செவ்வாய், 28 ஜூலை, 2015

வாழ்க்கை- ஒவ்வொரு துளியும் சுவை



நாக்கில் சுவை முகிழ்ப்புகள் நிறைந்துள்ளன.. இவைகளே கசப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் என வகை வகையான சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன... 

ஒரு ஜூஸ், குளிர்பானம், காஃபி என எதை குடித்தாலும் மிக கொஞ்சமான அளவில் உறிஞ்சி குடிக்க வேண்டும்.. ஒரு வாய் நிறைய ஊற்றிக்கொண்டால் அது நாக்கோடு தொடர்புடைய அளவில் மட்டுமே சுவை தெரியும்.. நாக்கில் தொடாத பகுதியின் சுவையை அறிய முடியாமல் அது வயிறை மட்டுமே நிறைக்கும்...

இதனால்தான் மேலை நாட்டினர், அப்படி அருந்தும் பானத்தின் ஒவ்வவொரு துளியும் நாக்கில் உள்ள சுவை முகிழ்ப்புகளில் உரசிச்செல்லும் படியாக "ஸ்ட்ரா" என்ற ஒன்றை கண்டுபிடித்தனர்...

ஆனால் அப்படி ஸ்ட்ரா போட்டுக்கொடுத்தால் கூட அதை எடுத்து வீசிவிட்டு அண்ணார்ந்து கடகடவென ஒரே கல்பில் அடிப்பவர்கள் நாம்...

வாழ்க்கை.. ஒவ்வொரு துளியும் சுவை நிறைந்தது.. நாம் நம் ரசனையை வளர்த்து அதை துளித்துளியாய் பருகி ஒவ்வொரு துளியின் சுவையையும் அறியவேண்டும்

1 கருத்து: