செவ்வாய், 28 ஜூலை, 2015

தாழம்பூ



மலர்கள் மலரும் காலத்தை வைத்து நேரம், பருவகால மாற்றம் ஆகியவற்றை நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்... மல்லிகை, பாகல் போன்ற மலர்கள் மாலை சரியாக 6 மணிக்கு மலரும்.. அல்லி சந்திரனை கண்ட உடன் மலரும்... தாமரை சூரியனை கண்ட உடன் மலரும்..

அந்த வகையில் தாழம்பூ மின்னலை கண்டு மலரும் என்று தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள்..... 

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் திரு எம் ஜி ஆர் அவர்கள் நடிப்பில் உருவான நாடோடி மன்னன் திரைப்படத்திற்காக 1958 ம் ஆண்டு எழுதிய

"கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - இன்பகாவியக் கலையே ஓவியமே" என்ற பாடலில் இந்த தகவலை பயன்படுத்தி இருக்கிறார்...

"சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே..." என்று வரும் அந்த வரிகள்...

சமகாலத்தில் திரு சேரன் அவர்கள் நடிப்பில் வெளியான "ராமன் தேடிய சீதை" என்ற படத்தில் கவிஞர் திரு விவேகா அவர்கள் இந்த தகவலை மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..

"இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே.. என்ற பாடலில்

"சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட ..." என வரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக