செவ்வாய், 28 ஜூலை, 2015

வாழும்போதே திட்டமிடு

ஒரு நாடு இருந்துச்சு... அந்த நாட்ட ஒட்டி ஒரு பெரிய ஆறு.. அந்த ஆத்துக்கு அதுத்த கரைல பயங்கரமான மிருகங்கள் இருக்க ஒரு பெரிய காடு...

அந்த நாட்டுல ஒரு சட்டம்.. என்னன்னா... அந்த நாட்டுக்கு யாரு வேணும்னாலும் ராசாவா இருக்கலாம்... ரெண்டு வருஷம் மட்டும் தான்.. ரெண்டு வருஷம் முடிஞ்சதும் அந்த நாட்டு மக்கள் எல்லாம் கூடி அந்த ராசாவா இருந்த ஆள கட்டி தூக்கி கொண்டு போய் ஆத்துக்கு அடுத்தபக்கம் இருக்க கட்டுலவிட்டுடுவாங்க... அப்படி காட்டுக்கு போய்ட்டா திரும்ப வரக்கூடாது.. வரவும் முடியாது... 




இப்படி ரெண்டு வருஷ ராச வாழ்க்கைக்கு ஆசை பட்டு மிச்சமிருக்க காலத்த இழக்க யாருக்கும் ஆசை இல்லாததால எப்போதுமே ராச பதவி காலியாவே இருக்கும்... அப்படியும் பதவிக்கு ஆசைப்பட்ட யாராவது ராசாவா போய் உக்காருவாங்க... அவங்களால ஒரு ஆறுமாசம் கூட அந்த வசதிகள அனுபவிக்க முடியாது.. நாள் ஆக ஆக.. இன்னும் ஒன்னரை வருஷம்.. இன்னும் ஒருவருஷம்.. இன்னும் ஆறுமாசம்னு அவங்கள பயம் உலுக்க ஆரம்பிக்கும்... இதுல பகுதி பேரு கடைசி நாள் வரதுக்கு முன்னாடியே மன நோய்லையே செத்து போய்டுவாங்க...

இப்படி இருக்கும் போது ஒருத்தன் அந்த ராசா பதவிக்கு ஆசைப்பட்டு அரியணை ஏறினான்... எந்த சண்டை சச்சரவுக்கும் போகாத நாடுங்கிறதால மத்த எத பத்தியும் கவலை படாம நல்லா சந்தோஷமா ராச போக சுகத்த அனுபவிச்சான்... இதுக்கு முன்னாடி அந்த பதவிக்கு வந்தவங்க எல்லோருக்குமே ஆறு மாசத்துலயே மூஞ்சில ஒரு சவக்களை வந்திடும்.. எதையோ பறிகொடுத்த மாதிரியே திரிவாங்க.. ஆனா நம்ம ஆள் மட்டும் சந்தோஷமாவே இருக்கான்... ரெண்டு வருஷமும் முடிஞ்சு போச்சு.. கடைசி நாள்... அண்ணிக்கு கூட நம்ம ராசா ரொம்ப ரொம்ப குஷியா இருக்கான்....
பதவி காலத்தோட கடைசி நாள்....எல்லோரும் கூடி அந்த ராசாவ கூட்டிகிட்டு போக வந்தாங்க.... உடனே ராசா.. நீங்க யாரும் என்னை கட்டி எல்லாம் தூக்க கூடாது.. நான் இந்த நிமிஷம் வரை ராசாதான்.. எல்லாரும் என் பின்னாடிதான் வரணும்.. நானே ஆத்துக்கு போவேன்னு சொல்லி பெரிய தேர் எல்லாம் ஏற்பாடு பண்ணி அதுல உட்கார்ந்து போனான்.. மக்கள் எல்லோரும் அவன் தேர் பின்னாடி நடந்து போனாங்க.....
ஆத்துல படகு தயாரா இருந்துது.... அந்த படகையும் நல்லா அலங்காரம் பண்ணச்சொல்லி உத்தரவு போட்டான்.... அதையும் செஞ்சாங்க..... ஒருத்தர் மட்டும் துணிச்சலா கேட்டுட்டாரு....
"ஏன் ராசா.... உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமோ.. பயமோ இல்லையா....?"
அதுக்கு ராசா சொன்னாரு....
"அட முட்டாப்பசங்களா..... நான் ராசாவா இருந்த பதவி ஏத்த அன்னிக்கே பக்கத்து நாட்டுல இருந்த ஆளுங்கள ரெடி பண்ணி எதிர் கரைல இருக்க காட்டுல ஒரு பகுதிய சரி பண்ணி எங்க எல்லா வசதிகளையும் பண்ணி வச்சுட்டேன்.... விருப்பப்பட்ட மக்களையும் அங்க குடியேற சொல்லிட்டேன்.... அது மட்டுமில்ல... அப்படி புதுசா உருவாக்குன ஊருக்கு நானும் என் தலைமுறையும் தான் ராசாவா இருக்குற மாதிரி சட்டம் எல்லாம் போட்டுட்டேன்.... இப்போ நான் அந்த கரைல போய் இறங்கினதும் எனக்கு பெரிய வரவேற்பு கொடுக்க என் நாட்டு மக்கள் அங்க காத்துகிட்டிருப்பாங்க.."ன்னானாம்....
# இப்படித்தாங்க..... நம்மள்ள பல பேரு வாழும்போதே திட்டம் போட்டு செயல் படுத்தாம .. தும்ப விட்டுட்டு வால புடிச்ச கதையா... வயசானப்புறம் பல நோய்கள வாங்கி அத நினைச்சு நினைச்சே செத்துப்போறோம்...........!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக