சனி, 9 மே, 2015

ரத்தத்துல ஊறினது

எனது பாட்டமுப்பாட்டனார் திரு அடைக்கலம் , எனது முப்பாட்டனார்... திரு. அண்ணாமலை.. எனது பாட்டனார்.. திரு.முத்துசாமி.., எனது தகப்பனார் திரு .நடேசன்... இப்படி வழி வழியாக வந்த தொப்புழ்கொடி உறவில் கடத்திவரப்பட்ட மரப்பணு க்களில் எங்களின் குலத்தொழிலான விவசாய அறிவு கலந்தே வந்திருக்கிறது...

ஒரு விவசாய கல்லூரியில் பயின்று வந்த தச்சு தொழிலாளியின் மகனை விட, ஒரு சலவை தொழிலாளியின் மகனை விட. ஒரு முடி திருத்துபவரின
் மகனை விட என்னால் விவசாயத்தை திறம்பட செய்ய முடியும்... ஏனென்றால் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்து பட்டதாரியான அவர்களை விட மரபணுக்கள் மூலம் கொண்டுவரப்பட்ட என்னுடைய அனுபவ அறிவு மிக உயர்ந்தது...

ஆனால் வானம் பொய்த்துவிட்டதாலும்... ஏரி குளங்களை எல்லாம் கயவர்கள் திருடி விட்டதாலும், தண்ணீர், தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும், இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ,முதலீட்டை விடவும் வருமானம் குறைந்துபோனதாலும் என்னால் அந்த தொழிலை தொடர முடியாமல் போய் விட்டது...

எனவே அப்போது மரபணுக்கள் வழியாக கடத்தப்பட்ட அடிப்படை விவசாய அறிவையும் வைத்துக்கொண்டு என்னுடைய தலைமுறையில் நான் என்னுடைய சிறுவயது தொட்டு சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாய் கற்று வந்திருந்த கணிப்பொறி, ஆங்கிலம், இன்னபிற விஷயங்களை பயன்படுத்தி வருமானத்திற்கு வழி செய்திருக்கிறேன்..இதிலும் என்னுடைய நிபுணத்துவத்தை காட்ட நினைக்கிறன்..
அதே நேரம் விவசாயத்துறையில் என்னுடைய மரபணு வழி நிபுணத்துவத்தை பயன்படுத்தி என்னுடைய குலத்தொழிலை என்னால் செய்ய முடியுமானால்... அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைக்குமானால் நிச்சயமாக அதை நவீனப்படுத்தி 
என் பாட்டன் முப்பாட்டனை விட மிக திறமையாய் செய்ய முடியும்...

ஆனால் எனக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத ஒரு விஷயத்தில் இரண்டு மூன்றாண்டுகளில் படித்து என்னால் நிபுணத்துவமடைய முடியுமா???
ஆகவே.. உங்கள் மரபணுக்களின் வழி கடத்திவரப்பட்ட திறமைகளை நவீனப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமானால் அதில் கவனம் செலுத்துங்கள்.. அதனை தவிர்த்து புலியை பார்த்து சூடுபோட்டுக்கொண்டால் பூனை புலி ஆக முடியாது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக