின் புகைப்படத்துடன் வாழ்த்து பதாகைகள் வைத்துக்கொண்டிருகிறார்கள்..

ஒருகாலத்தில் தெருக்கூத்துக்கள், பாவை கூத்துக்கள்,மேடை நாடகங்களை ஒழித்துத்தான் திரைப்படங்கள் வந்தது... திரையரங்குகள் வந்தது... இது தொழில் நுட்ப வளர்ச்சி என்றால்.... திருட்டு வி சி டி யாகவும்.. தொலைக்காட்சி பெட்டி வாயிலாகவும் அந்த திரைப்படங்கள் நம் வீட்டு கூடத்திற்கு வந்ததும் தொழில் நுட்ப வளர்ச்சிதான்.. இதன் அடுத்தகட்டம் தான் திரைப்படம் வெளியிடப்படும் அன்றே DTH ல் ஒளிபரப்பு செய்வதும்...

இதனை வரவேற்கத்தான் வேண்டும்... கமலஹாசன் சொல்வது எதுதான் நமக்கு உடனே புரிந்திருக்கிறது..?? அதற்கு நாம் இன்னும் பத்தாண்டுகளாவது வளரவேண்டும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக