செவ்வாய், 28 ஜூலை, 2015

சித்தர்கள்



உலகின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் மூளையே சுமார் 25% தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்... அப்படியானால் ஒரு சாதாரண மனிதனின் மூளை சுமார் 4 அல்லது 5 % தான் உபயோகப்படுத்தப்படுகிறது...

மனித மூளையை 100% உபயோகிக்க தெரிந்தால் நிச்சயம் அவனால் பறக்க முடியும், நீரில் நடக்க முடியும், உலகின் பார்வையில் இருந்து மறைய முடியும், இந்த பூமியை சுற்றாமல் நிறுத்தி வைக்க முடியும்.. 

என்னை பொருத்தவரை நம்முடைய முன்னோர்கள் மூளையை சுமார் 70- 80% உபயோகிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.. அதனால் தான் அவர்களால் எந்த தொலைநோக்கியோ, ராக்கெட்டோ இல்லாமல் மற்ற கிரகங்களை பார்த்து அதன் நகர்வுகள், தூரம் ஆகியவற்றை கூட துல்லியமாய் எழுதி வைக்க முடிந்தது... நவீன விஞ்ஞானம் திணறும் பல விஷயங்களை துக்கியமாய் குறிப்பிட முடிந்தது..

சாவித்திரியால் பொழுது விடியாமல் நிறுத்தி வைக்க முடிந்தது, கயிலாயத்தில் நடந்த சிவபெருமான் திருமணத்தை அகத்தியரால் தென்முனையில் இருந்து பார்க்க முடிந்தது...

சொர்க்கம்-நரகம் என்பதை யார் பார்த்துவிட்டு வந்து சொன்னார்கள் என்று நவீன பகுத்தறிவு கேள்விதான் கேட்கிறது... இந்த பகுத்தறிவு வாதிகளும் தங்கள் மூளையை 4-5% மட்டுமே உபயோகிக்கத்தெரிந்த சமகாலத்தவர்கள் தான்.. 75-80% மூளையை உபயொகிக்கத்தெரிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அதையும் கூட நேரில் போய் பார்த்துவிட்டு வரும் அளவு சக்தி பெற்று இருந்திருக்கலாம்... யார் கண்டது...??? ஒருவேளை நம்முடைய மூளை 100% முழுதாய் உபயோகப்படுத்தப்படுகிறது என்ற நிலை வந்தால் மட்டுமே நம் முன்னோர்கள் சொன்னது தவறு என்று நம்மால் சொல்ல முடியும்..

ஆனால்.. அதை கற்றுக்கொள்ளாதே.. இதை கற்றுக்கொள்ளாதே என்று முடக்கி முடக்கி நம்முடைய மூளை மழுங்கடிக்கப்பட்டு விட்டது... அதனால் தான் இன்று வெறும் 5-6% மூளையை மட்டுமே பயன்படுத்த தெரிந்து மற்றவர் கண்டுபிடித்த பொருட்களுக்கு மொழிபெயர்ப்பு செய்துகொண்டு இருக்கிறோம்..

மனித மூளையை ஓரளவு உபயோகிக்கத்தெரிந்தாலே , சுமார் 40 மொழிகளை பேச, எழுத, படிக்க கற்க முடியுமாம்...
உபயோகிக்காத எந்த பொருளும் நாளடைவில் பரிணாம வளர்ச்சியில் காணாமல் போகும்... அந்த வகையில் தான் இப்படியாக முடக்கி முடக்கி நம்முடைய மூளையும் உபயோகமற்று கிடக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக