சனி, 9 மே, 2015

புராணங்கள்- பொக்கிஷங்கள்

ஒரு ரிஷியும் அவரது பத்தினியும் மான் உருவம் எடுத்து உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ( கவனிக்க.. மான்கள்  மிக நீண்ட நேரம் உடலுறவு சுகத்தை அனுபவிக்க வல்லது என்பது விஞ்ஞானம் ) அப்போது அவ்வழியாக வேட்டைக்கு வந்த பாண்டு மகா ராஜா தன்னுடைய அம்பை எய்து அந்த ஆண் மானை கொன்று விட்டான்.. 
இணையும் நேரத்தில் கணவன் இறந்து விழுந்ததும் அந்த ரிஷியின் மனைவி பாண்டு மகா ராஜாவுக்கு சாபம் கொடுத்தாள்..

"உன்னுடைய மனைவியுடன் 
நீ  உடலுறவு கொள்ளும் நேரத்தில் உன்னுடைய தலை சிதறி இறப்பாய்..." என்று..

தான் பெற்ற சாபத்தின் பலனாய் தாம் இறந்துவிடுவோம் என்று பயந்த பாண்டு மகாராஜா தன்னுடைய மனைவி குந்தி தேவியிடம் இதனை மறைத்து அவரோடு எந்த வித உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தார்.. ஆனால் பாண்டுவின் உறவினர்களோ வாரிசு வேண்டும் என்று வற்புறுத்தி இரண்டாவது திருமணமும் செய்து வைத்தனர்..
பின்னாளில் தம்முடைய மனைவிகளிடம் தாம் பெற்ற சாபத்தை சொல்லி பாண்டு மகாராஜா அழும்போது தான் குந்தி தேவி தன்னிடமிருந்த குளிகைகளை பற்றி சொன்னாள்.. பிறகு வாரிசு வேண்டி குந்தி மூன்று குளிகைகளையும், இன்னொரு பெண் இரண்டு குளிகைகளையும் சாப்பிட்டு தர்மன், அர்ச்சுனன், பீமன் ஆகியோரை குந்தி தேவியும், நகுலன் சகாதேவன் ஆகியோரை அந்த இரண்டாவது மனைவியும் பெற்றதாக இருக்கிறது கதை.

இதில் பாண்டுவிற்கும் குந்தி தேவிக்கும் திருமணமாகும் முன்பே குந்தி தேவிக்கு அந்த குளிகைகள் கிடைத்து அதனை சோதிக்கும் பொருட்டு கர்ணன் பிறந்தான் என்பதை எல்லோரும் படித்திருப்போம்.

இதை புராணமாகவோ- கடவுள் கதை என்றோ பார்க்காமல் அதனை எழுதியவரின் எழுத்தாளுமைக்காக எல்லோரும் படிக்க வேண்டும்.. ஒரு பெரிய காப்பியத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள்.. ஆனால் அந்த இருநூறுக்கும் மேற்ப்பட்ட கிளைக்கதைகளும் ஒவ்வொரு இடத்தில் ஆரம்பம் முதல் கடைவ்சிவரையில் எங்காவது ஒரு இடத்தில் வந்து மெயின் கதையுடன் இணையும்.. பின்னாளில் இணைவதற்கு காரணமாய்த்தான் அந்த கதையின் ஆரம்பம் இருக்கும்.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை.. பீஷ்மருக்கு ஒரு கதை, அர்ஜுனனுக்கு ஒரு கதை,,அபிமனுயுவுக்கு ஒரு கதை .., அஸ் வத்தாமனுக்கு ஒரு கதை, துரோணருக்கு ஒரு கதை, சிகண்டிக்கு ஒரு கதை, கர்ணனுக்கு ஒரு கதை, துரியோதனனுக்கு ஒரு கதை... யப்பா.... சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த காப்பியத்தினை எழுதியவர்களை வியக்காமல் நாத்திகம் என்று சொல்லிக்கொண்டு அதனை புறக்கணிப்பதால் இழப்பு அவருக்கல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக